ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

புதுவை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் இன்று தங்கள் சான்றிதழ்களை பதிவுசெய்து கொண்டனர்.
புதுவை காரைக்காலில் 10 ஆயிரத்து 889 மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதினர். இதன் முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானதை தொடர்ந்து, அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்டன. இவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியல் விரைவில் வழங்கப்பட உள்ளது.
மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழை பதிவு செய்வதற்காக புதுவை வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு படையெடுக்க துவங்கி உள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கள் சான்றிதழை பதிவு செய்வதற்கு ஏதுவாக அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் அமருவதற்கு ஏதுவாக பந்தல்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், கூடுதல் கவுன்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக் கொண்ட மாணவ, மாணவிகள் இன்று காலை முதல் மாலை வரை தங்கள் சான்றிதழ்களை பதிவு செய்து கொண்டனர்.

புதுவையின் பல்வேறு இடங்களில் பத்து மோட்டார் சைக்கிள்களை திருடிய விழுப்புரம் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

புதுவை பெரியகடை இன்ஸ்பெக்டர் வீரவல்லபன் தலைமையில் போலீசார் அண்ணா சாலை 45 அடி சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் உரிய ஆவணமின்றி வந்தவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வந்த வண்டி திருடப்பட்டது என்றும், புதுவையின் பல்வேறு பகுதிகளில் அவர் பல வண்டிகளை திருடியதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில் அவர், விழுப்புரம் மாவட்டம் மதுரப்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பதை அறிந்து கொண்டபின்னர், அவர் கொடுத்த தகவலின் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகன சோதனை நடத்திய மோட்டார் சைக்கிள் திருடனை பிடித்த போலீசாரை வடக்கு எஸ்பி சிவதாசன் பாராட்டினார்.

புதுவையின் பல்வேறு இடங்களில் பத்து மோட்டார் சைக்கிள்களை திருடிய விழுப்புரம் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.

புதுவை பெரியகடை இன்ஸ்பெக்டர் வீரவல்லபன் தலைமையில் போலீசார் அண்ணா சாலை 45 அடி சாலை சந்திப்பில் தீவிர வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் உரிய ஆவணமின்றி வந்தவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் வந்த வண்டி திருடப்பட்டது என்றும், புதுவையின் பல்வேறு பகுதிகளில் அவர் பல வண்டிகளை திருடியதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்ததில் அவர், விழுப்புரம் மாவட்டம் மதுரப்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பதை அறிந்து கொண்டபின்னர், அவர் கொடுத்த தகவலின் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். வாகன சோதனை நடத்திய மோட்டார் சைக்கிள் திருடனை பிடித்த போலீசாரை வடக்கு எஸ்பி சிவதாசன் பாராட்டினார்.
ராபர்ட் பிராஸ்டின் (Robert Frost) இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஆசையை நெருப்பிற்கும்,வெறுப்பை பனிக்கட்டிக்கும் உவமையாக கொடுத்திருக்கிறார் என்பது என் கணிப்பு.உணர்ச்சிகள்,ஆசைகள் தான் நெருப்பாகிறது இங்கு இந்தக் கவிதையை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் எண்ணங்களும், புரிபடும் அர்த்தங்களும் வெவ்வேறு வகையாக இருப்பது தான் இந்தக் கவிதையின் சிறப்பாகும்.



உலகம் நெருப்பில் முடியும் என்பது சிலர் கூற்று

பனிக்கட்டியில் முடியும் என்பது சிலர் கூற்று.

நான் சுவைத்த ஆசைகளிலிருந்து

நெருப்பை விரும்புவர்கள் பக்கமே இருக்கிறேன்.

இரண்டு முறை உலகம் முடிவிற்கு வருமானால்,

வெறுப்பைப் பற்றி போதுமான அளவு எனக்குத் தெரியும்

நான் நினைக்கிறேன் பனிக்கட்டியும் அழிவிற்கு மிகச் சிறந்தது

என சொல்ல முடியும்

மேலும் அதுவே போதுமானதும் கூட.




மனிதனுக்கு பல விதமான ஆசைகள்.சில ஆசைகள் விருப்பங்களாக வந்து போகும்.மற்றும் சில ஆசைகள் நிராசைகளாகப் போய் விடும். அப்போது ஏமாற்றம்,கோபம் அதனால் வன்முறை என்று அழிவுப் பாதைக்கு போகும் வாழ்க்கை.சில சமயம் ஆசையின் காரணமாக உடம்பு கொதிக்கும்,நரம்பு புடைக்கும்.ஆனால் சில ஆசைகள் மனதில் கொழுந்து விட்டு எரியும்.அந்த எரியும் ஆசைகள் தான் மனிதனின் அழிவிற்கு காரணமாகிறது. இந்த ஆசைகளைத் தான் நெருப்பாக சித்தரிக்கிறார் பிராஸ்ட்.

வெறுப்பு என்று வந்து விட்டால் மனம் படும் பாடு சொல்லி முடியாது.வெறுப்பின் விளைவு ஆத்திரம்.ஆத்திரம் வந்தால் புத்தி பேதலிக்கிறது.அழிவை நோக்கி இட்டுச் செல்லும் கருவியாகிறது.கறுப்பர்,வெள்ளையர்,ஜாதி,மதம் மற்றும் இனம் என்ற பெயரில் தான் மனித குலத்தில் எத்தனை எண்ணிலடங்காத வெறுப்புக்கள் உலா வருகின்றன.அதனால் ஏற்படும் சண்டைகள்,சச்சரவுகள் சொல்லி முடியாது.வெறுப்பினால் மனம் பனிக்கட்டி போல் இறுகி விடுகிறது. உதவி செய்ய மனம் வராது.அதனால் தான் பிராஸ்ட் வெறுப்பை பனிக்கட்டிக்கு உவமை ஆக்குகிறார் போல் உள்ளது.

இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.என் மொழி பெயர்ப்பில் தவறு இருந்தால் தயவு செய்து சுட்டிக் காட்டவும். மேலும் இந்தக் கவிதையைப் படிக்கும் போது உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை பின்னூட்டம் இட்டு பகிர்ந்து கொள்ளலாமே?

Some say the world will end in fire,
Some say in ice.
From what I've tasted of desire
I hold with those who favor fire.
But if it had to perish twice,
I think I know enough of hate
To say that for destruction ice
Is also great
And would suffice.

மரபணு சோதனை செய்து பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்ததாக இலங்கை அரசு கூறுகிறது.ஆனால் என்ன முறையில் இது செய்யப்பட்டது என்ற அறிவியல் பூர்வமான விளக்கத்தைக் கொடுக்கத் தவறி விட்டது.சரி எந்தெந்த முறையில் இந்த சோதனை மேற்கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

1. பிரபாகரனின் தாய் அல்லது தந்தையின் மரபணுக்களின் மாதிரிகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் அது நிச்சியம் இலங்கை அரசிடம் இல்லை.

2. பிரபாகரனின் ஏற்கனவே எடுக்கப் பட்ட மரபணு மாதிரியை வைத்து சோதனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.ஆனால் மீண்டும் பிரபாகரனின் மரபணு மாதிரி திட்டவட்டமாக இலங்கை அரசிடம் இருக்க வாய்ப்பில்லை.

3. பிரபாகரனின் மகன் சார்லஸ் மரபணு மாதிரியைக் கொண்டு பிரபாகரனின் மரபணு சோதனை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.அதுவும் சார்லசின் மரணம் உண்மை மற்றும் அவர் உடல் இலங்கை அரசிடம் கிடைத்தது என்று உறுதியாக நம்பும் பட்சத்தில்.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.முதலில் சார்லசின் மரபணு மாதிரி சரியானது தான என்று நீருபிக்க வேண்டும்.

அதற்கு அவரின் தாய் மற்றும் தந்தையின் மரபணு மாதிரிகள் தேவை.கட்டாயமாக தாயின் மரபணு கிடைக்கவோ,அரசிடம் இருக்கவோ வாய்ப்பில்லை.அதனால் பிரபாகரன் மற்றும் அவரின் மகன் மரபணுவை உபயோகித்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

அந்த அளவிற்கு இவ்வளவு குறுகிய நேரத்தில் மரபணு சோதனை செய்யும் விஞ்ஞானக் கூடங்கள் இலங்கையில் இல்லை. இதை வைத்து தான் கருணாநிதியும் பிரபாகரனின் மரணம் உறுதி செய்யப் படவில்லை என்று கூறுகிறார் போல் உள்ளது.

இதுவரை இலங்கை அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை.அதனால் இலங்கை அரசு ஒன்று அறிவியல் பூர்வமான நீருபணத்தை வெளியிடல் வேண்டும் இல்லை என்றால் பிரபாகரனைப் பற்றி தங்களிடம் போதுமான தகவல் இல்லை என்று கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மரபணு சோதனை செய்து பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்ததாக இலங்கை அரசு கூறுகிறது.ஆனால் என்ன முறையில் இது செய்யப்பட்டது என்ற அறிவியல் பூர்வமான விளக்கத்தைக் கொடுக்கத் தவறி விட்டது.சரி எந்தெந்த முறையில் இந்த சோதனை மேற்கொள்ள முடியும் என்று பார்ப்போம்.

1. பிரபாகரனின் தாய் அல்லது தந்தையின் மரபணுக்களின் மாதிரிகள் உபயோகப்படுத்தலாம். ஆனால் அது நிச்சியம் இலங்கை அரசிடம் இல்லை.

2. பிரபாகரனின் ஏற்கனவே எடுக்கப் பட்ட மரபணு மாதிரியை வைத்து சோதனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.ஆனால் மீண்டும் பிரபாகரனின் மரபணு மாதிரி திட்டவட்டமாக இலங்கை அரசிடம் இருக்க வாய்ப்பில்லை.

3. பிரபாகரனின் மகன் சார்லஸ் மரபணு மாதிரியைக் கொண்டு பிரபாகரனின் மரபணு சோதனை செய்திருக்க வாய்ப்பிருக்கிறது.அதுவும் சார்லசின் மரணம் உண்மை மற்றும் அவர் உடல் இலங்கை அரசிடம் கிடைத்தது என்று உறுதியாக நம்பும் பட்சத்தில்.இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது.முதலில் சார்லசின் மரபணு மாதிரி சரியானது தான என்று நீருபிக்க வேண்டும்.

அதற்கு அவரின் தாய் மற்றும் தந்தையின் மரபணு மாதிரிகள் தேவை.கட்டாயமாக தாயின் மரபணு கிடைக்கவோ,அரசிடம் இருக்கவோ வாய்ப்பில்லை.அதனால் பிரபாகரன் மற்றும் அவரின் மகன் மரபணுவை உபயோகித்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

அந்த அளவிற்கு இவ்வளவு குறுகிய நேரத்தில் மரபணு சோதனை செய்யும் விஞ்ஞானக் கூடங்கள் இலங்கையில் இல்லை. இதை வைத்து தான் கருணாநிதியும் பிரபாகரனின் மரணம் உறுதி செய்யப் படவில்லை என்று கூறுகிறார் போல் உள்ளது.

இதுவரை இலங்கை அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை.அதனால் இலங்கை அரசு ஒன்று அறிவியல் பூர்வமான நீருபணத்தை வெளியிடல் வேண்டும் இல்லை என்றால் பிரபாகரனைப் பற்றி தங்களிடம் போதுமான தகவல் இல்லை என்று கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை: