செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

ஏழை எளிய மக்களை கருத்தில் கொண்டு 2009 - 10ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தயா ரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் பிர ணாப் முகர்ஜி கூறியுள்ளார். ஆனால், நடை முறையில் மன்மோகன்சிங் அரசு பின்பற்றி வரும் தாராளமயமாக்கல் கொள்கையை மேலும் தாராளமயமாக்குவதாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடியால் விவசா யம், தொழில்துறை உள்ளிட்ட அனைத்து துறை களும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, லட்சக் கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். நலிவ டைந்த சிறுதொழில்துறையை மேம்படுத்த உருப் படியான திட்டங்கள் எதுவும் இந்தப் பட்ஜெட் டில் அறிவிக்கப்படவில்லை. மாறாக, ஒரு கோடியே 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில பட்ஜெட்டுகளில் தொடர்ச்சி யாக இடம் பெற்றுவரும் வாசகமாகவே உள்ளது.

முந்தைய அறிவிப்புகளின்படி வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் இந்தியாவில் இந்நேரம் அனைவருக்கும் வேலை கிடைத்தி ருக்கும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன் லைன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய் யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ் வாறு பதிவு செய்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான வழிதான் கூறப்படவில்லை.

ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் பிரணாப் முகர்ஜி பட் ஜெட் உரையில் கூறியுள்ளார். வளர்ச்சி விகிதம் என்பது பங்குச் சந்தையில் மட்டும் பிரதிபலிக் கக் கூடாது. ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை பட்ஜெட்டில் பிரதிபலிக்க வேண்டும். விலைவாசியை குறைப்பது குறித்து திட்டவட் டமாக நிதியமைச்சரால் எதுவும் கூறமுடிய வில்லை. காரணம், ஆன் லைன் வர்த்தகம் என்ற பெயரில் உணவு தானியம் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்களின் சந்தை வர்த்தக சூதாடி களின் கையில் விடப்பட்டுள்ளது. இதனால், விலைவாசியை கட்டுப்படுத்தும் லகான் அரசிடம் இல்லை என்பதுதான் உண்மை.

வருமான வரி உச்சவரம்பிற்கான விலக்கு ரூ.10 ஆயிரம் உயர்த்தப்பட்டிருந்தாலும், இப்போது உள்ள விலைவாசி நிலவரம் மற்றும் தொடர்ச்சி யான பணவீக்க நிலையில் இதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் பயன் எதுவும் இருக்கப் போவதில்லை.

ஒட்டுமொத்த பட்ஜெட் செலவினம் 2009 - 10ம் ஆண்டில் ரூ.10 லட்சத்து 28 ஆயிரத்து 32 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. சுதந்திரத்திற்கு பிறகு 10 லட்சம் கோடியை தாண்டிவிட்டது என்று பெருமையாக அறிவிக் கப்பட்டுள்ளது. ஆனால், மறுபுறத்தில் சுதந்திரத் திற்கு பிறகு ஏழை எளிய சாதாரண மக்களின் வாழ்க்கை அதல பாதாளத்திற்கு சென்றுள்ள தோடு, பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கு மிடையிலான இடைவெளியும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் தின் கீழ் வழங்கப்படும் தினக் கூலி ரூ.100 ஆக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசினால் ஏற்கெனவே அறி விக்கப்பட்ட கூலியான ரூ.80 கூட தமிழகம் உள்பட பல மாநிலங்களில் முறையாக வழங்கப் படுவதில்லை என்பதுதான் உண்மை. எனினும், கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தேர்தலில் காங்கிரசுக்கு பெரும் ஆதாயத்தை கொடுத்தது என்பதால் இத்திட்டம் குறித்து அரசு கரிசனம் காட்டுகிறது.

மொத்தத்தில் தீவிரமான பிரச்சனைகளுக்கு தீர்வு கூறாத பட்ஜெட்டாக இது உள்ளது.


ஆலமரத்தடி திண்ணைக்கு
ஆயாவோட மருத்துவரும்
அம்மைத் தடுப்பூசி போட
அமர்க்களமாய் வந்து இறங்கினார்

"திருக்கூசி டாக்டரு டோய் !
தெருவில நிக்கான் டோய் !!
தப்பிச்சு போயிருங்க டோய் !!!
தனியா மாட்டீராதீங்க டோய் !!!!"


சத்தம் கேட்ட மறுநொடியில
சந்து பொந்துல நொழஞ்சோமே !
வேட்டு கேட்ட கொக்கப்போல
எட்டு திக்குல பறந்தோமே !!

எப்படி எல்லாம் ஒடுனோமுன்னும்
எங்கே எங்கே ஒழிஞ்சோமுன்னும்
எதுக்குள்ள பதுங்குனோமுன்னும்
எங்களுக்கே கூடத் தெரியாதே !!

பரணு தட்டிக்கு மேலே......
பலக கட்டிலுக்குக் கீழே.....
குதிலு பானைக்கு உள்ளே.....
மதிலு படலுக்கு வெளியே.....ன்னும்

ஆலமரத்து மேலே ஒண்ணு....
அய்யனாருக்கு கீழே ஒண்ணு....
கொளத்துக் கரையில ஒண்ணு....
கெணத்து உறையில ஒண்ணு....ன்னும்

ஒண்ணொன்னா இழுத்துப் புடிச்சி
ஒட்டுமொத்தமா போட்டு முடிக்க
ஒருநாப் பொழுதும் அங்கே
ஒருவழியா முடிஞ்சே போச்சுதே !

பத்து வயசு வரைக்கும் ஊசிய
பக்கத்தில கூட பாக்காததால
பதட்டத்துல வந்த குளுரும்
பயத்தில வந்த காய்ச்சலும்

அஞ்சுநாளாகியும் பயபுள்ளைங்களுக்கு
கொஞ்சங்கூட அடங்கலியே அன்னிக்கு !
அந்தஊசிக்கு அப்பொறமா எனக்கு
எந்தஊசியும் போடலியே உண்மைக்கும் !!

ஊசியக் காமிச்சாதான இன்னிக்கு
கொழந்த கூட பொறக்குது !
ஊசியிலும் மருந்திலும் தான - இப்போ
ஒலகமே இங்க இயங்குது !!

ஆலமரத்தடி திண்ணைக்கு
ஆயாவோட மருத்துவரும்
அம்மைத் தடுப்பூசி போட
அமர்க்களமாய் வந்து இறங்கினார்

"திருக்கூசி டாக்டரு டோய் !
தெருவில நிக்கான் டோய் !!
தப்பிச்சு போயிருங்க டோய் !!!
தனியா மாட்டீராதீங்க டோய் !!!!"


சத்தம் கேட்ட மறுநொடியில
சந்து பொந்துல நொழஞ்சோமே !
வேட்டு கேட்ட கொக்கப்போல
எட்டு திக்குல பறந்தோமே !!

எப்படி எல்லாம் ஒடுனோமுன்னும்
எங்கே எங்கே ஒழிஞ்சோமுன்னும்
எதுக்குள்ள பதுங்குனோமுன்னும்
எங்களுக்கே கூடத் தெரியாதே !!

பரணு தட்டிக்கு மேலே......
பலக கட்டிலுக்குக் கீழே.....
குதிலு பானைக்கு உள்ளே.....
மதிலு படலுக்கு வெளியே.....ன்னும்

ஆலமரத்து மேலே ஒண்ணு....
அய்யனாருக்கு கீழே ஒண்ணு....
கொளத்துக் கரையில ஒண்ணு....
கெணத்து உறையில ஒண்ணு....ன்னும்

ஒண்ணொன்னா இழுத்துப் புடிச்சி
ஒட்டுமொத்தமா போட்டு முடிக்க
ஒருநாப் பொழுதும் அங்கே
ஒருவழியா முடிஞ்சே போச்சுதே !

பத்து வயசு வரைக்கும் ஊசிய
பக்கத்தில கூட பாக்காததால
பதட்டத்துல வந்த குளுரும்
பயத்தில வந்த காய்ச்சலும்

அஞ்சுநாளாகியும் பயபுள்ளைங்களுக்கு
கொஞ்சங்கூட அடங்கலியே அன்னிக்கு !
அந்தஊசிக்கு அப்பொறமா எனக்கு
எந்தஊசியும் போடலியே உண்மைக்கும் !!

ஊசியக் காமிச்சாதான இன்னிக்கு
கொழந்த கூட பொறக்குது !
ஊசியிலும் மருந்திலும் தான - இப்போ
ஒலகமே இங்க இயங்குது !!
கவிதைகளில் ஆர்வமுள்ளவர்கள் இங்கே செல்க...



(இந்தப் படத்துக்குரிய செய்தி இங்கு இல்லை)

"என்ன ராமசாமி வீட்டு பக்கமே காணுமேன்னு பார்த்தா தங்கம் சீரியல் பார்த்திக்கிட்டு உட்கார்ந்திருக்கியா?"

"புதுசா ஆரம்பிச்சிருக்காங்களே. எப்படி இருக்குன்னு பார்த்தேன். எல்லாம் ஒரே மாதிரிதான் போகுது."

"அரசியல் கட்சிகளும் அவங்க போடுற பட்ஜெட்டும்கூட ஒரேமாதிரிதான் போகுது."

"என்னப்பா பட்ஜெட் பத்தி சொல்லி பயமுறுத்துற? என்ன விசயம்?"

"மத்திய அரசின் பட்ஜெட்டில வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு வரிவிதிப்பு உயர்த்தி இருக்காங்கப்பா"

"அடக்கொடுமையே! ஏற்கெனவே தங்கம் பதிமூன்றாயிரத்தை தாண்டிச்சிடுச்சு. இப்படி செஞ்சா ஏழைபாளைங்க என்ன பண்றது?"

"ஏன் இந்த வரி உயர்த்தப்படுதுன்னு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு காரணத்தையும் சொல்றாரு... 2004 வருடத்திற்கு பிறகு இப்போதுதான் உயர்த்தப்படுதாம். இதனால் பெண்கள் என்மீது அதிருப்தி அடைவாங்கன்னு தெரியும். அதனால்தான் வணிகமுத்திரை (பிராண்டட்) நகைகள் உற்பத்திக்கு மீதான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறதுங்கிறாரு."

"என்ன நம்ம ஆற்காடு மின்சாரத்தைப் பத்தி பேசின மாதிரியே பேசறாரு. அது கிடக்கட்டும், அப்ப தங்க விலை குறையுமா?"

"அதுதான் இல்ல... பிராண்டட் நகைகள் உற்பத்தி செய்யிற நிறுவனங்கள் மிகவும் கம்மி. இதனால பொதுமக்களுக்கு பலன் எதுவும் இல்லைங்கிறாரு இந்திய தங்க மார்க்கெட் தலைவர் சீல்சந்த் ஜெயின். அதோட பிராண்டட் நகைகளுக்கு இப்போது 2 சதவிகிதம்தான் வரி விதிக்கப்படுகிறதாம். இதை ரத்து செய்வது என்பது வெறும் கண்துடைப்புதான்."

"ஏற்கெனவே வரதட்சணையால பெண்களுக்கு திருமணம் நடக்கிறதே அபூர்வமா இருக்கு. இதனால பெண்பிள்ளைகளைப் பெற்றவர்களின் சாபத்துக்கு ஆளாவார்ங்கிறது மட்டும் உறுதி."

"வரதட்சணைன்னு சொன்னோன்னதான் ஞாபகத்துக்கு வருது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில நிலம்பூர்ங்கிற கிராமத்தில வரதட்சணை கொடுமையை ஒழிக்கிறதில கிராம பஞ்சாயத்து தலைவர் சாதனை பண்ணியிருக்காரு."

"என்னப்பா சொல்றே? வரதட்சணையை ஒழிச்சிருக்காரா?"

"ஆமாம்பா. நாற்பதாயிரம் பேர் வசிக்கிற அந்த கிராமத்தில 30 வயதாகியும் திருமணம் செய்ய முடியாம 1,300 பேர் இருக்கிறதா அவருக்கு தெரிய வந்திருக்கு. அதோட வரதட்சணை கொடுத்து மகளை வாழ வைச்ச பல குடும்பங்கள் வறுமையில வாடுறதையும். வரதட்சணை கொடுக்க முடியாமததால பல பெண்கள் வாழா வெட்டியா முடங்கி கிடக்கிறதையும் அவரு பார்த்திருக்காரு."

"அதுக்கு என்ன பண்ணினாராம்?"

"வரதட்சணை கொடுமையை பத்தி விளக்கி தெருக்கூத்து, திரைப்படம்னு வீதிக்கு வீதி போட்டு காண்பிச்சிருக்காரு. அதோட பொதுமக்கள்கிட்ட வரதட்சணை வாங்க மாட்டேன், கொடுக்க மாட்டேன்னு உறுதி மொழி எழுதி வாங்கிருக்காரு."

"இன்னப்பா.... தெருக்கூத்தையும், படத்தையும் பார்த்து மக்கள் திருந்திட்டாங்களா என்ன? நம்புறமாதிரியா இருக்கு?"

"ஒருசில மாதங்களுக்கு எந்தவித பலனும் இல்லாமத்தான் இருந்திருக்கு. கடந்த ஆறு மாசமா அங்க எந்தவித வரதட்சணை கொடுமையும் இல்லையாம். சுமுகமா போய்கிட்டிருக்காம்."

"இதத்தான் அடிமேல் அடி வைச்சா அம்மியும் நகரும்ன்னு சொல்றாங்களோ? இந்த முறையை எல்லாரும் பின்பற்ற ஆரம்பித்தால் எவ்வளவு நல்லாருக்கும்." என்றவாறு நீண்ட பெருமூச்சொன்றை வெளியிட்டார்.
தொப்பைக்கு காரணம் நீங்கள் அருந்தும் பீர் அல்ல. உங்கள் ஜீனே என்று பிரிடீஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது பாரம்பரியமாக வரும் அணுக்களால் பெறப்படுபவையே. அதாவது மூதாதயர்களிடையே இருந்து பெறப்பட்டவையே என்க் கூறுகிறார்கள். இதற்காக 20,000 க்கு மேற்பட்ட குடிகாரர்களை இவ்வாய்வுப் பணிக்கு உட்படுத்தியுள்ளார்கள். சுமார் எட்டரை ஆண்டுகள் . இக்காலத்தில் 7879 ஆண்களும் 12,749 பெண்களும் கொண்டு
தொப்பைக்கு காரணம் நீங்கள் அருந்தும் பீர் அல்ல. உங்கள் ஜீனே என்று பிரிடீஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது பாரம்பரியமாக வரும் அணுக்களால் பெறப்படுபவையே. அதாவது மூதாதயர்களிடையே இருந்து பெறப்பட்டவையே என்க் கூறுகிறார்கள். இதற்காக 20,000 க்கு மேற்பட்ட குடிகாரர்களை இவ்வாய்வுப் பணிக்கு உட்படுத்தியுள்ளார்கள். சுமார் எட்டரை ஆண்டுகள் . இக்காலத்தில் 7879 ஆண்களும் 12,749 பெண்களும் கொண்டு

கருத்துகள் இல்லை: