வெள்ளி, 29 மே, 2009

2009-05-29



More than a Blog Aggregator

by சிம்பா


மிக நீண்ட நாள் கனவு எனது இந்த பதிவு... மனதில் ஊற்றெடுக்கும் ஒரு சில அடக்கமுடியாத எண்ணங்களின் வெளிப்பாடு... அன்னை, தாய், பெற்றெடுத்த தெய்வம் என்று பல வடிவங்களில் போற்றி புகழ்ந்தாலும் நானும் ஒரு தாய்க்கு மகனே. என்னிடமும் இருக்கு எனக்கான விஷயங்கள் என்னை பெற்றவளை பற்றி சொல்ல...


கூடிய விரைவில் அன்னையர் தினம் கொண்டாட போறாங்க. ஆனா அதுவை காத்திருக்க முடியாமல்.... ஆமா வருடத்தில் ஒரு நாள் மட்டும் தான் அன்னையருக்கான தினமா... ஆயிரம் ஆயிரம் எண்ணங்களை மனதில் கொண்டிருந்தாலும், அனைத்தையும் தவிர்த்து, தனது குடும்பத்திற்காக ஒரு வாழ்க்கை.... கடைசீ காலம் வரை... பிள்ளைகளை பெற்றெடுத்து, வளர்த்து, தமது பிள்ளைகள் எவ்வளவு பெரியவர்களானாலும் அதே பாசம். என்றும் மாறாத பாசம்.


தான் உண்ணும் முன் தமது பிள்ளைகளுக்கு உணவளித்து, அவங்களுக்கு பிடிச்சிருந்ததா இல்லையா என்ற எண்ணத்துடன் அரைவயிறு, கால் வயிறு உண்ணும் அன்னை....

உதிரத்தை குடுத்து உயிர் குடுத்தவள் பின்பு அதே உயிரை காக்கும் காவல் தெய்வமாக உருவெடுக்கிறாள். ஆனால் நாமோ நடமாடும் தெய்வத்தை அருகில் வெய்த்துக்கொண்டு கோவில் கோவிலாக அலைகிறோம்.

எத்தனை துயரங்கள் வந்து மனதை ஆட்க்கொண்டாலும் நம் தாயின் மடி மீது சில நிமிடங்கள் தலைவைத்து தூங்கினால்.... அந்த ஒரு சில நிமிடங்கள் மீண்டும் குழந்தையாய்... ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அதனை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அது தரும்.
தங்க தட்டில் உணவருந்தினாலும் கிடைக்காத சுகம், அன்போடு நமது அன்னை ஊட்டிவிடும் அந்த ஒரு கை உணவில் கிடைக்கும். காலை நேரத்தில் அன்னையிடம் அர்ச்சனை வாங்கிக்கொண்டு, படுக்கையிலேயே அமர்ந்து பருகும் காபியில் இருக்கும் சுவை எத்தனை கடைகளில் ஏறினாலும் கிடைக்காது.

என்முன்னும் கடவுள் தோன்றி எனக்கு ஏதாவது வரம் வேண்டுமா என்று கேட்டால், என் அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் என்பதனை மட்டுமே கேட்பேன்.

கலாச்சாரங்கள் மாறுகிறது, காலமும் மாறுகிறது.. ஆனாலும் நாளுக்கு நாள் பெருகி வரும் முதியோர் இல்லங்களை பார்க்கும்பொழுது தான் மனது வலிக்கிறது.

வருகின்ற அன்னையர் தினத்துக்கு, இந்த பதிவை அனைத்து தாய்க்கும், வருங்காலத்தில் அன்னையாக போகின்ற அனைவருக்கும் பரிவோடு சமர்ப்பிக்கிறேன்.

சிம்பா...

''கேப்டன்''.

இந்த வார்த்தைதான் தமிழகத்தின் இருபெரும் கழகங்களுக்கு திடீரென்று இல்லை, கடந்த சில ஆண்டுகளாக வேண்டாத வார்த்தையாக மாறியிருக்கிறது.  சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து இன்று நன்றாகவே வேர்பரப்பி, கிளைகளும் பரப்பி வளர்ந்திருக்கும் (வளர்ந்துகொண்டிருக்கும்) ஒரு அரசியல் ஆலமரம்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.).  

கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே இது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் வாய்ச்சவடால் விட்டு, வித்தைகள் செய்த கட்சிகளே இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட இந்த தேர்தலில், தன்னுடைய வாக்கு சதவீதத்தை இரண்டு இலக்கங்களில்(10%) கொண்டுபோய் நிறுத்தியது தே.மு.தி.க. விற்கு மைல்கல், மற்ற பெரிய கட்சிகளுக்கு பெரிய 'சறுக்கல்'. அதிலும் 'பணம் விளையாடிவிட்டது' என்று பெரிய கட்சிகளும் அதன் தலைவர்களும் 'ஜகா' வாங்கிக் கொண்டிருக்கும்போது இந்த இரட்டை இலக்கம் கவனிக்கப்படவேண்டியது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இப்போதும் தே.மு.தி.க.வின் ஒட்டுக்கள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகளைத் தீர்மானித்திருக்கின்றன.  சுமார் 20க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகள் தே.மு.தி.க. வசம் சென்று சேர்ந்திருக்கின்றன(மதுரையெல்லாம் விதிவிலக்கு!). இதில் நாம் கவனிக்க வேண்டியது தே.மு.தி.க.- வின் மொத்த பலத்தைத்தானே தவிர 'யாருடைய வெற்றி வாய்ப்பை எப்படி மாற்றியது?' என்பதைப் பற்றியல்ல. 

தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,09,70,352. 
தே.மு.தி.க. மட்டும் பெற்ற வாக்குகள் 31,25,801. 
சதவீதத்தில் 10.09%. 


''கேப்டன்''.

இந்த வார்த்தைதான் தமிழகத்தின் இருபெரும் கழகங்களுக்கு திடீரென்று இல்லை, கடந்த சில ஆண்டுகளாக வேண்டாத வார்த்தையாக மாறியிருக்கிறது.  சில ஆண்டுகளுக்கு முன் முளைத்து இன்று நன்றாகவே வேர்பரப்பி, கிளைகளும் பரப்பி வளர்ந்திருக்கும் (வளர்ந்துகொண்டிருக்கும்) ஒரு அரசியல் ஆலமரம்தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தே.மு.தி.க.).  

கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே இது நிரூபிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும் வாய்ச்சவடால் விட்டு, வித்தைகள் செய்த கட்சிகளே இருந்த இடம் தெரியாமல் போய்விட்ட இந்த தேர்தலில், தன்னுடைய வாக்கு சதவீதத்தை இரண்டு இலக்கங்களில்(10%) கொண்டுபோய் நிறுத்தியது தே.மு.தி.க. விற்கு மைல்கல், மற்ற பெரிய கட்சிகளுக்கு பெரிய 'சறுக்கல்'. அதிலும் 'பணம் விளையாடிவிட்டது' என்று பெரிய கட்சிகளும் அதன் தலைவர்களும் 'ஜகா' வாங்கிக் கொண்டிருக்கும்போது இந்த இரட்டை இலக்கம் கவனிக்கப்படவேண்டியது. 

கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே, இப்போதும் தே.மு.தி.க.வின் ஒட்டுக்கள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகளைத் தீர்மானித்திருக்கின்றன.  சுமார் 20க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகள் தே.மு.தி.க. வசம் சென்று சேர்ந்திருக்கின்றன(மதுரையெல்லாம் விதிவிலக்கு!). இதில் நாம் கவனிக்க வேண்டியது தே.மு.தி.க.- வின் மொத்த பலத்தைத்தானே தவிர 'யாருடைய வெற்றி வாய்ப்பை எப்படி மாற்றியது?' என்பதைப் பற்றியல்ல. 

தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம் பதிவான வாக்குகள் 3,09,70,352. 
தே.மு.தி.க. மட்டும் பெற்ற வாக்குகள் 31,25,801. 
சதவீதத்தில் 10.09%. 




More than a Blog Aggregator

by "அகநாழிகை"

kolam

அதிகாலையில்

ஆம்னி பேருந்து வீசிச்சென்ற

பச்சை மேலுறையிட்ட புத்தகக் கட்டினை

தனக்கான உணவோ என

தோற்றப்பிழையுற்று முகர்ந்து

ஏமாற்றமடைகிறது மாடு

அதனுள்ளிருக்கும் இருபது புத்தகங்களிலும்

மேய்ச்சலைக் குறித்த எனது

கவிதைகளிருப்பதை அறியாது.

 

மரங்களேயற்ற ரங்காச்சாரி தெருவில்

கேபிள் ஒயர்களைப் பற்றித்

தலைகீழாய் தொங்கியபடி

செட்டியார் வீட்டின் மாடியிலிருந்து

நாடார் கட்டிடத்திற்கு

சாலையைக் கடந்து செல்கின்றன குரங்குகள்

டிஷ் குடைகள் வேடிக்கை

பார்த்துக் கொண்டிருக்கிறது

குரங்குகளின் சேட்டையை.

 

அளந்தெடுத்தாற்போல்

குறித்த இடைவெளியில்

உன் விரல்களிலிருந்து

உதிர்ந்து கொண்டிருக்கிறது புள்ளிகள்

தீர்ந்துபோன புள்ளிகளுக்குப்பின்

கைநீளும் திசையெல்லாம்

கோடுகளாகி ஓவியமாகிறது கோலம்

விடிந்து கொண்டிருக்கிறது வீடு

காலத்தின் செதில்களையுதிர்த்து

தினம்தினம்.

 

- 'அகநாழிகை'   பொன்.வாசுதேவன்



More than a Blog Aggregator

by "அகநாழிகை"

kolam

அதிகாலையில்

ஆம்னி பேருந்து வீசிச்சென்ற

பச்சை மேலுறையிட்ட புத்தகக் கட்டினை

தனக்கான உணவோ என

தோற்றப்பிழையுற்று முகர்ந்து

ஏமாற்றமடைகிறது மாடு

அதனுள்ளிருக்கும் இருபது புத்தகங்களிலும்

மேய்ச்சலைக் குறித்த எனது

கவிதைகளிருப்பதை அறியாது.

 

மரங்களேயற்ற ரங்காச்சாரி தெருவில்

கேபிள் ஒயர்களைப் பற்றித்

தலைகீழாய் தொங்கியபடி

செட்டியார் வீட்டின் மாடியிலிருந்து

நாடார் கட்டிடத்திற்கு

சாலையைக் கடந்து செல்கின்றன குரங்குகள்

டிஷ் குடைகள் வேடிக்கை

பார்த்துக் கொண்டிருக்கிறது

குரங்குகளின் சேட்டையை.

 

அளந்தெடுத்தாற்போல்

குறித்த இடைவெளியில்

உன் விரல்களிலிருந்து

உதிர்ந்து கொண்டிருக்கிறது புள்ளிகள்

தீர்ந்துபோன புள்ளிகளுக்குப்பின்

கைநீளும் திசையெல்லாம்

கோடுகளாகி ஓவியமாகிறது கோலம்

விடிந்து கொண்டிருக்கிறது வீடு

காலத்தின் செதில்களையுதிர்த்து

தினம்தினம்.

 

- 'அகநாழிகை'   பொன்.வாசுதேவன்

அண்ணன் எப்ப சாய்வான் திண்ணை எப்ப காலியாகும் என்பதைபோல முடிவு வரும் முன்னே முடிந்து விட்டது போல முடிச்ச அவிழ்க்க போராடும் உடகங்கள், தன் சுய விளம்பரத்தை அதிகப்படுத்த பிணம் தின்னி கழுகுகளாக அலைகிறார்கள். இழவு வீட்டிலே விளம்பரம் செய்து பழக்கப்பட்ட நீங்க, இப்ப விழாத இழவுக்கு கொடி பிடிக்காதீங்க சாமிகளா.

யாவாரம் சரிஇல்லைனா கடைய இழுத்து மூடுங்க,இன்னும் தேர்தல் செய்திகளே முடியாத நிலையிலே உங்களுக்கு செய்தி பஞ்சம் வந்து விட்டதா?

இவ்வளவு நாள் வரைக்கும் ஈழ பிரச்சனைய எண்ண நேரம் இல்லாம இருந்த நீங்க,இப்ப இழவு விழும் முன் தார தப்பட்டைய எடுத்து கிட்டு எங்க சாமி போறீங்க, இன்னைக்கு நேத்தா இலங்கையிலே மரணம் நடக்குது கடந்த முப்பது வருசமாத்தான் நடக்குது. அப்ப எல்லாம் கிடைக்காத வருமான செய்தி இப்ப கிடைக்கும் முன்னே நீங்களே உண்மை என் தம்பட்டம் அடிக்கிறது எந்த வைகையிலே நியாயம்?


உபகாரம் பண்ணலைனாலும் உபத்திர்யம் பண்ணாம இருங்க,இதை மனசுல வச்சிகிட்டு வேலை செய்யுங்க

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.



நடுநிலமைக்கும், நாட்டமைதனத்துக்கும் பெயர் இல்லாமல் செய்த உடகங்களே கொஞ்சம் செய்திகளை பிரசரிக்கும் அவசரத்திலே ஒரு கணம் யோசித்து உண்மையை சொல்ல முயற்சி செய்யுங்கள். இதே நிலை நாளை உங்களுக்கும் வரலாம், நீங்க கடை நடத்தி கொண்டு நல்ல வியாபாரம் செய்யும் நேரத்திலும், உங்களை அடுத்தவன் இழுத்து மூடிவிடுவான்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.


அதனாலே நீங்க இன்னறைக்கு பரப்பும் வதந்திகள் உங்களை நிச்சயம் ஒரு நல்ல வந்தடையும். இதை எல்லாம் அந்த காலத்திலேயே எங்க ஆளு சொல்லிட்டு போய்ட்டாரு நான் ஒன்னும் புதுசா சொல்ல தேவை இல்லை.

இதியாவிலே செய்தி பஞ்சம் வந்த மாதிரி நீங்க சுடு தண்ணியை காலிலே ஊத்தின மாதிரி பக்கத்து வீட்டு வந்தந்திகளுக்கு அலைய வேண்டாம்.உண்மைகளை ஏற்க்காமல் இருக்க முடியாது, அதே போல உங்களைப்போல பொய் பரப்பும் பச்சொந்திகளையும் ஏற்க்க முடியாது. உடக சுதந்திரங்களை பயன்படுத்தி உங்க சொந்த செய்திகளை பரப்பும் எண்ணத்தை கை விடுங்கள்.பொறுத்தார் பூமி ஆழ்வார், பொறுமை கடலினும் பெரிது என்பதை போல பொறுத்து பூமியை ஆளுங்கள், இப்படி கொழுத்து திரிந்து ஆழ வேண்டாம்.

கருத்துகள் இல்லை: