செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07


ஒரு நாள் ஹாசினியின் 'பேசும் படம்' திரைப்பட விமர்சனத்தில் இந்த 3D படத்தை குழந்தைகளை அழைத்துக்கொண்டு திரையரங்கில் பாருங்கள். நல்லபடம் என பரிந்துரைத்தார்.

ஒரு உற்சாகத்தில் என் அக்கா பையனிடம் இந்த படத்துக்கு அழைத்துப்போகிறேன் என வாக்கு கொடுத்தேன். அன்றிலிருந்து 'கப்' என பிடித்துக்கொண்டான். 'எப்ப கூட்டிட்டு போற?' என ஆரம்பித்துவிட்டான்.

வாக்கு கொடுத்த நாளிலிருந்து அலுவலகத்தில் வேலை அதிகமாகி, வீடு திரும்ப நிறைய தாமதமானது. நாளாக நாளாக, சத்யத்தில் நான்கு காட்சிகள், பிறகு இரண்டு, ஒன்று என குறைத்துக்கொண்டே வந்தார்கள். 'ஆஹா! எடுக்கப் போறாங்களே! பையன் சொல்லி சொல்லி அசிங்கப்படுத்துவானே!" என சுதாரித்து... ஒரு நாள் சத்யத்துக்காக சிறப்பு காஸ்ட்டூம், சிறப்பு மேக்கப் டச் எல்லாம் கொடுத்து... இருவரும் பந்தாவாக போய் நின்றால்... படத்தை முதல் நாளே தூக்கிவிட்டார்கள். பையன் முகத்தை நேர் கொண்டு பார்க்க முடியவில்லை. செஞ்ச பாவத்துக்கு... பிராயசித்தமா.. இப்படத்தின் டிவிடியை தேடிப்பிடித்து வாங்கி கொடுத்தேன்.

வாங்கி தந்த நாளிலிருந்து... அக்கா வீட்டுக்கு நான் போகும் பொழுதெல்லாம், வேறு நிகழ்ச்சிகளை பார்க்கவிடாமல்... அக்கா பையன் இந்த படத்தை பார்க்க தொடங்கிவிடுவான். என்னை வெறுப்பேற்றுகிறானாம். இப்படி பலமுறை பார்த்து எனக்கே வசனமே மனப்பாடாமாகிவிட்டது. நெஞ்சில் உள்ள பாரத்தை இந்த படத்தை விமர்சனம் எழுதி, கொஞ்சம் இறக்கி வைச்சுக்கிறேன்!

கதைன்னு பார்த்தால்... 1864 வாக்கில் வார்னே என்பவர் "பூமிக்கு கீழே ஒரு உலகம் இருக்கிறது. அங்கே விசித்திர தாவரங்கள்; டைனோசர் எல்லாம் இன்னும் வாழ்கின்றன. அங்கு போவதற்கு எரிமலை குழம்பு (Valcano tubes) வெளியேறும் பாதை வழியாக செல்ல முடியும்" என சில குறிப்புகளை கொண்டு நாவல் எழுதியுள்ளார். வார்னே யின் கருத்தை நம்புகிறவர்கள் (Vernians) இதைப் பற்றி தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்கிறார்கள்.

இப்படி ஆய்வு செய்ய போய்... 'மேக்ஸ்' என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு (1997ல்) காணாமல் போகிறார். மேக்ஸ்-ன் சகோதரர் நாயகன் (Brendan Fraser - மம்மி பட நாயகன்) தன் அண்ணனை தேடும் முயற்சியில் இருக்கிறார். அவரும் ஒரு வால்கனோ ஆராய்ச்சியாளர். பேராசிரியர். ஒரு "க்ளூ" கிடைத்ததும், விடுமுறைக்கு வந்த அண்ணன் பையனுடன் ஐஸ்லேந்து (Iceland) பயணிக்கிறார்.

அங்கு ஒரு மலையேற ஒரு அழகான பெண் (நாயகி - Anita Breiam) கைடுடன் போய், குகைக்குள் மாட்டிக்கொண்டு, வெளியேறும் முயற்சியில்... பல சாசகங்கள் செய்து... எதிர்பாராதவிதமாக வால்கனோ பாதை வழியாக பல நூறு மைல்கள் உள்ளே விழுந்து... பூமியின் மைய உலகத்திற்கே போய்விடுகிறார்கள்.

அங்கே 'மேக்ஸ்' இறந்ததை கண்டுபிடிக்கிறார்கள். 50 அடி காளான் செடி (!), மனிதர்களை கொல்லும் தாவரம், கடல், பெரிய டைனோசர், காந்த பாறைகள் என பல தடைகளை கடந்து... சின்ன கீறல் கூட விழாமல்... பூமிக்கு வந்து சேர்கிறார்கள்.
***
ஹாலிவுட்காரர்களுக்கு பூமியில் எடுக்கிற கதைகளால் கல்லா கட்ட முடியாமல் போகும் பொழுது... மேலுலகம், கீழுலகம் என பிலிம் எடுப்பார்கள்.

வார்னே எழுதிய பிரெஞ்சு நாவலை மையமாக வைத்து, வெவ்வேறு கால கட்டத்தில் இதே மாதிரி பல படங்களை ஏற்கனவே எடுத்திருக்கிறார்கள். சீரியலாய் கூட எடுத்திருக்கிறார்கள். மற்ற படங்களை விட இந்த படத்திற்கு சிறப்பு சமகால கிராபிக்ஸ் ஜிம்மிக்ஸ் வேலைகள் தான். மேலும் திரைக்கதையும் போராடிக்காமல், விறுவிறுப்பாக படத்தின் இறுதிவரை இழுத்து செல்கின்றன. குழந்தைகளுக்கு கண்டிப்பாக பிடிக்கும். குழந்தை மனசு கொண்ட (!) பெரியவர்களுக்கும் பிடிக்கும். பாருங்கள்! அல்லது பசங்களுக்கு வாங்கி கொடுங்கள்.

சில முக்கிய குறிப்புகள் : 1. வார்னேயின் கருத்து ஒரு டுபாக்கூர். நீருபிக்க படாதது. 2. பசங்களுக்கு வாக்கு கொடுக்கும் பொழுது, கவனமாய் இருங்கள்.
எந்தவொரு 'அரசு இயந்திரங்கள்' இயங்கும் கட்டிடத்திற்குள் நுழைய நேரும் போதெல்லாம் நான் 'எல்லாம் வல்ல இயற்கையை' பலமாக வேண்டிக் கொள்வேன், 'உலகத்தினுள்ள அனைத்து பொறுமையையும் எனக்குக் கொடு' என்று. சித்தர்கள் உபதேசம் செய்தால் கூட கேட்காத நாம் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு கண்களில் பரிதாபத்தை தேக்கிக் கொண்டு நிற்கக்கூடியது எதுவென்றால் அது அரசு அதிகாரிகளின் மேஜைகளின் முன்னால்தான். 'ஒரு கலைஞன் பிறக்கிறானா
புலத்து இலக்கியச்சந்திப்பு இம்முறை மகிந்தா அரசின் "ஜனநாயகத்" தூண்களின் துணையுடன், அதன் பாசிசப் பல்லவியுடன் தான் அரங்கேறியது. "ஜனநாயகத்தை" புலிப் பாசிசத்திடம் இருந்து மீட்டதாக கூறும் கூட்டத்தின் கும்மியடிப்புடன் தான், இம்முறை இலக்கியச் சந்திப்பு என்னும் "ஜனநாயகம்" புழுத்தது. மக்களின் ஜனநாயகத்தை மறுக்கும் "ஜனநாயக பேர்வழிகள்", ஜனநாயகத்தின் பெயரில் சந்தித்துக்கொண்டனர். இவர்கள் தமக்கு மட்டும் "ஜனநாயகத்தைக்" கோரி, அதன் மூலம் மக்கள் ஜனநாயகத்தையே மறுத்தவர்கள்.

இவை எல்லாவற்றையும் மூடிமறைக்க, அனைத்துக்கும் "ஜனநாயகம்" என்று சொந்த மூகமுடியை முன்னிறுத்துகின்றனர். எல்லாவிதமான மனித விரோதங்களையும் கூட, நாம் ஒன்றாக கூடிப்பேசுவது தான் "ஜனநாயகம்" என்ற நிலைக்குள், ஜனநாயகத்தை தரம் தாழ்த்திவிடுகின்றனர், "ஜனநாயகம்" பற்றி பிரமை பிடித்தவர்கள்.

வர்க்க சமூக அமைப்பில் அதாவது ஆளும் வர்க்கமும் ஆளப்படும் வர்க்கமும் ஒன்றாக கூடி அமர்ந்து ஒன்றாக பேசுவது தான், "ஜனநாயகம்"...
....முழுவதும் வாசிக்க கட்டுரையை அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
ஒருவருடைய எழுத்தோ, செய்கையோ ,கருத்தோ, எதுவும் எல்லா நேரங்களிலும் எல்லோராலும், ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் ,என்று திட்ட வட்டமாகச் சொல்லி விடமுடியாது.

ஒரே கருத்து, ஒரே நபருக்கு ஒரு நாள் ,ஒத்துப்போவதாக அமையும் ,மறுநாளே மாறாக ஒலிக்கும்.

நபருக்கு நபர், நேரத்துக்கு நேரம் ,சூழ்நிலைக்கு சூழ்நிலை ,என்று எல்லாமே மாறும் .எதுவும் நிலையில்லை .

இதுவும் கடந்துபோம் ,என்ற வாக்கியத்துக்கு ஏற்ப ,எல்லாமே அதனதன் நிலையைக் கடந்துதான் போகும்.


எதற்கு இத்தனை பில்டப் ....என்று கேட்கிறீர்களா?

மாதிரிக்கு ஒரே ஒரு குறுங்கவிதை ,இக்கவிதை என் எண்ணம் வடித்த வரிகள்,எப்படி ஒருவனுக்குப்
பிடித்திருக்கிறது...மற்றொருவனுக்கு கேலிக்குரியதாக இருக்கிறது பாருங்கள்.

இது ஒரு சின்ன உதாரணம்தான்.ஆனால் எல்லாவற்றிற்கும் பொருத்தமாகும்.
----------------------------------

விமரிசனமும் மாறலாம்
------------------------------

பசி-வயிற்றைக் கிள்ளியது
கண்களை
இமைகளுக்குள் சுழன்றன.
செவிகள்
செயலிழந்து நிசப்தமானது
கால்கள்
நடை தள்ளாட,
மயங்கி விழுந்தேன் சாலையில்.

நினைவு திரும்பி
எழுந்து எழுதினேன்,
ஒரு கவிதை,
'பசி ' என்று பெயரிட்டேன்.
அக்கவிதை,
வட்டச் சம்மணமிட்டுத்
தலை வாழை இலை போட்டு
வக்கணையாய்ப் பரிமாறி
வயிறு முட்டச் சாப்பிட்டவன் கண்ணில், பட்டது

வாசித்தான்,பசியின் கொடுமை அறியாதவன்,
வயிறு வலிக்கச் சிரித்தான்.'
இது என்ன பேத்தல் ?
''யார் எழுதிய புலம்பல் ? 'என்று
காற்றில்,பறக்க விட்டான் காகிதத்தை.
பறந்து சென்ற கவிதை விழுந்தது
ஏழையின் கரங்களிலே.
பல நாள் பசியோடிருந்தவன்.

பஞ்சடைந்த கண்கள் சுருக்கி,
வாசித்தான்,என் கவிதையை.
விழியோரம் நீர் கசிய

ஆஹா அற்புதம் ',என்றான்'
இதுவல்லவோ கவிதை 'என்றான்.

யார் சொல்வதை நம்புவது ?
என் எழுத்து,
பேத்தலா கவிதையா ?
புலம்பலா புதுக்கவிதையா ?
புரியவில்லை,எனக்கு.
-----------------------


ஒருவருடைய எழுத்தோ, செய்கையோ ,கருத்தோ, எதுவும் எல்லா நேரங்களிலும் எல்லோராலும், ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும் ,என்று திட்ட வட்டமாகச் சொல்லி விடமுடியாது.

ஒரே கருத்து, ஒரே நபருக்கு ஒரு நாள் ,ஒத்துப்போவதாக அமையும் ,மறுநாளே மாறாக ஒலிக்கும்.

நபருக்கு நபர், நேரத்துக்கு நேரம் ,சூழ்நிலைக்கு சூழ்நிலை ,என்று எல்லாமே மாறும் .எதுவும் நிலையில்லை .

இதுவும் கடந்துபோம் ,என்ற வாக்கியத்துக்கு ஏற்ப ,எல்லாமே அதனதன் நிலையைக் கடந்துதான் போகும்.


எதற்கு இத்தனை பில்டப் ....என்று கேட்கிறீர்களா?

மாதிரிக்கு ஒரே ஒரு குறுங்கவிதை ,இக்கவிதை என் எண்ணம் வடித்த வரிகள்,எப்படி ஒருவனுக்குப்
பிடித்திருக்கிறது...மற்றொருவனுக்கு கேலிக்குரியதாக இருக்கிறது பாருங்கள்.

இது ஒரு சின்ன உதாரணம்தான்.ஆனால் எல்லாவற்றிற்கும் பொருத்தமாகும்.
----------------------------------

விமரிசனமும் மாறலாம்
------------------------------

பசி-வயிற்றைக் கிள்ளியது
கண்களை
இமைகளுக்குள் சுழன்றன.
செவிகள்
செயலிழந்து நிசப்தமானது
கால்கள்
நடை தள்ளாட,
மயங்கி விழுந்தேன் சாலையில்.

நினைவு திரும்பி
எழுந்து எழுதினேன்,
ஒரு கவிதை,
'பசி ' என்று பெயரிட்டேன்.
அக்கவிதை,
வட்டச் சம்மணமிட்டுத்
தலை வாழை இலை போட்டு
வக்கணையாய்ப் பரிமாறி
வயிறு முட்டச் சாப்பிட்டவன் கண்ணில், பட்டது

வாசித்தான்,பசியின் கொடுமை அறியாதவன்,
வயிறு வலிக்கச் சிரித்தான்.'
இது என்ன பேத்தல் ?
''யார் எழுதிய புலம்பல் ? 'என்று
காற்றில்,பறக்க விட்டான் காகிதத்தை.
பறந்து சென்ற கவிதை விழுந்தது
ஏழையின் கரங்களிலே.
பல நாள் பசியோடிருந்தவன்.

பஞ்சடைந்த கண்கள் சுருக்கி,
வாசித்தான்,என் கவிதையை.
விழியோரம் நீர் கசிய

ஆஹா அற்புதம் ',என்றான்'
இதுவல்லவோ கவிதை 'என்றான்.

யார் சொல்வதை நம்புவது ?
என் எழுத்து,
பேத்தலா கவிதையா ?
புலம்பலா புதுக்கவிதையா ?
புரியவில்லை,எனக்கு.
-----------------------


இலங்கை தொடர்பான அமெரிக்க நிலைப் பாடு என்ன என்ற கேள்வி இப்போது கொழும்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் ஆதரவுப் பின்னணியில், புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசாங்கத்தால் அமெரிக்காவைத் திருப்திப்படுத்தும் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ள முடியாதிருக்கிறது.இதன்காரணமாக, போருக்குப் பிந்திய அபிவிருத்தி விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடி

கருத்துகள் இல்லை: