செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகள் அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் வழங்குவது தொடர்பாக நிர்வாகத்தினருடன் முதல்வர்வைத்திலிங்கம் இன்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் வழங்க வேண்டுமென்று, தடையில்லா சான்றிதழ் கொடுக்கும்போதே ஆணை வழங்கப்பட்ட போதிலும், அரசுக்குரிய 50 சதவீத இடஒதுக்கீடு இன்று வரை முறையாக வழங்கப்பட்டதில்லை.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினருடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் அரசு நிர்ணயித்துள்ள 50 சதவீதம் என்பது இதுவரை கனவாகவே உள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது 50 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டுமென்று அரசு தரப்பில் கடந்த சில தினங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வனத்துறை கருத்தரங்கு கூடத்தில் நேற்றும், இன்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர் வல்சராஜ், சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

அப்போது அரசுக்குரிய 50 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கம்போல் இழுபறியே நீடித்தது தெரியவந்துள்ளது.
ஓரினசேர்க்கையை தடை செய்ய வலியுறுத்தி பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு கடிதம் எழுதி பாராளுமன்றத்தில் வலியுறுத்த உள்ளோம் என்று முஸ்லிம் மக்கள் முன்னேற்ற தலைமை பேரவையின் நிறுவனர் மன்குஷ் தெரிவித்துள்ளார்.

புதுவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓரின சேர்க்கைக்கு டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பது எதிர்காலத்தில் இளைய சமுதாயத்தினரை பாழ்படுத்தும் நிலைக்கு தள்ளிவிடுமென்றும், மேலும் பாரதத்தின் இல்லற நீதிநெறிகளை குப்பையில் வீசியதாக அனைத்து சமூக ஆன்மீகவாதிகளின் வேதனைக்கு காங்கிரஸ் அரசு ஆளாகிவிடக்கூடாதென்றார்.

ஓரினசேர்க்கைக்கு அங்கீகாரம் என்பது நாட்டில் இளைஞர் மற்றும் இளம்பெண்களிடையே விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதால் இது குறித்து பாராளுமன்றத்தில் பேசும்படி பாஜகவின் மூத்த தலைவர் அத்வானிக்கு கடிதம் எழுத உள்ளோம் என்றும், உயர்நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அனைத்து சமய சான்றோர் எடுக்கின்ற முடிவினை ஏற்று போராடுவோமென்று புதுவை மாநில முஸ்லிம் மக்கள் முன்னேற்ற தலைமை பேரவை நிறுவனர் மன்குஷ் தெரிவித்துள்ளார்.


More than a Blog Aggregator

by தொடர்பவன்
கந்தக நெடி கமழும்
புதத விஹாரில் ஏலம் விடப்பட்ட
புத்தனை எத்தனை கோடிக்கு
எடுப்பதன பலத்த போட்டி

நான் புத்தனில்லை என்று
கதறிய புத்தனின் வார்த்தைகள்
முகம் சிதைந்த குழந்தையின்
கதறில் கலைந்து அதிர்ந்து
கண்ணாடி பேழைக்குள்

இறுதியில் பிணக்குவியலின்
அளவு நிர்யணிகப்பட்ட ஏலத்தில்
காந்தியின் அவுக்கப்பட்ட கோவணம்
பெருமிதமாய் பரப்பியது முடை நாற்றத்தை

பேரழிவு தந்த வாய்ப்புகளை
சுவைக்க சுற்றி அலையும் ஒநாய்கள்
நட்சத்திர விடுதியில் அருந்திய மதுவில்
முடைநாற்றமுடன் பரிமாறப்பட்டது
புத்தனின் இரத்தம்

871765135_6dbdfe7ce0 

றிவிக்கபடாத நாட்களில்
பெய்திடும் மழை
உன் வருகையினை நினைவுபடுத்தும்

வறவிடப்படும் பேருந்துகள்
உன் காத்திருத்தலின் நிமிடங்களினை
இன்னும் அதிகரிக்கிறது

ப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்துவிடுகிறது.

பிரிக்கபடும் ஏக்கத்துடுடனோ
சேரப்போகும் எதிர்பார்புடனோ
புறப்பட்டு செல்கின்றன தொடரூந்துகள்.

திகமாக அலுத்துக் கொள்கிறேன்
காத்திருக்க அவகாசமின்றி
நீ வந்து சேரும் நாட்களில்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். அப்பா திடீரென இறந்து போனதால் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. இதனால் நான் இரவுகலாக உழைத்தேன். என்னோடு சேர்ந்து அம்மாவும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தார். இதனால் தான் என்னால் எப்போதும் இன்ப-துன்பங்களை

ஓரிரு நாட்களாக நான் இணையத்தோடு தொடர்ச்சியாக எனது பொழுதுகளை கழித்து வருகின்றேன். காரணம் நான் இலக்கியத்திலும் ஓரளவு ஆர்வமுள்ளவன். நான் இணையத்திலே தேடிக்கொண்டிருந்தபோது எனது கண்ணிலே ஒரு வலைப்பதிவு பட்டது. அந்த வலைப்பதிவு என்னை கட்டிப்போட்டு விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

இன்று இலக்கியங்களை படிப்பதில் இன்றைய இளம் சமூகத்தினர் சற்று பின்னிக்கின்றனர். இருந்த போதும் சில இலக்கிய ஆர்வமுள்ளவர்கள் தேடிப்படித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். எனக்கும் ஆரம்பத்திலே இலக்கியத்திலே ஆர்வம் குறைவாகவே இருந்தது. ஆனால் நான் எனது கிராமத்தைச் சேர்ந்த கலாபூசனம் ஆறுமுகம் அரசரெத்தினம் அவர்களுடன் பழகக்கிடைத்தது. அதன் முலமே எனக்கு இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இன்று அந்த ஆர்வம் அதிகரித்து விட்டது.

அது வேறு எதுவும் இல்லை முனைவர் இரா.குணசீலன் அவர்களுடைய வேர்களைத்தேடி என்னும் வலைப்பதிவே என் கண்ணில் பட்டது. இந்த வலைப்பதிவிலே தமிழர் நம் இலக்கியம் தொடர்பாகவும். நமது புலவர்கள் தொடர்பாகவும். இனிய எளிய நடையிலே எல்லோருக்கும் விளங்கக்கூடிய வகையிலே பதிவிட்டு இருக்கின்றார் முனைவர் இரா.குணசீலன் அவர்கள். அவரின் இந்த தமிழ் பணியினை ஒவ்வொரு தமிழனும் பாராட்ட வேண்டும்.



இவரது இந்த வேர்களைத்தேடி எனும் வலைப்பதிவிலே தமிழ் ஆய்வுகள், சங்ககால இலக்கிய ஆய்வுகள், சங்க இலக்கிய நுண்ணாய்வுகள், சங்ககால்புலவர்கள், சங்ககால இலக்கியங்கள்..... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவரது தமிழ் பணியின் முலமாக உயர் கல்வி கற்கின்ற பல மாணவர்கள் நன்மை அடைவர் என்பது உண்மை. இந்த வலைப்பதிவுக்கு வந்தால் தமிழ் இலக்கியம் தொடர்பான பல விடயங்களை அறிந்து கொள்ள முடியும்.


நீங்களும் இவரது இணையத்தளத்துக்கு செல்ல இங்கு கிளிக் பண்ணி பயன்பெறுங்கள்.




இலக்கியம் தொடர்பாக கற்றுக்கொள்ள ஆசைப்பட்ட நான். இலக்கியம் தொடர்பான ஒரு வலைப்பதிவை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. நீங்களும் பயன் பெறுங்கள்.

கருத்துகள் இல்லை: