சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

என் நிழல்பட்டு
நடந்து போகும் அவன் நிழலோடு
உரசி செல்கிறது இவன் நிழலும்...

கடந்து கொள்கிற நிஜங்கள்
கைக்குலுக்காமல் தொடர்கின்றன
களர் நிலத்திலும்...

நட்பாக்கி விடும் நிழலின் மரத்தை
வீழ்த்துவதிலேயே இருக்கிறது
மனித விருப்பம்...

அபகரித்தல்
அறியாதவாறே நிகழ்த்தப் படுகிறது
கரை அரிக்கும் அலையாய் வருடி...

அடுக்ககங்களின் நிழல்கள் கூட
நீழ்வதில்லை
குடிசைகளின் திசை நோக்கி...

வளாகங்களை
வசீகரமாக விரித்துக் கொள்கின்றவர்கள்
சுவரெழுப்பிக் கொள்கின்றனர்
மனங்களை...

எழும்பும் சப்தம்
எல்லாச் செவிகளையும் தான்
தீண்டுகிறது...

பார்வைகள் கூட
பட்டுத்தான் நகர்கிறது புறத்தில்...

என்பதை மீறி
தம் நிழல் அலைகளை
தாமே எழுப்பிக் கொள்கின்றனர்
தனக்கானதாக இருக்கும்படி...

ஒரு நாளில்
அவரவர் நிழல்களே
அவரவர்களை விழுங்கி விடுவதிலிருந்து
தப்பிக்க முடியாமல் நிஜங்களாகி விடும்
நிழல்களோடு நிஜங்கள்...

-கா.அமீர்ஜான்
உன்
இருமலின் அர்த்தம்
புரிந்து
குழந்தைகளின்
உறக்கம் கலையாமல்
உன் அறையில்
விடியும் வரை நான்.
சில நாட்களாய்
அந்த இருமலை எதிர்பார்த்து
நான் உறங்குவதே இல்லை.
விடியும் வரையும்
நீ இருமுவதே இல்லை
அப்படிதான்
என்ன வயதாகி விட்டதோ
உனக்கு.

-லசி
எந்த உறவும் இல்லாமல்
நடிப்பும் இல்லாமல்
அன்புக்காக
ஏங்கும் நீ
அனாதை என்று
அழைக்கப்படுகிறாய்!

எல்லா உறவுகளுடனும்
அன்பு இல்லாமல்
நடித்தால் மட்டுமே போதும்
என்று வாழ
பழகிக் கொண்ட நான் -
என்னவென்று அழைக்கப் படுவேன்!

-சுகந்தா


More than a Blog Aggregator

by ச. ராமானுசம்

பள்ளி ஆண்டு விழாவில்,
இறைவன் எனும் நான்கெழத்து பற்றியான
கவிதை போட்டியில் அவன் எழுதிய இரண்டெழத்து கவிதை
தாய்.
நிகழ்ச்சிக்கு அனைவரும் தங்கள் பெற்றோருடன் வந்திருக்க
இவனது தாயோ சிறையில்
விபச்சார வழக்கின்கிழ்.
(கள்ள தொடர்பில் கருவுற்ற நடை பாதையில் வாழும் பெண் ஒருத்தி, பிறக்க போகும் தன் குழந்தையை நோக்கி கூறுவது)

நாங்கள் ஒருவரை ஒருவர் இரையாக்கி உண்டதில்
தோன்றிய என் அடிவயிற் று ஜீரணமே !
இனி நீ பூமியில் படப்போகும் வேதனைகளை பட்டியலிடுவேன் கேள்.

நான் அடி வயிறில் ஜீரணித்ததை விட
மேல் வயிறில் ஜீரணித்தது குறைவுதான்
ஆகையால், என் முலையில் நீ வாய்வைத்து உறிஞ்சினால் ஊறப்போவதென்னவோ உன் வாயின் எச்சில் மட்டுமே
சுவைக்காக என் மார்பில் காய்ந்த வியர்வையை அதில் கலந்து கொள்.

இப்பொழுது கிடைத்து கொண்டிருக்கும் ஒருவேளை உணவுக்கும் நாளை உத்திரவாதமில்லை.
உன் அக்காளின் தந்தையை போல்
இப்பொழுது உன்னை எனில் ஊட்டியவனும் ஓடிவிடகூடும்.
பின்பு, கோவில்படிகட்டுகளும் சாலைசந்திபுகளும் நம் தொழில்கூடமாக மாறிவிடக்கூடும்.

மழை பெய்தால் நனைய பழகிகொள்
வெயில் அடித்தால் காய பழகிகொள்
குளிரடித்தால் நடுங்கி கொள்
ஆனால், பசி எடுத்தால் மட்டும் அடக்கிகொள்

நிலவை பார்த்து உறங்கிகொள்
கதிரை பார்த்து விழித்துகொள்
ஏதோ ஒரு விடியலில் இருந்து, உன்னருகே நான் இருக்கபோவதில்லை.

ஆணாக பிறந்து விட்டால், உணவு விடுதியின் எச்சில் சேற்றிலும்
வாகனப் பழுது பார்க்கும் கடைகளில் எண்ணையிலும் அமிழ்ந்து போவாய்.
பெண்ணாக பிறந்து விட்டால், வயது வரும் முன்பே
வயதுக்கு வரவழைக்க படுவாய்.

இதை அனுபவிக்கதானா,என் வயற்றில் துடிப்புடன் காத்திருக்கிறாய்
காம தீயில் பிரிந்த என் சுடரே !

உன் பிஞ்சு கால்களால் என் அடிவயற்றில் உத்தரவிடு இப்பொழுதே.
ஜிரணித்திருந்தாலும் வலுகட்டாயமாக உன்னை வாந்தி எடுத்து விடுகிறேன்.



More than a Blog Aggregator

by ச. ராமானுசம்

பள்ளி ஆண்டு விழாவில்,
இறைவன் எனும் நான்கெழத்து பற்றியான
கவிதை போட்டியில் அவன் எழுதிய இரண்டெழத்து கவிதை
தாய்.
நிகழ்ச்சிக்கு அனைவரும் தங்கள் பெற்றோருடன் வந்திருக்க
இவனது தாயோ சிறையில்
விபச்சார வழக்கின்கிழ்.

கருத்துகள் இல்லை: