புதன், 3 ஜூன், 2009

2009-06-03

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ரூ.50 லட்சம் வழங்கியுள்ளார். இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெ.மோகனசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :  
புதுவை, ஜூன் 3 : இலக்கணக் கடல் எனப் புகழ் பெற்ற புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது, 80. 03.06.2009 மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது. புதுச்சேரியில் உள்ள பாவலர் பண்ணை, 62, மறைமலையடிகள் சாலையில் உள்ள (புதுவைப் பேருந்து நிலையம் அருகில்) அவர் தம் இல்லத்தில் மக்களின் வணக்கத்திற்காக அன்னாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்குக் காண்க : http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_03.html இரா.திருமுருகனார் வாழ்க்கைக் குறிப்பு: http://muelangovan.blogspot.com/2008/09/blog-post_21.html (டிஎன்எஸ்)
சென்னை, ஜுன் 3 : திமுக-வின் ஐம்பெரும் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சி அடைவதற்கான சூளுரையை மேற்கொள்வோம் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு கருணாநிதி இன்று (ஜுன் 3) தமது பிறந்தநாள் செய்தியாக கூறியுள்ளார். முதலமைச்சரின் 86ஆவது பிறந்தநாளை திமுக-வினர் இன்று மாநிலம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.  முதல்வர் தமது 86ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
சென்னை, ஜுன் 3 : பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை முதலமைச்சர் மு கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அவர் கூறியதாவது :  நல்ல உடல் நலத்துடனும், ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். நாட்டுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங் பேசுகையில் கூறினார்.


More than a Blog Aggregator

by பழமைபேசி
வணக்கம் மக்களே! இன்னைக்கு வீட்ல ஒரே ஆணி! குழந்தைகளை கோயிலுக்கு அழைச்சிட்டுப் போய்வர ரொம்ப நேரம் ஆகும். ஆகவே நான் எழுத இருந்த என்னோட நினைவுகளுக்கு மூலமானவங்க, இளஞ்சிங்கம் சஞ்சய் அவ்ர்களோட நிழல்படம் மாத்திரம்!

கருத்துகள் இல்லை: