ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

உண்மையில் இந்திய அரசு நினைத்து இருந்தால் இந்த இனதொழிப்பு போரை தடுத்து இருக்கலாம்.ஆனால் இந்திய அரசு தனது வெளிஉறவு கொள்கைக்காகவும் பிரந்திய பாதுகாப்புக்காகவும் ஈழ மக்களின் உயிரை பணயமாக வைத்து விட்டது. குறைந்த பட்சம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்காமல் இருந்திருக்கலாம் அப்படி செய்து இருந்தால் பல மடங்கு அழிவு தடுக்க பட்டு இருக்கும்.
தமிழ் நாட்டில் உள்ள பல பேருக்கு ஈழத்தின் அடிப்படை உண்மைகள் தெரியாது போய் விட்டன. தமிழர் ஆகிய நாம் நம் எதிர்ப்பையும் வேண்டுகோளையும் சற்றே வலுவான முறையில் ஒரு மக்கள் போராட்டத்தின் மூலம் உணர்த்தி இருக்கலாம். ஈழம் பற்றிய செய்திகளும் அங்கு செய்ய படும் இன கொலைகளின் நிழற்படங்களும் நமக்கே கிடைக்கும் போது எந்த ஒரு மக்கள் அவை உறுப்பினரும் அல்லது சட்டசபை உறுப்பினரும் இந்த ஆதாரங்களோடு விவாத நேரத்தின் போது பேசி இருக்கலாம்.
ராஜீவ் கொலைக்கு பின் தமிழ் ஈழம் என்ற தேசிய உணர்வு கொண்டவர் அனைவரும் குற்றவாளிகள் என்ற நிலைக்கு தள்ள பட்டு விட்டனர். எந்த இந்தியனும் கொலை நிகழ்ந்த களம் அதன் காரணங்கள பற்றி ஆராயவில்லை.
ஒரு அரசு தனது ஆயுத பலத்தை முன்னெடுக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் அதனை எத்துனை காலம் அஹிம்சா முறையில் எதிர்ப்பர் என்பதற்கு ஒரு வரைமுறை உண்டு. எப்படி மாற்றி சொன்னாலும் புலிகள் முன்னெடுத்த ஆயுத போரட்டமே இலங்கை அரசு மட்டுமின்றி நிகழ்கால உலகும் ஒரு முக்கிய பிரச்சினையாக ஈழ பிரச்சனயை எடுத்து கொள்ள காரணமானது. இதை இல்லை என்று மறுப்பவர் வரலாறு அறியாதவர் என்றே சொல்ல வேண்டும். நெல்சன் மண்டேலா அவர்களின் சொற்படி ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை ஒடுக்கும் சக்திக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது என்பது உலக நியதி அது தான் ஈழ போராட்ட களத்திற்கும் பொருத்தமானது. எனவே புலிகளை விடுத்து ஈழ பிரச்சினையினை நாம் பார்க்க இயலாது. மிக சிலரை விடுத்து பெருபான்மை தமிழ் மக்கள் புலிகளை தங்கள் ஏகபோக பிரதிநிதிகளாய் பார்த்தார்கள் என்பதே உண்மை. இந்திய, சீன அரசுகளின் ஆயுத உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் இலங்கை அரசு இந்த போரில் வென்று இருக்காது .
ஒரு பழமையான இனத்தின் விடுதலை போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்றும் அடையாளமிட்ட பெருமை இந்திய மக்களாகிய நம்மையே சேரும். ராஜீவ் என்ற ஒரு மாசுபட்ட மனிதனின் படுகொலைக்காக அந்த குற்றம் முழுமையாய் நிரூபிக்கப்படாமல் இருந்தும் நம் உறவுகளின் தமிழ் ஈழ கனவையும் அவரது அடிப்படை உரிமைகளையும் படுகுழியில் இட்டு புதைத்து கொன்ற பெருமையும் நம்மையே சாரும். ஈழ வரலாற்றின் ரத்த பக்கங்களின் பெரும் பகுதி இந்த இந்திய திருமக்களுக்காகவும் தமிழ் உணர்வு மிகுந்த தமிழ் மக்களுக்காகவும் கண்டிப்பாய் ஒதுக்கபட்டு இருக்கும். தமிழ் ஈழ எதிர்பாளர்களும் தமிழ் இன தலைவர் என மார் தட்டி நடக்கும் கயவரும் அந்த வரலாறு தெரிந்தும் இழைத்த தோரகங்கள் இந்த உலகுக்கும், தமிழ் ஈழம் தவறு என பேசி திரியும் நம் தற்போதைய தலைமுறை தமிழருக்கும் ஒரு தினம் கண்டிப்பாய் தெரிய வரும்.
எவ்வாறேனும் தமிழ் ஈழம் என்பது கண்டிப்பாய் உதித்தே தீரும். எம் மக்கள் எப்படி ஒடுக்க பட்டாலும் அது அமைந்தே தீரும் ஒரு வரலாற்று போராட்டத்தின் மூலமாய் எம் தலைவனின் உதவியோடு.

தமிழரின் கனவு தமிழீழம் மெய்படும்.
"நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட தமிழரை நினைத்து விட்டால்" தமிழ் கவினர் பாரதி இப்படி பாடி இருக்கலாம். என் நெஞ்சு கொதித்து போய்விட்டது. நம் தமிழ் மக்களை என்னவன்று சொல்வது என்ன தான் நினைத்து இந்த தேர்தலில் இவர் ஓட்டு போட்டனர் என்று தெரிய வில்லை. இன உணர்வு என்பது தவறாசரியா என்பது அல்ல வாதம். எம் இன மக்கள் மாக்களை போல அழிக்க படும் போது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த திரு.காரணநிதி அவர்கள் மறுபடியும் வெற்றி. சீமான் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பொய்இல்லை என்று தோன்றுகிறது. தமிழனின் இன உணர்வு சில சுயநல கொள்கைகள், பல ரூபாய் நோட்டுகள் போன்றவற்றிக்கு விற்கப்பட்டு விட்டது.
இலங்கையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 6000 தமிழர்கள் கொல்ல பட்டு உள்ளனர். அரக்கன் ராஜபக்சே இன்னும் இரண்டு நாட்களில் புலிகளை (தமிழர்களை) முடித்து விடுவோம் என சொல்லி இருக்கிறார். அதற்கு அனுமதி கொடுத்தார் போலே இங்கு முடிவுகள் வந்து விட்டது. அன்னை சோனியா காந்தியின் எண்ணப்படி இனி கொஞ்சம் நஞ்சம் உள்ள தமிழ் மக்களும் கொல்ல பட்டுவிடுவர் வரும் மே 21 முன் எல்லாம் நடந்து விடும்.
தமிழ்நாட்டில் இனி என்ன நடக்கும் வழக்கம் போலே கருணாநிதி இந்த முறை பத்து மந்திரி பதவி கேட்பார். இன்னும் ஒரு பத்து தலை முறைக்கு சொத்து சேர்த்து விட்டு போய் சேர்வர். அடுத்த சட்ட மன்ற தேர்தலில் அனுதாப அலை மூலம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கும்.
இலங்கையில் ராஜபக்சே கடைசி தமிழரின் ரத்தத்தை உறிஞ்சு முடித்த பின் ஐ.நா சபையும் அமெரிக்காவும் தலை இட்டு போர் நிறுத்தம் கொண்டு வரும். ஐ.நா சபை நிலைமையை ஆராய ஒரு குழுவை அனுப்பும். குழுவினர் அங்கு சென்று ஆராய்ந்த பின் தமிழர் என்று ஒரு இனமே அங்கு இல்லை என அறிக்கை விடுவர். இலங்கை முழு சிங்கள நாடாய் ஜொலிக்கும்.
சீனா இலங்கையின் கையை பிடித்து இந்தியாவின் முக்கிய பகுதிகளை வேவு பார்க்கும். இன்னும் இருபத்துஆண்டுகளில் சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்கும். இலங்கையின் உதவியோடு இந்தியாவை சீனா போரில் வெல்லும். தமிழ்நாடு இலங்கையின் ஒரு பகுதி என இலங்கை உரிமை கோரும் கருணாநிதியின் கேடு கெட்ட வாரிசுகளும் சில பல நோட்டுகளுக்காக ஆமாமா போடுவார்.
இதெல்லாமும் நடக்கும். தமிழன் அப்புவும் அவன் வயரு நிறைஞ்சபோதும் நு சொல்லுவான்.இந்த நாட்டில பிறந்த ஒரே பாவத்துக்காக என்னை போன்ற தமிழர் முச்சந்தியில் தூக்கில் இட்டு கொள்வர்.
வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம்.
"நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட தமிழரை நினைத்து விட்டால்" தமிழ் கவினர் பாரதி இப்படி பாடி இருக்கலாம். என் நெஞ்சு கொதித்து போய்விட்டது. நம் தமிழ் மக்களை என்னவன்று சொல்வது என்ன தான் நினைத்து இந்த தேர்தலில் இவர் ஓட்டு போட்டனர் என்று தெரிய வில்லை. இன உணர்வு என்பது தவறாசரியா என்பது அல்ல வாதம். எம் இன மக்கள் மாக்களை போல அழிக்க படும் போது வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த திரு.காரணநிதி அவர்கள் மறுபடியும் வெற்றி. சீமான் அவர்கள் சொன்ன வார்த்தைகள் பொய்இல்லை என்று தோன்றுகிறது. தமிழனின் இன உணர்வு சில சுயநல கொள்கைகள், பல ரூபாய் நோட்டுகள் போன்றவற்றிக்கு விற்கப்பட்டு விட்டது.
இலங்கையில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 6000 தமிழர்கள் கொல்ல பட்டு உள்ளனர். அரக்கன் ராஜபக்சே இன்னும் இரண்டு நாட்களில் புலிகளை (தமிழர்களை) முடித்து விடுவோம் என சொல்லி இருக்கிறார். அதற்கு அனுமதி கொடுத்தார் போலே இங்கு முடிவுகள் வந்து விட்டது. அன்னை சோனியா காந்தியின் எண்ணப்படி இனி கொஞ்சம் நஞ்சம் உள்ள தமிழ் மக்களும் கொல்ல பட்டுவிடுவர் வரும் மே 21 முன் எல்லாம் நடந்து விடும்.
தமிழ்நாட்டில் இனி என்ன நடக்கும் வழக்கம் போலே கருணாநிதி இந்த முறை பத்து மந்திரி பதவி கேட்பார். இன்னும் ஒரு பத்து தலை முறைக்கு சொத்து சேர்த்து விட்டு போய் சேர்வர். அடுத்த சட்ட மன்ற தேர்தலில் அனுதாப அலை மூலம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்கும்.
இலங்கையில் ராஜபக்சே கடைசி தமிழரின் ரத்தத்தை உறிஞ்சு முடித்த பின் ஐ.நா சபையும் அமெரிக்காவும் தலை இட்டு போர் நிறுத்தம் கொண்டு வரும். ஐ.நா சபை நிலைமையை ஆராய ஒரு குழுவை அனுப்பும். குழுவினர் அங்கு சென்று ஆராய்ந்த பின் தமிழர் என்று ஒரு இனமே அங்கு இல்லை என அறிக்கை விடுவர். இலங்கை முழு சிங்கள நாடாய் ஜொலிக்கும்.
சீனா இலங்கையின் கையை பிடித்து இந்தியாவின் முக்கிய பகுதிகளை வேவு பார்க்கும். இன்னும் இருபத்துஆண்டுகளில் சீனா இந்தியாவின் மீது போர் தொடுக்கும். இலங்கையின் உதவியோடு இந்தியாவை சீனா போரில் வெல்லும். தமிழ்நாடு இலங்கையின் ஒரு பகுதி என இலங்கை உரிமை கோரும் கருணாநிதியின் கேடு கெட்ட வாரிசுகளும் சில பல நோட்டுகளுக்காக ஆமாமா போடுவார்.
இதெல்லாமும் நடக்கும். தமிழன் அப்புவும் அவன் வயரு நிறைஞ்சபோதும் நு சொல்லுவான்.இந்த நாட்டில பிறந்த ஒரே பாவத்துக்காக என்னை போன்ற தமிழர் முச்சந்தியில் தூக்கில் இட்டு கொள்வர்.
வாழ்க தமிழ். வளர்க தமிழ் இனம்.


More than a Blog Aggregator

by நகைக்கடை நைனா
அதுக்கு ரெண்டு சுள்ளுன்னு போடும்மா... ஓவரா உண்மைய பேசுது....



More than a Blog Aggregator

by நகைக்கடை நைனா
அதுக்கு ரெண்டு சுள்ளுன்னு போடும்மா... ஓவரா உண்மைய பேசுது....

அவன் அவன் கிளிமாதிரி மனைவி வேணும் அப்படின்னு எதிர் பார்க்கிறான். அனா இங்கே பாருங்க அந்த கிளிகளை

கருத்துகள் இல்லை: