திங்கள், 6 ஜூலை, 2009

2009-07-06

zகுன்னங்குடியின் வயலினுக்கு வயதில்லை இப்படி இன்னொருவர் வருவாரா ?
திடீரெனத்தான் ஞாபகம் வந்தது.

இப்படித்தான்..சில விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டாலும்...சரியாக ஞாபகம் வரவேண்டிய சமயாங்களில் அவற்றை மறந்து விடுவோம்.உதாரணமாக..திருமண நாளை முதல் நாள் வரை ஞாபகம் வைத்திருப்போம்.அடுத்த நாள் வீட்டில் மனைவி 'இன்று என்ன சொல்லுங்க பார்ப்போம்.." என ஆவலாய் கேட்கும் போது..மறந்து தொலைத்திருப்போம்.

ஆமாம்...இப்போது எதற்கு அதையெல்லாம் சொல்கிறீர்கள்? ஏதேனும் மொக்கை பதிப்பு போடப்போகிறீர்களா என்கிறீர்களா?

எனக்கு இப்பதிவு மொக்கையில்லை...உங்களுக்கு எப்படியோ..

நான் தமிழ்மணத்தில்..இடுகைகளை போட ஆரம்பித்து..ஒரு வருடம் நேற்றுடன் முடிந்தது.

பதிவுலகில்..யாரையும் தெரியாமல் பதிவிட ஆரம்பித்த எனக்கு...இன்று என் நலம் நாடும்..சகோதர, சகோதரிகள் எவ்வளவு பேர் !!

ஆகஸ்ட் 3ல் ஃபிட்ஜிட் போட்டேன்...இதுவரை 94000 ஹிட்ஸ்..

78 Followers

கிட்டத்தட்ட 6000 பின்னூட்டங்கள்..

இது ஒரு சாதனை இல்லைதான்...சிலரின் சாதனைகளுடன் ஒப்பிடும்போது...

ஆனால் என்னைப் பொறுத்தளவில்...மனம் மகிழ்கிறது...

இதைவிட சாதனை பெரிதல்ல..

அனைவருக்கும் நன்றியும்...அன்பு வணக்கங்களும்..
தொடர் பதிவில் என்னை அழைத்த நண்பர் 'ஸ்ரீ'க்கு முதலில் நன்றி அப்புறம் இத்தனை நாள் பெரிய .......... மாதிரி எழுதாமல் சீன் போட்டதற்க்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு என் பள்ளி நாட்களை பற்றி ஆரம்பிக்கிறேன்.. கொசுவர்த்தி சுழல்கிறது...


பள்ளி நாட்கள் என்றவுடன் எதை எழுதுவது எதை விடுவது என்று உறுதியாக தெரியவில்லை...முதல் 7 ஆம் வகுப்பு வரை எனக்கு பள்ளி நாட்களை மறக்க முடியமல் செய்த் விஷயம் மொழிப்பாடம்.முதல் இரண்டு வகுப்பில் தெலுங்கு படித்தேன், அடுத்து ஒரு வகுப்பில் ஆங்கிலம் மட்டும் படித்தேன், பின்பு ஹிந்தி ஒரு வருடம் , ப்ரென்ச் ஒரு வருடம். இப்படி கண்டமேனிக்கு படித்ததில் 7ம் வகுப்பில் ஒரு விஜயதசமி நாளில் மணல் கொட்டி 'அ' என்ற வார்த்தையை எழுதி தமிழை இரண்டாம் பாடமாக எடுத்தேன்..இன்று வரை தமிழில் தடுகினந்தோம் போட இது ஒரு முக்கிய காரணம் (எப்படியாவது தமிழில் நன்றாக எழுத வேண்டும் என்று தான் நான் தொடர்ந்து முயர்ச்சி செய்து வருகிறேன், அதுவரைக்கும் கொஞ்சம் பொருத்துக்கொள்ளவும்).

நன்றாக படிக்கும் மாணவன் என்பதால், நான் முதலாம் வகுப்பும், நான்காம் வகுப்பும் படிக்காமலே அடுத்த வகுப்புகளுக்கு டபுள் பிரமோஷன் கொடுத்துவிட்டார்கள் அதனால் வகுப்புகளில் படு சுட்டியாக கேள்வி கேட்டு ஆர்பாட்டம் செய்வதில் மிக பிரபலம்..

ஒருத்தனுக்கு 'மெட்ராஸ் ஐ' வந்துவிட்டால், அடுத்து அவன் கண்ணை உற்று பார்த்து வேண்டுமென்றே 'மெட்ராஸ் ஐ' வரவைழைத்து கொண்டு பள்ளிக்கு மட்டம் போடுவது..லீவ் போடுவதற்கான காரணங்கள் தேடுவதில் பெரிய கேடிகள்.. விளையாட்டு நேரத்தில் விளையாடாமல், வெயிலில் உட்காருவது, வெங்காயத்தை அக்குள் நடுவில் வைத்து கொள்வது. பாம்பு, பேய் என அதை பார்த்தேன் இதை பார்த்தேன் என புருடா விட்டு ஜுரம் வந்தது போல் நடிப்பது என ஒரே கலட்டா தான்..இதுவரை தாத்தாபாட்டியை கொன்றதில்லை....

இதுவரை நான் வீட்டு படம் செய்ததேயில்லை, 3வது முதல் காலெஜ் வரை வீட்டுபாடம், அசைன்மெண்ட் என்று எதுக் கொடுத்தாலும் எழுதியதில்லை, பாடங்களுக்கு தனி நோட் போட்டு அதில் கேள்வி பதில்கள் எழுதியதில்லை, பரிட்சை பேப்பரில் சரியான விடையை எழுதியதில்லை ஆனால் ஒன்று பரிட்சை நேரத்தில் யாரவது காப்பியடித்தால் பார்த்துவிட்டு வாத்தியாரிடம் சொல்லிவிடுவேன்..

பள்ளி நாட்களில் புக் வைத்து அதில் கிரிக்கெட் விளையாடுவது , ஏதாவது வாத்தியார் ஒரே வார்த்தையை எத்தனை முறை சொல்லுகிறார் என எண்ணுவது, எல்லருடைய டிபன் பாக்ஸையும் காலி செய்வது, சண்டை போடுவது அன்றாட செயல்கள்..

ஒரு முறை என் கணக்கு வாத்தியார் எனக்கு நன்றாக புரிந்து தொலைத்த கணக்கை பாடம் நடுத்துகிறேன் என்று குழப்பி கொண்டிருந்தார், நான் கொஞ்சம் டென்ஷ்னாகி, எப்படி தான் நீங்கயெல்லம் எமெஸ்சி பாஸ் பண்ணிங்களோ என கேட்க, அது அவர் காதில் விழுந்துவிட்டது..

கோபமாக என்னை நோக்கி வந்த அவர் "என்னடா சொன்ன?" என்று கேட்க..

"இல்ல சார், இப்பவே கணக்கெல்லாம் இவ்வளவு கஷ்ட்டமா இருக்கே, எம் எஸ் சிலயெல்லாம் இதவிட கஷ்ட்டமா இருக்குமே எப்படி படிச்சு பாஸ் பண்ணிங்க என டோன் மாத்தி சொல்ல"

அவர் நான் பண்ண டுபுரி தனம் புரியாமல் அறியா புள்ளையாக, சற்றே பெருமிதத்தோடு "அது கஷ்ட்டம், நான் புரிஞ்சி படிச்சென்" என ஏதேதோ சொல்ல நான் எஸ்...

பள்ளிகூடம் பக்கத்தில் தியேட்டர், பசங்க சுவர் ஏறி குதிச்சி அந்த வாட்ச்மேனை கரக்ட் பண்ணி பிட்டு டைமல மட்டும் பிட்டு படம் பார்பானுங்க. ஒரு வாட்டி ஆர்வக்கோளாரில் அந்த சாகச செயலுக்கு நானும் சென்று , முதல் முதலில் பிட்டு படத்தை பார்த்து (அப்போ வயசுக்கு வராதா நான்..) குமட்டி வாந்தியெடுத்து, திருப்பியும் அந்த பசங்களையும் தியேட்டர் உள்ள சேர்க்கவெயில்லை.. (நான் எவ்வாளவு நல்லவன் பார்த்தீங்களா!) அன்னிக்கி பண்ண கலட்டால, முன்ன உட்கார்ந்திருந்த என் சையின்ச் வாத்தியார் எங்க கிட்ட வசமா மாட்டிகிட்டார்..

என் பள்ளி நாட்களை பற்றி தனி பதிவே போட வேண்டும் ஒன்றல்ல 100 பொறுமையா பார்க்கலாம்..

இந்த தொடர் பதிவுக்கு நான் அடுத்து அழைக்க போவது தண்டோரா.... தண்டோரா... தண்டோரா....
                                                                            நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரசுக்கு பெரிய வெற்றி ஏற்படக் காரணமாக இருந்தவர் ராகுல். காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு பல மாநிலங்களில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். தமிழகத்தில் ராகுலின் திட்டத்தின்படி இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு வாக்காளர் பட்டியல் தயார் செய்யவும் எந்த
Z                                                                                                                                                               Z     வடக்கு கிழக்கு பகுதிகளில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணிகளை அகற்றுவதற்காக இந்திய படையை அனுப்பி வைப்பதற்கு தயார் என இந்திய வெளியுறவு செயலர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் சிக்குண்டு காயமடைந்த பொதுமக்களுக்கான சிகிச்சையை
c மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை கையளிப்பதற்காக பொலிஸாரால் வழங்கப் பட்டிருந்த இரு வார கால அவகாசம் நேற்று மாலை 3.00 மணியுடன் முடிவடைந்த நிலையில் ஒரு தொகுதி ஆயுதங்கள் பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஊடாக பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டன. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி 103 முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்டபட மீரா ஜூம்மா பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த ஆயுதக்

கருத்துகள் இல்லை: