ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

பழச தூசி தட்டி உபயோகிப்பதில் தான் கோலிவுட்காரர்களுக்கு என்ன ஒரு ஆனந்தம். முதலில் ரீமிக்ஸ் என்று ஆரம்பித்தார்கள். அப்புறம் பழைய பாட்டை அப்பிடியே உபயோகிக்க ஆரம்பித்தார்கள். 'சுப்ரமணியபுரம்' படத்தில் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் வரும் 'சிறு பொன்மணி அசையும்' பாடலை கவித்துவமாக காட்சிகளுக்கு நடுவே புகுத்தியிருந்தார் சசிகுமார். அதே போல் சமீபத்தில் வெளியான 'பசங்க' திரைப்படத்தில் கூட ரிங்டோனாக வரும் 'மேஸ்ட்ரோ'வின் பாடல்.


இப்போது 'சர்வம்'. ஆனா சும்மா சொல்ல கூடாது. அப்பவே இன்னாமா கம்போஸ் பண்ணியிருக்காருப்பா ராஜா. ஆர்யா, த்ரிஷாவை பார்குரப்ப எல்லாம் வயலின் ஹை பிட்சில அதிருது. அது இன்னா பாட்டுன்னு ரெம்ப நேரம் மண்டையை பிச்சப்புறம் தான் தெரிஞ்சது. 'வாழ்க்கை' படத்துல நம்ம அக்கா 'சில்க்' ஆடுன 'மெல்ல மெல்ல என்னை தொட்டு' பாட்டு. அது என்னமோ படத்தோட முதல் பாதி முழுசும் இந்த பாட்டோட பி.ஜி.எம் தான் ஒடுது.

அந்த பாட்டை இங்க பாருங்க:


என்னது படத்துக்கு மீசிக் 'யுவன் ஷங்கர் ராஜாவா'!! சொல்லவே இல்லை...
பழச தூசி தட்டி உபயோகிப்பதில் தான் கோலிவுட்காரர்களுக்கு என்ன ஒரு ஆனந்தம். முதலில் ரீமிக்ஸ் என்று ஆரம்பித்தார்கள். அப்புறம் பழைய பாட்டை அப்பிடியே உபயோகிக்க ஆரம்பித்தார்கள். 'சுப்ரமணியபுரம்' படத்தில் 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் வரும் 'சிறு பொன்மணி அசையும்' பாடலை கவித்துவமாக காட்சிகளுக்கு நடுவே புகுத்தியிருந்தார் சசிகுமார். அதே போல் சமீபத்தில் வெளியான 'பசங்க' திரைப்படத்தில் கூட ரிங்டோனாக வரும் 'மேஸ்ட்ரோ'வின் பாடல்.


இப்போது 'சர்வம்'. ஆனா சும்மா சொல்ல கூடாது. அப்பவே இன்னாமா கம்போஸ் பண்ணியிருக்காருப்பா ராஜா. ஆர்யா, த்ரிஷாவை பார்குரப்ப எல்லாம் வயலின் ஹை பிட்சில அதிருது. அது இன்னா பாட்டுன்னு ரெம்ப நேரம் மண்டையை பிச்சப்புறம் தான் தெரிஞ்சது. 'வாழ்க்கை' படத்துல நம்ம அக்கா 'சில்க்' ஆடுன 'மெல்ல மெல்ல என்னை தொட்டு' பாட்டு. அது என்னமோ படத்தோட முதல் பாதி முழுசும் இந்த பாட்டோட பி.ஜி.எம் தான் ஒடுது.

அந்த பாட்டை இங்க பாருங்க:


என்னது படத்துக்கு மீசிக் 'யுவன் ஷங்கர் ராஜாவா'!! சொல்லவே இல்லை...
ஹிந்தியில் வெளியாகி பரபரப்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்ற 'எ வெநஸ்டே' திரைப்படத்தை தமிழில் கமல் மறு ஆக்கம் செய்வதாக கேள்விப்பட்டபோது மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால், இது போன்ற ஒரு திரைப்படத்திற்கு ஒரு நல்ல திரை எழுத்தாளர் தேவை. இல்லையென்றால் சொதப்பல் தான் என்று எண்ணி கொண்டு இருந்த போது தான், இரா. முருகன் இந்த படத்திற்கு எழுத்தாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது.

சுஜாதாவுக்கு அடுத்து தமிழில் சயின்ஸ் பிக்சன் எழுத யாரும் இல்லையா என்று கேட்டால் தயங்காமல் இரா.முருகனை சுட்டிக் காட்டுவேன். அவரின் 'சில்லு' கதையை படித்த பின் யாருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு உதறல் எடுக்காமல் இருக்காது. 1996 இந்தியா டுடே 'இலக்கிய மலரில்' வெளியான அவரின் 'சிலிகான்' (சிறுகதையின் தலைப்பு சரியா என்று தெரியவில்லை) என்னுடைய கணிப்பொறி வல்லுநர் ஆக வேண்டும் என்று ஆசையை மறு யோசனை செய்ய வைத்தது. இன்றைய மென்பொருள் நண்பர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலைப் பற்றி அன்றே இந்த சிறுகதையில் எழுதி விட்டார் இரா.முருகன் .

எனக்கு மிகவும் பிடித்த கதை அவரின், 'இரண்டாம் ஆட்டம்' சிறுகதை தொகுப்பில் வெளி வந்த 'சேது'. இராமேஸ்வரத்தில் வாளிகளை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு தீர்த்தங்களாக சுற்றி காட்டுவதற்கு நிறைய கைடுகள் இருப்பார்கள். அப்படி ஒரு கைடிடம் வரும் பெரியவர் ஒருவர், தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக அனைத்து தீர்த்தங்களுக்கும் அழைத்து செல்ல சொல்லுவர். அப்படி சுற்றி காடும் கைடிடம் தன் வாழ்க்கையில் செய்த ஒரு மிகப் பெரும் பாவத்தைப் பற்றி விவரமாக சொல்லுவர் அந்த பெரியவர். முடிவில் தான் செய்த அந்த பாவத்திற்கு பரிகாரம் தற்கொலை தான் என்று கடலில் குதித்து விடுவார். அதை அந்த கைடும் தடுக்க மாட்டார். கதையின் முடிவில் வரும் இறுதி வரி அந்த கைடு, ஏன் அந்த தற்கொலையைத் தடுக்க வில்லை என்ற புதிர் முடிச்சை அவிழ்க்கும். ஆனால் அந்த முடிச்சு எனக்கு பொட்டில் அடித்து போல ஒரு அதிர்ச்சியை உருவாக்கியது. புத்தகத்தை மூடி வைத்து ஒரு அரை மணி நேரம் எதுவும் பேசாது சலனமற்று உக்கார்ந்து இருந்தேன்.

இன்னொரு மிகவும் பிடித்த கதை 1997 தினமணி பொங்கல் மலரில் வெளி வந்த 'பூச்சி'. நம் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம். பல சமயங்களில் அந்த அடையாளங்கள் அவர்களுக்கு பட்ட பெயராக வாய்க்கும். சிலருக்கு நல்லதாக வாய்க்கும், பலருக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும் விதம் வாய்க்கும். அப்படி ஒருவன் தான் 'பூச்சி'. 'ஆழ்வார்', 'சைக்கிள் முனி' போன்றவை அவரின் ஆகச் சிறந்த சிறுகதைகள்.


'அரசூர் வம்சமும்' ,'நெ.40 இரட்டை தெருவும்' படிக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுஜாதாவை என் அப்பா கேட்க நினைத்த கேள்வி தான், இரா. முருகனுக்கும், "எப்பிடி சார், உங்க வேலைப் பளுவுக்கும் நடுவுலயும் எழுதுறீங்க?".

இவரைப் பத்தி மேல தெரிஞ்சுக்கனும்னா இங்க போங்க:
http://www.eramurukan.in/tamil/home
ஷப்பா!! தேர்தல் வந்தாலும் வந்தது, நம்ம மொக்கை மாயாண்டி மாமாவை விட நம்மாளுங்க அறிக்கைன்ற பேர்ல கெட்ட மொக்கைய போடுறாங்க. 'சும்மா இருக்குற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி' - அந்த கதையா நம்ம கேப்டன் தனக்கு பப்ளிசிட்டி வர்றதுக்காக எதையோ சொல்ல, அது அவருக்கே ஆப்பு ஆகி போச்சு.


'எனக்கு பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேருவதற்காக கோடிகள் கொடுக்க முன் வந்தன' அப்பிடின்னு நம்ம கேப்டன் ஒரு ஸ்டண்ட் போட்டு இருக்கார் (அது தான் அவருக்கு கை வந்த கலை ஆச்சே... ஹிஹி). அத கேட்டு நம்ம தேர்தல் கமிஷன் உஷார் ஆகிருச்சு. 'விஜயகாந்த் மீதும், அவர் கட்சி மீதும் எந்த அரசியல் கட்சி வேண்டுமானாலும் புகார் குடுக்கலாம்' அப்பிடின்னு தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் சொல்லி இருக்காருங்கோ.

ஆனாலும் கேப்டன் உண்மையிலே பாவமுங்க. பின்னே ஒரு மனுஷனுக்கு மாத்தி, மாத்தி பல ரூபங்கள்ல ரிவீட் வந்தா என்ன தான் பண்ண முடியும். இதெல்லாம் பத்தாதுன்னு அவரு கட்சிகாரர் ஒருத்தருக்கு இன்னொரு பிரச்சனை.
அது யாருன்னு பார்த்தா நம்ம மா பா பாண்டியராஜன். இந்தியாவில் மிகப் பெரும் வேலைவாய்ப்பு நிறுவனமான மா பா'வை நிறுவியவர். அது மட்டுமல்ல, நல்ல இலக்கிய ஆர்வலர். பல சேவை நிறுவங்கள் நடத்தி வருகிறார். அந்த சேவை நிறுவனகள் மூலம் ஆரம்பித்தது தான் சிக்கலே.



அவருடைய சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் சில உதவிகள் செய்யப் போக, அது தேர்தல் கமிஷன் காதுக்கும் , மூக்குக்கும் எட்ட அவருக்கு அதுவே ஆப்பாகி இருக்கிறது. தேர்தல்னு வந்தா எல்லாரும் 'உண்மையான' அரசியல்வாதி ஆயிடராங்கப்பு. ஜெ. கே. ரித்தீஷுக்கு எல்லாம் பாண்டியராஜன் நூறு மடங்கு தேவலாம். இது மாதிரி சீப்பான பப்ளிசிட்டி பண்ணாம, கொஞ்சம் நேக்கா கேப்டனும் அவரோட கட்சிக்காரங்களும் வேலை பார்த்தாங்கனா நடுநிலையாளர்கள் ஒட்டு அத்தனியும் அவருக்குதேன்.

இந்த தேர்தலில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்களில் எனக்கு பிடித்த வேட்பாளர் மா பா பாண்டியராஜன் தான். பார்க்கலாம் வை. கோ வை ஜெயிக்கிறாரா இல்லையானு??!! கேப்டனோட படம் சும்மா நக்கலுக்கு தானுங்கோ. கேப்டன் ஆர்வலர்கள் காண்டு ஆகாதீங்கோ.

செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
ஷப்பா!! தேர்தல் வந்தாலும் வந்தது, நம்ம மொக்கை மாயாண்டி மாமாவை விட நம்மாளுங்க அறிக்கைன்ற பேர்ல கெட்ட மொக்கைய போடுறாங்க. 'சும்மா இருக்குற சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி' - அந்த கதையா நம்ம கேப்டன் தனக்கு பப்ளிசிட்டி வர்றதுக்காக எதையோ சொல்ல, அது அவருக்கே ஆப்பு ஆகி போச்சு.


'எனக்கு பல கட்சிகள் தங்கள் கூட்டணியில் சேருவதற்காக கோடிகள் கொடுக்க முன் வந்தன' அப்பிடின்னு நம்ம கேப்டன் ஒரு ஸ்டண்ட் போட்டு இருக்கார் (அது தான் அவருக்கு கை வந்த கலை ஆச்சே... ஹிஹி). அத கேட்டு நம்ம தேர்தல் கமிஷன் உஷார் ஆகிருச்சு. 'விஜயகாந்த் மீதும், அவர் கட்சி மீதும் எந்த அரசியல் கட்சி வேண்டுமானாலும் புகார் குடுக்கலாம்' அப்பிடின்னு தேர்தல் ஆணையர் பாலகிருஷ்ணன் சொல்லி இருக்காருங்கோ.

ஆனாலும் கேப்டன் உண்மையிலே பாவமுங்க. பின்னே ஒரு மனுஷனுக்கு மாத்தி, மாத்தி பல ரூபங்கள்ல ரிவீட் வந்தா என்ன தான் பண்ண முடியும். இதெல்லாம் பத்தாதுன்னு அவரு கட்சிகாரர் ஒருத்தருக்கு இன்னொரு பிரச்சனை.
அது யாருன்னு பார்த்தா நம்ம மா பா பாண்டியராஜன். இந்தியாவில் மிகப் பெரும் வேலைவாய்ப்பு நிறுவனமான மா பா'வை நிறுவியவர். அது மட்டுமல்ல, நல்ல இலக்கிய ஆர்வலர். பல சேவை நிறுவங்கள் நடத்தி வருகிறார். அந்த சேவை நிறுவனகள் மூலம் ஆரம்பித்தது தான் சிக்கலே.



அவருடைய சொர்ணம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் சில உதவிகள் செய்யப் போக, அது தேர்தல் கமிஷன் காதுக்கும் , மூக்குக்கும் எட்ட அவருக்கு அதுவே ஆப்பாகி இருக்கிறது. தேர்தல்னு வந்தா எல்லாரும் 'உண்மையான' அரசியல்வாதி ஆயிடராங்கப்பு. ஜெ. கே. ரித்தீஷுக்கு எல்லாம் பாண்டியராஜன் நூறு மடங்கு தேவலாம். இது மாதிரி சீப்பான பப்ளிசிட்டி பண்ணாம, கொஞ்சம் நேக்கா கேப்டனும் அவரோட கட்சிக்காரங்களும் வேலை பார்த்தாங்கனா நடுநிலையாளர்கள் ஒட்டு அத்தனியும் அவருக்குதேன்.

இந்த தேர்தலில் அறிவிக்கப் பட்ட வேட்பாளர்களில் எனக்கு பிடித்த வேட்பாளர் மா பா பாண்டியராஜன் தான். பார்க்கலாம் வை. கோ வை ஜெயிக்கிறாரா இல்லையானு??!! கேப்டனோட படம் சும்மா நக்கலுக்கு தானுங்கோ. கேப்டன் ஆர்வலர்கள் காண்டு ஆகாதீங்கோ.

செய்தி நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
ஹிந்தியில் வெளியாகி பரபரப்பையும், நல்ல விமர்சனங்களையும் பெற்ற 'எ வெநஸ்டே' திரைப்படத்தை தமிழில் கமல் மறு ஆக்கம் செய்வதாக கேள்விப்பட்டபோது மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால், இது போன்ற ஒரு திரைப்படத்திற்கு ஒரு நல்ல திரை எழுத்தாளர் தேவை. இல்லையென்றால் சொதப்பல் தான் என்று எண்ணி கொண்டு இருந்த போது தான், இரா. முருகன் இந்த படத்திற்கு எழுத்தாளராக நியமிக்கப் பட்டிருக்கிறார் என்ற அறிவிப்பு வந்தது.

சுஜாதாவுக்கு அடுத்து தமிழில் சயின்ஸ் பிக்சன் எழுத யாரும் இல்லையா என்று கேட்டால் தயங்காமல் இரா.முருகனை சுட்டிக் காட்டுவேன். அவரின் 'சில்லு' கதையை படித்த பின் யாருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு உதறல் எடுக்காமல் இருக்காது. 1996 இந்தியா டுடே 'இலக்கிய மலரில்' வெளியான அவரின் 'சிலிகான்' (சிறுகதையின் தலைப்பு சரியா என்று தெரியவில்லை) என்னுடைய கணிப்பொறி வல்லுநர் ஆக வேண்டும் என்று ஆசையை மறு யோசனை செய்ய வைத்தது. இன்றைய மென்பொருள் நண்பர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலைப் பற்றி அன்றே இந்த சிறுகதையில் எழுதி விட்டார் இரா.முருகன் .

எனக்கு மிகவும் பிடித்த கதை அவரின், 'இரண்டாம் ஆட்டம்' சிறுகதை தொகுப்பில் வெளி வந்த 'சேது'. இராமேஸ்வரத்தில் வாளிகளை தூக்கிக் கொண்டு, ஒவ்வொரு தீர்த்தங்களாக சுற்றி காட்டுவதற்கு நிறைய கைடுகள் இருப்பார்கள். அப்படி ஒரு கைடிடம் வரும் பெரியவர் ஒருவர், தான் செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடுவதற்காக அனைத்து தீர்த்தங்களுக்கும் அழைத்து செல்ல சொல்லுவர். அப்படி சுற்றி காடும் கைடிடம் தன் வாழ்க்கையில் செய்த ஒரு மிகப் பெரும் பாவத்தைப் பற்றி விவரமாக சொல்லுவர் அந்த பெரியவர். முடிவில் தான் செய்த அந்த பாவத்திற்கு பரிகாரம் தற்கொலை தான் என்று கடலில் குதித்து விடுவார். அதை அந்த கைடும் தடுக்க மாட்டார். கதையின் முடிவில் வரும் இறுதி வரி அந்த கைடு, ஏன் அந்த தற்கொலையைத் தடுக்க வில்லை என்ற புதிர் முடிச்சை அவிழ்க்கும். ஆனால் அந்த முடிச்சு எனக்கு பொட்டில் அடித்து போல ஒரு அதிர்ச்சியை உருவாக்கியது. புத்தகத்தை மூடி வைத்து ஒரு அரை மணி நேரம் எதுவும் பேசாது சலனமற்று உக்கார்ந்து இருந்தேன்.

இன்னொரு மிகவும் பிடித்த கதை 1997 தினமணி பொங்கல் மலரில் வெளி வந்த 'பூச்சி'. நம் சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடையாளம். பல சமயங்களில் அந்த அடையாளங்கள் அவர்களுக்கு பட்ட பெயராக வாய்க்கும். சிலருக்கு நல்லதாக வாய்க்கும், பலருக்கு மன உழைச்சலை ஏற்படுத்தும் விதம் வாய்க்கும். அப்படி ஒருவன் தான் 'பூச்சி'. 'ஆழ்வார்', 'சைக்கிள் முனி' போன்றவை அவரின் ஆகச் சிறந்த சிறுகதைகள்.


'அரசூர் வம்சமும்' ,'நெ.40 இரட்டை தெருவும்' படிக்க இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சுஜாதாவை என் அப்பா கேட்க நினைத்த கேள்வி தான், இரா. முருகனுக்கும், "எப்பிடி சார், உங்க வேலைப் பளுவுக்கும் நடுவுலயும் எழுதுறீங்க?".

இவரைப் பத்தி மேல தெரிஞ்சுக்கனும்னா இங்க போங்க:
http://www.eramurukan.in/tamil/home

கருத்துகள் இல்லை: