சனி, 30 மே, 2009

2009-05-30

rpriya அவர்களின் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டமும், அதன் விளைவுகளும் நான் எதிர்பார்க்காதது. அவரது பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டம் உங்கள் மேலான பார்வைக்கும் கருத்துக்கும்...,



http://www.comfocus.info/wp/?p=581


அன்பான உங்களுக்கு,

உங்களுடைய இந்த பதிவை பார்த்த பிறகு, சும்மா ஒரு Fun க்காக ,

// Blog'Gun' கிட்ட சொல்லிருவேன். இது என்னோட பதிவு.

http://suryakannan.blogspot.com/2009/05/bluetooth.html //

என்று Tamilish.com ல் பின்னூட்டம் இட்டிருந்தேன்.

அதற்கு பதிலாக திரு. Blog'gun' அவர்கள்,

// வந்துட்டேன்... வந்துட்டேன்... ப்ளாக்'கன்'-னுக்கு வேலை வந்துடுச்சு.

ஏம்பா... கம்பர்ட்டு டாட்டு இன்போ..!

http://www.comfocus.info/wp/?p=581

நம்ம சூரிய கண்ணன் பதிவுல இருந்து சுட்டு போட்டிருக்கிறாய். சரி... சாத்துறப்புக்கு கீழே நன்றின்னு ஒரு மூளைல நம்ம சூரிய கண்ணன் பேரு போட்டிருக்கீக. சரி.

ஏம்பா, அவரோட இந்தப் பதிவு தான் ஏற்கெனவே தமிழிஷ்ல பாப்புலராகி 18 வோட்டு வாங்கிடுச்சு. தமிழிஷு மூலமா சூர்யா கண்ணன் பதிவுக்கு வந்துட்டு, அதையே எடுத்து போட்டு, திரும்பவும் பிரஷ்ஷா தமிழிஷுல போடுறியே.. உலகம் உருண்டைன்னு நிரூபிக்கிறியா?

வேணாம்... இது நல்லா.. இல்ல... இது முதல் தடவையா இருக்கிறதாலா வார்னிங் மட்டும்தான். இது தொடர்ந்தா, உங்களுக்காக பிளாக்கனுல்ல டெரரு பதிவு போட்டுப்புடுவேன். ஜாக்கிரதை!

இந்த மாதிரி யாராவது சுட்ட கதை இருந்த இருந்தா, அவுங்கள பீதிக்கு முன்னால (நீதிக்கு முன்னால நிக்க வைக்கிறது வேஸ்டு) நிறுத்திடுவான் இந்த பிளாக்கன்.

அப்படி சேதி இருந்தா bloggan2008@gmail.com-க்கு ஒரு மெசேஜ் மட்டும் அனுப்புங்கோ தோழர்களே. மத்ததை பிளாக்கன் பாத்துப்பா. இல்லை, நம்ம bloggun.wordpress.com வந்துட்டு பின்னூட்டத்துல மேட்டரை சொல்லிட்டு போங்க.

நல்லவங்களுக்கு டியரு, சுடுறவங்களுக்கு டெரரு! //

என பின்னூட்டம் இட்டிருந்தார். அதற்காக வருந்தினேன்.

பிறகு அவர் தனது அடுத்த பதிவில்

http://bloggun.wordpress.com/2009/05/30/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/#comment-33

சில காட்டமான வார்த்தைகள் உபயோகித்திருந்தார். இது என்னுடைய தவறில்லை என இதன் மூலம் தெரிவிப்பதுடன், ஒருவேளை என்னுடைய தவறாக கருதப்பட்டால் அதற்காக நான் மிகவும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு பிளாக்கில் வந்த உபயோகமான தகவல்கள் அனைவரையும் சென்றடைய நீங்கள் செய்தது, ஒரு நல்ல செயலே ஆகும். இதில் உங்கள் மீது எந்த தவறும் இல்லை.

உங்கள் பணியை தொடருங்கள்! வாழ்த்துக்கள்.

அன்புடன்

சூர்யா கண்ணன்.

பின் குறிப்பு:-

Blog'Gun' அவர்கள் மீது எனக்கு எவ்வித தவறான எண்ணமும் இல்லை.



ஊட்டச்சத்து குறைபாடு, தூக்கமின்மை என பல்வேறு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்படுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் கருவளையத்திற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்...

*தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.

*வெள்ளரிக்காய் சாறை கண்களை சுற்றி தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்ய கருவளையம் நீங்கும். வெள்ளரி சாற்றிற்கு பதிலாக வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலும் கருவளையம் மறையும்.

*பச்சை உருளைக்கிழங்கை வெட்டி அதை கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.

*தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதை தூள் ஆகியவற்றை தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவி வர நாளடைவில் குணம் தெரியும்.

*வெள்ளரி சாறுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நளைக்கு இரு முறை செய்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

*பால் பவுடரை தண்ணீர் அல்லது பன்னீரில் கரைத்து, அதில் ஒரு துணியை நனைத்து கண்களை சுற்றி பூசலாம். அதே போல் பாலாடையுடன் வெள்ளரிக்காய் சாறு கலந்தும் தடவலாம். இவை நன்கு காயும் வரை வைத்திருக்காமல், சிறிது ஈரமாக இருக்கும் போதே கழுவ வேண்டும்.

* ஜாதிக்காயை அரைத்து கண்களை சுற்றி தடவி கொண்டு சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர கருவளையம் மறைந்து விடும்.

*போதிய அளவு தூங்கவில்லை என்றாலும் கண்களுக்கு கீழே கருவளையம் உண்டாகும். இதை தவிர்க்க, தினசரி 6 மணி நேரமாவது தூங்குவது அவசியம்.

* உங்களுக்கு எதை உண்ணப் பிடிக்குமோ, அதைத் தவிருங்கள். இது கொஞ்சம் கஷ்டம்தான். முதல் நான்கு நாட்கள் மிக கடினம் போல தோன்றும். முழுமையாகத் தவிர்க்க முடியாவிடினும், சிறிது சிறிதாகத் தவிர்க்கப் பாருங்கள். முழுமையாகத் தவிர்த்தபின் உங்கள் ஆர்வம் குறையத் தொடங்கியிருப்பதை நீங்களே உணர்வீர்கள்!

* மூச்சுப் பயிற்சி செய்வதன்மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். மன இறுக்கம்கூட அதிகப்படியான உணவு உண்பதற்கு ஒரு காரணம்.
* உடல் தளர்ச்சியின்போது உண்ணும் எண்ணம் தோன்றலாம். அச் சமயங்களில் கதவை அடைத்து, கண்களை மூடி ரிலாக்ஸ் செய்யுங்கள். குறிப்பாக சமையலறை பக்கம் போகாமல் ஏதாவது வேலைகளில் ஈடுபடலாம்!*
கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்ணும் முன் உங்கள் எடையையும் உடலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள்
.* இரண்டு தம்ளர் தண்ணீர் மற்றும் 25 கிராம் நட்ஸ் (பாதாம், நிலக்கடலை, வால்நட்) சாப்பிடலாம். இருபது நிமிடங்களில் தீனி உண்ணும் உங்கள் எண்ணத்தை அழித்து உங்கள் உ டல் ரசாயணத்தை மாற்றிவிடும்.(குறிப்பு: உவர் பருப்புகள் உடலுக்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணம் உண்டு. தினமும் சிறிதளவு உலர் பருப்புகள் எடுத்துக் கொள்வது உடல் எடையைக் குறைக்கும் என்பது ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.)
* கொழுப்பு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்கவும்.
* எப்போதும் வாய் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். தேவையெனில் மவுத்வாஷ் உபயோகிக்கலாம். வாய் - சுத்தமாக இருக்கும்போது, கண்டதை உண்ணும் எண்ணம் தோன்றாது.
* தீனி உண்ணும் எண்ணம் பத்து நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. எனவே அந்த பத்து நிமிடங்கள் உங்கள் மனத்தை பாட்டு கேட்பதன்மூலமோ, உடற்பயிற்சி செய்வதன் மூலமோ அல்லது தியானிப்புகள் மூலமோ திசை திருப்பலாம்.
* பசிக்கும் போதெல்லாம், பப்பாளி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சலாட் செய்து சாப்பிட்டு, ஒரு தம்ளர் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறையும்.
* கல்யாண விருந்துகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஒரு வேளை, மிக அவசியமான விருந்து நிகழ்ச்சி என்றால், காய்கறி, கீரை சூப் என பாதி வயிறு நிறைத்துக் கொண்டு செல்லுங்கள். இதனால் ஐஸ்க்ரீம், ஸ்வீட்ஸ் என கண்டபடி சாப்பிடத் தோன்றாது.

போலீசாரிடம் சிக்கி சீரழிந்த இளம்பெண்!
 
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் போலீஸ் பயிற்சி மையத்தில் சமையல் வேலை செய்து வருபவர் உமா (28) (பெயர் மாற்றம்) இவரை அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மிரட்டி கற்பழித்தார். இதனால் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
 
இது பற்றி அங்குள்ள சில போலீஸ்காரர்கள் அவரிடம் விசாரித்தபோது சப்- இன்ஸ்பெக்டர் கற்பழித்ததை கூறினாள்.
 
இந்நிலையில் அவர் அங்குள்ள குளியல் அறையில் குளிப்பதை ஒரு போலீஸ்காரர் தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அதை அவரிடம் காட்டி, இதை சி.டி.யில் பதிவு செய்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி கற்பழித்தார். பின்னர் அவரது நண்பர்கள் 9 பேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் கும்பலாக சேர்ந்து அவளை கற்பழித்தனர்.
 
இதில் அவர் மயங்கி விழுந்ததால் போலீசார் அவளை போட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.
 
இது பற்றி அவள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணாவை சந்தித்து புகார் கொடுத்தார். ராமகிருஷ்ணா உத்தரவின் பேரில் உமாவை கற்பழித்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இது பற்றி உமா கூறும்போது, செல்போனில் என்னை நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.

Autorun.inf கோப்புகள் என்றால் என்ன?

இந்த கோப்புகள் CD / DVD மற்றும் USB drive கள் கணினியில்
உள்ளே நுழைத்தவுடன் தானாகவே இயங்குமாறு செய்ய
எழுதப்படும் கோப்புகளாகும். இவை தானாகவே அந்த கோப்பில்
எழுதப்பட்டுள்ள
முக்கிய பயன்பாட்டுக்கோப்பை (Application or Exe )
இயக்கிவிடும். ஒரு எளிய autorun.inf கோப்பானது இப்படி இருக்கும்.

[autorun]
open=autorun.exe

icon=autorun.ico

இது என்ன வைரஸா ?

நிச்சயமாக இல்லை. ஆனால் வைரஸ்கள் உங்களின் ஒவ்வொரு
டிரைவிலும் இக்கோப்புகள் வழியே பரவல் அடைகின்றன.
பிறகு வைரஸ்கள் நொடியில் பல்கிப்பெருகும்.இதனால் உங்கள்
கணிபொறியின் வேகம் வெகுவாய் குறைகிறது.இக்கோப்புகளை
சில ஆண்டி- வைரஸ் தொகுப்புகளால் கண்டறிய முடிவதில்லை.


இச்சிக்கலை எளிதாக போக்க ஒரு மென்பொருள் உள்ளது. இதன் சிறப்புகள் ,

1. Autorun.inf கோப்புகளை எளிதாக நீக்குகிறது .
2. இழந்த விண்டோஸ் பண்புகளை ( Attributes ) மீட்கிறது.

Registry Disabled,

Task manager Disabled,

Enable Folders options

Enable run

Enable command prompt

மேலும் அனைத்து Drive களிலும் தானாக இயங்குவதை (Autoplay)
தடுக்கிறது.

3. USB டிரைவ் இல் உள்ள வைரஸ்களை நீக்குகிறது.
4. பென் டிரைவ் இல் எழுதாமல் தடுக்கவும் உதவுகிறது
( Write -protect)


இப்பொழுது பல கணினிகளில் இந்த சிக்கல்களை நான் கண்டேன்.
இதற்குப்போய் Registry இல் மாற்றம் செய்வது , Gpedit.msc இல்
மாற்றம் செய்வது போன்ற சிக்கல் இல்லாமல் எளிய முறையில் எல்லாவற்றையும் நீக்குகிறது. தலை வலி இல்லாமல் இதனை
பயன்படுத்தி நீக்கி கணினியின் வேகத்தையும் கூட்டுங்கள் நண்பர்களே!



தரவிறக்கச்சுட்டி : ( வெறும் 625 KB தான் )

Smart virus Remover

கருத்துகள் இல்லை: