வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

பெரும் வல்லரசுகளின் ஆயுத மற்றும் தொழில்நுட்ப உதவியோடும், இந்தியப் படையினரின் நேரடிப் பங்களிப்போடும் தமிழினத்தையும் தமிழர்களின் தலைமையையும் அழிப்பதற்கு போர் தொடுத்துள்ள சிறிலங்கா அரசின் இறுக்கமான முற்றுகையை உடைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேறு ஒரு தளத்திற்கு சென்று விட்டதாக உறுதிப்படுத்தமுடியாத செய்திகள் தெரிவிக்கின்றன.பொட்டம்மான், சூசை, கபில் அம்மான், ரட்ணம் மாஸ்ரர், ஜெயம்,
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட இறுதிக்கட்ட போரில் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.மோதல் இடம்பெற்ற பகுதிகளில் இன்று காலை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதலில் 250 இற்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இது இலங்கை
விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட இறுதிக்கட்ட போரில் உயிரிழந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.மோதல் இடம்பெற்ற பகுதிகளில் இன்று காலை பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதலில் 250 இற்கும் அதிகமான விடுதலைப் புலி உறுப்பினர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். எனினும் இது இலங்கை

பூவொன்றின் நிறத்திலிருந்து
வழிந்து
பெருகுகிறது
ஒரு பறவை..

06.05.2009




எல்லாருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் : என்னோட வலைப்பக்கத்துக்கு நிறைய பேர் தொடுப்பு கொடுத்து இருக்கீங்க.. நிறைய பேர் வலைப்பக்கத்தில "கவிதைகள் எனப்படும்" என்ற பெயரிலேயே இன்னும் தொடுப்பு இருக்கு.. அதை தயவு செய்து "கனவில் தொலைதல்" அப்படின்னு மாத்திடுங்களேன்.. ப்ளீஸ்..


More than a Blog Aggregator

by kanchana Radhakrishnan

தேவையானவை:

பால் 5 கப்
கோவா 100 gm.(sugarless)
ஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ சிறிதளவு
ஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்
பிஸ்தா பருப்பு தேவையானது
சர்க்கரை 100 கிராம்
குங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.

செய்முறை:

ஒரு கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் கோவாவையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.
விடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் ஆகும். பாலும் கோவாவும் நன்றாக திக்கானவுடன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.
அடுப்பை slim ல் வைத்து கிளற வேண்டும்.பின்னர் ஏலக்காய் பொடி,ஜாதிக்காய் பொடி,குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.
நன்றாக கிளறி ஆறவைக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.
நன்கு கையால் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையால் round ஆக தட்டவும்.
பிஸ்தாபருப்பை மேலே வைத்து அமுக்கவும்.
---------------------------------------------------------
தீபச்செல்வன்

---------------------------------------------------------------
பிழைத்துப்போன களம் உன்னை
கொண்டுபோய் நிறுத்தி வைத்திருக்கிறது.
நீ கொண்டு செல்ல வேண்டிய
பை கிடக்கிற கடற்கரையில் காற்று திரளுகிறது.

விளையாடுகிற முத்தமற்று
சைக்கிளில் திரிகிற ஒழுங்கையற்று
வாழ்வை யுத்தம் ஒடுக்கியருக்க
உன்னை களம் கொண்டுபோயிற்று.
திணிக்கப்பட்டிருக்கிற துவக்கு
உன்னைத்தான் தின்றுகொண்டிருக்கிறது.

அண்ணாவின் கல்லறைதான்
ஒரு சொத்தென இருந்தது.
அண்ணாவின் கனவு கலைக்கப்பட்டிருக்க
கல்லறையும் தகர்ந்து போயிற்று.
இப்பொழுது வீடு இல்லை
எங்களில் யாரும் வாழ்வதற்கு.
அண்ணாவைப்போலவும்
அவனின் கனவைப்போலவும்
அலைந்துகொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றையும் இழந்து
அலைந்து ஒடுங்கியிருக்கிற
அச்ச மூட்டுகிற இராத்திரிகளில்
பொத்தி வைத்திருந்த
உன்னை இழுத்துச் செல்லப்படுகிற
எங்கள் விதியை என்ன செய்வது?

எங்களை அலைத்துக்கொண்டிருக்கிற எதிரியை
நீ எப்படி சுடுவாய்?
எவற்றையும் உணர முடியாத
அறிந்திருக்காத வயதில்
உனக்கு யுத்தம் தரப்பட்டிருக்கிறது.
கையில் தரப்பட்டிருக்கிற துவக்கு
பிஞ்சு மனதை வேகவைத்துக்கொண்டிருக்கிறது.
எதியிடம் சரணடைகிறது எஞ்சிய நிலம்.

இப்படி ஒரு கவிதையும்
இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்
ஏன் என்னை நெருங்கின.
கடைசியில் பொய்த்துப்போய்
கிடக்கிறது எனது சொற்கள்.
இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி
நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு
நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?
யார் உன்னை இழுத்துச் சென்றனர்?
அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.
அண்ணா நமது தேசத்தைப்போலவே
உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்
என்று அம்மா சொல்லுகிறாள்.

இப்பொழுது நமது நகரமும் இல்லை.
வாழ்வுமில்லை.
எதுவுமற்ற நாமும் இல்லை.
எனினும் நீ வேண்டும்
அவியாத கொஞ்ச சோற்றையும்
தண்ணிரில் அவித்த பருப்பையும் தின்பதற்கு.

விரைவாக வந்துவிடு
நாம் மேலும் நிலம் பெயர்ந்தலைவோம்.
-----------------------------------------------------------
(20.04.2009 தங்கச்சி வேங்கனிக்கு)

கருத்துகள் இல்லை: