ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

உலக வல்லரசுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இந்திய மக்கள் நிலையான அரசினை தேர்வு செய்து சரியான தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
உலக பொருளாதார நெருக்கடி இந்தியாவிலும் பாதிப்பினை உண்டாக்கி வரும் இச்சூழலில் நிலையான ஒரு அரசு நமக்கு கண்டிப்பாக தேவை.

பாஜகவின் பரிதாப நிலை

வாஜ்பாய் போன்ற சிறந்த தலைவர்கள் பிரதம வேட்பாளர்களாக இல்லாததும் அத்வானி, மோடி இடையே நடந்த அதிகாரத்திற்கான போட்டி தமிழகம், ஆந்திர போன்ற மாநிலங்களில் சரியான கூட்டணி இல்லாமை போன்றவையே பாஜகவின் தோல்விக்கு காரணங்கள்.

தமிழக மக்களின் சிறந்த தெரிவு

கடந்த முறையை போலவே இம்முறையும் தமிழகம், ஆந்திர முடிவுகள் மத்திய அரசினை முடிவு செய்யும் விதமாக இருந்தது மேலும் உபி, கேரளம் மற்றும் மேற்கு வாங்க மாநில முடிவுகள் காங்கிரசை பெரும்பான்மையுடன் அரியணையில் அமர்த்தியுள்ளது.

இலங்கை பிரச்சனை

அதிமுக கூட்டணி இலங்கை பிரச்சனையை பிரதானமாக கையாண்டது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது 10 ஆண்டு காலம் முதல்வராக இருந்தபோது இலங்கை தமிழர்கள் பற்றி இம்மியளவும் எண்ணிப்பார்க்காத அதிமுக தேர்தல் நேரத்தில் இலங்கை தமிழர்களின் துயர் துடைக்க எனக்கு ஓட்டு போடுங்கள் என்றது அவர்கள் சிறந்த நடிகை என்பதை மக்களிடம் காட்டியது, யோசித்து பாருங்கள் வலையுலக நண்பர்களே வைகோ எதற்காக அதிமுக ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டார்? இலங்கை தமிழர்கள் பற்றி பேசி தானே,ஆக இவர்கள் ஓட்டு வாங்க சொன்ன பொய் அவர்களுக்கே எதிராக முடிந்தது. விலைவாசி உயர்வு, மின்தடை போன்ற முக்கிய பிரச்சனைகளை நாயகர்கள் ஆக்கியிருந்தால் வெற்றி பெற உதவி இருக்கும்.

மண்ணை கவ்விய மதிமுக பாமக

சேது சமுத்திர திட்டத்தினை தமிழகத்திற்கு பெற திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று திமுக அணியிலிருந்து 2004 ஓட்டு கேட்ட வைகோ 2009 தேர்தலில் சேது சமுத்திர திட்டத்தினை செய்யல்படுத்தாது தடுக்கும் தலைவியின் பின்னால். சென்ற சட்டமன்ற தேர்தலிலே எடுபடாத குடும்ப அரசியல் என்ற வாதம்,சென்ற சட்டமன்ற தேர்தலிலே பாமகவைவிட குறைந்த இடங்களே தந்ததால் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய வைகோ இம்முறை தன்மானத்தை தானை தலைவியிடம் அடகு வைத்து விட்டாரா? வைகோவை தோற்கடித்துள்ளனர் தமிழக மக்கள்.

ஒரு சதவிகித வாக்கு வங்கியை வைத்துக்கொண்டு தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி பதவி சுகம் கண்டு வந்த நரியின் சாயத்தை வெளுக்க வைத்த தமிழக மக்கள் வாழ்க.இனியாவது திமுக அதிமுக போன்ற கட்சிகள் பாமக போன்றவர்களை புறந்தள்ள வேண்டும்.

வளர்ந்துவரும் தேமுதிக

2004 சட்டமன்ற தேர்தலிலே 8.5% இந்த தேர்தலிலே 10% வாக்குகளை தனித்து நின்று தமிழக நின்று மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வளர்ந்து வருகிறது தேமுதிக.


மொத்தத்தில் இலங்கை தமிழர் பிரச்சனை எங்களின் இதயத்தை துளைத்தாலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இச்சூழலில் இதயம் கனத்தாலும் இந்தியாவிற்கு நிலையான ஆட்சியை வழங்குவதற்கு வக்களித்திட எம் தமிழக மக்கள் சிறந்த மதிநுட்பம் கொண்டோர் என மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளனர்


பராசக்தி
பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன.

ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், "அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!" என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

"முப்பது வருடப் போராட்ட காலத்தில் 'அடுத்து என்ன நடக்கும்?' என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! (மேலும் படிக்க)


*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*
பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன.

ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், "அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!" என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

"முப்பது வருடப் போராட்ட காலத்தில் 'அடுத்து என்ன நடக்கும்?' என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..! (மேலும் படிக்க)


*????? ???????? ??????* *???????? ?????????? ??????? ????????*


More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
என்னடா இது, சம்பந்தர் குடிச்ச மாதிரி ஞானப் பால்னு சொல்லி குழப்பறேனேனு பார்க்கறீங்களா? நான் சின்னப் பையனா இருக்கும்போது... பார்வதி வந்து பால் கொடுத்தாங்களானு கேக்காதீங்க, நான் சின்னப் பையனா இருக்கும் போது சக தோழர்களோட எங்க ஊரு சிவன் கோயில்ல போய் விளையாடறது வழக்கம். சில நாள் திடீர்னு கோயில் ஐயர் ரொம்ப பாசமா கூப்பிடுவாறு, " டேய் பசங்களா, வந்து ஞானப் பால் வாங்கிட்டு போங்கடா"னு. "என்ன சாமி இன்னிக்கு விசேஷம்"னு ஒரு பையன் கேக்க "இன்னிக்கு பிரதோஷம்டா, இது சாமிக்கு அபிஷேகம் பண்ணின பால்"னு ஐயர் சொன்னாரு. ஏலக்காய் எல்லாம் போட்டு பால் ரொம்ப சுவையா இருக்கும், எல்லாரும் ஒரு ரெண்டு மூணு கரண்டி வாங்கி குடிப்போம்.

இது நடந்தது இருபது வருஷத்துக்கு முன்னால, அப்ப எல்லாம் பிரதோஷத்துக்கு இப்ப வரமாதிரி கூட்டமெல்லாம் வராது, ஏதோ ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் இருப்பாங்க. ஆனா இன்னிக்கு எந்த ஐயரும் எந்த கோயில்லயும் ஞானப் பால் குடுக்கறதா தெரியல, அப்படி குடுத்தாங்கன்னா அவ்வளவுதான் அவங்க தலையில் துண்டு போட்டுகிட்டு போக வேண்டியதுதான், இன்னிக்குதான் அவ்வளவு கூட்டம் வருதே பிரதோஷத்துக்கு!

அப்புறம் ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சி, கார்டமம் மில்க் (Cardamom milk) அப்படீனு ஆவின் பால் பாக்கெட் ஒன்னு வந்திச்சி அது கிட்டதட்ட இந்த ஞானப் பால் மாதிரிதான் இருக்கும். இப்பக் கூட எங்கேயாவது ஆவின் பொருட்களைப் பார்த்தா உடனே இந்த ஏலக்காய் பால் இருக்கானு தேடுற பழக்கம் இன்னிக்கும் எங்கிட்ட இருக்கு. கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க, ஏலக்காய், சக்கரை போட்ட பால் என்ன சுவையா இருக்கும்னு அப்புறம் நீங்களும் தேடுவீங்க...

பி.கு. முதல் முதலா ஆரம்பிக்கிறது இறைவன் கிட்டு ஆரம்பிச்சா என்னனு தோணிச்சி, உடனே இந்த ஞானப் பால் ஞாபகத்து வந்திடுச்சி. இது போல உங்களுக்கும் எதாவது அனுபவம் இருந்தா தயங்காம பகிர்ந்து கொள்ளுங்க...


More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
என்னடா இது, சம்பந்தர் குடிச்ச மாதிரி ஞானப் பால்னு சொல்லி குழப்பறேனேனு பார்க்கறீங்களா? நான் சின்னப் பையனா இருக்கும்போது... பார்வதி வந்து பால் கொடுத்தாங்களானு கேக்காதீங்க, நான் சின்னப் பையனா இருக்கும் போது சக தோழர்களோட எங்க ஊரு சிவன் கோயில்ல போய் விளையாடறது வழக்கம். சில நாள் திடீர்னு கோயில் ஐயர் ரொம்ப பாசமா கூப்பிடுவாறு, " டேய் பசங்களா, வந்து ஞானப் பால் வாங்கிட்டு போங்கடா"னு. "என்ன சாமி இன்னிக்கு விசேஷம்"னு ஒரு பையன் கேக்க "இன்னிக்கு பிரதோஷம்டா, இது சாமிக்கு அபிஷேகம் பண்ணின பால்"னு ஐயர் சொன்னாரு. ஏலக்காய் எல்லாம் போட்டு பால் ரொம்ப சுவையா இருக்கும், எல்லாரும் ஒரு ரெண்டு மூணு கரண்டி வாங்கி குடிப்போம்.

இது நடந்தது இருபது வருஷத்துக்கு முன்னால, அப்ப எல்லாம் பிரதோஷத்துக்கு இப்ப வரமாதிரி கூட்டமெல்லாம் வராது, ஏதோ ஒருத்தர் அல்லது ரெண்டு பேர்தான் இருப்பாங்க. ஆனா இன்னிக்கு எந்த ஐயரும் எந்த கோயில்லயும் ஞானப் பால் குடுக்கறதா தெரியல, அப்படி குடுத்தாங்கன்னா அவ்வளவுதான் அவங்க தலையில் துண்டு போட்டுகிட்டு போக வேண்டியதுதான், இன்னிக்குதான் அவ்வளவு கூட்டம் வருதே பிரதோஷத்துக்கு!

அப்புறம் ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சி, கார்டமம் மில்க் (Cardamom milk) அப்படீனு ஆவின் பால் பாக்கெட் ஒன்னு வந்திச்சி அது கிட்டதட்ட இந்த ஞானப் பால் மாதிரிதான் இருக்கும். இப்பக் கூட எங்கேயாவது ஆவின் பொருட்களைப் பார்த்தா உடனே இந்த ஏலக்காய் பால் இருக்கானு தேடுற பழக்கம் இன்னிக்கும் எங்கிட்ட இருக்கு. கொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க, ஏலக்காய், சக்கரை போட்ட பால் என்ன சுவையா இருக்கும்னு அப்புறம் நீங்களும் தேடுவீங்க...

பி.கு. முதல் முதலா ஆரம்பிக்கிறது இறைவன் கிட்டு ஆரம்பிச்சா என்னனு தோணிச்சி, உடனே இந்த ஞானப் பால் ஞாபகத்து வந்திடுச்சி. இது போல உங்களுக்கும் எதாவது அனுபவம் இருந்தா தயங்காம பகிர்ந்து கொள்ளுங்க...


More than a Blog Aggregator

by இரா. சதீஷ் குமார்
இன்பம் மிக்க இந்த பூமியில் பிறந்து நமக்கு விவரம் தெரிய ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை நடந்த நிகழ்வுகள் யாவும் நினைவில் திரைப்படம் போல் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. பரபரப்பான இந்த உலகத்தில் இந்தப் படத்தை பார்ப்போர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. சற்றே தனிமையில் அமர்ந்து சிந்தனைக் குதிரையை தட்டிவிட்டோமானால் அன்றோ நம் இனிய நினைவுகள் நம் மனதை குளிரூட்டவரும். ஆஹா! அந்த இனிய நினைவுகளால் எத்தனை நாட்கள் என் கவலைகளை மறந்து களித்திருக்கிறேன்.

வானத்து வெண்ணிலா எங்கு சென்றாலும் உடன் நடந்து வருவது, காக்கா கடி போட்டு மிட்டாய் திண்பது, பனை ஓலைக் காத்தாடி, பனங்கா வண்டி, டயர் வண்டி, கயிற்றால் சுற்றி வளைத்த சிக்கு புக்கு இரயில் வண்டி, தெருவில் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, திருடன் போலீஸ் விளையாட்டு, திருவிழாக் கால ஆட்டங்கள் இப்படி எத்தனை எத்தனை!

இன்றும் நினைத்தால் இனிக்கிறதே, ஐயகோ...மீண்டும் அந்த வாழ்க்கை திரும்பி வராதா? வாழ்க்கையில் நினைத்ததெல்லாம் விலைக்கு வாங்க முடிகிறதே, ஆனால் மீண்டும் நம்மால் அந்த சிறுவயது வாழ்க்கையை வாங்க முடியுமா? முடியாதுதான் ஆனால் நிச்சயம் அதை நினைத்துக் குதூகலம் அடையமுடியும். நம் பிள்ளைகளுக்கு சொல்லி மகிழ்ச்சியடைய முடியும். ஆனால் நம் குழந்தைகள் அவற்றை அனுபவிக்க முடியாமல் போகிறதே என்று மனதில் ஒரு ஓரத்தில் சிறு கவலை இருந்துகொண்டுதான் இருக்கும். என்ன செய்வது, காலம் மாறிப் போச்சு, உலக மயமாக்குதலும், பன்னாட்டு வர்த்தகமும், மேல் நாட்டுக் கலாச்சாரமும் நம்மை ஏராளமாக மாற்றி விட்டது. சரி, போனதெல்லாம் போகட்டும், வாருங்கள் நம் கடந்த காலத்தை சற்று அசை போடுவோம். என் வாழ்வில் அனுபவித்ததை நான் சொல்கிறேன், அதை ஒட்டி உங்கள் வாழ்வில் நடந்ததை நீங்கள் நினைவு கூர்ந்து இரசியுங்கள், முடிந்தால் மற்றவரும் அனுபவிக்குமாறு ஒரு பதிவைத் தொடங்கி எழுதுங்கள்.

கருத்துகள் இல்லை: