ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31



More than a Blog Aggregator

by ச.பிரேம்குமார்
இந்நேரம் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கும். வாக்குப் பதிய தகுதியுடைய அனைவரும் கட்டாயம் உங்கள் வாக்கினை பதிந்துவிடுங்கள். கொஞ்சம் யோசித்து வாக்கியளியுங்கள். பேய்க்கு வாக்கப்படுறதா இல்லை பிசாசுக்கு வாக்கப்படுறதாங்குற நிலைமையில் தான் நாம் இருக்கோம். ஆனாலும் இரண்டுல எது பரவாயில்லைங்குறத பொறுத்து தான் முடிவுகள் இருக்கும் என்று நம்புறேன். நான் அதிகம் எதிர்பார்ப்பது தென்சென்னையில் போட்டியிடும் சரத்பாபுவை தான். அவர் வெற்றி பெற வாழ்த்துகள்

***

இத பத்தி ரொம்ப காலமா எழுதனும்னு நினைச்சேன். ஆனா அப்படியே விட்டு போயிடுச்சு. இந்த பதிவு அதுக்கு சரியான இடம்தான். எல்லா தொலைகாட்சிகளிலும் ஏதாவது ஒரு போட்டி. சரி வச்சு தொலையட்டும்னா கடைசியில மக்கள குறுஞ்செய்திகள் மூலமா வாக்களிக்க சொல்லி ஒரே புலம்பல்கள். சரி சாதாரண மக்கள் அப்படி கேட்டாலும் பரவாயில்லை. பிரபலங்கள் ஆடும் நிகழ்ச்சிகளிலும் அப்படித்தான் விழுந்து புரண்டு வாக்கு கேக்குறாய்ங்க. நீங்க காசு வாங்கி ஆடுவீங்க, ஜெயிச்சாலும் சுளையா பணத்த அள்ளிக்கிட்டு போயிடுவீங்க. இதுக்கு மக்கள் வாக்களிக்கனுமா? அதெப்படிய்யா வாக்கு என்று வந்துவிட்டாலே மக்கள் ஏமாளிங்க தான்னு முடிவெடுத்துடுறீங்க?

****

இப்போது நம்ம பதிவுலகத்திலயும் இந்த வாக்கு ஜீரம் தீவிரமா பரவியிருக்கு. தமிழ்மணத்துலயும் தமிழிஷ்லயும் வாக்களியுங்கன்னு மக்கள் எல்லா வகையிலயும் கேக்குறாங்க. சில பேர் கொலை மிரட்டல் கூட விடுறாங்க. நம் பதிவுகள் பலரை சென்றடைய வேண்டும் என்பது தான் வலைப்பதிவெழுதும் எல்லோருடைய எண்ணமும். ஆனால் வாக்களியுங்கள் என்று கொலை மிரட்டல் விடுவது சில சமயம் சிரிப்பை வரவழைக்கிறது. அதிலும் நிறைய குளறுபடிகள் இருப்பதாக படிக்கிறேன். அந்த வாக்களிப்பில் எனக்கு ஏனோ நம்பிக்கையும் இல்லை. நான் தொடர்ந்து படித்து வரும் அத்தனை நண்பர்களின் பதிவுகளையும் அவர்களின் எழுத்துக்களுக்காகவே படிக்கிறேன். அவர்கள் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். ஆனால் எந்நாளும் தமிழ்மணத்திலோ தமிழிஷிலோ வாக்களித்தது இல்லை. இனிமேலும் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறேன் ;)
சமீபத்தில் மென்பொருள் துறையினர் பற்றி செல்வேந்திரன் ஆனந்த விகடனில் ஒரு கவிதை எழுதியிருந்தார். கவிதையின் கருத்தில் உண்மை இருந்தாலும், அதையே ஒரு மென்பொருள் துறை சார்ந்தவன் எழுதியிருந்தால் கைகொட்டி சிரித்திருப்பார்கள். சுய பச்சாதாபத்தில் பிதற்றுகிறோம் என்று கிழித்திருப்பார்கள். கவிதையில் செல்வா சற்று மிகைப்படுத்தியிருந்தாலும், அவருக்கு நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னொன்றும் சொல்ல வேண்டும் "செல்வா, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"

ஆனாலும் ஒரு கொலவெறியோட அதற்கு ஒருவர் எதிர்கவுஜ எழுதி விகடனில் எழுதியிருக்கிறார். (அப்போ விகடனில் கவிதை எழுதுவது சுலபம் தானா? நாமளும் முயல வேண்டியதுதான்)

அவர கேக்கனும் நினைக்கிற கேள்வி, 'ஏஞ்சாமி, எத்தன நாள் தான் அரச்ச மாவையே அரைப்பீங்க? புதுசா ஏதாச்சும் சொல்லுங்களேன், அப்புறம், பேனா கையில் கிடைச்சா எது வேணும்னாலும் எழுதலாமா?' ...எப்படியோ ஆ.வி எழுதின அந்த பாவி(பாசமிகு எதிர்வினையாளரு)க்கு வாழ்த்துகள்

(சும்மா ஒரு எதுகைக்காக தலைப்பு வச்சாச்சு. அதையும் எப்படியோ சமாளிச்சாச்சு)

***

பின்நவீனத்துவம் என்றாலே கொஞ்சம் பீதி தான் எனக்கு. வாசிப்பனுவத்தின் குறைபாடாக கூட இருக்கலாம். அப்படித்தான் பெரும்பாலும் இலக்குவண் ராசாவின் கவிதைகளை புறந்தள்ளி இருக்கிறேன். ஆனால் நேற்று அவர் தளத்தில் படித்த கவிதை வெகுவாய் கவர்ந்தது. இலக்குவண், நல்ல வேலை(ளை)யாக அதை கூகுள் டாக் ஸ்டேடஸ் மெசேஜில் போட்டிருந்தாய்.


வழி தவறிய மீன்கள்

வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை

முழுவதும் படிக்க இலக்குவண் வலைப்பூவிற்கு
செல்க


***

ஒரு நாள் வானவில் வீதி கார்த்திக்கும் நானும் காதல் கவிதைகளை பற்றி பேசிக்கிட்டு இருந்தோம். பெரும்பாலும் எல்லோருமே காதலை மிகைப்படுத்திதான் எழுதுறாங்கன்னு சொன்னான். சரி நீ தான் ஒரு காதல் கவிதை எழுதுறதுன்னு சொன்னதற்கு கவிதைக்கும் எனக்கும் இப்போதைக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னான். சரி ஒரு கதை எழுது என்று சொல்லிகிட்டு இருந்தேன். தம்பி இப்போ அட்டகாசமா ஒரு கதை எழுதியிருக்கான், "தனிமையின் விலை". எத்தனை இளமை, எத்தனை துள்ளல் ?!

அவன் எழுத்துகளை ஏகப்பட்ட மக்கள் படிக்கிறார்கள் என்பதாலும், அவன் எழுத்துக்கு அனேகம் ரசிகர்கள் (அதாவது ரசிகைகள்) இருக்கிறார்கள் என்பதாலும், இது ஒரு விளம்பரம் அல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். வேறென்ன ஒரு பொறாமை தான் :-)

கார்த்திக், சத்தியமா சொல்றேன். உன்னோட எழுத்துக்களை பார்த்து பொறாமையா இருக்கு. You make me feel old dude ;-)


More than a Blog Aggregator

by ச.பிரேம்குமார்



கோவிலில்
எப்போதும் பார்க்க முடிகிறது
அந்த யானையை

காசு தந்தால் பாகனுக்கு
தின்பண்டங்கள் அதற்கு
எதுவாயினும் பதிலுக்கு ஆசீர்வதிக்க
தவறியதில்லை

கழுத்து மணியை ஆட்டி
தனக்கான இசையை பிறக்கச்செய்கிறது
பிறருக்கு கேட்காத எதோவொரு தாளத்திற்கு
பெருத்த உடலை அசைத்துக் கொள்கிறது

தொலைதொடர்புகளற்ற அதன் உலகில்
காட்டுலா குறித்த ஏக்கங்களோ
பிச்சையெடுக்கும் தன்னிலை குறித்த
கவலைகளோ
இல்லாதிருக்கலாம்

முதன்முதலாய் இன்னொரு யானையை
முகாமில் சந்திக்கும் வேளை
என்ன சொல்ல எத்தனிக்கும்
கோவில் யானை?

நன்றி : நவீன விருட்சம்
டேட்டா எண்ட்ரி செய்ய விருப்பமா ?

என்னிடம் 5 பேர் செய்யக்கூடிய அளவில் டேட்டா எண்ட்ரி ப்ராஜக்ட் உள்ளது. ஏற்கனவே டேட்டா எண்ட்ரி துறையில் இருப்பவர்கள் அல்லது டேட்டா எண்ட்ரி செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்...

- ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை
- மிக எளிமையான பணி.
- குறைந்தபட்ச ஆங்கில அறிவு தேவை ( கண்ணால் பார்த்து டைப் செய்யவேண்டும்)
- கணிணி மற்றும் இணைய இணைப்பு வேண்டும்
- தனி நபர்களும் தொடர்புகொள்ளலாம்.
- வாரம் ஒரு முறை பண பட்டுவாடா செய்யப்படும்
- ஆண்டு முழுவதும் பணி
- தினமும் செய்த பணியை மின்னஞ்சல் அனுப்பவேண்டும்.

தொடர்புகொள்ளவேண்டிய முகவரி ravi.antone@gmail.com

பணியை நாளை தொடங்கவேண்டும், அதனால் விரைந்து தொடர்புகொள்ளவும்.
Quality Analyst - Software Tester
As a part of the organization as a QA Engineer, you will be responsible for developing, applying and maintaining quality standards for products of EXFO's fiber-optics test and measurement instruments. You will be responsible for creating test plans including gathering test requirements, use-cases/test plan creation and Risk assessment. Demonstrate competence in own area; may still be acquiring higher level skill. Identifies unusual technical problems and escalates them for resolution. Works with limited guidance on projects within defined criteria. Provides solutions to a diverse range of moderately complex problems.

Conduct Trainings: Conduct training sessions for other team members.
Test Execution: Includes running automated/manual tests and applications.
Test Reporting: Includes providing management with electronic reports on defect data.
Defect Management: Includes defining, tracking and retesting defects.
Process Improvement: Includes providing regular feedback to the management on the effectiveness of the QA process.

Technical requirements:

- You are known for your excellent knowledge of SDLC;
- You have extensive experience on manual and automated testing;
- You are known in completing the assigned tasks with minimum supervision with high quality and on time;
- You are known to rely on instructions and pre-established guidelines to perform the functions of the job;
- You have exposure to programming language like C++ or C# with object oriented design concepts;
- You have exposure to telecom & datacom domain;
- Follows disciplined software development practices.

Competencies requirements:

- You are meticulous and very organized;
- You have excellent written and verbal communication skills;
- You have excellent interpersonal skills;
- You will not hesitate to ask questions and call upon the knowledge of your coworkers to make sure you produce the best possible documentation for our customers;
- You are a team player, who goes out of his /her way to help the team members, when ever possible.
- You are a person who is more people oriented, with a skill to talk to people and get the required info.

Academic and professional requirement:

Education: BE/B Tech/ MCA/ MCS/ M.Sc. Comp Science (Candidates from Electronics & Telecom will be preferred).

Pertinent experience: You have minimum 2 years of experience in the field of Software Quality Assurance.

Language: Excellent written and spoken English.

If you are interested in this position, please mail your CV in word format to cv@jbt.in. Please remember to specify the title of the position for which you are applying.
PHP developer with 2 years experience required. He/she should have working experience with Javascript,CSS, MySql as well.

If they know Ajax it will be considered as an additional qualification.

Initially they will be paid a consolidated salary of Rs 15,000/- (Rupees fifteen thousand only). This will be a contract job for 6 months. depending upon their performance they will be made permanent after 6 months.

Interested candidates can forward their resume to support@technosolutions.in

2009-05-31

பேரெழுத்தாளப் பிதாமகர்களின் பக்கங்களை எட்டிப்பார்த்து "காண்டா"கும் வழக்கத்தை சில காலமாய் நிறுத்தி வைத்திருந்தேன்.இணைய உரையாடலில் வந்த தமிழன் கறுப்பி ஒரு இணைப்பைக் கொடுத்து முந்தின நாளின் இரவை கசப்பாக்கினார்.

கிம் கி டுக் கின் "தீவு" படத்தினைக் குறித்தான பகிர்வில் ஒரு வரி, ஒரே ஒரு வரி என்னைக் கொலைகாரனாகவும்,ஆஃப்ரிக்க கண்டத்தில் கறுப்பின மக்களை வேட்டையாடி, கை விலங்கிட்டு அமெரிக்காவுக்கு இட்டுச் சென்று விற்ற அடிமை ஏஜண்டாகவும்,ப்ரூப் ரீடராகவும்,மேதாவியாகவும்,விக்கிபீடியா "காப்பி"யாளனாகவும் மாற்றிவிட்டிருக்கிறது.அந்தப் படு மோசமான வரி இதுதான்
நமது "....."imdb மற்றும் wikipedia வில் தரப்பட்ட தப்பும் தவறுமான தகவல்களை அப்படியே தனது விமர்சனமாக்கி இருக்கிறார்.
அந்த வரி தேவையற்றதெனும்படியான அனுஜன்யாவின் பகிர்வினுக்கு இப்படி பதில் தந்திருந்தேன்
அனுஜன்யா என் நோக்கம் ஜெமோவோ "....." அல்ல.வேறொரு கோணம்தாம் :)
பெருமதிப்பிற்குறிய சிருஷ்டிகர்த்தா எங்கேயும் போய் தேட வேண்டிய அவசியம் வந்துவிடாமலிருக்கவே imdb plot summary இணைப்பினை இப்படித் தந்திருந்தேன்
Imdb யில் இன்னொரு பிரகஸ்பதி இத்திரைப்படக் கதாநாயகி வாய்பேசமுடியதவள் என்பதாய் ஒரு விமரிசனத்தை எழுதியிருக்கிறார்.
அந்த plot summary இப்படித் தொடங்கும்
Mute Hee-Jin is working as a clerk in a fishing resort in the Korean wilderness; selling baits, food and occasionally her body to the fishing tourists.
கொரியத் திரைப்படங்கள் விமர்சகர்களால் சரியாக அணுகப்படுவதில்லை என்கிற ஆதங்கம்தான் அந்தப் பதிவின் பிரதானமாய் இருந்தது.மற்றபடி எவரின் புத்திசாலித்தனங்களையும் சந்தேகிப்பதோ அல்லது என் புத்திசாலித்தனங்களை அடுத்தவனை முட்டாளாக்கி நிரூபிப்பதோ என் நோக்கம் இல்லை.அந்த பதிவை சாதாரணமாய் படித்திருந்தாலே இந்த உணர்வைப் புரிந்து கொண்டிருக்க முடியும்.அப்படிப் புரியாமல் வேரொரு மனநிலையை அந்தப் பதிவு தந்திருக்குமெனில் அதற்காக வருந்துகிறேன்.மேலும் அவரைப் போன்றவர்கள் அந்தத் திரைப்படத்தின் கடைசிக் காட்சியை எப்படி சிலாகிக்காமல் விட்டார்கள்?மேலும் அவரின் விமர்சனம் ஹீ ஜின்னை ஒரு கொலைகாரியாக சித்தரிக்கும் அபத்தத்தைக் கூட அவர் உணரவில்லையா என்கிற பல ஆதங்கங்கள்தாம் அவரைப் பற்றிய என் ஒற்றை வரிக்கு காரணங்களாக இருந்தன.

"ஆனானப் பட்ட ஹிந்து தினசரி" என்கிற வரியைப் படித்த போது எழுந்த அதிர்ச்சியும் கசப்பும் இவரின் பிம்பங்களைத் தரைமட்டமாக்கியது.ஹிந்து வை மலம் துடைக்க கூட பயன்படுத்துவதில்லை என்கிறபடியால் இவர் அழைப்பு விடுத்திருக்கும் ப்ரூஃப் ரீடர் பணியை ஏற்க முடியாமல் போவதை மிகுந்த வருத்ததோடு பதிவு செய்கிறேன்.

நீ என்ன எப்படி கொற சொல்லலாம்? நீ எப்படி என்னோடதில தப்பு கண்டுபிடிக்கலாம்?.நான் முட்டாள்தான்யா! ஆனா நீ கொலகாரன்....காப்பி அடிக்கிறவன்!.....அறிவ அதிகாரமா பயன்படுத்துறவன்!!..... ப்ரூப் ரீடர் வேலைக்குதான் லாயக்கு... ஆனா நான் சிருஷ்டிகர்த்தா என்ன குண்டாந்தடியால அடிக்காதே!!!!.....
இந்த வரிகளை அவர் சத்தமாய் சொல்வதாய் நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு பீறிட்டெழுந்தது.அவருக்காக வருத்தப்படுவதைத் தவிர்த்து இந்த நல்ல மனநிலையில் என்னால் எதுவும் செய்துவிடமுடியவில்லை.

பன்முகத் தன்மை குறித்தெல்லாம் பாடமெடுத்தவர்கள் தமக்கென வரும்போது மட்டும் ஓட்டுக்குள் சுருங்குவதும் வன்மத்தை உமிழ்வதும் நம் சூழலில் புதிதில்லை என்றாலும் இவரின் உமிழ்தல்கள் இவரின் பிம்பத்தின்மீதே படிந்து போனது நிரந்தர சோகம்.

போகிற போக்கில் புழுதி வாறித் தூற்றும் வேலையை வேறு செய்து வருகிறார்.அதைப் பற்றியெல்லாம் விரிவாய் எழுத பயமாய் இருக்கிறது.பாபாவின் பூரண ஆசி பெற்ற ' ஆ' சாமி யை விமர்சித்தால் எங்கே நானும் மண்டையைப் போட்டு விடுவேனோ என்கிற பயம் வேறு நேற்று இரவிலிருந்து தொற்றிக் கொண்டது.இவருக்கு மேலே இருந்து படு பயங்கர பாதுகாப்புகள் வேறு வந்து கொண்டிருப்பதால் விரல்கள் நடுங்க இந்தக் கருமத்தை இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஐநூறு மைல் நீளமுள்ள துண்டுநிலத்துக்கு முதல்வராகிவிட்டு உடனே பல்கலைகழகத்துக்கு போய் டாக்டர் பட்டம் வாங்கிக்கொள்ளும் நம் ஊர் மானம் கெட்ட கொள்ளைகார மிருகங்களுக்கு..(மிருகங்கள் மன்னிக்கவும்)..அரசியல்வாந்திகளுக்கு ஒபாமா தன் உதாரணம் மூலம் செருப்படி கொடுத்திருக்கிறார்.

அரிசோனா பல்கலைகழகம் ஒபாமாவின் பெயரை கவுரவ டாக்டர் விருதுக்கு பரிசீலித்து டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு அவர் எந்த சாதனையும் செய்யவில்லை என முடிவு செய்தது.அதன்பின் அதை ஒபாமாவுக்கும் தெரிவித்து மாணவர்களுக்கு விருது வழங்க அவரை அழைத்தது.ஒபாமா கோபிக்காமல் அந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் "நான் இன்னமும் எந்த சாதனையும் செய்யவில்லை.அமெரிக்க ஜனாதிபதியாவது என்பது ஒருவர் தன் வாழ்க்கையை சிறப்பாக நடத்தினார் என்பதற்கான அறிகுறி அல்ல" என பேசியிருக்கிறார்.

அரசியல்வாதிகளின் காலை நக்கி பிழைக்காத அரிசோனா பல்கலைகழகத்தை பாராட்டுவதா இல்லை தனக்கு டாக்டர் பட்டம் வாங்க தகுதி இல்லை என்று கூறிய பல்கலைகழகத்தின் பரிந்துரை சரியானது என்று கூறிய ஒபாமாவை பாராட்டுவதா என புரியவில்லை.

மசாலாபடத்தில் நடித்த நடிகருக்கெல்லாம் டாக்டர் பட்டம் வழங்கி நக்கிபிழைக்கும் நம் ஊர் பல்கலைகழகங்களும், மணிக்கணக்கில் இந்திரன்,சந்திரன் என புகழ்மாலைகளை கேட்டு ரசிக்கும் நம் அரசியல்வாந்திகளும் இனியாவது திருந்தினால் சரி.



More than a Blog Aggregator

by செல்வன்
'ஸ்ஸூ..அழாம சொல்லணும்.அப்புறம் வேறென்ன புகார் உம்புருசன் மேல?" எஸ்.ஐ வேதவல்லி கோபத்துடன் அதட்டினார்.

"ஸ்டேசனுக்கு வந்து பொண்ணுக புகார் தர்ரதே பெருசு.இதுல நீங்க இப்படி அதட்டினா அவ பயந்துக்க மாட்டாளா?" புகார் தர வந்த கூட்டத்தில் இருந்த பெருசு ஒன்று முணுமுணுத்தது.

"யோவ்.உனக்கு இது அதிசய கேசு.எனக்கு இது ஆயிரத்துல ஒண்ணு..ஆஃபடர் ஆல் கள்ள தொடர்பு மேட்டரு.அதுக்கு புகார் தர ஒரு கூட்டம்..இவனுங்க பேச்சை கேட்டு நீ வரதட்சிணை கொடுமைன்னு புகார் தந்தா அவனை நான் புடிச்சு உள்ளே தான் போட வேண்டி இருக்கும்.அப்புறம் உனக்கு கடைசிவரைக்கும் வாழாவெட்டி பட்டம் தான் மிச்சம்.நல்லா யோசிச்சு பாரு" எஸ்.ஐ பரிவுடன் கூறினார்.

"இல்லைங்க மேடம்."அவர் முன்னாள் கிளாஸ்மேட் பொண்ணு கூட நெருங்கி பழக ஆரம்பிச்சுட்டார்.என்னை கண்டுக்கறதில்லை.மதிக்கறதில்லை.கண்டுக்காம இருந்தா இரு,போறதுன்னா போங்கறார்.நான் வேற என்னதான் செய்யறது?நீங்க எப்படியாச்சும் அவர் கிட்ட பேசி அவளை கழட்டி விட்டீங்கன்னா உங்க காலில் விழுந்து..."

"காலில் விழுந்து கட்டவுட் வெப்பியாக்கும்?இதா பாரம்மா....ஸ்டெசன்ல முந்தி கட்டபஞ்சாயத்து பண்ணி தம்பதிகளை சேத்து வெச்சுட்டிருந்தோம்.டிஎஸ்பிக்கு புகார் போய் இப்ப அதை எல்லாம் நிறுத்திட்டோம்.இதை நீயும் உன் சொந்தகாரங்களும் சேந்து தான் பேசி முடிவு பண்னனும்.என் கிட்ட புகார் கொடுத்தா நான் அப்புறம் உம்புருஷனை அரெஸ்ட் பண்ணிதான் தீருவேன்.உம்புருசனுக்கு நல்ல கம்பனில உத்தியோகம் இருக்கு.அது வீணா பறி போயிடும்.அப்புறம் ஐயோன்னா வராது..அம்மான்னா வராது..புரியுதா?" வேதவல்லி அதட்டினார்.

வாசவி மெதுவாக தலையாட்டினாள்.

"இந்த காலத்துல எவன் இதை எல்லாம் செய்யலை?" எஸ்.ஐ குரலை மெதுவாக இறக்கினார்..."இந்தா பாரு.அந்த லாக்கப்புல வசந்தின்னு ஒருத்தி உக்காந்துகிட்டிருக்கல்ல?அவ புருசன் கல்யானமாகி கொஞ்ச நாள் கழிச்சு வேறொருத்தியை செட்டப் பண்ணிகிட்டான்.இவளை முதல் தாரமா வெச்சு கவுரவமா நடத்தறதா சொன்னான்.கேக்காம ஆங்காரப்பட்டு வீட்டை விட்டு வந்து எவன் கையிலோ சிக்கி சீரழிஞ்சு இப்ப விபசாரியா இருக்கா"

வாசவி வசந்தியை உற்றுப்பார்த்தாள்.வசந்தியின் முகத்தில் அப்படி ஒன்றும் சோகம் தென்படவில்லை.என்ன வேணா நடக்கட்டும் என்று அலட்சியமாக உட்கார்ந்திருந்தது போல் பட்டது.

"போலிசெல்லாம் வாண்டாம்னு அப்பவே சொன்னேன்.இந்த மனுசன் தான் ரோசப்பட்டுகிட்டு இழுத்துகிட்டு வந்துட்டார்.இந்தாளு சின்ன வயசுல ஆடாத ஆட்டமா?எல்லாம் ஒரு குழந்தை பொறந்தா சரியாயிடும்.சொன்னா கேக்கறாளா இவ?இவளுக்கு படிப்பும் இல்லை,வேலையும் இல்லை.இவங்கப்பனுக்கு இப்பவே ஊரெல்லாம் கடன்.நாங்க ரெண்டுபேரும் போய் சேந்தா இவ ரோட்டுல தான் நிக்கணும்" வாசவியின் அம்மா புலம்பினார்.

"எம்பொண்ணு ரோட்டுல எதுக்கு நிக்கணும்?அந்த நாயை புடிச்சு உள்ள போட்டுட்டு நானே இன்னொரு கலியாணம் பண்ணி வெப்பேன்" வாசவியின் அப்பா சொல்லிவிட்டு லொக்கு,லொக்கு என்று இருமினார்.

"இந்த விவாகரத்து,புரட்சி எல்லாம் பேசறதுக்கு நல்லா தான் இருக்கும்.செயல்முறைக்கு ஒத்துவராது.இந்த மாதிரி ஆயிரம் கேசை பாத்தவ நான்.புரியுதா?" வேதவல்லி நல்லவிதமாக சொல்லி பார்த்தார்.

வாசவி முடிவெடுக்க முடியாமல் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தாள்.பிறகு கொடுத்த புகார் கடிதத்தை திரும்ப வாங்கிக்கொண்டாள்."எம் புருசன் வீட்டுக்கு போறேன்" என மெதுவாக சொன்னாள்.

"நல்ல முடிவு.நீ உங்க சொந்தக்காரங்க யார் பேச்சையும் இனிமேல் கேக்காதே.புரியுதா?" வேதவல்லி அட்வைஸ் செய்தார்.

தலையாட்டிவிட்டு வாசவி வெளியே நடந்தாள்.ஸ்டேசன் வாசலை தாண்டும்போது யதேச்சையாக நின்றாள்.வசந்தியை திரும்பி பார்த்தாள்.வசந்தியும் அவளை பார்த்தாள்.தலைகுனிந்துகொண்டு ஸ்டேசன் வாசலை தாண்டினாள் வாசவி.

"உன் புருசன் கூட பொழைக்கறதுக்கு பதில் என்னை மாதிரி தொழில் செஞ்சே பிழைக்கலாம்.." வசந்தியின் குரல் ஆக்ரோஷமாக ஸ்டேஷனெங்கும் ஒலித்தது.

வாசவி நின்றாள்.

'நிஜமாதான்...ஜெயிலில் இருந்தாலும் நான் ரொம்ப சுதந்திரமா இருக்கேன்.நீ மறுபடி ஒரு ஜெயிலில் அடைபட போயிட்டிருக்கே.நானாவது ஒரு வாரத்தில் விடுதலையாயிடுவேன்.உனக்கு ஏது விடுதலை?"

"அவ கெடக்கறா அவுசாரி..நீ நட..." வாசவியின் அம்மா முணுமுணுத்தார்.அவர் குரலும் ஏனோ தளர்ந்திருந்தது.

கையை உதறிவிட்டு ஸ்டேசனுக்குள் மீண்டும் நுழைந்தாள் வாசவி.

வசந்தியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.பூவாய் சிரித்தாள் வசந்தி.

பல வருடங்களுக்கு முன்பு பெமினா இதழில் படித்த ஒரு சிறுகதையில் இந்திய கணவன் ஒருவன் அமெரிக்க பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொள்கிறான்.அவன் இந்திய மனைவி அவனுக்காக கண்ணீருடன் காத்திருக்கிறாள்.கடைசியில் ஒருநாள் அவள் கணவன் திரும்பி வருகிறான்.திரும்பி வந்து ஏன் திரும்பி வந்தேன் என்பதற்கான தன்னிலை விளக்கத்தை அளிக்கிறான்.அந்த விளக்கம் முழுவதும் இந்திய கலாசாரத்தை உயர்த்திபிடிப்பதாகவே இருக்கிறது.அதன்பின் முத்தாய்ப்பாக ஒரு விளக்கத்தை கொடுக்கிறான்.."டாய்லட் பேப்பர் பயன்படுத்துபவளுடன் என்னால் வாழ்நாள் முழுவதும் வாழமுடியாது.."

அதற்கு என்ன அர்த்தம் என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை.டாய்லட் பேபர் சுகாதர கேடானதா இல்லை தண்ணீர் விட்டு கழுவுவது சுத்தமானதா என்ன சொல்ல வருகிறார் என்றே அன்றும் புரியவில்லை, இன்றும் புரியவில்லை.

அமெரிக்க டாய்லட்டுகள் அவர்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தை வகிப்பவை.நம் ஊரில் ஆய் போவதை "காலை கடனை கழிப்பது" என்று ஏதோ கடன் கட்டும் இடமாக கருதி குறிப்பார்கள்.பாத்ரூமுக்கு போனோமா,வேலையை முடித்தோமா வந்தோமா என்று நம் ஊரில் இருப்பார்கள்.அமெரிக்காவில் அப்படி இல்லை.

நம் ஊர் டாய்லட் பவுலில் குத்த வைத்துதான் உட்கார முடியும்.அதனால் எத்தனை சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு எழுகிறோமோ அத்தனை சீக்கிரம் எழுந்திருப்பார்கள்.வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட் பவுலில் சேரில் உட்கார்வது போல் அக்கடாவென உட்கார்ந்து ஆய்போகலாம்.பலர் அதனாலேயே வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லட்டுகளுக்கு போகும்போது தினசரியையும் எடுத்துப்போய் ஆற அமர படித்து முடிப்பார்கள்.நம் ஊரில் ஆய்போகும்போது சாப்பிடுவதை அசிங்கமாக நினைப்பார்கள்.ஆனால் அமெரிக்காவில் ஆய்போகும்போது ஒரு கோப்பை ஒயினை எடுத்துப்போய் சிப்புகிறவர்கள் இருக்கிறார்கள்.பல அமெரிக்க ஓட்டல்களில் காப்பி மெஷினை டாய்லட்டுகளில் தான் வைத்திருப்பார்கள்.

அமெரிக்க டாய்லட்டுகள் ஒவ்வொன்றிலும் பாத்டப்புகள் தவறாமல் இருக்கும்.அதில் நீரை நிரப்பி மிதப்பது அமெரிக்கர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.ஆக பாத்ரூமில் இத்தனை நேரத்தை செலவழிப்பதால் அதை சுத்தமாக வைத்திருப்பதில் முனைப்பு காட்டுவார்கள்.பாத்ரூம் தரையில் துளி தன்ணீர் படாமல் கார்பெட் போட்டிருப்பார்கள்.குளிக்கும்போது பாத்டப்பில் நின்றுகொண்டு ஷவரில் குளிக்கலாம்.தன்ணீர் வெளியே விழாமல் இருக்க திரை போட்டு மூடியிருப்பார்கள்.

ஆய்போய்விட்டு தன்ணீர் விட்டு கழுவுவது நம் ஊருல் சுகாதாரமாக கருதப்படுகிறது.ஆனால் இது நம் ஊருக்கு நாக்ரிக மாற்றத்தில் வந்த புது வழக்கம் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் அட்டாச்ட் பாத்ரூம்கள் எல்லாம் கிடையாது.ஊர் மக்கள் எல்லோரும் இட்டேரி என்று சொல்லப்படும் இடத்துக்கு சென்றுதான் ஆய்போக வேண்டும்.இட்டேரிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும்.அங்கே சற்று புதர் மறைவாக இருக்கும் இடத்தில் உடகர்ந்து ஆய்போவார்கள்.ஆண்கள்,பெண்கள் என்று எந்த வித்திய்சாமும் இல்லாமல் ஊர்கூடி ஆய்போகும் இடம் தான் இட்டேரி.

இட்டேரிகளுக்கு செம்பை எடுத்து போகிறவர்கள் இருப்பார்கள்.இருந்தாலும் ஒரு சின்ன செம்பு தன்ணீரில் சுத்தமாக கழுவ முடியாது என்பதால் சின்ன சைஸ் கருங்கல்லாக பார்த்து நாலைந்தை எடுத்துகொண்டு இட்டேரிக்கு போய் ஆய்போனபின் முதலில் கரும்கல்லில் ஆயை துடைத்து வீசுவார்கள்,அதன்பின் சின்ன சொம்பில் இருக்கும் நீரைகொண்டு கழுவிக்கொண்டு வீடுவந்து சேர்வார்கள்.

எங்கள் ஊருக்கு அடாச்ச்ட் பாத்ரூமும்,தன்ணீர் குழாயும் வந்தபிறகு இட்டேரிக்கு போவது சுத்தமாக நின்றுவிட்டது.அதன்பின் துடைக்கும் வழக்கம் சுத்தமாக நின்றுபோய் கழுவும் வழக்கம் தான் இந்திய கலாசாரம் என்றும் துடைப்பது அமெரிக்க கலாசாரம் என்றும் நம் மக்கள் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்.ஆனால் இது முற்றிலும் உண்மைக்கு மாறான தகவல்.உண்மையில் துடைப்பது தான் இந்தியாவின் ஆதி கலாசாரம்.



More than a Blog Aggregator

by ச.பிரேம்குமார்


நேசம் முடிவுற்ற ஓரிரவில்
மொட்டை மாடியில் குப்புறக்கிடந்தேன்

17வது குறுந்தகவலின் பாதிப்பு இன்னும்
இருக்கிறது

வானவில்லை எதிர்பார்த்து புகையை
இழுத்தபடி கிடக்கலாம்
கொலை செய்வதாகவோ அல்லது தற்கொலைக்கு
முயல்வதாகவோ கனவில் தொலையலாம்

எதிரில் நீண்டுகிடக்கும் பயணம்
நினைவுவந்த வேளையில்
விடிந்துவிட்டது புதிதாய் கடக்கக் காத்திருக்கும்
இன்னொரு நாள்!

- ச.பிரேம்குமார்

என்ன கொடுமை இதென்று நீங்கள் கேட்பது புரிகிறது. வேறொன்றுமில்லை. தம்பிகள் கார்த்திக் மற்றும் சரவணக்குமாரின் கவிதைகள் தந்த தாக்கம் தான். அவர்கள் எழுதியவைகள் கவிதைகள். இது ஜஸ்ட் மொக்கை ;-)

2009-05-31

நானொரு கொலைகார‌னென்ப‌தை
எவரும் ந‌ம்ப‌ப்போவ‌தில்லை.
கொலைக‌ளுக்கான‌ சில‌ வ‌ரைமுறைக‌ளை
கைவ‌ச‌ம் வைத்திருப்ப‌வ‌ர்க‌ள்
'கொலை...' என்று ஆர‌ம்பித்த‌வுட‌னேயே
ஏற்க‌ன‌வே செய்ய‌ப்ப‌ட்ட‌ கொலைக‌ளின்
ப‌ட்டிய‌லுட‌ன் ஒப்பிட‌த் தொட‌ங்குகின்றார்க‌ள்
முக்கிய‌மாய் கொலையைச் செய்த‌வ‌ன்
தான் கொலை செய்த‌தை ஒப்புக்கொள்வ‌தில்லையென‌வும்
இப்ப‌டி கொலையைச் செய்துவிட்டு
வெளியே ந‌ட‌மாடித் திரிவ‌த‌ற்கு
ச‌ட்ட‌த்தில் ஓட்டைக‌ள் இல்லையென‌வும்
தெளிவான‌ வாத‌ங்க‌ளை வைத்து
நான் கொலை செய்ய‌வில்லையென‌ நிரூபிக்கவும் செய்கின்றார்க‌ள்.

ந‌ன்று.
என‌க்கு அண்மைக்கால‌மாய்
எதிர்கால‌ம் 'க‌ட‌ந்த‌கால‌மாக‌வும்'
க‌ட‌ந்த‌கால‌ம் 'எதிர்கால‌மாக‌வும்'
பிள‌வுப‌ட்ட‌ ம‌னோநிலையில்
எதிர்கால‌த்தில் நிக‌ழ்த்த‌ப்போகின்ற‌ கொலையை
ஏற்க‌ன‌வே செய்துவிட்டேன் என்கின்ற‌போது
உங்க‌ளுக்கு பிற‌ழ்ந்த‌வ‌னின் குறிப்புக‌ள் நினைவுககு வ‌ர‌லாம்.

நான் ஏழாவ‌து முறையாக‌
காத‌லித்து கைவிட்ட‌வ‌ளோடு
ஏற்க‌ன‌வே ஆறுபெண்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில்
க‌ருத்த‌ரித்து வ‌ள‌ர்ந்த‌ காத‌ற் சிசுக‌ளைக் கொன்றேனென‌
அழ‌கிய‌லோடு க‌விதை சொல்ல‌ பிரிய‌முண்டெனினும்
கொலைக‌ள் எப்போதும் குரூர‌மான‌வை
இப்போது கிறுக்கிக்கொண்டிருக்கும் க‌ர‌டுமுர‌டான‌
இந்த‌ ஏதோ ஒன்றைப்போல‌.

கொலை செய்தேன் செய்தேனென‌

என‌தெல்லாப் பிர‌திக‌ளிலும்
எழுதிய‌த‌ன் அலுப்புத் தாங்காது
உண்மைக‌ளை அறிவ‌த‌ற்காய்
விம‌ர்ச‌ன‌க் க‌த்திக‌ளோடு அவச‌ர‌ம‌வ‌ச‌ர‌மாய்
பிரேத‌ப் ப‌ரிசோத‌னைக்கு வ‌ருகின்றீர்க‌ள்
முத‌லில் இஃதொரு க‌விதை இல்லையெனும் நீங்க‌ள்
இங்கே பாவிக்க‌ப்ப‌ட்ட‌ வார்த்தைக‌ள்
ஏற்க‌ன‌வே ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வையால்
க‌ள‌வாட‌ப்ப‌ட்ட‌ எழுத்தும் கூட‌
என்கிறீர்க‌ள்.

நான் க‌விதையை அல்ல‌,
கொலைக்கான‌
என் வாக்குமூல‌த்தைத்தான் கூறிக்கொண்டிருக்கின்றேன்.
மேலும்
ஏற்க‌ன‌வே உருவாக்க‌ப்ப‌ட்ட‌ சொற்க‌ளனான
ஒரு மொழியில்
வார்த்தைத் திருட்டுக்களைத்தான்
நாமெல்லோரும் செய்துகொண்டிருக்கின்றோமென‌
ஒரு முற்றுப்புள்ளிக்கு அண்மையாக‌ நின்று சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

பிர‌திக்கு அப்பால‌ல்ல‌
அத‌ற்கு உள்ளேதான் எல்லாம் உள்ள‌தென்று
பூத‌க்க‌ண்ணாடியின் துணையோடு மீண்டும் தோண்டுகின்றீர்க‌ள்
அர்த்த‌ம‌ற்ற‌ சொற்க‌ளென்று வெட்ட‌த்தொட‌ங்கினால்
எஞ்சியிருக்கும் தாளின் முற்றுப்புள்ளியிலும் புதிய‌தொரு அர்த்த‌மிருக்கும்
புன்ன‌கை பூச‌ப்ப‌ட்டவென் சொரூப‌ குண‌த்துக்குள்
நான் செய்த‌ கொலையும் ம‌றைந்திருக்கலாம்

இல்லை, இல்லை
இது உன் ம‌ன‌ப்புதிர்க‌ளால் க‌ட்டிய‌மைத்த‌
ச‌துர‌ங்க‌ப் பெட்டிக‌ளில் எம்மைய‌ழைத்து
முடிவுறாத‌ ஆட்ட‌திற்கான‌ முஸ்தீபுக‌ளென்ற‌ப‌டி
நீ கொலையே செய்ய‌வில்லையென‌ பூத‌க்க‌ண்ணாடியோடும்
க‌த்திரிக்கோலுட‌னும் வெளியேறிவிடுகின்றீர்க‌ள்.
ந‌ண்ப‌ர்க‌ளே உங்க‌ளிட‌ம் ம‌ன்றாடிக்கொண்டிருக்கின்றேன்
த‌ய‌வு செய்து நான் செய்துவிட்ட கொலையைக் க‌ண்டுபிடித்து
கொலைகார‌ன் என்றென்னை அடையாள‌ப்ப‌டுத்துங்கள்.
இவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு
எவ‌ரிட‌மும் பிடிப‌டாம‌ல் இருப்ப‌தென்ப‌து
நான் மிக‌வும் க‌டின‌ப்ப‌ட்டு செய்துவிட்ட‌
கொலையை ம‌திப்ப‌ற்ற‌தாக்கி விடுகிற‌து.


ப‌ட‌ம்: Galatea of the Spheres by Salvador Dali
நன்றி;முத்தாரம்


More than a Blog Aggregator

by சக்தி


நன்றி;முத்தாரம்


More than a Blog Aggregator

by ராஜேஷ்



ஆதிபராசக்தி அம்ருதவர்ஷினி என்ற அழகான பாடல்

பாடல் இடம்பெற்ற திரை : பொன்னபுரம் கோட்டா
இசை: தேவராஜன் மாஸ்டர்
வரிகள்: வயலார்
குரல்கள்: யேசுதாஸ், பி.பி.ஸ்ரீனிவாஸ், சுசீலா, மாதுரி, லீலா


குறிப்பாக மாதுரி சுசீலா பாடும் ஜதிஸ்வர பகுதி அருமை.


அகத்திய முனிவர் அருளிய இந்தப் பாடல்கள் மிகவும் சந்த நயத்துடன் கூடியது. சிறுவயதில் இருந்தே அன்னையாரால் அறிமுகம் செய்யப்பட்டு இன்று வரை பாடுவதற்கு அடியேன் மிகவும் விரும்பும் பாடல்கள் இவை. அண்மையில் இப்பாடல்களை திரு. வெ. சுப்பிரமணியன் அவர்கள் மின் தமிழ் குழுமத்தில் இட்டார்கள். அதனை இங்கே முருகனடியார்கள் பாடிப் பயன் பெறும் வகையில் பதிகின்றேன்.

ஷண்முக நாயகன் தோன்றிடுவான் -சிவ
ஸத்குரு நாயகன் தோன்றிடுவான்
கண்களினால் கண்டு போற்றிடலாம்-கொடும்
காலத்தைக் காலனை மாற்றிடலாம் (ஷண்முக) (1)

ஆனந்த மாமலர்ச் சோலையிலே-மன
ஆட்டம் அடங்கிய வேளையிலே
ஞானம் தரும் தென்றல் காற்றினிலே-எழும்
நாம சங்கீர்த்தன ஊற்றினிலே (ஷண்முக) (2)

பக்குவமாம் தினைக் காட்டினிலே- அவன்
பக்தர் நுழைந்திடும் வீட்டினிலே
மிக்குயர்வாம் மலைக் கோட்டினிலே -அருள்
மேவும் அகத்தியன் பாட்டினிலே (ஷண்முக)(3)

தொண்டர் திரண்டெழும் கூட்டத்திலே-அவர்
சுற்றிச் சுழன்றிடும் ஆட்டத்திலே
அண்டர் தினம் தொழும் வானத்திலே-தவ
ஆன்ம சுகம் பெரும் மோனத்திலே (ஷண்முக)(4)

ஏழைக்கிரங்கிடும் சித்தத்திலே-பொருள்
ஈந்து மகிழ்ந்தவர் அத்தத்திலே
ஊழைக் கடப்பவர் பக்தியிலே-தெய்வ
உண்மையைக் காண்பவர் சக்தியிலே (ஷண்முக)(5)

வேதாந்த தத்துவ ஸாரத்திலே-அலை
வீசும் செந்தூர்க் கடல் தீரத்திலே
ஆதார குண்டலி யோகத்திலே-பர
மாத்ம ஜீவாத்ம வைபோகத்திலே (ஷண்முக)(6)

அன்பர்க்கு இயற்றிடும் சேவையிலே-உயர்
அர்ச்சனையாய் மலர் தூவையிலே
இன்பப் பெரும்புனல் வீழ்ச்சியிலே-காணும்
யாவும் ஒன்றென்றுணர் காட்சியிலே (ஷண்முக)(7)

நண்ணும் இயற்கை அமைப்பினிலே-ஒளி
நட்சத்திரங்கள் இமைப்பினிலே
விண்ணில் விரிந்துள நீலத்திலே-மயில்
மேல்வரும் ஆனந்தக் கோலத்திலே (ஷண்முக)(8)

தேகவிசாரம் மறக்கையிலே-சிவ
ஜீவவிசாரம் பிறக்கையிலே
ஆகும் அருட்பணி செய்கையிலே_கங்கை
ஆறு கலந்திடும் பொய்கையிலே- (ஷண்முக)(9)

மானாபிமானம் விடுக்கையிலே- தீப
மங்கள ஜோதி எடுக்கையிலே
ஞானானுபூதி உதிக்கையிலே-குரு
நாதனை நாடித் துதிக்கையிலே (ஷண்முக)(10)


ஆடிவரும் நல்ல நாகத்திலே-அருள்
ஆறெழுத்தின் ஜெபவேகத்திலே
கோடிவரம் தரும் கோயிலிலே-தன்னைக்
கூப்பிடுவார் மனை வாயிலிலே (ஷண்முக)(11)

ஸித்தரின் ஞான விவேகத்திலே- பக்தர்
செய்திடும் தேனபிஷேகத்திலே
உத்தமமான விபூதியிலே-அதன்
உட்பொருளாம் சிவ ஜோதியிலே (ஷண்முக)(12)

அன்னைமடித்தலப் பிள்ளையவன்
சச்சிதானந்த நாட்டினுக் கெல்லையவன்
பண்ணும் ஏகாக்ஷர போதனவன்-மலர்ப்
பாதனவன் குருநாதனவன் (ஷண்முக)(13)

செல்வமெல்லாம்தரும் செல்வனவன் -அன்பர்
சிந்தைகவர்ந்திடும் கள்வனவன்
வெல்லும்செஞ்சேவல் பதாகை உயர்த்திய
வீரனவன் அலங்காரனவன் (ஷண்முக)(14)

சேர்ந்தவருக்கென்றும் சகாயனவன் -இன்பத்
தூயனவன் அன்பர் நேயனவன்
சேர்ந்தவரைத் துறந்தாண்டியுமாய் நின்ற
சீலனவன் வள்ளி லோலனவன் (ஷண்முக)(15)

அஞ்சுமுகத்தின் அருட்சுடரால்-வந்த
ஆறுமுகப் பெருமானுமவன்
விஞ்சிடும் அஞ்செழுத்தாறெழுத்தாய்-வந்த
விந்தைகொள் ஞானக்குழந்தையவன் (ஷண்முக)(16)

முத்தொழிலாற்றும் முதற்பொருளாம்--ஆதி
மூல சதாசிவ மூர்த்தியவன்
இத்தனி உண்மை மறந்தவனைச் -சிறை
இட்டவனாம் பின்னர் விட்டவனாம் (ஷண்முக)(17)

வள்ளி தெய்வானை மணாளனவன் -மண
மாலைகொள் ஆறிருதோளனவன்
அள்ளி அணைப்பவர் சொந்தமவன் - புகழ்
ஆகம நான்மறை அந்தமவன் (ஷண்முக)(18)

கோலமுடன் காலை மாலையிலும்-இரு
கோளங்கள் வானில் வரப்புரிவான்
ஓலையில் ஆணியை நாட்டுமுன்னே-எந்தன்
உள்ளத்திலே கவி ஊட்டிடுவான் (ஷண்முக)(19)

பேர்களெல்லாம் அவர் பேர்களன்றோ -சொல்லும்
பேதமெல்லாம் வெறும் வாதமன்றோ
சார்வதெல்லாம் அருள் என்றிருந்தால்-வினை
தாண்டிடலாம் உலகாண்டிடலாம் (ஷண்முக)(20)

கும்பமுனிக்கருள் நம்பியன் -அன்பு
கொண்ட கஜானனன் தம்பியவன்
தும்பை அணிந்தவன் கண்டு கண்டின்புறும்
ஜோதியவன் பரம் ஜோதியவன் (ஷண்முக)(21)
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது!
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
நித்தமும் பாலிலே நீராட்டுவோம்
பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!
திருநீறின் தத்துவம் தந்தையென்போம்! அதில்
திகழும் குங்குமத்தை அன்னையென்போம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!

பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
பன்னிரு விழிகளில் மை தீட்டுவோம்!
பன்னிரு செவிகளில் நகை பூட்டுவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!
திருமார்பில் ஒளிவீசும் கவசமிட்டு
தேன்சிந்தும் முல்லைப்பூ மாலை அணிவோம்!


விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
முருகன் விரலுக்கு மோதிரம் பவளத்திலே!
கையில் விளையாடும் கங்கணங்கள் வைரத்திலே!
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
தங்கத் திருப்பாதம் வணங்கும்போது,
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!
பெறுகின்ற சுகத்திற்கு எல்லையேது!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!


மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
மயில்மீது மன்னனை இருக்கவைத்து
ஏழு ஸ்வரம் பாடும் கிங்கிணி சலங்கை கட்டி
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து,
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!
இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்!

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது
கந்தகிரி கோவில் வந்தால்
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!
நன்மையெல்லாம் நடக்குது..!




திரைப்படம் - கந்தரலங்காரம்
இசை - குன்னக்குடி வைத்தியநாதன்

2009-05-31

1969ல் முன்னைய செக்கோசிலாவாக்கியாவின் மீது ஐக்கிய சோவியத் படைகள், ஆக்கிரமிப்பு யுத்தம் மேற்கொண்ட போது, ஜான் பால்க் ( Jahn Pallc ) எனும் இருபத்தியொரு வயதுக் கல்லூரி மாணவன் செக்கோசிலாவாக்கியாவின் தலைநகர் பாராக்காவில, தன்னுடலில் தீமூட்டித் தீக்குளித்து மாண்டு போகின்றான். அவனது தீயாகத்தில் ஐரோப்பாவும், உலகமும் அதிர்ந்து போகின்றது.நாற்பது வருடங்களின் பின், அவனை நினைவு படுத்தும்


More than a Blog Aggregator

by மலைநாடான்
என் காலடி மண்ணைகந்தகத் தீயில்சுட்டவர் நீங்கள்ஒட்டச் சொல்கின்றீர் ?
வெகு நாட்களாக அயன் படப்பாடல்கள் கணினியில் இருந்தாலும் இன்று வரை கேட்டதில்லை.
இன்று எதேச்சையாக வின்னாம்பில் (winamp) சேர்த்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தேன்.
அமைதியாக ஆரம்பித்து முழுமையாக மனதில் நிறம்பி அளுமை செயதது ஒரு பாடல்!!
அட!! இது நன்றாக இருக்கிறதே என்று பாடலை ரிப்பீட்டில் போட்டவன் தான்!! பாடல் திரும்ப திரும்ப ஓடிக்கொண்டே இருக்கிறது.
பல நாட்களுக்கு பின் இப்படி ஒரு பாடலை கேட்கிறேன்.மனதிற்கு அமைதி தந்து ஒற்றடம் தரவல்ல பாடல்!! இதை போன்ற பாடல்கள் புனையும் அதை உருவாக்கும் கலைஞர்களின் மன நிலை எப்படி இருக்கும் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வம் கூடுகிறது.நம்மை போல காதலில் இல்லாதவர்கள் கூட ஒரு நிமிடம் காதல் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்று நினைத்து பார்க்கக்கூடிய உணர்வுகளை தரக்கூடிய பாடல்!! காதலர்கள் எல்லாம் ஏன் இப்படி கிறுக்குப்பிடித்து அலைகிறார்கள் என்று புரிந்துக்கொள்ள உதவும் பாடல்!!
ஒரு அழகான பாடல்!
இந்தப்பாடல் கேட்டதில் இருந்து படத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசை கூடுகிறது.

நீங்களும் கேட்டுதான் பாருங்களேன்.




Get Your Own Hindi Songs Player at Music Plugin




பாடல் வரிகள்:
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : நா.முத்துக்குமார்
பாடகர் : கார்த்திக்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்
பெண்ணே பெண்ணே
அடி இது போல் மழை காலம்
என் வாழ்வில் வருமா
மழை கிளியே மழை கிளியே
உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே
நான் என்னை கண்டேனே செந்தேனே(விழி மூடி யோசித்தால்)


கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்
துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால்
நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே
ஒ ..ஒ ..ஒ ..(விழி மூடி யோசித்தால்)



ஆசை என்னும் தூண்டில் முள் தான்
மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட
மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு
தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ
புது மயக்கம்
இது மாய வலை அல்லவா
புது மோக நிலை அல்லவா
உடை மாறும் நடை மாறும்
ஒரு பாரம் என்னை பிடிக்கும் (விழி மூடி யோசித்தால்)