ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

(இந்த பதிவை படிக்கும் முன் கார்கியின் இந்த பதிவை படித்து விட்டு வாருங்கள்)




இதில் நாம் பார்க்க போவது மேவி என்ற பிரபலம் ஆகாத பதிவாளரை.......
இதில் என்ன கொடுமைன்ன மேவி தான் ஒரு பிரபலம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.




முதுகு சொறிதல்: எந்த மொக்கையையும் வாசகன் தன் அனுபவங்களோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியுமென்றால் அதுவே படு மொக்கையாகும் ; அந்த வகையில் இவரது ஓவ்வொரு பதிவும் இவர் போட்ட மொக்கையை பற்றியே சொல்லவதால் எளிதில் இவர் மொக்கை பதிவர் ஆகிவிட்டார். இவருக்கு எந்த கடிதமும் வராததே இதற்க்கு சாட்சி. ஏற்கனவே எழுதின பதிவுகளை மீண்டும் போஸ்ட் செய்து சக பதிவாளர்களை கொடுமை படுத்துவதால் இவர் ஒரு சிறந்த மொக்கையாளரே....






மூக்கில் குத்துதல்: பக்கா மசாலா பதிவாளராய் வர வேண்டியர் ஏதோ ஒன்னு இரண்டு காரனங்களால் மொக்கை பதிவாளராக இருக்கிறார். மசாலா பதிவளரயாக வர பதிவுகளை டைப் செய்யும் போது சிறிது ஆச்சி மசாலாவை கம்ப்யூட்டர் மீது தூவிவிட்டு அதன் பிறகு டைப் செய்தால் மசாலா பதிவாளராய் வர வாய்ப்புகள் உண்டு. எப்போதுமே வட இந்திய பெண்களை சைட் அடித்து கொண்டு இருப்பதால் இவரது பதிவுகளில் எழுது பிழைகள் நிறைய வருகிறது ; எழுது பிழைகளை குறைக்க இவர் இனிமேல் தமிழ் பெண்களை சைட் அடிக்க வேண்டும் ; அப்படி செய்தால் ஏற்கனவே tube-light யாக இருக்கும் இவர் மேலும் பல பல்புகளை வாங்கி, "ஆயிரம் பல்புகள் வாங்கிய அபூர்வ சிகாமணியாக" வர வாழ்த்துக்கள் .......




டிஸ்கி 1 : கவிதை என்ற பெயரில் தமிழை கொலை செய்வதை இவர் நிறுத்தினால் ; இவர் உடலுக்கு செய் கூலி உடன் சேதாரம் இருக்காது.



டிஸ்கி 2 : வேற என்ன முதல் டிஸ்கிக்கு ஒரு பெரிய repeat.........


More than a Blog Aggregator

by நகைக்கடை நைனா
அவன் அவன் கிளி மாதிரி பொண்டாட்டி வேனுங்குறான்...
ஆனா கிளி குடும்பத்திலும் இப்படி தானா???





இதெல்லாம் இப்படி பேசுற மாதிரி ஆகிருமோ நம்ம நெலமை???





அட இதுங்க பொலம்புறது கூட சரிதானோ?





அட இந்த யானைய பாரேன்...





அட நமக்கும் நாளைக்கு இப்படித்தானே செய்வாங்க???




சிரிக்க மட்டும் அல்ல... ஓட்டும் போடுங்க.

நாளைக்கு உங்க பூத்துலே போய் உங்க ஓட்டை மட்டும் போடுங்க.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், ஓட்டு போட நீங்க காசு வாங்கி இருந்தீங்கன்னா இங்கேயும் ஓட்டு போட்டு கமண்டு போடுங்க. காசு வாங்கலைன்னா கமண்டு மட்டும் போடுங்க.
===================== போலிங் பூத்து =====================


More than a Blog Aggregator

by நகைக்கடை நைனா
அவன் அவன் கிளி மாதிரி பொண்டாட்டி வேனுங்குறான்...
ஆனா கிளி குடும்பத்திலும் இப்படி தானா???





இதெல்லாம் இப்படி பேசுற மாதிரி ஆகிருமோ நம்ம நெலமை???





அட இதுங்க பொலம்புறது கூட சரிதானோ?





அட இந்த யானைய பாரேன்...





அட நமக்கும் நாளைக்கு இப்படித்தானே செய்வாங்க???




சிரிக்க மட்டும் அல்ல... ஓட்டும் போடுங்க.

நாளைக்கு உங்க பூத்துலே போய் உங்க ஓட்டை மட்டும் போடுங்க.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், ஓட்டு போட நீங்க காசு வாங்கி இருந்தீங்கன்னா இங்கேயும் ஓட்டு போட்டு கமண்டு போடுங்க. காசு வாங்கலைன்னா கமண்டு மட்டும் போடுங்க.
===================== போலிங் பூத்து =====================
ஈழத்தமிழர் காவியம் (பகுதி 1) நாடகம் இனிதே நிறைவேறியது!

பிரபல தமிழறிஞர், இலக்கியவாதி, நாடக ஆசிரியர், எழுத்தாளர், தமிழினத்தலைவர் அவர்கள் எழுதி இயக்கி நடித்து வந்த விறுவிறுப்பான நாடகத்தின் முதல் பகுதி நேற்று இனிதே நிறைவேரியது. இந்த நாடகம் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது முந்தைய நாடகங்களைப் போலவே இதிலும் பரபரப்புக்கும், உணர்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. எனினும் கிளைமாக்ஸ் காட்சி சற்று நீண்டு இருப்பது சலிப்பையே தருகிறது. நாடகத்தின் ஆரம்ப காட்சிகளில் பல விறுவிறுப்பான காட்சிகளை வைத்திருப்பது ரசிகர்களை அப்படியே கட்டிப்போடுகிறது. டெல்லிக்குத் தந்தி அடிக்கும் காட்சிகள் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அமைந்திருப்பது இயக்குனரின் அனுபவத்தையே காட்டுகிறது.

நாடகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் வில்லனாக நடித்திருக்கும் ராஜபக்சேவின் கதாபாத்திரம். அதிலும் சன்டைக்காட்சிகலில் அவர் காட்டும் ஆக்ரோசமும் வேகமும் பதற வைக்கின்றன. நாடக்த்தில் பெரும் திருப்புமுனையாக வருவது, வில்லன் நாயகனிடமே ரகசிய உதவி பெரும்காட்சிகள்தான். அவை அப்படியே பார்ப்பவர்கள் அனைவரயும் சீட் நுனிக்கே கொண்டு வந்து விடுகின்றன. அதிலும் தன் நண்பர்கள் மூலமாக நாயகன் வில்லனுக்கு உதவும் காட்சிகளில் இயக்குனரின் திறமை பளிச்சென்று வெளிப்படுகிறது.

நாடகத்தில் காமெடி நடிகர்கள் இல்லாதே குறையை நாயகனே திறம்பட நீக்கியுள்ளார். அதிலும் பிரபாகரன் என் நண்பன் என்று அவர் கூறும் போது அரங்கத்தில் கரவொலி அடங்க நீண்ட நேரமாகிவிட்டது. அதைத்தொடர்ந்து வரும் காட்சிகளில் நாயகன் தான் அப்படி சொல்லவே இல்லை என்று வாதிடும் போது வசனகர்த்தாவின் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கிளைமாக்ஸில் நாயகன் உண்ணாவிரதம் இருக்கும் காட்சிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தாலும் முந்தைய நாடகங்கள் நினைவுக்கு வருவதைத்தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் நாடகத்தில் ஆங்காங்கே சில சில குறைகள் தென்பட்டாலும் கதாநாயகன் தன் பண்பட்ட நடிப்பால் அனைத்தையும் சரி செய்து விடுகிறார்.நாடகத்தின் இரண்டாம் பாகம் தேர்தலுக்குப் பிறகு தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
ஈழத்தமிழர் காவியம் (பகுதி 1) நாடகம் இனிதே நிறைவேறியது!

பிரபல தமிழறிஞர், இலக்கியவாதி, நாடக ஆசிரியர், எழுத்தாளர், தமிழினத்தலைவர் அவர்கள் எழுதி இயக்கி நடித்து வந்த விறுவிறுப்பான நாடகத்தின் முதல் பகுதி நேற்று இனிதே நிறைவேரியது. இந்த நாடகம் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சிகளிலும் மற்ற ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது முந்தைய நாடகங்களைப் போலவே இதிலும் பரபரப்புக்கும், உணர்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. எனினும் கிளைமாக்ஸ் காட்சி சற்று நீண்டு இருப்பது சலிப்பையே தருகிறது. நாடகத்தின் ஆரம்ப காட்சிகளில் பல விறுவிறுப்பான காட்சிகளை வைத்திருப்பது ரசிகர்களை அப்படியே கட்டிப்போடுகிறது. டெல்லிக்குத் தந்தி அடிக்கும் காட்சிகள் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் அமைந்திருப்பது இயக்குனரின் அனுபவத்தையே காட்டுகிறது.

நாடகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் வில்லனாக நடித்திருக்கும் ராஜபக்சேவின் கதாபாத்திரம். அதிலும் சன்டைக்காட்சிகலில் அவர் காட்டும் ஆக்ரோசமும் வேகமும் பதற வைக்கின்றன. நாடக்த்தில் பெரும் திருப்புமுனையாக வருவது, வில்லன் நாயகனிடமே ரகசிய உதவி பெரும்காட்சிகள்தான். அவை அப்படியே பார்ப்பவர்கள் அனைவரயும் சீட் நுனிக்கே கொண்டு வந்து விடுகின்றன. அதிலும் தன் நண்பர்கள் மூலமாக நாயகன் வில்லனுக்கு உதவும் காட்சிகளில் இயக்குனரின் திறமை பளிச்சென்று வெளிப்படுகிறது.

நாடகத்தில் காமெடி நடிகர்கள் இல்லாதே குறையை நாயகனே திறம்பட நீக்கியுள்ளார். அதிலும் பிரபாகரன் என் நண்பன் என்று அவர் கூறும் போது அரங்கத்தில் கரவொலி அடங்க நீண்ட நேரமாகிவிட்டது. அதைத்தொடர்ந்து வரும் காட்சிகளில் நாயகன் தான் அப்படி சொல்லவே இல்லை என்று வாதிடும் போது வசனகர்த்தாவின் திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. கிளைமாக்ஸில் நாயகன் உண்ணாவிரதம் இருக்கும் காட்சிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தாலும் முந்தைய நாடகங்கள் நினைவுக்கு வருவதைத்தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் நாடகத்தில் ஆங்காங்கே சில சில குறைகள் தென்பட்டாலும் கதாநாயகன் தன் பண்பட்ட நடிப்பால் அனைத்தையும் சரி செய்து விடுகிறார்.நாடகத்தின் இரண்டாம் பாகம் தேர்தலுக்குப் பிறகு தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பிரபல நாடக இயக்குனர் மற்றும் நாடக நடிகர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்கள் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட ஈழத்தமிழர் காவியம் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெற்றி நடை போட்டது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள் அடுத்து தனது 'எங்க வீட்டுப் பிள்ளைகள்' நாடகத்தை பரபரப்பாக வெளியிட்டுள்ளார்.

வெற்றிக் முழக்கங்களுடன் டெல்லிக்குப் புறப்படுவதில் இருந்து நாடகம் தொடங்குகிறது. நாடக்த்தின் பெரும்பாலான காட்சிகளில் வசனங்கள் ஏதும் இன்றி எல்லாவ்ற்றையும் நாமே புரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைதான். இது ஒரு புதுவகையான காட்சியமைப்பு தந்திரம் என்று கூறப்படுகிறது. நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் அமைக்கப்படாத நிலையில் மற்ற காட்சிகள் குறிப்பாக பேச்சுவார்த்தை நடக்கும் காட்சிகள் நாடகத்தின் போக்கை தெளிவாக காட்டுகின்றன. கலைஞர் அவர்கள் தன் மகன், மகள், பேரன் என்று மூவருக்குமே காபினெட் பதவிதான் வேண்டும் என்று வாதாடும்போது ஒரு பொறுப்புள்ள தந்தையாக பளிச்சிடுகிறார். உடனே எதிர்தரப்பு கலைஞரின் பேரனுக்கு மட்டுமே பதவி கொடுக்க முடியும் என்றூ கூறிவிடுவது நாடகத்தின் எதிர்பாராத திருப்பம். இக்காட்சியில் வில்லனாக நடித்தவர்கள் திரைக்கதையை மீறி சொந்தமாக நடித்து விட்டது இயக்குனருக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துவிட்டது அப்பட்டமாக முகத்தில் தெரிந்தது. எனினும் ரசிகர்கள் அக்காட்சிக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்ததால் இயக்குனர் எதுவும் செய்ய முடியவில்லை.

பேரனுக்கு மட்டுமே பதவி என்றவுடன், மகன் பயங்கர ஆயுதங்களூடன் தந்தையை மிரட்டுவது ரசிக்கும்படியாக இல்லை. இந்தக்காட்சியில் இயக்குனர் பயங்கரமாக சொதப்பியிருக்கிறார்.

வில்லன் கோஷ்டியினரைப் பேசி ஜெயிக்க முடியாத நிலையில் அடுத்து நாடகத்தை எவ்வாறு நகர்த்துவது என்று இயக்குனர் குழம்பி போயிருக்கிறார். இதனிடையே திடீரென்று ராஜா, பாலு என்று இரண்டு கதாபாத்திரங்கள் திணிக்கப்படுகின்றன. அவர்கள் கதாநாயன் மேல் உள்ள விசுவாசத்தினால் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு தியாகிகளாக்கப்படுகிறார்கள். அதைத் தொடர்ந்து காட்சிகள் நாயகன் தனது நண்பர்கள் மற்றும் காமெடியன்களுடன் சேர்ந்து திட்டம்தீட்டுவதாக போவதோடு நாடகத்திற்கு திரை விழிகிறது. வெகுவிறைவில் கிளைமாக்ஸ் காட்சிகள் அரங்கேற்றப்படும் என்று நாடகத்தின் இயக்குனர் அறிக்கை விடுத்துள்ளார்.

கிளைமாக்ஸில் நாயகன் தனது ஒரு மகனை மத்திய மந்திரியாகவும், இளையவரை மாநில முதல் மந்திரியாகவும் ஆக்கி விட்டு வனவாசம் செல்வதாக்வே அமையும் என்று பட்சிகள் சொல்கின்றன.

இந்நாடகத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் உண்மையே. அவை யாரையும் புண்படுத்துவதற்காக நடக்கவில்லை.

கருத்துகள் இல்லை: