ஆரோவில் பாண்டிச்சேரியில் மிகப் பெரிய தியான மண்டபத்தை 70 களில் கட்டப்பட்டு வரும் நிலையில் கண்டு அதிசயித்தது உண்டு. இனம், மொழி, மதம் வேறுபாடு இன்றி எவரும் எப்பொழுது வேண்டுமானலும் சென்று தியானம் செய்வதற்கு உதவியாக அரவிந்த ஆசிரமத்தின் அன்னையின் விருப்பப்படி கட்டப்பட்டது.
மாத்ருமந்திர் என்ற பெயரில் இப்பொழுது பொற்கோவில் போன்று ஓங்கி நிற்பதை (இணைய தளத்தில்) காணும் போது பரவசமாகிறது.
ஆனால் மாத்ருமந்திர் வெறும் பாண்டிச்சேரிக்கு மட்டுமே.
ஆந்திராவைச் சேர்ந்த பிரம்மரிஷி பத்ரிஜி (Brahmarishi Patriji) இப்போது தியான மண்டபங்களை நாட்டின் பல பாகங்களிலும் நிறுவுவதற்கு ஊக்குவித்து வருகிறார். இவர் விவசாயத்தில் முதுகலை பட்டதாரி.கிருஹஸ்தர். பலவருடங்கள் தனியார் துறையில் பணியாற்றியவர்.
இவரது தியான மண்டபம் சற்று வித்தியாசமானது. அவை பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
வடுவூர் குமாரின் கட்டுமானத்துறை வலைப்பக்கத்தில் பிரமிட் அதிசய சக்தியை விளக்கும் ஒரு சலனப் படத்தை கண்டபோது அதை தரவிறக்கம் செய்து பலருக்கும் காட்டி வந்தேன். அப்போது ஒருவர் பெங்களூருக்கு அருகே உள்ள பிரமிட் தியான மண்டபத்தை குறிப்பிட்டார். அது தான் மேலே குறிப்பிட்ட பத்ரிஜியின் தியான மண்டபம். சமீபத்தில் அங்கு சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்தது.
கனகபுரா சாலையில் Pyramid valley என்ற பெயரில் வழிகாட்டும் பலகைகள் உள்ளன. தூரம் 35 கிமீகள் பிராதன சாலையிலிருந்து ஒரு கிமீ தூரம் கிராமபாங்கான சாலையில் உள்ளே பயணிக்க வேண்டும்.

சுமார் 160 அடி அளவுள்ள சதுர வடிவ அடிபாகத்தில் 107 அடி உயரம் உயர்ந்து இருக்கும் இந்த பிரமிட்டில் ஐந்தாயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் தியானம் செய்ய முடியுமாம்.
இது அல்லாமல் ஆந்திராவில் பத்து, கர்நாடகத்தில் மூன்று தமிழ்நாட்டில் இரண்டு என கிளைகள் 200 முதல் 300 பேர் வரை தியானம் செய்யக் கூடிய மண்டபங்களாக மலர்ந்து சேவை புரிந்து வருகின்றன.
சென்னை தியாகராய நகரில் சுப்ரமண்யா பிரமிட் தியான மையம் என்ற பெயரிலும், கோவை வடவள்ளியில் ஸ்ரீ சதாசிவ பிரமிட் தியான மையம் என்ற பெயரிலும் இயங்குகின்றன.
தியானத்தில் மூச்சு ஒழுங்குபடுகிறது, மூச்சு ஒழுங்குப் படும் பொழுது மனம் ஒழுங்காகிறது. மனம் ஒழுங்குபட்டால் மனிதன் ஒழுங்காகிறன். மனிதன் ஒழுங்காகும் பொழுது சமுதாயமும் ஒழுங்கு படுகிறது.
எளிமையான முறைதான். ஆனால் மனிதனை இதை கைகொள்ள வைப்பதில் தான் வெற்றியின் ரகசியம் உள்ளது. அதற்கு இப்படிப்பட்ட தியான மண்டபங்கள் ஊக்குவிக்கும் புதிய ஆலயங்களாக மலருமோ என்னவோ !

தியானத்தை வீட்டிலோ நடமாற்ற வெளியிலோ அல்லது அமைதியான ஆலயத்திலோ கூட செய்ய இயலும் தான். ஆனால் ஒரு புதிய முனைப்பு கொடுக்க வேண்டுமாயின் அதற்கென பிரத்யேகமான ஏற்பாடு செய்தால் பலரையும் கவர்ந்திழுக்க முடியும்.
காலத்திற்கேற்ற உத்தியை கைகொள்வதில் தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.
சரி, நான் தியானம் செய்தேனா என்று கேட்கிறீர்களா? உம் ...செய்தேன், முதல் தளத்தில். சர்வ நிசப்தம். அசதியில் தூக்கமாய் வந்தது. எழுந்து வந்து விட்டேன்.
பாவம், பிறருக்கு ஏன் என்னால் தொந்தரவு :)))

பிரமிட் முறை தியானம் பற்றி அறிய விரும்புவர்கள் கீழ்கண்ட இணைப்புகளில் மேலும் விவரம் பெறலாம்.
http://www.pyramidspiritualsocieties.org/PSS/Home/Home1.htm
http://www.patriji.org/en/htmls/articles/pyramid_movement.html
மாத்ருமந்திர் என்ற பெயரில் இப்பொழுது பொற்கோவில் போன்று ஓங்கி நிற்பதை (இணைய தளத்தில்) காணும் போது பரவசமாகிறது.
ஆனால் மாத்ருமந்திர் வெறும் பாண்டிச்சேரிக்கு மட்டுமே.
ஆந்திராவைச் சேர்ந்த பிரம்மரிஷி பத்ரிஜி (Brahmarishi Patriji) இப்போது தியான மண்டபங்களை நாட்டின் பல பாகங்களிலும் நிறுவுவதற்கு ஊக்குவித்து வருகிறார். இவர் விவசாயத்தில் முதுகலை பட்டதாரி.கிருஹஸ்தர். பலவருடங்கள் தனியார் துறையில் பணியாற்றியவர்.
இவரது தியான மண்டபம் சற்று வித்தியாசமானது. அவை பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.
வடுவூர் குமாரின் கட்டுமானத்துறை வலைப்பக்கத்தில் பிரமிட் அதிசய சக்தியை விளக்கும் ஒரு சலனப் படத்தை கண்டபோது அதை தரவிறக்கம் செய்து பலருக்கும் காட்டி வந்தேன். அப்போது ஒருவர் பெங்களூருக்கு அருகே உள்ள பிரமிட் தியான மண்டபத்தை குறிப்பிட்டார். அது தான் மேலே குறிப்பிட்ட பத்ரிஜியின் தியான மண்டபம். சமீபத்தில் அங்கு சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்தது.
கனகபுரா சாலையில் Pyramid valley என்ற பெயரில் வழிகாட்டும் பலகைகள் உள்ளன. தூரம் 35 கிமீகள் பிராதன சாலையிலிருந்து ஒரு கிமீ தூரம் கிராமபாங்கான சாலையில் உள்ளே பயணிக்க வேண்டும்.
சுமார் 160 அடி அளவுள்ள சதுர வடிவ அடிபாகத்தில் 107 அடி உயரம் உயர்ந்து இருக்கும் இந்த பிரமிட்டில் ஐந்தாயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் தியானம் செய்ய முடியுமாம்.
இது அல்லாமல் ஆந்திராவில் பத்து, கர்நாடகத்தில் மூன்று தமிழ்நாட்டில் இரண்டு என கிளைகள் 200 முதல் 300 பேர் வரை தியானம் செய்யக் கூடிய மண்டபங்களாக மலர்ந்து சேவை புரிந்து வருகின்றன.
சென்னை தியாகராய நகரில் சுப்ரமண்யா பிரமிட் தியான மையம் என்ற பெயரிலும், கோவை வடவள்ளியில் ஸ்ரீ சதாசிவ பிரமிட் தியான மையம் என்ற பெயரிலும் இயங்குகின்றன.
பத்ரிஜியின் முறை தியானம் மூச்சு ஓட்டத்தை கவனிப்பதையே முக்கிய அங்கமாக கொள்கிறது. இதை புத்தர் கண்ட வழி என்று சொல்லலாம். அதனால் செபிக்க மந்திரமோ ஆராதனை முறைகளோ இங்கு தேவையில்லை.
(பெரிது படுத்தி படிக்கலாம்)

(பெரிது படுத்தி படிக்கலாம்)
தியானத்தில் மூச்சு ஒழுங்குபடுகிறது, மூச்சு ஒழுங்குப் படும் பொழுது மனம் ஒழுங்காகிறது. மனம் ஒழுங்குபட்டால் மனிதன் ஒழுங்காகிறன். மனிதன் ஒழுங்காகும் பொழுது சமுதாயமும் ஒழுங்கு படுகிறது.
எளிமையான முறைதான். ஆனால் மனிதனை இதை கைகொள்ள வைப்பதில் தான் வெற்றியின் ரகசியம் உள்ளது. அதற்கு இப்படிப்பட்ட தியான மண்டபங்கள் ஊக்குவிக்கும் புதிய ஆலயங்களாக மலருமோ என்னவோ !

தியானத்தை வீட்டிலோ நடமாற்ற வெளியிலோ அல்லது அமைதியான ஆலயத்திலோ கூட செய்ய இயலும் தான். ஆனால் ஒரு புதிய முனைப்பு கொடுக்க வேண்டுமாயின் அதற்கென பிரத்யேகமான ஏற்பாடு செய்தால் பலரையும் கவர்ந்திழுக்க முடியும்.
காலத்திற்கேற்ற உத்தியை கைகொள்வதில் தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.
சரி, நான் தியானம் செய்தேனா என்று கேட்கிறீர்களா? உம் ...செய்தேன், முதல் தளத்தில். சர்வ நிசப்தம். அசதியில் தூக்கமாய் வந்தது. எழுந்து வந்து விட்டேன்.
பாவம், பிறருக்கு ஏன் என்னால் தொந்தரவு :)))
பிரமிட் முறை தியானம் பற்றி அறிய விரும்புவர்கள் கீழ்கண்ட இணைப்புகளில் மேலும் விவரம் பெறலாம்.
http://www.pyramidspiritualsocieties.org/PSS/Home/Home1.htm
http://www.patriji.org/en/htmls/articles/pyramid_movement.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக