ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31



More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? அம்மி பறக்குதே இல்லையோ நம்ம பசங்க விடற பட்டம் அதாங்க மெட்ராஸ் பாஷையில காத்தாடி, ரொம்ப ஜோரா பறக்கும்.
பட்டம்னு சொன்ன உடனே பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க, எங்க ஊர் தேர்முட்டி (தேரடி) பக்கத்துல ஒரு இருபது இருபத்தஞ்சு படிக்கட்டு வச்ச மேடை இருக்கும் அதுக்கு பக்கத்துல தேர நிறுத்தி வச்சிருப்பாங்க, ஆடி மாசம் வந்துட்டா எங்க பக்கத்துப் பசங்க எல்லாரும் கையில நூலேட அந்த மேடை மேலதான் நிப்பாங்க. எல்லாரும் பட்டம் விட்டுகிட்டு ஒரே ஜாலிதான் போங்க, ஆனா இந்த மாஞ்சா கீஞ்சானு சொல்றாங்களே அதெல்லாம் ஒன்னும் தெரியாது எங்களுக்கு. அப்புறம் பட்டம் காசு குடுத்தெல்லாம் வாங்க மாட்டோம், நாங்களே செஞ்சிடுவோம், ஆமா இது என்னா பெரிய கம்பசூத்திரமான்னு கேக்கறீங்களா!

அப்பவெல்லாம் வீட்டுல ஒரே ஒரு பட்டம் வாங்கதான் காசு தருவாங்க, நம்ம தெருவில இருக்கற சில வெவரமான பசங்க இந்த சமயத்துல நல்ல காசு பார்ப்பாங்க. ஒரு ஐம்பது காசுக்கு கலர் பேப்பர் வாங்கினா போதும் அதுல சிறுசு பெரிசுனு ஒரு அஞ்சு அல்லது ஆறு பட்டம் பண்ணிடுவாங்க, அத வீட்டுக்கு வெளியில ஒரு கயித்துக் கட்டில் போட்டு அதுல கட்டி வச்சிருப்பாங்க (அதாங்க Display). எப்படியும் ஒரு பட்டம் 25 காசுல இருந்து 1 ரூபாய் வரைக்கும் சைஸ் வாரியா பிரிச்சி வித்துடுவாங்க.

எப்படியாவது பைசாவ தாத்தாகிட்டயோ இல்ல பாட்டிக்கிட்டயோ வாங்கிட்டு போய் ஒரு பட்டம் வாங்கிடுவோம். ஆனா ஒன்னு அப்படி வாங்கின பட்டம் எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ள கிழிஞ்சிடும் இல்ல எங்கயாவது ஒரு வீட்டு ஓட்டுலயோ இல்ல பெரிய மரத்துலயோ போய் மாட்டிக்கும். அது எப்படினா? நல்லா காத்து அடிக்கும்போது பட்டம் ரொம்ப உயரமா பறக்கும், உடனே போட்டி வந்துடும் " டேய் என் பட்டம்தாண்டா அதிக உயரத்துல பறக்குது" அப்படீனு ஒருத்தன் கத்திட்டான்னா உடனே அடுத்தவன் நூல்கண்டு புதுசா வாங்கிட்டு வந்து நீளத்த அதிகமாக்குவான், அப்புறம் அவனும் அதே மாதிரி கத்துவான், இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிக்க கடைசியில் யாரோட பட்டமும் திரும்பி வராது. இந்த நூல்கண்டு பிரச்சினைக்காகவே நாங்க ஒரு வாரத்துக்கு முன்னாலயே ஒரு பத்து நூல்கண்டாவது வாங்கிட்டு வந்து ஒரு குச்சியில முடிச்சி போட்டு முடிச்சி போட்டு சுத்தி வச்சிடுவோம்.

பட்டம் கிழிஞ்சி போயிடிச்சினா சும்மா இருப்போம்னு மட்டும் நினைக்காதீங்க! நாங்க பட்டத்த வாங்கின உடனே அதோட டெக்னாலஜி என்னானு ஸ்டடி பண்ணிடுவோம். அதுக்கப்புறம் வீட்டுல கிடைக்கற பழைய செய்தித்தாள வச்சி, தென்னை இலையிலிருந்து வருமே அதுதாங்க நம்ம விளக்கமாறு (துடைப்பம்) அதுல இருந்து குச்சிய உருவி, பசையெல்லாம் போட்டு பக்காவா பட்டம் ரெடி பண்ணிடுவோம். அப்புறம் என்ன, இன்னொரு முறை அதே மாதிரி போட்டிதான்.
அப்புறம் காத்து நிக்கற வரைக்கும் இதே வேலைதான். சில ஆர்வக் கோளாறு பசங்க பட்டத்த பள்ளிக்கூடத்துக்கு எடுத்துகிட்டு வந்து இடைவேளை நேரத்துல எல்லாம் கூட பறக்கவிட்டு ஸீனப் போடுவாங்க.

சின்னப் பசங்க, புதுசா பட்டம் விடுறவங்க ஒரு பத்தடி நீளக் கயிறுல பட்டத்த கட்டிக்கிட்டு ஓடு ஓடுனு ஓடுவாங்க பாருங்க... அப்பப்பா ஊரே ஒரே களைக் கட்டி இருக்கும் இந்த நேரத்துல. சில நேரத்துல பெரியவங்களே வந்து நல்லா உயரத்துல பறக்குற பட்டத்த பார்த்து பாராட்டுவாங்க பாருங்க, அப்ப நாம என்னவோ அந்த பட்டத்து மேலயே உட்கார்ந்து பறக்குற மாதிரி இருக்கும்...

இதெல்லாம் சின்னப் பசங்கதான் விளையாடலாம்னெல்லாம் ஒன்னும் கிடையாது, நம்மளும் எந்த வயசுலயும் விளையாடணும். அப்பத்தான் நாமளும் இளமையா இருப்போம், நம்ம மனசும் இளமையா இருக்கும், நம்மக் குழந்தைங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும். ஆயிரம்தான் வசதிகள் இன்னிக்கு இருந்தாலும், அந்த நாள் குடுத்த மகிழ்ச்சி இன்னிக்கு கிடைக்குதா?

அதனால எல்லாரும் ரெடியா இருங்க, கடற்கரைக்கு போறவங்க காத்தடிச்ச பலூனெல்லாம் வாங்காதீங்க, நல்ல ஒரு பட்டம் வாங்கி விடுங்க. கிடைக்கலனா சொல்லுங்க எப்படி பட்டம் செய்யறதுங்கற டிப்ஸ் நான் தறேன் உங்களுக்கு...


More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
ஆடிக் காத்துல அம்மியும் பறக்கும்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? அம்மி பறக்குதே இல்லையோ நம்ம பசங்க விடற பட்டம் அதாங்க மெட்ராஸ் பாஷையில காத்தாடி, ரொம்ப ஜோரா பறக்கும்.
பட்டம்னு சொன்ன உடனே பழசெல்லாம் ஞாபகத்துக்கு வருதுங்க, எங்க ஊர் தேர்முட்டி (தேரடி) பக்கத்துல ஒரு இருபது இருபத்தஞ்சு படிக்கட்டு வச்ச மேடை இருக்கும் அதுக்கு பக்கத்துல தேர நிறுத்தி வச்சிருப்பாங்க, ஆடி மாசம் வந்துட்டா எங்க பக்கத்துப் பசங்க எல்லாரும் கையில நூலேட அந்த மேடை மேலதான் நிப்பாங்க. எல்லாரும் பட்டம் விட்டுகிட்டு ஒரே ஜாலிதான் போங்க, ஆனா இந்த மாஞ்சா கீஞ்சானு சொல்றாங்களே அதெல்லாம் ஒன்னும் தெரியாது எங்களுக்கு. அப்புறம் பட்டம் காசு குடுத்தெல்லாம் வாங்க மாட்டோம், நாங்களே செஞ்சிடுவோம், ஆமா இது என்னா பெரிய கம்பசூத்திரமான்னு கேக்கறீங்களா!

அப்பவெல்லாம் வீட்டுல ஒரே ஒரு பட்டம் வாங்கதான் காசு தருவாங்க, நம்ம தெருவில இருக்கற சில வெவரமான பசங்க இந்த சமயத்துல நல்ல காசு பார்ப்பாங்க. ஒரு ஐம்பது காசுக்கு கலர் பேப்பர் வாங்கினா போதும் அதுல சிறுசு பெரிசுனு ஒரு அஞ்சு அல்லது ஆறு பட்டம் பண்ணிடுவாங்க, அத வீட்டுக்கு வெளியில ஒரு கயித்துக் கட்டில் போட்டு அதுல கட்டி வச்சிருப்பாங்க (அதாங்க Display). எப்படியும் ஒரு பட்டம் 25 காசுல இருந்து 1 ரூபாய் வரைக்கும் சைஸ் வாரியா பிரிச்சி வித்துடுவாங்க.

எப்படியாவது பைசாவ தாத்தாகிட்டயோ இல்ல பாட்டிக்கிட்டயோ வாங்கிட்டு போய் ஒரு பட்டம் வாங்கிடுவோம். ஆனா ஒன்னு அப்படி வாங்கின பட்டம் எப்படியும் ஒரு மணி நேரத்துக்குள்ள கிழிஞ்சிடும் இல்ல எங்கயாவது ஒரு வீட்டு ஓட்டுலயோ இல்ல பெரிய மரத்துலயோ போய் மாட்டிக்கும். அது எப்படினா? நல்லா காத்து அடிக்கும்போது பட்டம் ரொம்ப உயரமா பறக்கும், உடனே போட்டி வந்துடும் " டேய் என் பட்டம்தாண்டா அதிக உயரத்துல பறக்குது" அப்படீனு ஒருத்தன் கத்திட்டான்னா உடனே அடுத்தவன் நூல்கண்டு புதுசா வாங்கிட்டு வந்து நீளத்த அதிகமாக்குவான், அப்புறம் அவனும் அதே மாதிரி கத்துவான், இப்படியே ஒவ்வொருத்தரா ஆரம்பிக்க கடைசியில் யாரோட பட்டமும் திரும்பி வராது. இந்த நூல்கண்டு பிரச்சினைக்காகவே நாங்க ஒரு வாரத்துக்கு முன்னாலயே ஒரு பத்து நூல்கண்டாவது வாங்கிட்டு வந்து ஒரு குச்சியில முடிச்சி போட்டு முடிச்சி போட்டு சுத்தி வச்சிடுவோம்.

பட்டம் கிழிஞ்சி போயிடிச்சினா சும்மா இருப்போம்னு மட்டும் நினைக்காதீங்க! நாங்க பட்டத்த வாங்கின உடனே அதோட டெக்னாலஜி என்னானு ஸ்டடி பண்ணிடுவோம். அதுக்கப்புறம் வீட்டுல கிடைக்கற பழைய செய்தித்தாள வச்சி, தென்னை இலையிலிருந்து வருமே அதுதாங்க நம்ம விளக்கமாறு (துடைப்பம்) அதுல இருந்து குச்சிய உருவி, பசையெல்லாம் போட்டு பக்காவா பட்டம் ரெடி பண்ணிடுவோம். அப்புறம் என்ன, இன்னொரு முறை அதே மாதிரி போட்டிதான்.
அப்புறம் காத்து நிக்கற வரைக்கும் இதே வேலைதான். சில ஆர்வக் கோளாறு பசங்க பட்டத்த பள்ளிக்கூடத்துக்கு எடுத்துகிட்டு வந்து இடைவேளை நேரத்துல எல்லாம் கூட பறக்கவிட்டு ஸீனப் போடுவாங்க.

சின்னப் பசங்க, புதுசா பட்டம் விடுறவங்க ஒரு பத்தடி நீளக் கயிறுல பட்டத்த கட்டிக்கிட்டு ஓடு ஓடுனு ஓடுவாங்க பாருங்க... அப்பப்பா ஊரே ஒரே களைக் கட்டி இருக்கும் இந்த நேரத்துல. சில நேரத்துல பெரியவங்களே வந்து நல்லா உயரத்துல பறக்குற பட்டத்த பார்த்து பாராட்டுவாங்க பாருங்க, அப்ப நாம என்னவோ அந்த பட்டத்து மேலயே உட்கார்ந்து பறக்குற மாதிரி இருக்கும்...

இதெல்லாம் சின்னப் பசங்கதான் விளையாடலாம்னெல்லாம் ஒன்னும் கிடையாது, நம்மளும் எந்த வயசுலயும் விளையாடணும். அப்பத்தான் நாமளும் இளமையா இருப்போம், நம்ம மனசும் இளமையா இருக்கும், நம்மக் குழந்தைங்களுக்கும் மகிழ்ச்சியா இருக்கும். ஆயிரம்தான் வசதிகள் இன்னிக்கு இருந்தாலும், அந்த நாள் குடுத்த மகிழ்ச்சி இன்னிக்கு கிடைக்குதா?

அதனால எல்லாரும் ரெடியா இருங்க, கடற்கரைக்கு போறவங்க காத்தடிச்ச பலூனெல்லாம் வாங்காதீங்க, நல்ல ஒரு பட்டம் வாங்கி விடுங்க. கிடைக்கலனா சொல்லுங்க எப்படி பட்டம் செய்யறதுங்கற டிப்ஸ் நான் தறேன் உங்களுக்கு...
இமயத்தில் அழகானந்தா மற்றும் பாகிரதி நதிகள் இணையுமிடம் - அரிய புகைப்படம்

இமயத்தில் அழகானந்தா மற்றும் பாகிரதி நதிகள் இணையுமிடம் - அரிய புகைப்படம்

இரண்டாம் உலகப்போரில் நாசிகளால் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு










இரண்டாம் உலகப்போரில் நாசிகளால் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு










கருத்துகள் இல்லை: