சனி, 2 மே, 2009

2009-05-02


அன்னை
விஷயங்கள், சூழ்நிலைகள், வாழ்வின் எல்லா இயக்கங்களும், செயல்களும் உணர்வின்மேல் உண்டாக்கும் விளைவு அநேகமாக முற்றிலு‌நாம் இவ்விஷயங்கள்பால் கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்திருக்கும் உணர்வுநிலை ஒன்றுள்ளது. விஷயங்கள் தம்மளவில் நல்லவையோ கெட்டவையோ அல்ல என்பதை அறியும் அளவிற்கு உணர்வு பெறும் நேரம் ஒன்று உள்ளது: நம்மைப் பொறுத்தமட்டிலேதான் அவை நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கின்றன; அவற்றினால் நம்மீது ஏற்படும் விளைவு முற்றிலும் அவற்றின்பால் நாம் கொள்ளும் மனப்பான்மையைப் பொறுத்ததாகவே இருக்கும்.

அதை இறைவனது கொடையாக இறைவனது அருளாக முழு இசைவின் விளைவாக நாம் எடுத்துக் கொண்டோமானால் நாம் அதிக உணர்வு பெறவும், அதிக வலிமை பெறவும், அதிக உண்மையானவர்களாக ஆகவும் உதவும்; ஆனால் அதையே சிறிதுகூட மாற்றமில்லாமல் அதேமாதிரி சூழ்நிலை - அதையே விதியின் அடியாக, நமக்குத் தீங்கிழைக்க விரும்பும் தீய சக்தியாக எடுத்துக் கொண்டோமானால் அது நம்மைச் சுருங்கச் செய்யும், சோர்வடையச் செய்யும், நம்மிடமிருந்து உணர்வையும் வலிமையையும் இசைவையும் போக்கிவிடும், இருப்பினும் சந்தர்ப்பமோ மிகத்துல்லியமாய் அதே மாதிரியானதே - நீங்கள் எல்லோரும் இந்த அனுபவம் பெற வேண்டும்; ஏனெனில் இந்த அனுபவம் பெற்றால், நீ சுதந்திரமாயிருப்பாய். உனக்கு நீயே எஜமானனாக இருப்பாய் அல்லது சூழ்நிலைகள் உன் கட்டுப்பாட்டிற்கு அடங்கியவையாக இருக்கும்.

இது முற்றிலும் நீ கொள்ளும் மனப்பான்மையையே பொறுத்தது. இது தலையில் நிகழும் அனுபவம் அல்ல - தலையில் தொடங்கக்கூடும் - இது உடலிலேயே நிகழக்கூடிய அனுபவம். ஆனால் இதில் சித்தி பெற நிறைய வேலை தேவை. ஒரு முனைப்பு தன்னாட்சி, சடத்தினுள் உணர்வைத் தள்ளுதல் எல்லாம் தேவை; ஆனால் அதன் விளைவாக உடல் வெளியிலிருந்து வரும் அதிர்ச்சிகளை ஏற்கும் முறைக்கு ஏற்றபடி, விளைவு மாறுபடலாம். இந்தத் துறையில் நீ பூரணம் பெற்றுவிட்டால், விபத்துகள் ஏற்படாமல் தடுத்துவிடலாம். அவ்வாறு நடக்கும் என்று நம்புகிறேன். அது சாத்தியம், சாத்தியம் மட்டுமல்ல, நிச்சயம். அதற்கு இன்னும் ஓர் அடி முன்னால் செல்ல வேண்டும், அவ்வளவுதான். அதாவது உன்னிடம் இந்த ஆற்றல் இருக்கிறது - ஏற்கனவே மனத்தில் முழுமையாக தடுக்க முடியாதபடி சித்தியாகிவிட்டது - சந்தர்ப்பங்கள் மீது செயல்பட்டு அவை உன் மீது செயல்படுவதை முழுமையாக மாற்றிவிடும் ஆற்றல் இருக்கிறது‌; அந்த ஆற்றல் சடத்தினுள் இறங்க முடியும், தூலப் பொருளினினுள், உடலின் அணுக்களுள் இறங்கி, அதே ஆற்றலை உடலுக்கு, அதைச் சுற்றியுள்ள பொருட்கள் சம்பந்தமாகக் கொடுக்க முடியும்.

இது வெறும் நம்பிக்கை அல்ல, அனுபவத்திலிருந்து வரும் உறுதிப்பாடு.

இது உனது அனுபவ எல்லையை விரிவாக்குகிறது; இது உருமாற்றத்திற்கு இட்டுச்செல்லும் பாதையில் மற்றுமோர் படி.

நாம்தாம் வரம்புகளை உண்டாக்கிக் கொள்கிறோம். நாம் பொழுதெல்லாம், "அது சாத்தியம், ஆனால் அந்த இன்னொன்று சாத்தியமில்லை; என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாமேதாம் காலமெல்லாம் நம்மை அடிமைகளைப் போல நமது வரம்புகளாகிய சிறைக்குள்ளே, வாழ்க்கையின் விதிகள் எதையுமே தெரிந்து கொள்ளாத நமது அறிவற்ற குறுகிய அஞ்ஞான புலனின் சிறைக்குள்ளே நம்மை அடைத்துவைக்கிறோம். வாழ்க்கையின் விதிகள் நீங்கள் நினைப்பது போலோ, மிகப்பெரிய அறிவாளிகள் நினைப்பது போலோ இல்லவே இல்லை. அவை முற்றிலும் வேறாக உள்ளன. இந்த வழியில் ஓர் அடி எடுத்து வைத்தால் - நீ அதைக் கண்டுபிடிக்கத் தொடங்குவாய்.

வைகறை
(ஸ்ரீஅர‌வி‌ந்த ஆ‌சிரம‌க் காலா‌ண்டு வெ‌ளி‌யீடு)

நன்றி: வெப்துனியா
கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சத்தீஸ்குமார் தினுஷிகா ( வயது 8 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..

கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் மட்டக்களப்பில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 28ம் திகதி பாடசாலைக்குச் சென்ற நிலையில் காணாமல் போன மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சத்தீஸ்குமார் தினுஷிகா ( வயது 8 ) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலை சென்றிருந்த போது மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். இன்று காலை கல்வியங்காடு சேமக்காலைக்கருகில் உள்ள வளவு ஒன்றிலிருந்த கிணறு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்..

சிட்னி வாழ் தமிழ் இளையோரால் நடாத்தப்பட்ட மற்றுமொரு மிக பெரிய போராட்டம் இன்று பிற்பகல் 4 மணியளவில் சிட்னியிலுள்ள டவுண் ஹோல் சதுக்கத்தில் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது சிறுவர்கள் பெரியோர்கள் என 1600க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.





இதன்போது இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்மூடித்தனமான செயல்களை உடனடியாக நிறுத்துமாறும் சர்வதேச சமூகம் உடனடியாக தலையிட்டு இலங்கை அரசிற்கு எதிரான அழுத்தங்களை வழங்குமாறும் கூறி பதாகைகளை ஏந்தியவாறும் சுலோகங்களை சொல்லியவாறும் டவுண் ஹோல் சதுக்கத்தில் மக்கள் கூடியிருந்தனர்.



எனினும் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திடமிருந்து உரிய பதில் கிடைக்காததாலும் ஊடகங்களிடமிருந்து உறுதியான வரவேற்பு கிடைக்காததாலும் விரக்தியடைந்த தமிழ் மக்கள் பிரபல வீதியான ஜோர்ஜ் வீதியினை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதன்போது சிட்னி நகரில் வாகன நெருசல் நிறைந்து காணப்பட்டது. இதனால் அங்கு மேலதிகமாக வரவழைக்கப்பட்ட காவல் துறையினர் மக்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் தொடர்ந்து தமது கடுமையான போராட்டத்தை மேற்கொண்டனர். மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பின் காவல் துறையினருடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தையினாலும் அவர்களால் எங்கள் கோரிக்கைகள் மேலிடத்திற்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டதாலும் மக்கள் வீதியை மீண்டும் திறந்தனர். டவுண் ஹோல் சதுக்கத்திற்கு முன் நடந்த இப்போராட்டம் பிற்பகல் 8.00 மணியளவில் முடிவுற்றது.





எங்கள் தாயக உறவுகளின் அழிவுகளை சர்வதேச சமூகம் கருத்திற்கொண்டு இறுதியான உறுதிமொழியை வழங்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என இப் பேராட்ட்தின் போது தமிழ் இளையவர்களும், பெரியவர்களும் உறுதியெடுத்து உணர்வுபூர்வமாக இந்தப் போராட்டத்தை நிறைவு செய்தனர்.



நேற்று வெள்ளிக்கிழமை அன்று இத்தாலி தொழிற்சங்கங்களுடன் இணைந்து இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மாபெரும் மேதினப் பேரணி ஒன்றை ரொறினோ மாநகரில் நடாத்தியது.

இப்பேரணியில் இத்தாலியின் பல பாகங்களிலிருந்தும் வந்த 300ற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தாயகத்தில் எம் மக்கள் படும் அவலத்தையும் தாயக இன்றைய நிலையையும் இத்தாலிய மக்களின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

பேரணி நடைபெற்றபோது எமது மக்கள் அணிவகுப்பை இத்தாலிய மக்கள் வரவேற்று உற்சாகமளித்தனர். அப்போது 2000 ற்கு மேற்பட்ட இத்தாலிய மொழியிலுள்ள துண்டுப் பிரசுரங்கள் அம்மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.

அத்துடன் இத்தாலியின் ஊடகங்களும் எமது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை அன்று இத்தாலி தொழிற்சங்கங்களுடன் இணைந்து இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மாபெரும் மேதினப் பேரணி ஒன்றை ரொறினோ மாநகரில் நடாத்தியது.

இப்பேரணியில் இத்தாலியின் பல பாகங்களிலிருந்தும் வந்த 300ற்கு மேற்பட்ட எம் தமிழ் உறவுகள் கலந்துகொண்டு தாயகத்தில் எம் மக்கள் படும் அவலத்தையும் தாயக இன்றைய நிலையையும் இத்தாலிய மக்களின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

பேரணி நடைபெற்றபோது எமது மக்கள் அணிவகுப்பை இத்தாலிய மக்கள் வரவேற்று உற்சாகமளித்தனர். அப்போது 2000 ற்கு மேற்பட்ட இத்தாலிய மொழியிலுள்ள துண்டுப் பிரசுரங்கள் அம்மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.

அத்துடன் இத்தாலியின் ஊடகங்களும் எமது உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.

கருத்துகள் இல்லை: