ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

ராபர்ட் பிராஸ்டின் (Robert Frost) இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஆசையை நெருப்பிற்கும்,வெறுப்பை பனிக்கட்டிக்கும் உவமையாக கொடுத்திருக்கிறார் என்பது என் கணிப்பு.உணர்ச்சிகள்,ஆசைகள் தான் நெருப்பாகிறது இங்கு இந்தக் கவிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் எண்ணங்களும், புரிபடும் அர்த்தங்களும் வெவ்வேறு வகையாக இருப்பது தான் இந்தக் கவிதையின் சிறப்பாகும்.



உலகம் நெருப்பில் முடியும் என்பது சிலர் கூற்று

பனிக்கட்டியில் முடியும் என்பது சிலர் கூற்று.

நான் சுவைத்த ஆசைகளிலிருந்து

நெருப்பை விரும்புவர்கள் பக்கமே இருக்கிறேன்.

இரண்டு முறை உலகம் முடிவிற்கு வருமானால்,

வெறுப்பைப் பற்றி போதுமான அளவு எனக்குத் தெரியும்

நான் நினைக்கிறேன் பனிக்கட்டியும் அழிவிற்கு மிகச் சிறந்தது

என சொல்ல முடியும்

மேலும் அதுவே போதுமானதும் கூட.




மனிதனுக்கு பல விதமான ஆசைகள்.சில ஆசைகள் விருப்பங்களாக வந்து போகும்.மற்றும் சில ஆசைகள் நிராசைகளாகப் போய் விடும். அப்போது ஏமாற்றம்,கோபம் அதனால் வன்முறை என்று அழிவுப் பாதைக்கு போகும் வாழ்க்கை.சில சமயம் ஆசையின் காரணமாக உடம்பு கொதிக்கும்,நரம்பு புடைக்கும்.ஆனால் சில ஆசைகள் மனதில் கொழுந்து விட்டு எரியும்.அந்த எரியும் ஆசைகள் தான் மனிதனின் அழிவிற்கு காரணமாகிறது. இந்த ஆசைகளைத் தான் நெருப்பாக சித்தரிக்கிறார் பிராஸ்ட்.

வெறுப்பு என்று வந்து விட்டால் மனம் படும் பாடு சொல்லி முடியாது.வெறுப்பின் விளைவு ஆத்திரம்.ஆத்திரம் வந்தால் புத்தி பேதலிக்கிறது.அழிவை நோக்கி இட்டுச் செல்லும் கருவியாகிறது.கறுப்பர்,வெள்ளையர்,ஜாதி,மதம் மற்றும் இனம் என்ற பெயரில் தான் மனித குலத்தில் எத்தனை எண்ணிலடங்காத வெறுப்புக்கள் உலா வருகின்றன.அதனால் ஏற்படும் சண்டைகள்,சச்சரவுகள் சொல்லி முடியாது.வெறுப்பினால் மனம் பனிக்கட்டி போல் இறுகி விடுகிறது. உதவி செய்ய மனம் வராது.அதனால் தான் பிராஸ்ட் வெறுப்பை பனிக்கட்டிக்கு உவமை ஆக்குகிறார் போல் உள்ளது.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.என் மொழி பெயர்ப்பில் தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டவும். மேலும் இந்தக் கவிதையைப் படிக்கும் போது உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை பின்னூட்டம் இட்டு பகிர்ந்து கொள்ளலாமே?

Some say the world will end in fire,
Some say in ice.
From what I've tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To say that for destruction ice
Is also great
And would suffice.
ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி நிலுவை தொகை வழங்கப்படாததை கண்டித்து உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தினை நடத்தினர்.

ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென உள்ளாட்சி துறை உத்தரவிட்ட போதிலும் இதுவரை நகராட்சி ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், பல்வேறு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் உழவர்கரை நகராட்சி நிரந்தர ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பட்டை நாமத்துடன்தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று அனைத்து ஊழியர்களும் ஒருநாள் விடுப்பு எடுத்து காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கு சங்க பொதுச் செயலாளர் பழனிவேலு தலைமை தாங்க, தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். போராட்டத்தினை வாழ்த்தி மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லட்சுமணசாமி மற்றும் நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
புதுவையில் உள்ள 19 வாய்க்கால்களை சீரமைக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விசுவநாதன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் உள்ள முக்கிய கழிவுநீர் வாய்க்கால்கள் அனைத்தும் மண் மூடியிருப்பதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்றும், இதனை பொதுப்பணித்துறை மேலோட்டமாக அகற்றுவதால் எந்தவித பயனுமில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த ஆண்டிற்கான பருவமழை முன்கூட்டியே துவங்கி இருப்பதால் வாய்க்கால்களை தூர்வாரி போர்க்கால அடிப்படையில் சுத்தப்படுத்தினால்தான் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி ஊருக்குள் புகுவதை தடுக்க முடியுமென்றும், மேலும் புதுவையில் உள்ள 19 வாய்க்கால்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
புதுவையில் உள்ள 19 வாய்க்கால்களை சீரமைக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விசுவநாதன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் உள்ள முக்கிய கழிவுநீர் வாய்க்கால்கள் அனைத்தும் மண் மூடியிருப்பதால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென்றும், இதனை பொதுப்பணித்துறை மேலோட்டமாக அகற்றுவதால் எந்தவித பயனுமில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த ஆண்டிற்கான பருவமழை முன்கூட்டியே துவங்கி இருப்பதால் வாய்க்கால்களை தூர்வாரி போர்க்கால அடிப்படையில் சுத்தப்படுத்தினால்தான் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி ஊருக்குள் புகுவதை தடுக்க முடியுமென்றும், மேலும் புதுவையில் உள்ள 19 வாய்க்கால்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
புதுவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

ரயில்வே துறை திருச்சி கோட்டம் சார்பில் விழுப்புரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ரயில்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதுவை ரயில் நிலைய நுழைவு வாயிலில், ஆரம்ப காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட நீராவி இன்ஜின் முதல் தற்போது மின்சார ரயில் இன்ஜின்களின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு படங்களுக்கு கீழே குறிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால் இதன் மூலம் அந்தந்த ரயில்களின் பயன்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற கண்காட்சியை கண்ட வெளிமாநில பயணிகள் தங்கள் செல்போன்களில் அரிய வரை ரயில் இன்ஜின் படங்களை சேமித்து கொண்டனர்.

இந்த கண்காட்சி நாளையுடன் நிறைவடைவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காண்பதில் ஆர்வம் காட்டினர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பிரமணியன், புதுவை ரயில் நிலைய மேலாளர் மணிராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.
புதுவை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

ரயில்வே துறை திருச்சி கோட்டம் சார்பில் விழுப்புரம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ரயில்கள் தொடர்பான புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக புதுவை ரயில் நிலைய நுழைவு வாயிலில், ஆரம்ப காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட நீராவி இன்ஜின் முதல் தற்போது மின்சார ரயில் இன்ஜின்களின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு படங்களுக்கு கீழே குறிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதால் இதன் மூலம் அந்தந்த ரயில்களின் பயன்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. இதுபோன்ற கண்காட்சியை கண்ட வெளிமாநில பயணிகள் தங்கள் செல்போன்களில் அரிய வரை ரயில் இன்ஜின் படங்களை சேமித்து கொண்டனர்.

இந்த கண்காட்சி நாளையுடன் நிறைவடைவதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காண்பதில் ஆர்வம் காட்டினர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பிரமணியன், புதுவை ரயில் நிலைய மேலாளர் மணிராஜன் ஆகியோர் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: