செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

'மக்கள் திலகம்' ஆரம்பித்த இயக்கத்திற்கு இந்த நிலைமையா? என்று பதற்றமா?

என்னது பிதற்றுகிறேனா?

நான் சொல்வது 100 க்கு 200 உண்மைங்க...

நம்ப முடியலயா?கொஞ்சம் இந்த விளம்பரத்தை பாருங்க



http://www.aiadmk.org/

குறிப்பு : இப்பதிவு தமிழ்99 தட்டச்சி பழகும் முயற்சியில்...
நீங்கள் ரஜினி ரசிகரா?

நீங்கள் அனிமேஷன் படவிரும்பியா?

இதோ உங்களுக்கான விருந்து...



சுட்டி : http://www.sultanthefilm.com/
இயல் கவிதை: நடுவர் : திசைகள் ஆசிரியர் மாலன்

ஆறுதல் பரிசு 1 :


கார்த்திக் பிரபு, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

சோ. சுப்புராஜ், துபாய்

இரண்டாம் பரிசு :

தண்டபாணி பொன்னுரங்கம், சென்னை

முதல் பரிசு :

ஜாபர் அலி, துபாய்

ஊக்கப்பரிசு :

லிவிங் ஸ்மைல் வித்யா (2 கவிதைகள்), மதுரை

உஷா, சென்னை

மாதங்கி, சிங்கப்பூர்

கவிஞன் முதல்வன் (எ) ஸ்ரீராம், ஆஸ்த்ரேலியா

நட்சத்ரன் (எ) கா. முத்துராமலிங்கம், தஞ்சாவூர்

மேரித் தங்கம், சென்னை

இளா, நாமக்கல்

அருட்பெருங்கோ, சென்னை

மதுமிதா, சென்னை

இசைக்கவிதை: நடுவர் : இசைக்கவி ரமணன்

ஆறுதல் பரிசு 1 :


பங்கேற்பு ,இசை, பாடல்: கே.எம். அமீர், சென்னை கவிதை: நாக. சொக்கன்

ஆறுதல் பரிசு 2 :

பங்கேற்பு, கவிதை: சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ் பாடியது: கலாவதி

இரண்டாம் பரிசு :

பங்கேற்பு, கவிதை , குரல் : சிறில் அலெக்ஸ் சிகாகோ

முதல் பரிசு :

பங்கேற்பு, கவிதை: S. சங்கரநாராயணன், சென்னை குரல்: லஹரி

ஊக்கப் பரிசு 1:

கவிதையும் பங்களிப்பும்: கவிஞர் மதுமிதா, சென்னை இசையும் குரலும்: பல்கலைத் தென்றல் ஆரெஸ்மணி

ஊக்கப் பரிசு 2:

கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: இராஜ. தியாகராஜன், புதுச்சேரி

ஊக்கப் பரிசு 3:

கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: விசாலம், மும்பை

ஒலிக்கவிதை: நடுவர்கள் : கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்

ஆறுதல் பரிசு 1 :


கவிஞர் மதுமிதா, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

V. லஷ்மணக்குமார், மதுரை

இரண்டாம் பரிசு :

ஷைலஜா, பெங்களூர்

முதல் பரிசு :

மு. பாண்டியன், நெய்வேலி

படக்கவிதை : நடுவர்கள் : ஆசிப் மீரான் , கவிஞர்.பாலபாரதி மற்றும் தம்பி அகிலன்

ஆறுதல் பரிசு 1 :


கே. வி. உஷா, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

மு. பாண்டியன், நெய்வேலி

இரண்டாம் பரிசு :

சோ. சுப்புராஜ், துபாய்

முதல் பரிசு :

மேரித் தங்கம், சென்னை

காட்சிக்கவிதை : நடுவர் : நிலா என்கிற நிலாச்சாரல் நிர்மலா

ஆறுதல் பரிசு 1 :

கவிநயா என்றழைக்கப்படும் மீனா ,ரிச்மண்ட், அமெரிக்கா

ஆறுதல் பரிசு 2 :

ஆர்.எஸ். மணி , கேம்ப்ரிட்ஜ், கனடா

இரண்டாம் பரிசு :

முத்துலட்சுமி , புது தில்லி

முதல் பரிசு :

சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா , மாவனல்லை, இலங்கை

நடுவர்களின் உரைகளையும் பரிசு பெற்ற கவிதைகளையும் வாசிக்க

http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd


More than a Blog Aggregator

by ப்ரியன்
*

நீ
மௌனம் மொழியும்
கவிதை!

*

நீ
தேன் சுரக்கும்
பட்டாம்பூச்சி!

*

நீ
உயிர் சூடும்
பூ!

*

நீ
எழுதா
கவிதை!

*

நீ
என் காதலுக்கான
தண்டணை!

*

- ப்ரியன்.



*

நிலாரசிகனின் : நீ

நவீன் ப்ரகாஷின் : நீ
முதன்முறை கேட்டதிலிருந்து இன்றைய தேதிவரை எனக்கு பிடித்தமானதாக இருக்கும் சில பாடல்களின் வரிசை...

படம் : சதுரங்கம்
பாடல் : விழியும் விழியும்
இசை : வித்தியாசாகர்
கவிதை : அறிவுமதி

ஆணும் பெண்ணும் இணைவதை துளியும் காமம் இல்லாமல் இத்துணை அழகாக சொல்ல முடியுமா என ஆச்சரியம் காட்ட வைக்கும் பாடல்.நல்ல கவி வரிகளை மென்று தின்னா இசை.

நீங்களும் கேட்டு பாருங்க...



பாடல் வரிகள் :

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு

முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்

உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்
ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்

விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது

உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு...

புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்

கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்

உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை
இன்றி கிள்ளும்

ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை
இங்கு துள்ளும்

இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா

இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு...

பாடல் வரிகள் இங்கிருந்து சுடப்பட்டது.
கவிதை என்ற பெயரில் உயிரெடுப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் கவிதையின் மீதான காதலை இன்னும் கைவிடாமல் இருக்கச் செய்வதற்காகவேனும் கவிதை எழுதுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். மிக எளிய மொழியில் பூடகமோ இசங்களின் அவஸ்தையோ இல்லாமல் நேர்பொருளில் இயல்பாக சொல்ல வந்ததைச் சொல்வது கூட ந்ல்ல கவிதையாக இருக்க முடியுமென்பதற்கு விகடனில் வெளியான செல்வேந்திரனின் இந்தக் கவிதை ஒரு சான்று.


பிரபஞ்ச புரட்சியின் திறவுகோலை தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் இந்த யுக கவிஞன் இத்தகைய சிறப்பைப் பெறுவதற்கு அதி முக்கியமான காரணமென்னவென்று யோசித்துப் பார்த்தால்.. அடடா! செல்வேந்திரனும் நான் பிறந்த அதே சாத்தான்குள்த்தில் பிறந்திருப்பதுதான் காரணம். எல்லாம் சரிதான்! ஆனால் 'என்னைப் புகழ்ந்து ஒரு பதிவைப் போடுங்க அண்ணாச்சி'ன்னு ஒரு நாளைக்கு நூறு கடுதாசி எழுதுறதுதான் எனக்குப் புடிக்கலை.

[] [] [] [] [] []

சமீபத்தில் நடந்த ஒன்று கூடல் நிகழ்ச்சி ஒன்றில் தமிழகத்திலேயே மிகக் குறைந்த வயது சட்டமன்ற உறுப்பினரான 'குத்தாலம்' அன்பழகன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. 28 வயதாகும் அவரிடம் அவருக்குத் தர்மசங்கடமேற்படும் வகையில் பல கேள்விகளைக் கேட்டேன். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அன்பழகன் அதனால் கோபப்படவோ அல்லது முகம் சுருங்கவோ இல்லை. மாறாக மிகுந்த அமைதியோடும் பொறுமையோடும் புன்னகை மாறாமலும் பதில் அளித்தார். இந்த வயதிலேயே அவருக்கிருக்கும் அந்த மனப்பக்குவமும் எதிர் கருத்துக்களைச் சமாளிக்கும் திறனும் பெரும் வியப்பைத் தந்தது. அரசியல்வாதிகள் என்றாலே ஒதுக்கப்பட வேன்டியவரக்ள் என்ற எண்ணத்தைத் திருத்திக் கொள்ளக் கிடைத்த அரிய சந்தர்ப்பம். வாழ்க அன்பழகன்! இவரைப் போன்ற இளைய தலைமுறையினர் வந்தால் நாடு நலம் பெறக்கூடுமென்ற நம்பிக்கை பிறக்கிறது.

[] [] [] [] [] []

வேலூர் தொகுதியில் முஸ்லீம் லீக் சார்பாக எங்கள் துபாயைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் போட்டியிடுகிறார். நிர்வாகத் திறமையும் சொல்லாற்றலும் கொண்ட இவர் வெற்றி பெற வேண்டுமென்பதுதான் எனது அவாவும். ஆனாலும், இன்னமும் முஸ்லீம் லீக் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதுதான் பெரும் உறுத்தல்.

[] [] [] [] [] []

அன்றாடம் எனக்கு வரும் குழும கடிதங்கள் தவிர இன பிற அஞ்சல்களில் பெரும்பான்மையானவற்ரை நான் படிப்பதே இல்லை. குறிப்பாக இதை நீ அவனுக்கு அனுப்பினால் சொர்க்கத்துக்கு நேரடி பயணம்' போன்றவைகளாக இருந்தால் உடனே அனுப்பி விடுவேன் - குப்பைக் கூடைக்கு. இருந்தும் சில மின்னஞ்சல்கள் சுவையாக அமைந்து விடுகின்றன - தற்செயலாகவேனும்.

'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' புதிய பதிப்பை 'அலிபாபாவும் முப்பது திருடர்களும்' என்று கொண்டு வரப் போகிறார்கள். கேட்டால்.. பொருளாதார மந்த நிலை என்கிறார்கள்.

"அமெரிக்கனுக்கும் ஸிம்பாப்வேயபனுக்கும் என்ன வித்தியாசம்?"
"இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு வித்தியாசமும் இருக்காது"

[] [] [] [] [] []

கருத்துகள் இல்லை: