ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

"பையன் இந்த வருசம் 75க்கு மேல மார்க் எடுத்திருக்கான். ஐ.சி.எஸ்.ஸி சிலபஸ் இருக்கிற நல்ல பள்ளிக்கூடம் பக்கத்துல ஒண்ணு இருக்கா?" கேட்ட நண்பரை அனுதாபத்துடன் பார்த்தேன்.
"இப்ப இருக்கிற பள்ளிக்கூடம் நல்ல பேர் வாங்கினதுதானே? எதுக்கு மெனக்கெடறீங்க?" என்ற எனது கேள்வி அவருக்கு புரியவில்லை.

" இந்த ஸ்கூல் மாநில சிலபஸ்... ஐ.சி.எஸ்.ஸி-ன்னா நல்ல தரம் இருக்கும்லா?" எனக்கு எங்கே போய் முட்டிக்கொள்ளவெனத் தெரியவில்லை.

மாநில சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள் என்னமோ மட்டம் என்றும் , சி.பி.எஸ்.ஸி, ஐ.ஸி.எஸ்.ஸி சிலபஸ் உள்ள பள்ளிக்கூடத்தில் படிப்பவர்களுக்கு மட்டுமே எதிர்காலம் என்றும் ஒரு தவறான எண்ணம் - பெரும்பாலும் மத்தியதர , உயர் மத்தியதர மக்கள் மட்டத்தில்... இவர்களில் பலரும் மாநில சிலபஸ் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருக்கக்கூடும்.

இதற்குமேல் ஒரு கேலிக்கூத்து...தாய்மொழியில் அல்லது மாநில மொழியில் பாடங்கள் படிக்கும் மாணவர்களை விட ஆங்கிலமொழியில் படிப்பவர்கள் புத்திசாலிகள் என்னும் பேச்சு. ஆங்கில மொழிக் கல்விக்கூடமென்றால் அடிதடி.. தமிழ், மராட்டிய மற்றும் பிற பிராந்திய மொழி வகுப்புகளுக்கு ஆளே இருக்காது இங்கெல்லாம்.


எனது மனைவி பணிசெய்த கல்லூரிகளில் சேரும் மாணவர்களைக்குறித்து சொல்வது நினைவுக்கு வருகிறது. "தாய்மொழியில் கற்ற மாணவர்களும், ஐ.சி.எஸ்.ஸியில் படித்து வரும் மாணவர்களும் சேரும் வகுப்பில் பார்த்தால், அடிப்படை அறிவும், முயற்சியெடுக்கும் பண்பும் தாய்மொழிக்கல்வி மாணவர்களுக்கு அதிகம். ஐ.சி.எஸ்.ஸி , சி.பி.எஸ்.ஸி மாணவர்கள் " இதெல்லாம் நாங்க ஸ்கூல்லேயே படிச்சுட்டமாக்கும்" என்ற மெத்தனப் போக்கு கொண்டு திரிந்துவிட்டு, கடைசியில் லபோ லபோவென அடித்துக்கொண்டு படிப்பார்கள்."என்பார். என்ன, ஐ.சி.எஸ்.ஸி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை நிறைய உண்டு. தைரியமாக ஆங்கிலத்தில் பொளந்து கட்டுவார்கள். இந்த பேச்சுத்திறமை, தெளிவாகத் தனது வாதத்தை முன் வைத்தல் போன்ற மென் தொடர்புத் திறமைகள் (soft skills) அவர்களது பெரும் பலம்... தாய்மொழிக்கல்வி மாணவர்களின் பலவீனம்.

இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு இண்டர்வியூவுக்கு வரும் பல மென்பொருள் நிறுவன மனிதவள அதிகாரிகள் முன்பு சிலாகித்ததுண்டு." தென்னிந்திய மாணவர்களுக்கு தொடர்புத் திறமை மிகக்குறைவு. ஆனால் அடிப்படை நுட்ப அறிவு அதிகம். மும்பை, டெல்லியில் வாய்ப்பந்தல் ஜாஸ்தி... ஆனால் நம்மை , அவர்களது தன்னம்பிக்கை, பேச்சுத்திறமையில் நம்ப வைத்துவிடுகிறார்கள்" என்பார்கள். இப்போது நிலமை மாறியிருக்கலாம்.

மாநிலக் கல்வித் திட்டம் பிற திட்டங்களைவிடத் தாழ்ந்தது என்பதை நான் நம்பத் தயாராயில்லை. எனது மகனை மாநிலக் கல்வித்திட்டம் சார்ந்த பள்ளியில்தான் சேர்த்திருக்கிறோம். அவனது நண்பர்கள் பலர் ஐ.சி.எஸ்.ஸி பள்ளிக்குப் போகிறார்கள். அதிகமான பாடச்சுமை... அடிப்படை புரியாதபடி வேகமாகப் போகும் வகுப்புகள்... அடிக்கடி தேர்வுகள் என சுமையில் அச்சிறுவர்கள் அழுந்துவது வருத்தமாகத்தான் இருக்கிறது.

இப்போதும் எனது நிறுவனத்தில் சேரும் பல இளைஞர்/இளைஞிகளின் அடிப்படை அறிவியல் அறிவு சுமாராகத்தான் இருக்கிறது. முக்கியமாக கணக்கு... பெருக்குதல், வகுத்தல், சதவீதம் என்றால் கால்குலேட்டர் இல்லாமல் அவர்களால் முடிவதில்லை. கையில் கம்புடன் " ம்..சொல்லுல... 84ஐ நாலால வகுந்தா என்ன வரும்?" என்று எட்டாம் வகுப்பின் கணித ஆசிரியர் குருமலை சாரிடம் படித்த என்போன்ற மாணவர்கள் என்ன குறைந்து போய்விட்டனர்? அரை நிமிடத்தில் பதில் வரவில்லையென்றால் பிரம்பு முட்டியில் பாயும்...நூறு முறை பதினாறாம் வாய்ப்பாடு எழுதிவர, பதினாறாம் வாய்ப்பாடு ஜென்மத்துக்கும் மறக்காது. அடிப்பதை நான் வரவேற்கவில்லை. வாய்ப்பாடு, மனக்கணக்கு என்பதெல்லாம், கூகிளை மேய்ந்து , பக்கம் பக்கமாக " ஆர்க்டிக் பனிக்கரடிகளின் வாழ்வு முறை" என எழுதுவதை விட மிக முக்கியம் என்பது என் கருத்து.
காங்கிரஸ் கூட்டணிகள் வெற்றி பெற்றுவிட்டதாக சரவெடிகள் அதிரத்தொடங்கிவிட்டன. மன்மோகன் சிங்கும் உப்புக்குக் நியாயமாக "ராகுல் காந்தியும் சட்டசபையில் இருந்தால் நல்லாயிருக்கும்" என நேரு குடும்பத்துக்கு வழக்கமான கும்புடு போட்டுவிட்டார். பிரதமர் பதவி நிச்சயம். எல்லாத் தொலைக்காட்சிகளும் நாளை முதல் வழக்கமாக அழுவாச்சி தொடர்களை நம்பி டி.பி.ஆர் ரேட்டிங் குறித்து கவலைப்படத் தொடங்கிவிடும்...

எல்லாம் சரிதான்வே....எவன் இலங்கை பற்றிக் கவலைப்படப்போகிறான்?

தேர்தலுக்கு முன்பு "தனி ஈழம்", உண்ணாவிரதம் என அடித்த அந்தர் பல்டிகள் எல்லாம் இப்போது நின்றுவிடும். சாகிறவர்கள் செத்துக்கொண்டே இருப்பார்கள். புது அரசு எந்த அதிரடிச் செயலையும் செய்யாது... "அவங்க வூட்டுப் பிரச்சனை" என மன்மோகன் தேர்தலுக்கு முன்பேயே சொல்லிவிட்டார். தமிழ்நாடும் ஒன்றும் பெரிதாகச் செய்து விடாது... புலிகள் இந்தியாவில் புகுந்துவிடுவர் என்னும் சாக்கில் ,உதவிப்பணிகளும் ஒன்றும் நடக்காது. நடக்க விடமாட்டார்கள்.

ஐ.நாவும் செஞ்சிலுவைச் சங்கமும் "நினைக்கமுடியாத பெரும் அழிவு" என அறிவித்தும் ஒன்றும் நடக்கிறதாகத் தெரியவில்லை. சசி தாரூர் போன்ற ஐ.நா அறிந்த வல்லுநர்களும் திருவனந்தபுரத்தில் தேர்தல் வெற்றிக் களிப்பில். தமிழர்களில் ஒருவர்கூடவா உலகளவில் பிற அமைப்புகள்/நாடுகளின் கவனத்தை இலங்கை அழிவின்மேல் திருப்ப முடியவில்லை?

எனக்கு இது என்னமோ கையாலாகத்தனமாகப் படவில்லை. அரைமனத்துடன் செயல்படும் தமிழக அரசு, மெத்தனப்போக்கில் ஒரு மத்திய அரசு என இந்தியா உறங்கிக்கொண்டிருக்க, உலக அளவில் சில நகரங்களில் மெழுகுவர்த்திப் பேரணிகளும், சில சன்னல்கள் உடைப்பதும் மட்டும்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டமுயற்சியாகத் தெரிகிறது.

கொஸோவா போரின்போது பி.பி.சியும், சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகளும் அடித்துக்கொண்டு புலம்பியது இப்போது எங்கே? வெள்ளை நிற மனிதர்கள் அடிபட்டால் அழும் இவை, நிறவெறியின் காமாலை கொண்டுதான் இலங்கையைக் காண்கின்றனவோ? உலக அளவில் மனிதாபிமானத்தைக் காட்டும் வகையில் போர்க்கால நடவடிக்கையாக , அப்பாவி மக்களைக் காக்கும் வகையில் எந்த மீட்புப்பணியினை, இலங்கையில் யார் செய்கிறார்கள்? அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு போலும்...
தமிழர்களில் யாரும் அமெரிக்காவின் பெரிய வங்கிகளை நிர்வகிக்கவில்லை என்பது இதில் தெளிவு.


நாம் ரியாலிடி ஷோக்களும், சீரியல்களுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வரையறுத்து வாழ்ந்துகொண்டிருக்கும் வரை, இலங்கை எரியத்தான் போகிறது.
காங்கிரஸ் கூட்டணிகள் வெற்றி பெற்றுவிட்டதாக சரவெடிகள் அதிரத்தொடங்கிவிட்டன. மன்மோகன் சிங்கும் உப்புக்குக் நியாயமாக "ராகுல் காந்தியும் சட்டசபையில் இருந்தால் நல்லாயிருக்கும்" என நேரு குடும்பத்துக்கு வழக்கமான கும்புடு போட்டுவிட்டார். பிரதமர் பதவி நிச்சயம். எல்லாத் தொலைக்காட்சிகளும் நாளை முதல் வழக்கமாக அழுவாச்சி தொடர்களை நம்பி டி.பி.ஆர் ரேட்டிங் குறித்து கவலைப்படத் தொடங்கிவிடும்...

எல்லாம் சரிதான்வே....எவன் இலங்கை பற்றிக் கவலைப்படப்போகிறான்?

தேர்தலுக்கு முன்பு "தனி ஈழம்", உண்ணாவிரதம் என அடித்த அந்தர் பல்டிகள் எல்லாம் இப்போது நின்றுவிடும். சாகிறவர்கள் செத்துக்கொண்டே இருப்பார்கள். புது அரசு எந்த அதிரடிச் செயலையும் செய்யாது... "அவங்க வூட்டுப் பிரச்சனை" என மன்மோகன் தேர்தலுக்கு முன்பேயே சொல்லிவிட்டார். தமிழ்நாடும் ஒன்றும் பெரிதாகச் செய்து விடாது... புலிகள் இந்தியாவில் புகுந்துவிடுவர் என்னும் சாக்கில் ,உதவிப்பணிகளும் ஒன்றும் நடக்காது. நடக்க விடமாட்டார்கள்.

ஐ.நாவும் செஞ்சிலுவைச் சங்கமும் "நினைக்கமுடியாத பெரும் அழிவு" என அறிவித்தும் ஒன்றும் நடக்கிறதாகத் தெரியவில்லை. சசி தாரூர் போன்ற ஐ.நா அறிந்த வல்லுநர்களும் திருவனந்தபுரத்தில் தேர்தல் வெற்றிக் களிப்பில். தமிழர்களில் ஒருவர்கூடவா உலகளவில் பிற அமைப்புகள்/நாடுகளின் கவனத்தை இலங்கை அழிவின்மேல் திருப்ப முடியவில்லை?

எனக்கு இது என்னமோ கையாலாகத்தனமாகப் படவில்லை. அரைமனத்துடன் செயல்படும் தமிழக அரசு, மெத்தனப்போக்கில் ஒரு மத்திய அரசு என இந்தியா உறங்கிக்கொண்டிருக்க, உலக அளவில் சில நகரங்களில் மெழுகுவர்த்திப் பேரணிகளும், சில சன்னல்கள் உடைப்பதும் மட்டும்தான் புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டமுயற்சியாகத் தெரிகிறது.

கொஸோவா போரின்போது பி.பி.சியும், சி.என்.என் போன்ற தொலைக்காட்சிகளும் அடித்துக்கொண்டு புலம்பியது இப்போது எங்கே? வெள்ளை நிற மனிதர்கள் அடிபட்டால் அழும் இவை, நிறவெறியின் காமாலை கொண்டுதான் இலங்கையைக் காண்கின்றனவோ? உலக அளவில் மனிதாபிமானத்தைக் காட்டும் வகையில் போர்க்கால நடவடிக்கையாக , அப்பாவி மக்களைக் காக்கும் வகையில் எந்த மீட்புப்பணியினை, இலங்கையில் யார் செய்கிறார்கள்? அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு கண்ணில் வெண்ணை, மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு போலும்...
தமிழர்களில் யாரும் அமெரிக்காவின் பெரிய வங்கிகளை நிர்வகிக்கவில்லை என்பது இதில் தெளிவு.


நாம் ரியாலிடி ஷோக்களும், சீரியல்களுமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வரையறுத்து வாழ்ந்துகொண்டிருக்கும் வரை, இலங்கை எரியத்தான் போகிறது.


More than a Blog Aggregator

by Srimangai(K.Sudhakar)
இவர்களெல்லாம் மனிதர்களா?

பிரபாகரன் இறந்ததாக செய்தி வந்ததில் சிறிது குலைந்துதான் போனேன். புலிகள் கையாண்ட வன்முறையில் எனக்கு சம்மதமில்லை எனினும், ஒரு தமிழ் இயக்கம் என்ற அளவிலும், குறி நோக்கியே நகர்ந்து, பல உயிர்த்தியாகங்களில் வளர்ந்த அவ்வியக்கத்தில் எனக்கு பெருமதிப்பு உண்டு. ஒரு இயக்கத்தின் ஒரு அங்கம் சோகமான முடிவுக்கு வந்தது குறித்து எனக்கு வருத்தம் உண்டு... இலங்கைத்தமிழர்களின் அவலநிலைக்கு இவ்வியக்கம் , சற்று நிதானித்திருந்தால் , பல குழுக்களுடன் கூடி ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.

செய்தியை வலைத்தளத்தில் படிக்கும் போது வருத்தம் கொதிப்பாக மாறியது. கமெண்ட்ஸ் இடுகைகள் ( ரிடிஃப்.காம்) பிரபாகரன் இறந்ததைக் கொண்டாடுவது கண்டு கோபம் மூள்கிறது. ஒருமனிதன்.. எத்தனை கொடுமைகள் சந்தித்திருந்தால் இப்படி ஒரு நாட்டையே குலை நடுங்க வைக்கும் அளவு மாறியிருப்பான்? எத்தனை பேர் அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உயிர்த்தியாகம் செய்திருப்பார்கள்? ஏன் இந்திய பஞ்சாபிகள், பெங்காலிகள் இன்னும் 1947 பிரிவினைக் கொடூரங்கள் குறித்து கொதிப்பது நியாயமென்றால், இலங்கையில் எரிவது கண்டு கொதிப்பது எந்த விதத்தில் குறைந்துபோனது.
ஒரு கமெண்ட்... " இன்று கொண்டாடுங்கள்.. ஸ்டாக் மார்க்கெட் 14000, காங்கிரஸ் வெற்றி, பிரபாகரன் மரணம்.." சே! என்ன மனிதர்கள் இவர்கள்? ஸ்டாக் மார்க்கெட் ஏற்றம் போன்ற அல்ப காரணங்களும், ஒரு மரணமும் ஒன்றாகுமா?

ஒருவேளை, ராஜபக்சேக்குத் தெரிந்தேதான் இருநாட்கள் பொறுத்திருக்கும்படி இந்திய அரசு சொல்லிற்றோ? எங்கள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெட்டுங்கள் என? அழுக்கான அரசியலில் எதுவும் சாத்தியம்.

இன்று மனம் கனத்திருக்கிறேன். ஒரு தமிழன் என்ற அளவில் எதையோ இழந்த சோகம்... இழந்தது இனத்தின் மானமா? வேதனை என் கையாலாகத்தனம் குறித்தா? வெட்கமா? தெரியவில்லை.
இறந்த தமிழ்வீரர்களின் ஆன்மா அமைதியடையட்டும்.
இனியாவது, கொஞ்சம் சுரணை சேர்த்து வாழத் தலைப்படுவோம்.


More than a Blog Aggregator

by Srimangai(K.Sudhakar)
இவர்களெல்லாம் மனிதர்களா?

பிரபாகரன் இறந்ததாக செய்தி வந்ததில் சிறிது குலைந்துதான் போனேன். புலிகள் கையாண்ட வன்முறையில் எனக்கு சம்மதமில்லை எனினும், ஒரு தமிழ் இயக்கம் என்ற அளவிலும், குறி நோக்கியே நகர்ந்து, பல உயிர்த்தியாகங்களில் வளர்ந்த அவ்வியக்கத்தில் எனக்கு பெருமதிப்பு உண்டு. ஒரு இயக்கத்தின் ஒரு அங்கம் சோகமான முடிவுக்கு வந்தது குறித்து எனக்கு வருத்தம் உண்டு... இலங்கைத்தமிழர்களின் அவலநிலைக்கு இவ்வியக்கம் , சற்று நிதானித்திருந்தால் , பல குழுக்களுடன் கூடி ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும்.

செய்தியை வலைத்தளத்தில் படிக்கும் போது வருத்தம் கொதிப்பாக மாறியது. கமெண்ட்ஸ் இடுகைகள் ( ரிடிஃப்.காம்) பிரபாகரன் இறந்ததைக் கொண்டாடுவது கண்டு கோபம் மூள்கிறது. ஒருமனிதன்.. எத்தனை கொடுமைகள் சந்தித்திருந்தால் இப்படி ஒரு நாட்டையே குலை நடுங்க வைக்கும் அளவு மாறியிருப்பான்? எத்தனை பேர் அவனது சொல்லுக்குக் கட்டுப்பட்டு உயிர்த்தியாகம் செய்திருப்பார்கள்? ஏன் இந்திய பஞ்சாபிகள், பெங்காலிகள் இன்னும் 1947 பிரிவினைக் கொடூரங்கள் குறித்து கொதிப்பது நியாயமென்றால், இலங்கையில் எரிவது கண்டு கொதிப்பது எந்த விதத்தில் குறைந்துபோனது.
ஒரு கமெண்ட்... " இன்று கொண்டாடுங்கள்.. ஸ்டாக் மார்க்கெட் 14000, காங்கிரஸ் வெற்றி, பிரபாகரன் மரணம்.." சே! என்ன மனிதர்கள் இவர்கள்? ஸ்டாக் மார்க்கெட் ஏற்றம் போன்ற அல்ப காரணங்களும், ஒரு மரணமும் ஒன்றாகுமா?

ஒருவேளை, ராஜபக்சேக்குத் தெரிந்தேதான் இருநாட்கள் பொறுத்திருக்கும்படி இந்திய அரசு சொல்லிற்றோ? எங்கள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் வெட்டுங்கள் என? அழுக்கான அரசியலில் எதுவும் சாத்தியம்.

இன்று மனம் கனத்திருக்கிறேன். ஒரு தமிழன் என்ற அளவில் எதையோ இழந்த சோகம்... இழந்தது இனத்தின் மானமா? வேதனை என் கையாலாகத்தனம் குறித்தா? வெட்கமா? தெரியவில்லை.
இறந்த தமிழ்வீரர்களின் ஆன்மா அமைதியடையட்டும்.
இனியாவது, கொஞ்சம் சுரணை சேர்த்து வாழத் தலைப்படுவோம்.
"எங்கடா பிணம் கிடக்கும்?" என அலைவது வல்லூறுகள் மட்டுமல்ல, வீடியோ கேமெராவும், மைக்கும் , சாட்டிலைட் ஆண்டெனா பொருத்தப்பட்ட வேனுமாகத் திரியும் இந்த ஊடகக்காரர்களும்தான்...

பிரபாகரன் மரணம், புலிகளின் ஒட்டுமொத்தத் தலைவர்களின் மரணம் என்பது அதிர்ச்சியான செய்தி, வலிமிகும் செய்தி - ஒரு இன மக்களுக்கு... அவர்கள் விரும்பினார்களோ இல்லையோ,ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது பின்னடைவுதான். தமிழ்மக்கள் குறித்து ஒரு பயலுக்கும் உணர்வில்லை- இந்திய ஆங்கில ஊடகங்கள் இதில் முன்னணி.

செய்தி தருவதிலும், ஆராய்வு செய்வதிலும் ஒரு பொறுப்புணர்வு தேவை. அவசியமேயில்லாமல் சில பரபரப்பு வார்த்தைகள் தொலைக்காட்சியில்...
" எல்.டி.டி.ஈ அழிந்தது".
என்ன கேணக்கூத்து இது? இவன்களுக்கு டெல்லி, மும்பை தவிர ஒரு சாலையிலும் செல்லத் தெரியாது.. வட இலங்கையின் காட்டுக்குள்ளே வலியுடன் போரடுபவர்களைக்குறித்து ஏ.ஸியில் இருந்து " அவன்களா, செத்துட்டாங்கடே.. லங்கா ஆர்மி அழிச்சேபோட்டுட்டான்" எனப் பேசுபவர்களை இழுத்து நாலு அறைவிடலாமா என ஆத்திரம் வருகிறது. தொழில் மரியாதை தெரியாத பதர்கள்...

ஓட்டு எண்ணும் இடங்களில் கூடியிருந்து, தலையைத் தலையை முன்னும் பின்னும் ஆட்டி, என்னமோ மிகப் பெரிய உண்மைகளைக் கண்டுபிடித்தமாதிரி பேசும் பத்தாம்பசலிகளும், ஸ்டூடியோவில், கோட்டும் சூட்டும் மாட்டி, தெரிந்த மாதிரி புள்ளிவிவரங்களை அள்ளிவிடும் படுபுத்திசாலிகளும், இலங்கை மாதிரி மிக சென்சிடிவான விசயங்களை விவாதிக்காமல் இருப்பது நல்லது. அதான் தோத்த, ஜெயித்த கட்சிப்புள்ளிகள் இருக்காங்களே....அவங்ககிட்ட வழக்கம்போல " எப்ப உ.பி கிராமங்கள்ல மின்சாரம் வரும்?" எனக் கேட்டுக்கொண்டு இருக்கவேண்டியதுதானே? இந்திய வடகிழக்கு மாகாணங்கள் எத்தனை உண்டு என்பதே இவர்களில் பலருக்குத் தெரியாது.
இருக்கிற தமிழர்களையே கண்டுகொள்வதில்லை ( ஓட்டு மட்டும் வேணும்). இவன்கள் எங்கே இலங்கை பத்தி உருப்படியா சொல்லப்போகிறான்கள்?
ஒரு வேளை இவர்களிடம் நான் ரொம்பவே எதிர்பார்த்துவிட்டேனோ?
ஒண்ணு நிச்சயம்.. இனி ஒரு விரிசல் இருக்கும்.... தமிழன் - தமிழல்லாதவன் என... குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை.

2009-05-31



More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
இன்பம் மிக்க இந்த பூமியில் பிறந்து நமக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் யாவும் நினைவில் திரைப்படம் போல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. பரபரப்பான இந்த உலகத்தில் இந்தப் படத்தை பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சற்றே தனிமையில் அமர்ந்து சிந்தனைக் குதிரையை தட்டிவிட்டோமானால் அன்றோ நம் இனிய நினைவுகள் நம் மனதை குளிரூட்டவரும். ஆஹா! அந்த இனிய நினைவுகளால் எத்தனை நாட்கள் என் கவலைகளை மறந்து களித்திருக்கிறேன்.

வானத்து வெண்ணிலா எங்கு சென்றாலும் உடன் நடந்து வருவது, காக்கா கடி போட்டு மிட்டாய் திண்பது, பனை ஓலைக் காத்தாடி, பனங்கா வண்டி, டயர் வண்டி, கயிற்றால் சுற்றி வளைத்த சிக்கு புக்கு இரயில் வண்டி, தெருவில் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, திருவிழாக் கால ஆட்டங்கள் இப்படி எத்தனை எத்தனை!

இன்றும் நினைத்தால் இனிக்கிறதே, ஐயகோ...மீண்டும் அந்த வாழ்க்கை திரும்பி வராதா? வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் விலைக்கு வாங்க முடிகிறதே, ஆனால் மீண்டும் நம்மால் அந்த சிறுவயது வாழ்க்கையை வாங்க முடியுமா? முடியாதுதான் ஆனால் நிச்சயம் அதை நினைத்துக் குதூகலம் அடையமுடியும். நம் பிள்ளைகளுக்கு சொல்லி மகிழ்ச்சியடைய முடியும். ஆனால் நம் குழந்தைகள் அவற்றை அனுபவிக்க முடியாமல் போகிறதே என்று மனதில் ஒரு ஓரத்தில் சிறு கவலை இருந்துகொண்டுதான் இருக்கும். என்ன செய்வது, காலம் மாறிப் போச்சு, உலக மயமாக்குதலும், பன்னாட்டு வர்த்தகமும், மேல் நாட்டுக் கலாச்சாரமும் நம்மை ஏராளமாக மாற்றி விட்டது. சரி, போனதெல்லாம் போகட்டும், வாருங்கள் நம் கடந்த காலத்தை சற்று அசை போடுவோம். என் வாழ்வில் அனுபவித்ததை நான் சொல்கிறேன், அதை ஒட்டி உங்கள் வாழ்வில் நடந்ததை நீங்கள் நினைவு கூர்ந்து இரசியுங்கள், முடிந்தால் மற்றவரும் அனுபவிக்குமாறு ஒரு பதிவைத் தொடங்கி எழுதுங்கள்.
கெமிக்கல் சேர்க்காத இயற்கையானப் பொருட்கள் வைத்து எளிமையான ஃபேஷ் பேக்

சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
கடல்பாசி 1ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் இரண்டையும் கலந்து நன்றாக முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரீல் அலசவும்.
பயன்கள்:
கடல்பாசியில் வைட்டமின்கள் நிறைய இருப்பதால் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக் மிகவும் நல்லது.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கான பேக் இது:
முல்தாணி மெட்டி ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, முட்டையின் வெள்ளை கரு இதனை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து சிறிது வெது வெதுப்பான நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் சருமத்தை மிருதுவாக்கி சுறுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.


எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
வெள்ளரிக்காய்ச்சாறு 1 தேக்கரண்டி,தேன் ஒரு தேக்கரண்டி,எலுமிச்சைசாறு ஒரு தேக்கரண்டி இதனை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் போடுவதால் சில நாட்களில் எண்ணெய் பசை குறைந்து விடும். பருக்களும் வராது.
படித்த தகவல்
கெமிக்கல் சேர்க்காத இயற்கையானப் பொருட்கள் வைத்து எளிமையான ஃபேஷ் பேக்

சென்சிடிவ் ஸ்கின் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
கடல்பாசி 1ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் இரண்டையும் கலந்து நன்றாக முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரீல் அலசவும்.
பயன்கள்:
கடல்பாசியில் வைட்டமின்கள் நிறைய இருப்பதால் சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக் மிகவும் நல்லது.
வறண்ட சருமம் கொண்டவர்களுக்கான பேக் இது:
முல்தாணி மெட்டி ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, முட்டையின் வெள்ளை கரு இதனை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து சிறிது வெது வெதுப்பான நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் சருமத்தை மிருதுவாக்கி சுறுக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும்.


எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்கு இந்த பேக்:
வெள்ளரிக்காய்ச்சாறு 1 தேக்கரண்டி,தேன் ஒரு தேக்கரண்டி,எலுமிச்சைசாறு ஒரு தேக்கரண்டி இதனை ஒன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து நீரில் அலசவும்.
பயன்கள்:
இந்த பேக் போடுவதால் சில நாட்களில் எண்ணெய் பசை குறைந்து விடும். பருக்களும் வராது.
படித்த தகவல்
மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றிய பல குழப்பச் செய்திகளை தொடர்ந்து விதைப்பதில் வெற்றி கண்டுள்ளது சிங்கள இனவாதம். அதற்கு துணை போவது ஊடக (மீடியா) பயங்கரவாதம்.

என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.

இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.

இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம். அதாவது... (மேலும் படிக்க)

*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*
மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை பற்றிய பல குழப்பச் செய்திகளை தொடர்ந்து விதைப்பதில் வெற்றி கண்டுள்ளது சிங்கள இனவாதம். அதற்கு துணை போவது ஊடக (மீடியா) பயங்கரவாதம்.

என்ன நடந்தது என்ற உண்மையைச் சொல்ல யாராவது எத்தனிக்க முயலும் போதெல்லாம் முன்னுக்குப் பின் முரணாக அறிக்கைகள் விடுத்து மக்கள் உணர்வுகளோடு விளையாடுவதும், போராட்டத்தை நீர்த்து விடச் செய்வதுமான வேலை நடந்து வருகிறது.

இலங்கையின் வல்லமை அத்தனை பெரிதா… அல்லது புலிகள் அந்த அளவு இந்த உலகை அச்சுறுத்திவிட்டார்களா… பார்ப்போம்.

இன்னும் ஒரு 24 மணிநேரம் பொறுத்திருந்து பதிவு செய்வோம். ஒரு தகவல் என்ற அடிப்படையில் மட்டுமே இப்போது பின்வரும் செய்தியைத் தருகிறோம். அதாவது... (மேலும் படிக்க)

*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*
இப்போதெல்லாம் பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகளில் malware காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. அத்துடன் தமது வலைப்பதிவுகள் (பிளாக்) காணாமல் போய்விட்டது என்ற புலம்பல்களும் தமிழ்ப் பதிவர்கள் மத்தியில் சர்வ சாதாரணமாகி விட்டது. தமிழ் வலைப்பதிவுகளில் malware பெரும்பாலும் NTamil திரட்டியின் Vote Button காரணமாகவே வருகின்றது. அல்லது வேறு சில Gadget காரணாமாக வரக்கூடும். அதுமட்டும் அல்லாமல் அவர்கள் பயன்படுத்தும் வேறு Java script நிரல்கள் மூலமும் வரலாம்.
கவனம்..! கவனம்..! கவனம்..!
இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக என்ன செய்யலாம்?

*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*

2009-05-31

உலக வல்லரசுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இந்திய மக்கள் நிலையான அரசினை தேர்வு செய்து சரியான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
உலக பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பினை உண்டாக்கி வரும் இச்சூழலில் நிலையான ஒரு அரசு நமக்கு கண்டிப்பாக தேவை.

பாஜகவின் பரிதாப நிலை

வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் பிரதம வேட்பாளர்களாக இல்லாததும் அத்வானி, மோடி இடையே நடந்த அதிகாரத்திற்கான போட்டி தமிழகம், ஆந்திர போன்ற மாநிலங்களில் சரியான கூட்டணி இல்லாமை போன்றவையே பாஜகவின் தோல்விக்கு காரணங்கள்.

தமிழக மக்களின் சிறந்த தெரிவு

கடந்த முறையை போலவே இம்முறையும் தமிழகம், ஆந்திர முடிவுகள் மத்திய அரசினை முடிவு செய்யும் விதமாக இருந்தது மேலும் உபி, கேரளம் மற்றும் மேற்கு வாங்க மாநில முடிவுகள் காங்கிரசை பெரும்பான்மையுடன் அரியணையில் அமர்த்தியுள்ளது.

இலங்கை பிரச்சனை

அதிமுக கூட்டணி இலங்கை பிரச்சனையை பிரதானமாக கையாண்டது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்கள் பற்றி இம்மியளவும் எண்ணிப்பார்க்காத அதிமுக தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க எனக்கு ஓட்டு போடுங்கள் என்றது அவர்கள் சிறந்த நடிகை என்பதை மக்களிடம் காட்டியது, யோசித்து பாருங்கள் வலையுலக நண்பர்களே வைகோ எதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டார்? இலங்கை தமிழர்கள் பற்றி பேசி தானே,ஆக இவர்கள் ஓட்டு வாங்க சொன்ன பொய் அவர்களுக்கே எதிராக முடிந்தது. விலைவாசி உயர்வு, மின்தடை போன்ற முக்கிய பிரச்சனைகளை நாயகர்கள் ஆக்கியிருந்தால் வெற்றி பெற உதவி இருக்கும்.

மண்ணை கவ்விய மதிமுக பாமக

சேது சமுத்திர திட்டத்தினை தமிழகத்திற்கு பெற திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று திமுக அணியிலிருந்து 2004 ஓட்டு கேட்ட வைகோ 2009 தேர்தலில் சேது சமுத்திர திட்டத்தினை செய்யல்படுத்தாது தடுக்கும் தலைவியின் பின்னால். சென்ற சட்டமன்ற தேர்தலிலே எடுபடாத குடும்ப அரசியல் என்ற வாதம்,சென்ற சட்டமன்ற தேர்தலிலே பாமகவைவிட குறைந்த இடங்களே தந்ததால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய வைகோ இம்முறை தன்மானத்தை தானை தலைவியிடம் அடகு வைத்து விட்டாரா? வைகோவை தோற்கடித்துள்ளனர் தமிழக மக்கள்.

ஒரு சதவிகித வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி பதவி சுகம் கண்டு வந்த நரியின் சாயத்தை வெளுக்க வைத்த தமிழக மக்கள் வாழ்க.இனியாவது திமுக அதிமுக போன்ற கட்சிகள் பாமக போன்றவர்களை புறந்தள்ள வேண்டும்.

வளர்ந்துவரும் தேமுதிக

2004 சட்டமன்ற தேர்தலிலே 8.5% இந்த தேர்தலிலே 10% வாக்குகளை தனித்து நின்று தமிழக நின்று மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்து வருகிறது தேமுதிக.


மொத்தத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை எங்களின் இதயத்தை துளைத்தாலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இதயம் கனத்தாலும் இந்தியாவிற்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கு வக்களித்திட எம் தமிழக மக்கள் சிறந்த மதிநுட்பம் கொண்டோர் என மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளனர்


பராசக்தி
பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன.

ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், "அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!" என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

"முப்பது வருடப் போராட்ட காலத்தில் 'அடுத்து என்ன நடக்கும்?' என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! (மேலும் படிக்க)


*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*
பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன.

ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், "அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!" என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

"முப்பது வருடப் போராட்ட காலத்தில் 'அடுத்து என்ன நடக்கும்?' என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! (மேலும் படிக்க)


*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*


More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
என்னடா இது, சம்பந்தர் குடிச்ச மாதிரி ஞானப் பால்னு சொல்லி குழப்பறேனேனு பார்க்கறீங்களா? நான் சின்னப் பையனா இருக்கும்போது... பார்வதி வந்து பால் கொடுத்தாங்களானு கேக்காதீங்க, நான் சின்னப் பையனா இருக்கும் போது சக தோழர்களோட எங்க ஊரு சிவன் கோயில்ல போய் விளையாடறது வழக்கம். சில நாள் திடீர்னு கோயில் ஐயர் ரொம்ப பாசமா கூப்பிடுவாறு, " டேய் பசங்களா, வந்து ஞானப் பால் வாங்கிட்டு போங்கடா"னு. "என்ன சாமி இன்னிக்கு விசேஷம்"னு ஒரு பையன் கேக்க "இன்னிக்கு பிரதோஷம்டா, இது சாமிக்கு அபிஷேகம் பண்ணின பால்"னு ஐயர் சொன்னாரு. ஏலக்காய் எல்லாம் போட்டு பால் ரொம்ப சுவையா இருக்கும், எல்லாரும் ஒரு ரெண்டு மூணு கரண்டி வாங்கி குடிப்போம்.

இது நடந்தது இருபது வருஷத்துக்கு முன்னால, அப்ப எல்லாம் பிரதோஷத்துக்கு இப்ப வரமாதிரி கூட்டமெல்லாம் வராது, ஏதோ ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் இருப்பாங்க. ஆனா இன்னிக்கு எந்த ஐயரும் எந்த கோயில்லயும் ஞானப் பால் குடுக்கறதா தெரியல, அப்படி குடுத்தாங்கன்னா அவ்வளவுதான் அவங்க தலையில் துண்டு போட்டுகிட்டு போக வேண்டியதுதான், இன்னிக்குதான் அவ்வளவு கூட்டம் வருதே பிரதோஷத்துக்கு!

அப்புறம் ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சி, கார்டமம் மில்க் (Cardamom milk) அப்படீனு ஆவின் பால் பாக்கெட் ஒன்னு வந்திச்சி அது கிட்டதட்ட இந்த ஞானப் பால் மாதிரிதான் இருக்கும். இப்பக் கூட எங்கேயாவது ஆவின் பொருட்களைப் பார்த்தா உடனே இந்த ஏலக்காய் பால் இருக்கானு தேடுற பழக்கம் இன்னிக்கும் எங்கிட்ட இருக்கு. கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க, ஏலக்காய், சக்கரை போட்ட பால் என்ன சுவையா இருக்கும்னு அப்புறம் நீங்களும் தேடுவீங்க...

பி.கு. முதல் முதலா ஆரம்பிக்கிறது இறைவன் கிட்டு ஆரம்பிச்சா என்னனு தோணிச்சி, உடனே இந்த ஞானப் பால் ஞாபகத்து வந்திடுச்சி. இது போல உங்களுக்கும் எதாவது அனுபவம் இருந்தா தயங்காம பகிர்ந்து கொள்ளுங்க...


More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
என்னடா இது, சம்பந்தர் குடிச்ச மாதிரி ஞானப் பால்னு சொல்லி குழப்பறேனேனு பார்க்கறீங்களா? நான் சின்னப் பையனா இருக்கும்போது... பார்வதி வந்து பால் கொடுத்தாங்களானு கேக்காதீங்க, நான் சின்னப் பையனா இருக்கும் போது சக தோழர்களோட எங்க ஊரு சிவன் கோயில்ல போய் விளையாடறது வழக்கம். சில நாள் திடீர்னு கோயில் ஐயர் ரொம்ப பாசமா கூப்பிடுவாறு, " டேய் பசங்களா, வந்து ஞானப் பால் வாங்கிட்டு போங்கடா"னு. "என்ன சாமி இன்னிக்கு விசேஷம்"னு ஒரு பையன் கேக்க "இன்னிக்கு பிரதோஷம்டா, இது சாமிக்கு அபிஷேகம் பண்ணின பால்"னு ஐயர் சொன்னாரு. ஏலக்காய் எல்லாம் போட்டு பால் ரொம்ப சுவையா இருக்கும், எல்லாரும் ஒரு ரெண்டு மூணு கரண்டி வாங்கி குடிப்போம்.

இது நடந்தது இருபது வருஷத்துக்கு முன்னால, அப்ப எல்லாம் பிரதோஷத்துக்கு இப்ப வரமாதிரி கூட்டமெல்லாம் வராது, ஏதோ ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் இருப்பாங்க. ஆனா இன்னிக்கு எந்த ஐயரும் எந்த கோயில்லயும் ஞானப் பால் குடுக்கறதா தெரியல, அப்படி குடுத்தாங்கன்னா அவ்வளவுதான் அவங்க தலையில் துண்டு போட்டுகிட்டு போக வேண்டியதுதான், இன்னிக்குதான் அவ்வளவு கூட்டம் வருதே பிரதோஷத்துக்கு!

அப்புறம் ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சி, கார்டமம் மில்க் (Cardamom milk) அப்படீனு ஆவின் பால் பாக்கெட் ஒன்னு வந்திச்சி அது கிட்டதட்ட இந்த ஞானப் பால் மாதிரிதான் இருக்கும். இப்பக் கூட எங்கேயாவது ஆவின் பொருட்களைப் பார்த்தா உடனே இந்த ஏலக்காய் பால் இருக்கானு தேடுற பழக்கம் இன்னிக்கும் எங்கிட்ட இருக்கு. கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க, ஏலக்காய், சக்கரை போட்ட பால் என்ன சுவையா இருக்கும்னு அப்புறம் நீங்களும் தேடுவீங்க...

பி.கு. முதல் முதலா ஆரம்பிக்கிறது இறைவன் கிட்டு ஆரம்பிச்சா என்னனு தோணிச்சி, உடனே இந்த ஞானப் பால் ஞாபகத்து வந்திடுச்சி. இது போல உங்களுக்கும் எதாவது அனுபவம் இருந்தா தயங்காம பகிர்ந்து கொள்ளுங்க...


More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
இன்பம் மிக்க இந்த பூமியில் பிறந்து நமக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் யாவும் நினைவில் திரைப்படம் போல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. பரபரப்பான இந்த உலகத்தில் இந்தப் படத்தை பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சற்றே தனிமையில் அமர்ந்து சிந்தனைக் குதிரையை தட்டிவிட்டோமானால் அன்றோ நம் இனிய நினைவுகள் நம் மனதை குளிரூட்டவரும். ஆஹா! அந்த இனிய நினைவுகளால் எத்தனை நாட்கள் என் கவலைகளை மறந்து களித்திருக்கிறேன்.

வானத்து வெண்ணிலா எங்கு சென்றாலும் உடன் நடந்து வருவது, காக்கா கடி போட்டு மிட்டாய் திண்பது, பனை ஓலைக் காத்தாடி, பனங்கா வண்டி, டயர் வண்டி, கயிற்றால் சுற்றி வளைத்த சிக்கு புக்கு இரயில் வண்டி, தெருவில் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, திருவிழாக் கால ஆட்டங்கள் இப்படி எத்தனை எத்தனை!

இன்றும் நினைத்தால் இனிக்கிறதே, ஐயகோ...மீண்டும் அந்த வாழ்க்கை திரும்பி வராதா? வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் விலைக்கு வாங்க முடிகிறதே, ஆனால் மீண்டும் நம்மால் அந்த சிறுவயது வாழ்க்கையை வாங்க முடியுமா? முடியாதுதான் ஆனால் நிச்சயம் அதை நினைத்துக் குதூகலம் அடையமுடியும். நம் பிள்ளைகளுக்கு சொல்லி மகிழ்ச்சியடைய முடியும். ஆனால் நம் குழந்தைகள் அவற்றை அனுபவிக்க முடியாமல் போகிறதே என்று மனதில் ஒரு ஓரத்தில் சிறு கவலை இருந்துகொண்டுதான் இருக்கும். என்ன செய்வது, காலம் மாறிப் போச்சு, உலக மயமாக்குதலும், பன்னாட்டு வர்த்தகமும், மேல் நாட்டுக் கலாச்சாரமும் நம்மை ஏராளமாக மாற்றி விட்டது. சரி, போனதெல்லாம் போகட்டும், வாருங்கள் நம் கடந்த காலத்தை சற்று அசை போடுவோம். என் வாழ்வில் அனுபவித்ததை நான் சொல்கிறேன், அதை ஒட்டி உங்கள் வாழ்வில் நடந்ததை நீங்கள் நினைவு கூர்ந்து இரசியுங்கள், முடிந்தால் மற்றவரும் அனுபவிக்குமாறு ஒரு பதிவைத் தொடங்கி எழுதுங்கள்.

2009-05-31



More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? அம்மி பறக்குதே இல்லையோ நம்ம பசங்க விடற பட்டம் அதாங்க மெட்ராஸ் பாஷையில காத்தாடி, ரொம்ப ஜோரா பறக்கும்.
பட்டம்னு சொன்ன உடனே பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க, எங்க ஊர் தேர்முட்டி (தேரடி) பக்கத்துல ஒரு இருபது இருபத்தஞ்சு படிக்கட்டு வச்ச மேடை இருக்கும் அதுக்கு பக்கத்துல தேர நிறுத்தி வச்சிருப்பாங்க, ஆடி மாசம் வந்துட்டா எங்க பக்கத்துப் பசங்க எல்லாரும் கையில நூலேட அந்த மேடை மேலதான் நிப்பாங்க. எல்லாரும் பட்டம் விட்டுகிட்டு ஒரே ஜாலிதான் போங்க, ஆனா இந்த மாஞ்சா கீஞ்சானு சொல்றாங்களே அதெல்லாம் ஒன்னும் தெரியாது எங்களுக்கு. அப்புறம் பட்டம் காசு குடுத்தெல்லாம் வாங்க மாட்டோம், நாங்களே செஞ்சிடுவோம், ஆமா இது என்னா பெரிய கம்பசூத்திரமான்னு கேக்கறீங்களா!

அப்பவெல்லாம் வீட்டுல ஒரே ஒரு பட்டம் வாங்கதான் காசு தருவாங்க, நம்ம தெருவில இருக்கற சில வெவரமான பசங்க இந்த சமயத்துல நல்ல காசு பார்ப்பாங்க. ஒரு ஐம்பது காசுக்கு கலர் பேப்பர் வாங்கினா போதும் அதுல சிறுசு பெரிசுனு ஒரு அஞ்சு அல்லது ஆறு பட்டம் பண்ணிடுவாங்க, அத வீட்டுக்கு வெளியில ஒரு கயித்துக் கட்டில் போட்டு அதுல கட்டி வச்சிருப்பாங்க (அதாங்க Display). எப்படியும் ஒரு பட்டம் 25 காசுல இருந்து 1 ரூபாய் வரைக்கும் சைஸ் வாரியா பிரிச்சி வித்துடுவாங்க.

எப்படியாவது பைசாவ தாத்தாகிட்டயோ இல்ல பாட்டிக்கிட்டயோ வாங்கிட்டு போய் ஒரு பட்டம் வாங்கிடுவோம். ஆனா ஒன்னு அப்படி வாங்கின பட்டம் எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ள கிழிஞ்சிடும் இல்ல எங்கயாவது ஒரு வீட்டு ஓட்டுலயோ இல்ல பெரிய மரத்துலயோ போய் மாட்டிக்கும். அது எப்படினா? நல்லா காத்து அடிக்கும்போது பட்டம் ரொம்ப உயரமா பறக்கும், உடனே போட்டி வந்துடும் " டேய் என் பட்டம்தாண்டா அதிக உயரத்துல பறக்குது" அப்படீனு ஒருத்தன் கத்திட்டான்னா உடனே அடுத்தவன் நூல்கண்டு புதுசா வாங்கிட்டு வந்து நீளத்த அதிகமாக்குவான், அப்புறம் அவனும் அதே மாதிரி கத்துவான், இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிக்க கடைசியில் யாரோட பட்டமும் திரும்பி வராது. இந்த நூல்கண்டு பிரச்சினைக்காகவே நாங்க ஒரு வாரத்துக்கு முன்னாலயே ஒரு பத்து நூல்கண்டாவது வாங்கிட்டு வந்து ஒரு குச்சியில முடிச்சி போட்டு முடிச்சி போட்டு சுத்தி வச்சிடுவோம்.

பட்டம் கிழிஞ்சி போயிடிச்சினா சும்மா இருப்போம்னு மட்டும் நினைக்காதீங்க! நாங்க பட்டத்த வாங்கின உடனே அதோட டெக்னாலஜி என்னானு ஸ்டடி பண்ணிடுவோம். அதுக்கப்புறம் வீட்டுல கிடைக்கற பழைய செய்தித்தாள வச்சி, தென்னை இலையிலிருந்து வருமே அதுதாங்க நம்ம விளக்கமாறு (துடைப்பம்) அதுல இருந்து குச்சிய உருவி, பசையெல்லாம் போட்டு பக்காவா பட்டம் ரெடி பண்ணிடுவோம். அப்புறம் என்ன, இன்னொரு முறை அதே மாதிரி போட்டிதான்.
அப்புறம் காத்து நிக்கற வரைக்கும் இதே வேலைதான். சில ஆர்வக் கோளாறு பசங்க பட்டத்த பள்ளிக்கூடத்துக்கு எடுத்துகிட்டு வந்து இடைவேளை நேரத்துல எல்லாம் கூட பறக்கவிட்டு ஸீனப் போடுவாங்க.

சின்னப் பசங்க, புதுசா பட்டம் விடுறவங்க ஒரு பத்தடி நீளக் கயிறுல பட்டத்த கட்டிக்கிட்டு ஓடு ஓடுனு ஓடுவாங்க பாருங்க... அப்பப்பா ஊரே ஒரே களைக் கட்டி இருக்கும் இந்த நேரத்துல. சில நேரத்துல பெரியவங்களே வந்து நல்லா உயரத்துல பறக்குற பட்டத்த பார்த்து பாராட்டுவாங்க பாருங்க, அப்ப நாம என்னவோ அந்த பட்டத்து மேலயே உட்கார்ந்து பறக்குற மாதிரி இருக்கும்...

இதெல்லாம் சின்னப் பசங்கதான் விளையாடலாம்னெல்லாம் ஒன்னும் கிடையாது, நம்மளும் எந்த வயசுலயும் விளையாடணும். அப்பத்தான் நாமளும் இளமையா இருப்போம், நம்ம மனசும் இளமையா இருக்கும், நம்மக் குழந்தைங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும். ஆயிரம்தான் வசதிகள் இன்னிக்கு இருந்தாலும், அந்த நாள் குடுத்த மகிழ்ச்சி இன்னிக்கு கிடைக்குதா?

அதனால எல்லாரும் ரெடியா இருங்க, கடற்கரைக்கு போறவங்க காத்தடிச்ச பலூனெல்லாம் வாங்காதீங்க, நல்ல ஒரு பட்டம் வாங்கி விடுங்க. கிடைக்கலனா சொல்லுங்க எப்படி பட்டம் செய்யறதுங்கற டிப்ஸ் நான் தறேன் உங்களுக்கு...


More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? அம்மி பறக்குதே இல்லையோ நம்ம பசங்க விடற பட்டம் அதாங்க மெட்ராஸ் பாஷையில காத்தாடி, ரொம்ப ஜோரா பறக்கும்.
பட்டம்னு சொன்ன உடனே பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க, எங்க ஊர் தேர்முட்டி (தேரடி) பக்கத்துல ஒரு இருபது இருபத்தஞ்சு படிக்கட்டு வச்ச மேடை இருக்கும் அதுக்கு பக்கத்துல தேர நிறுத்தி வச்சிருப்பாங்க, ஆடி மாசம் வந்துட்டா எங்க பக்கத்துப் பசங்க எல்லாரும் கையில நூலேட அந்த மேடை மேலதான் நிப்பாங்க. எல்லாரும் பட்டம் விட்டுகிட்டு ஒரே ஜாலிதான் போங்க, ஆனா இந்த மாஞ்சா கீஞ்சானு சொல்றாங்களே அதெல்லாம் ஒன்னும் தெரியாது எங்களுக்கு. அப்புறம் பட்டம் காசு குடுத்தெல்லாம் வாங்க மாட்டோம், நாங்களே செஞ்சிடுவோம், ஆமா இது என்னா பெரிய கம்பசூத்திரமான்னு கேக்கறீங்களா!

அப்பவெல்லாம் வீட்டுல ஒரே ஒரு பட்டம் வாங்கதான் காசு தருவாங்க, நம்ம தெருவில இருக்கற சில வெவரமான பசங்க இந்த சமயத்துல நல்ல காசு பார்ப்பாங்க. ஒரு ஐம்பது காசுக்கு கலர் பேப்பர் வாங்கினா போதும் அதுல சிறுசு பெரிசுனு ஒரு அஞ்சு அல்லது ஆறு பட்டம் பண்ணிடுவாங்க, அத வீட்டுக்கு வெளியில ஒரு கயித்துக் கட்டில் போட்டு அதுல கட்டி வச்சிருப்பாங்க (அதாங்க Display). எப்படியும் ஒரு பட்டம் 25 காசுல இருந்து 1 ரூபாய் வரைக்கும் சைஸ் வாரியா பிரிச்சி வித்துடுவாங்க.

எப்படியாவது பைசாவ தாத்தாகிட்டயோ இல்ல பாட்டிக்கிட்டயோ வாங்கிட்டு போய் ஒரு பட்டம் வாங்கிடுவோம். ஆனா ஒன்னு அப்படி வாங்கின பட்டம் எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ள கிழிஞ்சிடும் இல்ல எங்கயாவது ஒரு வீட்டு ஓட்டுலயோ இல்ல பெரிய மரத்துலயோ போய் மாட்டிக்கும். அது எப்படினா? நல்லா காத்து அடிக்கும்போது பட்டம் ரொம்ப உயரமா பறக்கும், உடனே போட்டி வந்துடும் " டேய் என் பட்டம்தாண்டா அதிக உயரத்துல பறக்குது" அப்படீனு ஒருத்தன் கத்திட்டான்னா உடனே அடுத்தவன் நூல்கண்டு புதுசா வாங்கிட்டு வந்து நீளத்த அதிகமாக்குவான், அப்புறம் அவனும் அதே மாதிரி கத்துவான், இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிக்க கடைசியில் யாரோட பட்டமும் திரும்பி வராது. இந்த நூல்கண்டு பிரச்சினைக்காகவே நாங்க ஒரு வாரத்துக்கு முன்னாலயே ஒரு பத்து நூல்கண்டாவது வாங்கிட்டு வந்து ஒரு குச்சியில முடிச்சி போட்டு முடிச்சி போட்டு சுத்தி வச்சிடுவோம்.

பட்டம் கிழிஞ்சி போயிடிச்சினா சும்மா இருப்போம்னு மட்டும் நினைக்காதீங்க! நாங்க பட்டத்த வாங்கின உடனே அதோட டெக்னாலஜி என்னானு ஸ்டடி பண்ணிடுவோம். அதுக்கப்புறம் வீட்டுல கிடைக்கற பழைய செய்தித்தாள வச்சி, தென்னை இலையிலிருந்து வருமே அதுதாங்க நம்ம விளக்கமாறு (துடைப்பம்) அதுல இருந்து குச்சிய உருவி, பசையெல்லாம் போட்டு பக்காவா பட்டம் ரெடி பண்ணிடுவோம். அப்புறம் என்ன, இன்னொரு முறை அதே மாதிரி போட்டிதான்.
அப்புறம் காத்து நிக்கற வரைக்கும் இதே வேலைதான். சில ஆர்வக் கோளாறு பசங்க பட்டத்த பள்ளிக்கூடத்துக்கு எடுத்துகிட்டு வந்து இடைவேளை நேரத்துல எல்லாம் கூட பறக்கவிட்டு ஸீனப் போடுவாங்க.

சின்னப் பசங்க, புதுசா பட்டம் விடுறவங்க ஒரு பத்தடி நீளக் கயிறுல பட்டத்த கட்டிக்கிட்டு ஓடு ஓடுனு ஓடுவாங்க பாருங்க... அப்பப்பா ஊரே ஒரே களைக் கட்டி இருக்கும் இந்த நேரத்துல. சில நேரத்துல பெரியவங்களே வந்து நல்லா உயரத்துல பறக்குற பட்டத்த பார்த்து பாராட்டுவாங்க பாருங்க, அப்ப நாம என்னவோ அந்த பட்டத்து மேலயே உட்கார்ந்து பறக்குற மாதிரி இருக்கும்...

இதெல்லாம் சின்னப் பசங்கதான் விளையாடலாம்னெல்லாம் ஒன்னும் கிடையாது, நம்மளும் எந்த வயசுலயும் விளையாடணும். அப்பத்தான் நாமளும் இளமையா இருப்போம், நம்ம மனசும் இளமையா இருக்கும், நம்மக் குழந்தைங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும். ஆயிரம்தான் வசதிகள் இன்னிக்கு இருந்தாலும், அந்த நாள் குடுத்த மகிழ்ச்சி இன்னிக்கு கிடைக்குதா?

அதனால எல்லாரும் ரெடியா இருங்க, கடற்கரைக்கு போறவங்க காத்தடிச்ச பலூனெல்லாம் வாங்காதீங்க, நல்ல ஒரு பட்டம் வாங்கி விடுங்க. கிடைக்கலனா சொல்லுங்க எப்படி பட்டம் செய்யறதுங்கற டிப்ஸ் நான் தறேன் உங்களுக்கு...
இமயத்தில் அழகானந்தா மற்றும் பாகிரதி நதிகள் இணையுமிடம் - அரிய புகைப்படம்

இமயத்தில் அழகானந்தா மற்றும் பாகிரதி நதிகள் இணையுமிடம் - அரிய புகைப்படம்

இரண்டாம் உலகப்போரில் நாசிகளால் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு










இரண்டாம் உலகப்போரில் நாசிகளால் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு