
முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்று சொல்லுகிறார்கள். இதில் பெருமை பட எதுவும் இல்லை. இந்த கதையை எங்கு வேண்டும் என்றாலும் எடுக்கலாம். நடித்திருக்கும் நடிகர் - நடிகையர் அனைவரும் அமெரிக்காவில் வேலை செய்யும் நம்ம மக்கள்(கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், டாக்டர்கள்...). நடிகர்கள் சுமாராக நடிக்கிறார்கள், அதாவது அவர்கள் நடிக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. சிவாஜி, எம்.ஜி.ஆர், ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவர்கள் நடித்தால் நமக்கு அவர்கள் நடிக்கிறார்கள் என்று தெரியும். ஆனால் கேரக்டர் போலவே வாழ்ந்து காண்பித்தார்கள் என்று விமர்சனம் எழுதுவோம். இந்த படத்தில் அது போல எதுவும் இல்லை.
கதை: கதை தான் படத்தின் ஹீரோ!. நல்ல வேளை இந்த கதை நம்ம மசாலா இயக்குனர்களின் கைகளில் சிக்கவில்லை. தமிழ் சூப்பர்களும், சுப்ரீம்களும், அல்டிமேட் ஸ்டார்களும், புரட்சி நாயகன்களும் ... இந்த கதைக்கு யோசிக்கவே திகிலாக இருக்கிறது. நிச்சயம் கதையை ஆம்லெட் போட்டு சாப்பிட்டிருப்பார்கள். இதற்காகவே இவர்கள் இந்த படத்தை அமெரிக்காவில் எடுத்தார்கள் போலும்.
தமிழ் பேசும் தம்பதியின் சின்ன குழந்தையை பார்த்துக் கொள்ள வரும் பெண் திடும்மென பெற்றோரை இரும்புக்கம்பியால் தாக்கி குழந்தையை கடத்தும் ஆரம்பம் நல்ல திகில்...
அமெரிக்காவில் நியூரோ சர்ஜனாக வேலை செய்கிறார் டாக்டர் ஷாம் ( கிருஷ்பாலா). மனைவி தேவி(அனுஷா). நண்பர் விஷ்வா(நாராயண்). ஷாமுக்கு பாரில் புது நண்பராக அறிமுகம் ஆகிறார்கிறார் ராஜா (குமார்). அவருக்கு ஈ.எஸ்.பி மூலம் நடப்பதை முன்கூட்டியே சொல்லும் ஆற்றல் இருக்கிறது. அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயங்களும் நடந்தேறுகிறது. அதற்கு எடுத்துக்கொள்ளும் சம்பவங்கள் திரைக்கதைக்கு பலம்.(அடுத்த ஆபரேஷனில் உங்க நோயாளி சாவார், கவர்னர் மகன் கடத்தப் படுவார்.. போன்றவை) ஒரு கட்டத்தில் டாக்டர் ஷாமுக்கு ஆகஸ்ட் 10 அன்று மரணம் - அவர் மனைவியால் என்று ராஜா சொல்ல கதை வேகமாக நகர்கிறது. அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது க்ளைமாக்ஸ்.
திரைக்கதை: அருமையான திரில்லர் படமாக எடுத்திருக்கலாம். டம்பளர் உருளும் சத்தம், வீட்டில் தனியாக இருக்கும் போது, திடீர் என்று பூனை ஒன்று குறுக்கே போவது.. போன்ற எதுவும் இல்லாமல் "அடுத்தது என்ன?" என்று ஆர்வம் மட்டுமே ஏற்படுத்தி நல்ல சஸ்பென்ஸ் திரில்லராக படத்தை நகர்த்திக்கொண்டு போகிறார்கள்.
நடிகர்கள்/நடிகைகள்: படம் ஆரம்பித்தவுடன் நடிகர்கள் மற்றும் அவர்களின் பேச்சுக்களை பார்க்க அமெச்சூர் தனமாக இருக்கிறது என்று நினைக்க தோன்றுகிறது. ஆனால் போக போக அதுவே இந்த படத்துக்கு பலமோ என்று எண்ண வைக்கிறது. சினிமாவில் நாடகத்தன்மை இருந்தால் தான் அதை சினிமா என்று ஒத்துக்கொள்ள வீட்டு நாய் போல நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. (சினிமா ஆரம்பித்து முதல் பத்து நிமிஷத்துக்கு பிறகு ஒரு பாட்டு, கிளைமாக்ஸுக்கு 20 நிமிஷம் முன் ஒரு பாட்டு என்ற ஃபார்முலா இதில் இல்லை).
இசை, ஒளிப்பதிவு: ஜான் மேஷாய் படத்துக்கு இசை. என்ன தேவையோ அதற்கு ஏற்ப இசை வருகிறது. பணம் கொடுத்திருக்கிறார்களே தேவையில்லாத இடங்களில் இசை இல்லை.. எல்டிரிஜா ஒளிப்பதிவு - ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்ல மாட்டேன் ஆனால் மோசம் கிடையாது.
கொசுறு தகவல்: இந்த படத்தை இயக்கியிருக்கும் நட்டிகுமார் மோகமுள் படத்தின் தயாரிப்பாளர்.
மெய்ப்பொருள் காண்பது அறிவு. அதனால் நீங்களே படத்தை பார்த்துவிட்டு எப்படி என்று முடிவு செய்யுங்கள்
இட்லிவடை மார்க் 7.5/10

மாணிக்கம் ... நான் தான் ராஜசேகர் பேசுறேன். கோடம்பாக்கம் வரைக்கும் போகனுமே. வீட்டுக்கு இப்ப வரமுடியுமா?
ஓகே சார். வீட்டுக்கே வந்திர்ரேன்.
லேட் பண்ணிறாதப்பா. கரெக்டா வந்திரு.
ஆட்டோ ஸ்டாண்ட்லதான் சார் நிக்குது. ஒரு பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன் சார். பேசிமுடித்தபின் மீண்டும் கழுத்தில் மொபைலை ஊசலாடவிட்டுவிட்டு, ஆட்டோவிலிருந்த எப்.எம்-ன் வால்யூம்யைக் கூட்டவும், நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழைக்கு அருகில் இருந்த ஆட்டோ டிரைவரும் தலையசைக்கத் துவங்கினார்.
டேய் தம்பி கிளாஸை எடுத்துக்கோடா.. அண்ணே.. ஒரு டீ ஒரு வடை.. கணக்குல வச்சுக்கோங்க. வழக்கம்போல காலைச் சிற்றுண்டியான ஒரு டீயை உளுந்தவடையோடு குடித்துவிட்டு புறப்படத்தயாரானான்.
ஸ்கூல் பேக்க முதுகுல போட்டுக்கிட்டு, பக்கத்து வீட்டுக்காரங்களுக்கெல்லாம் டாடா காட்டிக்கிட்டே, அம்மா அப்பாவோடு முதல் நாள் ஸ்கூலுக்குப் போறா அமராவதி. ஆட்டோல போகும்போது பெத்தவங்களுக்கோ ஆயிரம் கனவுகள். குழந்தையின் கண்ணுலயோ ஆயிரம் பட்டாம்பூச்சிகள்.
மாணிக்கம்.. தினமும் நீயே இவள ஸ்கூல்ல விட்டுடேன்; அப்படியே ஈவினிங்கும் பிக்கப் பண்ணிட்டு வந்திரேன்.
ம்.. பண்ணிரலாம் சார்.
மாசம் எவ்வளவுப்பா ஆகும்?
சார்.. உங்ககிட்ட நான் என்னத்த கேட்க? நீங்களா பார்த்து குடுங்க சார்.
மறுநாள் காலை 8.30 மணி. பள்ளி வாசலில் அமராவதியை இறக்கிவிட்டபின், ஒருவித ஏக்கத்தோடு பள்ளி முன் வந்து நின்ற பேருந்தையே பார்த்துக்கொண்டிருந்தான் மாணிக்கம். நூறுபேரை அள்ளிப் போட்டு வந்த அந்த பேருந்திலிருந்து இறங்கி, கலைந்த தலையைச் சரிசெய்தவாறே பள்ளியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தான் மாணிக்கத்தின் மகன்.
உழவன்
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அலுவலக பென் டிரைவில் வைத்திருந்த
முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்
Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.
வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த
மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.
R-Linux Recovery

இதன் தரவிறக்க சுட்டி : RLinux
இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,
Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.
இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து
வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்
கோப்புகளை மீட்கலாம்.
இது போல மற்ற இலவச மென்பொருள்கள் :
Pandora Recovery
Recover Files 2.1
PC Inspector File Recovery 4
Data Recovery 2.3.1
EASEUS Deleted File Recovery 2.1.1
Glary Undelete 1.3
நன்றி!

முக்கியமான சம்பளப்பட்டியல் எக்ஸ்செல் கோப்பை தெரியாமல்
Format செய்துவிட்டேன். என்ன செய்தும் அதை திரும்ப பெறமுடியவில்லை.
வலைப்பதிவு நண்பர்களிடமும் உதவி கேட்டேன். பல மென்பொருள்களை உபயோகப்படுத்தியும் அந்த கோப்புகளை மீட்க முடியவில்லை. இறுதியில் இந்த
மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். முடிவுகளோ நான் ஆச்சரியப்படும் விதம் அமைந்தன. மிக துல்லியமான வகையில் இந்த மென்பொருள் அழித்த கோப்புகளை மீட்டு எடுத்தது. அதுவும் நல்ல முறையில் கோப்புகளை திரும்பக்கிடைக்குமாறு செய்தது.இந்த நேரத்தில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
என்னவென்றால் Hard Disk இல் ஒரு தகவல்களை பதியும் போது அவை குறிப்பிட்ட செக்டார் களில் ( Sector ) பதியப்படுகின்றன. நீங்கள் ஒரு கோப்பை நிரந்தரமாக அழித்து விட்டாலும் அவை அந்த குறிப்பிட்ட செக்டார்களில் தான் இருக்கும். அடுத்து வேறு ஏதேனும் கோப்புகள் அந்த செக்டார்களில் பதியப்படும் வரை அவை அதே இடத்தில தான் இருக்கும். அதனால் உங்களுக்கு அழித்த கோப்புகள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். கிடைக்க வில்லை எனில் வேறு கோப்புகள் அந்த இடத்தில் பதியப்பட்டுவிட்டன என்று அர்த்தம்.
R-Linux Recovery

இதன் தரவிறக்க சுட்டி : RLinux
இந்த மென்பொருள் Hard Disk மட்டுமின்றி பென் டிரைவ் மற்றும் மெமரி
கார்ட்களிலும்,செயல்படக்கூடியது. நீங்கள் தெரியாமல் அழித்து விட்டாலோ ,
Format செய்து விட்டாலோ, அல்லது வைரஸ் அழித்து விட்டாலோ இதைக்கொண்டு கோப்புகளை மீட்கலாம்.
இது மட்டுமின்றி உங்கள் ஹார்ட் டிஸ்கை ஒரு இமேஜ் கோப்பாக சேமித்து
வைக்கும் வசதியும் உண்டு. இதை வைத்தும் நீங்கள் பின்னாளில் உங்கள்
கோப்புகளை மீட்கலாம்.
இது போல மற்ற இலவச மென்பொருள்கள் :
Pandora Recovery
Recover Files 2.1
PC Inspector File Recovery 4
Data Recovery 2.3.1
EASEUS Deleted File Recovery 2.1.1
Glary Undelete 1.3
நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக