செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07


உலகத் திருக்குறள் பேரவை என்ற அமைப்பு தவத்திரு குன்றக்குடி அடிகளார்அவர்களைத் தலைவராகக் கொண்டு திருக்குறள் நெறியைப் பரப்பி வருகின்றது,
அவ்வமைப்பின் மாநில மாநாடு வரும் சனி- ஞாயிறு அதாவது 20,21 ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டம் கீழ்மின்னல் அதாவது இரத்தினகிரியில் நடை பெறஉள்ளது, அதன் அழைப்பு கீழே உள்ளது, அனைவரும் வருக

விடுதலைக்குப் பிந்தைய பெண்களின் நாவல்கள்
ஆய்வு குறித்த முன்னோட்டம்


இந்திய விடுதலைக்கு முன் தமிழ் நாவல் உலகில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நாவலாசிரியைகள் நாவல்களைப் படைத்துள்ளனர்.அவர்கள் பற்றிய ஆய்வு விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் என்ற தலைப்பில் என்னால் முனைவர் பட்டத்தி்ற்காகச் செய்யப்பட்டது

விடுதைலக்கு முந்தைய நாவலாசிரியைகள்

இராஜலட்சுமி அம்மாள்,
குமுதினி,
கோதைநாயகி அம்மாள்
வி, சரஸ்வதி அம்மாள்,
சித்தி ஜுனைதா பேகம்,
சாரநாயகி அம்மாள்,
பாலாம்பாள்,
மலைமகள்,
மீனாட்சி சுந்தரம் அம்மாள் ,
ராமாமிர்தத்தம்மாள்,
விசாலாட்சி அம்மாள்,
வேங்கடலட்சுமி,
ஸரோஜா ராமமூர்த்தி,
ஜெயலட்சுமி சீனிவாசன்,

இந்திய விடுதலைக்குப் பின் கல்வி கற்ற பெண்களின் நாவல் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன.எனவே தமிழ் நாவல் உலகில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.இக்காலத்தை பெண்ணிய காலம் எனலாம்.

இக்காலத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்கள் நாற்பது பேருக்கு மேல் அமையலாம்.


அம்பை,
அமுதாகணேசன்,
அரசுமணிமேகலை,
அனுராதா ரமணன்,
அனுத்தமா,
ஆனந்தி,
இந்துமதி,
உமா சந்திரன்,
கார்த்திகா ராஜ்குமார்,
காவேரி,
குமுதினி,
கோமகள்,
சரளா ராஜகோபாலன்,
சல்மா,
சித்திஜுனைதா பேகம்,
சிவகாமி,
சூடாமணி,
திலகவதி,
பாமா,
ரமணிச்சந்திரன்,
ராஜம் கிருஷ்ணன்,
லஷ்மி,
லஷமி சுப்பிரமணியன்,
லீலா கிருஷ்ணன்,
வாசந்தி,
வித்யா சுப்பிரமணியன்,
ஜெயந்தி சங்கர்,
ஜோதிர்லதா கிரிஜா,

இவர்களின் ஏறக்குறைய 300 நாவல்கள் ஆய்வுக்குரிய களம் ஆகும்,

நீ என்னை தனித்தன்மையானதொரு கவிதை
எழுதச்சொல்லி வற்புறுத்துகிறாய்
நகுலனோ
எதிர்வீட்டு தூதா சபானியோ இல்லாது
உனக்கென ஒரு பிரத்யோக கவிதை வேண்டுமெனவும்
அது எப்படி இருக்கவேண்டுமெனவும்
விவாதிக்கிறாய்
யாருமற்ற உலகத்திலும்
யாரும் இல்லையென்ற ஏக்கமோ
யாரேனும் இருந்திருக்கலாமென்ற நிராசையாகவோதான்
இருக்குமென் கவிதை

அது உனக்கானதாயிருக்காது
இரகசியங்களடங்கிய
இப்பின்னிரவின்முடிவில்
வந்திறங்குகிறது உன் நினைவுகள்
மலரின் மீதமரும்
வண்ணத்துப்பூச்சியைப்போல்.
வண்ணங்கள் உதிர்ந்த இருட்சுவரிலிருந்து
பிரதியெடுத்த ஓவியமென
வந்திருக்கிறாய் நீயும்.
என் நிலைக்கண்ணாடியில் விழும்
உங்கள் பிம்பங்கள் பொருந்தாதுகண்டு
அதிர்ந்து நிற்கிறேன் நான்.
வெகுசிரத்தையோடு கவனிக்கிறது
காலம்
அவனும் கடவுளும் நண்பர்கள்
அவருடைய ஒய்வுநேரங்களிலும்
அவனுடைய தனிமையிலும்
உரையாடுவதாய்ச் சொல்லிருக்கிறார்

அவனிடம்

இன்றைய தேநீர்நேரத்தில் வருவதாய்
ஒத்துக்கொண்டிருக்கிறார்
அவனுடைய கேள்விகளை எப்படி
எதிர்கொள்வதென்ற கவலையோடு.
அவரிடம் ஒரு கேள்வி கேட்டான்
கடவுளிடம் ஒரு மலர்ந்த புன்னகை
வேறுவழியற்று நான்கு விடைகளைச்சொல்லி
சரியான பதில் கேட்டான்
இன்னும் பெரிய புன்னகை.
நான்கில் ஒன்றைச்சொல்லி
இது சரிதானாவென்றான்
அதே புன்னகை
மிஞ்சிய தேநீரை அவருக்குக் கொடுத்தான்
நாளைவரச்சொல்லி கதவை மூடினான்

*நண்பன் பாரதிக்கு..



More than a Blog Aggregator

by அபிமன்யு
வெட்டவெளியில்
ஒற்றைமரத்தின் நிழலில்
நான்
யார் நிழலுக்காய் மரம்?

கருத்துகள் இல்லை: