செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

தற்போதைய சூழ் நிலையில் விவசாயிகளுக்கு வேளாண் பணிகளை மேற்கொள்ளத் தேவையான பணியாட்கள் சரிவர கிடைப்பதில்லை. குறிப்பாக எல்லாப் பயிர்களிலும் களை நிர்வாகம் ஒரு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. எனவே நவீன தொழில் நுட்பங்களைப் பின் பற்றுவதில் சிறிது தொய்வு ஏற்படுகிறது. இதை நிவர்த்தி செய்யவே இயந்திரக் களைஎடுப்பான் கருவி கண்டுபிடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.






இயந்திரக் களையெடுப்பானின் சிறப்பு அம்சங்கள் என்ன?

• இது மின் மோட்டார் கொண்டு இயக்கப்படுவதால் வேலையாட்களுக்கான பணிச்சுமை குறைகிறது.

• விவசாயிகளே இதனை இயக்க இயலும் என்பதால் வேலையாட்களைச் சார்ந்திருத்தல் தவிர்க்கப்படுகிறது.

• சரியான நேரத்தில் களை எடுக்கப் படுவதால் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் எடுக்க இயலும்

ஒரு மணி நேரம் களை எடுக்க சுமார் 2 லிட்டர் பெட்ரோல் செலவு மட்டுமே.


--
கல்லூரி விரிவுரையாளர்கள் பணி நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்க, கவுன்சலிங் மூலம் விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,500 காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, தமிழ்-92 விரிவுரையாளர்கள், ஆங்கிலம்-181, கணிதம்-101, இயற்பியல்-121, மைக்ரோபயாலஜி-1, தெலுங்கு-4, இந்தி-3, தாவரவியல்-68, விலங்கியல்-67, வரலாறு-97, புவியியல்-36, பொருளாதாரம்-84, கம்ப்யூட்டர் சயின்ஸ்-35, வேதியியல்-151, புள்ளியியல் 9, ஜியாலஜி-6 என 1,056 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பணி நியமன ஆணை ஜூலை 8-ம் தேதி (புதன்கிழமை) வழங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட விரிவுரையாளர்களில் சிலர், குடும்ப சூழ்நிலை காரணமாக தாங்கள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தவறான வழியைப் பின்பற்றுகின்றனர் என்று கூறப்படுகிறது.

இதனால், விரிவுரையாளர் பணி நியமனத்தில் வெளிப்படைத் தன்மை கேள்விக் குறியாகி உள்ளது.

விரிவுரையாளர் பணி நியமனத்தில் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் வகையில், கல்லூரிகளில் இட மாறுதல் கவுன்சலிங் நடத்துவது போல், கவுன்சலிங் மூலம் விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதாவது, கல்லூரிகளில் துறை வாரியாக உள்ள காலிப் பணியிட நிலவரம் பற்றிய பட்டியல் வெளியிட்டு, பணி வழங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் விரிவுரையாளர்கள் கல்விப் பணியில் முழுமையாக ஈடுபட முடியும் என்று கல்லூரி பேராசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆசிரியர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வது குறித்த அறிவிப்பு வெளியானபோது, உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி, "ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தேர்வு வெளிப்படையாக, நியாயமான முறையில் நடைபெறும். எனவே, யாரும் இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்' என்று வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
ங்கள் கேள்விகளுடன் நான் கேட்ட சில கேள்விகளையும் கேட்டு இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாரிடம் பதில்களை வாங்கி இருக்கிறேன், இங்கே அவருடனான சந்திப்பை "வீடியோ" பதிவாக இணைத்துள்ளேன்.

வீடியோவை காண இந்த லிங்கை "கிளிக்" செய்யவும்

http://indiainteracts.in/newplatform/24163/">Video | Sasikumar On Nadodigal | Indiainteracts.in


video courtesy :http://www.indiainteracts.in
முதல் பகுதியை படிக்க





இடம் : துபாய் சர்வதேச விமான நிலையம்.


எப்படியோ துபாய் வந்து சேர்ந்த விஜய் தன்னுடைய சுமைகளை எடுத்துக் கொள்ள விரைகிறார். அவசர அவசரமாக ஒரு தள்ளு வண்டியில் நான்கைந்து பேக்குகளை ஏற்றிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த சக பயனி


சக பயனி : சார் அது என்னோட பேக்கு


விஜய் : யோவ் எத்தன பேக்கு கெடக்கு உனக்கு எது வேனுமோ எடுத்துக்கோ. நான் எடுத்தத எதுக்கு கேக்குற.


சக பயனி : ங்கொய்யால! கோயில் வாசல்ல தேங்கா பொறுக்குறதுன்னு நெனச்சியா. ஒழுங்கா பேக்க குடுடா.


எவ்வளவோ சொல்லியும் விஜய் கேட்காததால் வந்திருந்த கூட்டமே ஒரு காட்டு காடியது. உடனடியாக விஜய் மூர்சையானார்.சுயநினைவு வந்ததும் சுற்றும் முற்றூம் பார்த்த விஜய் தன் சுமைகளுக்கு அருகே ஒரு பாக்கிஸ்தானி அமர்ந்திருப்பதை பார்த்தவர்.


விஜய் : நான் எங்க இருக்கேன்.


பாக்கி : மதினத் ஜீமைரால மல்லாக்க படுத்துகிட்டு மீன் புடிச்சிக்கிட்டு இருக்க. (பாக்கிஸ்தானி தமிழ் பேசுவான என நீங்கள் கேட்கலாம். எத்தன விஜயகாந்தின் படத்தில் வரும் பாக்கிஸ்தானி வில்லன்கள் எல்லாருமே தமிழில் தான் பேசுவார்கள் அதை பின்பற்றியே விஜய் படத்திலும் பாக்கிஸ்தானி தமிழில் பேசுகிறார்)








மதினத் ஜீமைரா





விஜய் : என் லக்கேஜ்லாம் பத்தரமா இருக்குல்ல


பாக்கி : டேய்! என்னடா லக்கேஜ் இது ரெண்டு சூட்கேசு புல்லா மார்க்ஷீட்தான் வச்சிருக்க.


விஜய் : ஆமாங்கனா, கஷ்டப்பட்டு படிச்சது


பாக்கி : படுத்தாதடா எதாவது தேரும் நெனச்சி உன்ன ஏர்போர்ட்ல இருந்து இங்க வரைக்கும் தூக்கிட்டுவந்து உன் பேக்க பாத்தா மூனு வருஷ கோர்ஸ முப்பது வருசமா படிச்சி இத்தன மார்க்சீட்டு வச்சிருக்கியே உனக்கு எவண்டா வேலை குடுப்பான்.


விஜய் : இந்தியால எவனும் வேலை குடுக்கலனு தான் இங்க வந்துருக்கேன்.


பாக்கி : மவன இனி எங்காவது உன்ன பாத்தேன் அப்புறம் தாண்டி உனக்கு இருக்குது என்று எச்சரித்து விட்டு செல்கிறார்.


விஜய் : நமக்கு நேரமே சரி இல்லயோ போரவன் வாரவனுல்லாம் காட்டு காட்டுனு காட்றான்.


துபாயில் தன் கல்லூரி நன்பனை கான விரைகிறார் நமது தளபதி. நன்பனுக்கு தொலைபேசி இருக்கும் இடத்தை அடைகிறார்.


விஜய் : டேய்! எனக்கு ரூம் புக் பன்னிட்டியா. ஏசி தானே. ஏன்னா ஏசி இல்லாம் என்னால இருக்க முடியாது.


நன்பன் : ஏசி தான் வா வா


பேசிக்கொண்டே நன்பனின் இல்லத்த அடந்த தளபதி


விஜய் : இவ்ளோ பெரிய வீட்லயாட நீ இருக்க?. மச்சி நீ உன்மையிலே பெரிய ஆளுடா.


நன்பன் : லூசு அது ரினைன்சன் ஹேட்டல். அதுக்கு பின்னாடிதான் நம்ம வீடு இருக்குது வா


நன்பனின் வீட்டை கண்டதும் அதிர்சியடையும் விஜய் அந்த அதிர்ச்சி மாறாமல்


விஜய் : என்னடா இது பத்துக்கு பத்து ரூமல் பத்து பேரு இருக்கீங்க.


நன்பன் : இங்க வந்து என்ன தாஜ்மஹாலா கட்டமுடியும். ஏற்கனவெ பத்து பேர் இருக்காங்க உன்னயோட சேத்து 11 பேரு.
விஜய் : ஏசி ?


நன்பன் : ஏசி இங்க இருக்கு அந்த சுவிட்ச போடு


விஜய் : ஏசில இருந்து சத்தம் மட்டுந்தான் வருது.



நன்பன் : கொஞ்ச நேரம் கழிச்சி காத்து வரும்.


விஜய் : பாத்ரூம் ?


நன்பன் : அங்க இருக்கு பாரு. டிகிரி பாஸாயிட்டியா?


விஜய் : போன மாசந்தான் பாஸானேன். உடனே இங்க வந்துட்டேன்.


நன்பன் : என் மகனையும் அடுத்த வருசம் அந்த காலஜ்லதான் சேக்கனும் ஆமா எதுக்கு நீ இப்போ துபாய் வந்துருக்க?


விஜய் : அது ஒரு லட்சியம் டா அந்த லட்சியத்த அடைறவரைக்கும் நான் இங்க இருந்து போக மாட்டேன்.


நன்பன் : என்னடா லட்சியம்?


தன் லட்சியத்தை சொல்ல ஆரம்பிக்கிறார்.



அது என்ன லட்சியம் - அடுத்த பாகத்தில்



__________________________________________________________________

Madinat Jumaira - துபாயில் ஜீமைரா பீச்சில் அம்மைந்திருக்க கூடிய ஒரு ஐந்து நட்சத்திர விடுதி.

கருத்துகள் இல்லை: