ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31


தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. 'இன்னும் சரியாக மைக்கே பிடிக்கவில்லை', அதற்குள் கைது செய்து விட்டார்களே என்று புலம்பும் இளம் அரசியல்வாதி ஒருபுறம். மக்களுடன் தான் எனது கூட்டணி' என்ற தன்னம்பிக்கை முழக்கமிடும் நடிக அரசியல்வாதி மற்றொரு புறம். 'அரசியலில் இதல்லாம் சகஜமப்பா' என்று கூறக் கூடிய வியத்தகு "கூட்டணிகள்" இன்னொரு புறம். இவற்றிக்கு இடையில் மக்களை மெஸ்மரிசம் செய்யும் பிரச்சாரங்கள்.... வண்ண வண்ண வாக்குறுதிகள்.... இப்படி அரசியல் தலைவர்கள் அய்ந்தாண்டிற்கு ஒருமுறை மக்களிடம் கையேந்தும் ஜனநாயக பண்டிகை கோலாகலமாக ஆரம்பித்து விட்டது.

ஆனால் மக்கள் முன்பு மாதிரி இல்லை. சமூகம், சட்டம், அரசியல் என எல்லாவற்றிலும் நல்ல விழிப்புணர்வு பெற்றவர்களாக உள்ளனர். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக அவர்களுக்கு அனைத்திந்திய மற்றும் உலக பார்வை ஏற்பட்டுள்ளது. எனவே சிந்திக்க ஆரம்பித்து உள்ளனர். 'இன்னாருக்கு அல்லது இன்ன கட்சிக்கு ஓட்டு போடலாம்!' என்று சிந்திக்கும் அதே வேளையில் 'அப்படி போட்டால் என்ன நன்மை நமக்கு விளையும்' என்பதையும் நன்றாகவே யோசிக்கின்றனர். ஆகவே உள்ளபடியாக நல்ல அரசியல் பதிவுகள் அல்லது மக்கள் நலனுக்காக பாடுபடும் எண்ணம் மற்றும் வல்லமை கொண்டவர்களை மட்டுமே மக்கள் தேர்தெடுக்க விழைகின்றனர் என்று சொன்னால் அதை மிகையானது என்று ஒதுக்கி விட முடியாது. சுருங்கச் சொன்னால் மக்களின் ஓட்டை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியாது, வேட்பாளர்கள்.

நிலைப்பாடு இவ்வாறு இருக்க, தான் நினைத்த நல்ல கட்சி அல்லது நல்ல வேட்பாளர் தேர்தலில் நிற்கவில்லை அல்லது நின்றுள்ள கட்சி அல்லது வேட்பாளர் நல்லது செய்யக்கூடியவர் அல்ல; தனக்கு பிடிக்கவில்லை என்று பொது ஜனம் ஒருவர் நினைத்தால், அவருக்கு என்ன தீர்வழி? சுருங்கச் சொன்னால் தனக்கு ஒட்டு போட விருப்பம் இல்லை என்று நினைக்கும் பொது ஜனம் அதை எப்படி சட்டப்படி தெரிவிப்பது?

இதற்கு 1961-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 'தேர்தல்கள் நடத்தும் விதிகள்' (Conduct of Elections Rules, 1961) வகை செய்கின்றன. ஒட்டு போட வேண்டும் என்பது ஜனநாயக கடமை என்று எவ்வாறு கூறப்படுகிறதோ, அவ்வாறே ஒட்டு போட தனக்கு விருப்பம் இல்லை என்றும் ஒருவர் கூறலாம். இந்த விதிகளின் பகுதி 4-இன் கீழ் வரும் 2-ஆம் அத்தியாயம் 'மின்னணு ஒட்டு போடும் இயந்திரம் மூலம் ஒட்டு போடுதல்' (VOTING BY ELECTRONIC VOTING MACHINES) பற்றி கூறுகிறது. அதில் வரும் விதி 49-O பின்வருமாறு கூறுகிறது.

49-O. Elector deciding not to vote.-If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form-17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.

ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்யும் வாக்காளர் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

"வாக்காளர் ஒருவர், அவரது வாக்காளர் பட்டியல் எண் ஆனது வாக்காளர் பதிவேட்டில் படிவம் எண் 17A -இல் உரியவாறு பதிவு செய்யப்பட்டும், மேலும் அதன் பேரில் விதி 49L-இன் உள் விதி (1)-இன்படி வேண்டுறுத்துகிறவாறு அவர் தனது கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை இட்டதற்கும் பிறகு, ஒட்டு போடுவதில்லை என்று முடிவு செய்தால், அதற்கு செயலாக்கம் தருவதற்கான குறிப்பு ஒன்று படிவம் எண் 17A- இல் மேற்சொன்ன பதிவுக்கு எதிராக தலைமை அலுவலரால் செய்யப்பட வேண்டும். மேலும் அந்த குறிப்புக்கு எதிராக வாக்காளரின் கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை பெறப்பட வேண்டும். " - விதி 49-O.

  • இப்படி ஒரு சட்ட விதி இருப்பதை அரசு ஏன் மக்களுக்கு பிரசாரம் செய்யவில்லை?
    • இப்படி ஒரு சட்ட விதியை மேற்சொன்ன 'தேர்தல்கள் நடத்தும் விதிகளில்' சேர்த்ததன் மூலம் நமது நாடாளுமன்றம் அடைய நினைத்தது என்ன?

    • இவ்விதியால் யாருக்கு என்ன இலாபம்?

    விவரம் தெரிந்தவர்களை விவாதிக்க அழைப்பு விடுக்கிறேன்..


    தேர்தல் திருவிழா தொடங்கி விட்டது. 'இன்னும் சரியாக மைக்கே பிடிக்கவில்லை', அதற்குள் கைது செய்து விட்டார்களே என்று புலம்பும் இளம் அரசியல்வாதி ஒருபுறம். மக்களுடன் தான் எனது கூட்டணி' என்ற தன்னம்பிக்கை முழக்கமிடும் நடிக அரசியல்வாதி மற்றொரு புறம். 'அரசியலில் இதல்லாம் சகஜமப்பா' என்று கூறக் கூடிய வியத்தகு "கூட்டணிகள்" இன்னொரு புறம். இவற்றிக்கு இடையில் மக்களை மெஸ்மரிசம் செய்யும் பிரச்சாரங்கள்.... வண்ண வண்ண வாக்குறுதிகள்.... இப்படி அரசியல் தலைவர்கள் அய்ந்தாண்டிற்கு ஒருமுறை மக்களிடம் கையேந்தும் ஜனநாயக பண்டிகை கோலாகலமாக ஆரம்பித்து விட்டது.

    ஆனால் மக்கள் முன்பு மாதிரி இல்லை. சமூகம், சட்டம், அரசியல் என எல்லாவற்றிலும் நல்ல விழிப்புணர்வு பெற்றவர்களாக உள்ளனர். பல்வேறு ஊடகங்களின் வாயிலாக அவர்களுக்கு அனைத்திந்திய மற்றும் உலக பார்வை ஏற்பட்டுள்ளது. எனவே சிந்திக்க ஆரம்பித்து உள்ளனர். 'இன்னாருக்கு அல்லது இன்ன கட்சிக்கு ஓட்டு போடலாம்!' என்று சிந்திக்கும் அதே வேளையில் 'அப்படி போட்டால் என்ன நன்மை நமக்கு விளையும்' என்பதையும் நன்றாகவே யோசிக்கின்றனர். ஆகவே உள்ளபடியாக நல்ல அரசியல் பதிவுகள் அல்லது மக்கள் நலனுக்காக பாடுபடும் எண்ணம் மற்றும் வல்லமை கொண்டவர்களை மட்டுமே மக்கள் தேர்தெடுக்க விழைகின்றனர் என்று சொன்னால் அதை மிகையானது என்று ஒதுக்கி விட முடியாது. சுருங்கச் சொன்னால் மக்களின் ஓட்டை அவ்வளவு எளிதாக வாங்கி விட முடியாது, வேட்பாளர்கள்.

    நிலைப்பாடு இவ்வாறு இருக்க, தான் நினைத்த நல்ல கட்சி அல்லது நல்ல வேட்பாளர் தேர்தலில் நிற்கவில்லை அல்லது நின்றுள்ள கட்சி அல்லது வேட்பாளர் நல்லது செய்யக்கூடியவர் அல்ல; தனக்கு பிடிக்கவில்லை என்று பொது ஜனம் ஒருவர் நினைத்தால், அவருக்கு என்ன தீர்வழி? சுருங்கச் சொன்னால் தனக்கு ஒட்டு போட விருப்பம் இல்லை என்று நினைக்கும் பொது ஜனம் அதை எப்படி சட்டப்படி தெரிவிப்பது?

    இதற்கு 1961-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 'தேர்தல்கள் நடத்தும் விதிகள்' (Conduct of Elections Rules, 1961) வகை செய்கின்றன. ஒட்டு போட வேண்டும் என்பது ஜனநாயக கடமை என்று எவ்வாறு கூறப்படுகிறதோ, அவ்வாறே ஒட்டு போட தனக்கு விருப்பம் இல்லை என்றும் ஒருவர் கூறலாம். இந்த விதிகளின் பகுதி 4-இன் கீழ் வரும் 2-ஆம் அத்தியாயம் 'மின்னணு ஒட்டு போடும் இயந்திரம் மூலம் ஒட்டு போடுதல்' (VOTING BY ELECTRONIC VOTING MACHINES) பற்றி கூறுகிறது. அதில் வரும் விதி 49-O பின்வருமாறு கூறுகிறது.

    49-O. Elector deciding not to vote.-If an elector, after his electoral roll number has been duly entered in the register of voters in Form-17A and has put his signature or thumb impression thereon as required under sub-rule (1) of rule 49L, decided not to record his vote, a remark to this effect shall be made against the said entry in Form 17A by the presiding officer and the signature or thumb impression of the elector shall be obtained against such remark.

    ஓட்டு போடுவதில்லை என்று முடிவு செய்யும் வாக்காளர் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

    "வாக்காளர் ஒருவர், அவரது வாக்காளர் பட்டியல் எண் ஆனது வாக்காளர் பதிவேட்டில் படிவம் எண் 17A -இல் உரியவாறு பதிவு செய்யப்பட்டும், மேலும் அதன் பேரில் விதி 49L-இன் உள் விதி (1)-இன்படி வேண்டுறுத்துகிறவாறு அவர் தனது கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை இட்டதற்கும் பிறகு, ஒட்டு போடுவதில்லை என்று முடிவு செய்தால், அதற்கு செயலாக்கம் தருவதற்கான குறிப்பு ஒன்று படிவம் எண் 17A- இல் மேற்சொன்ன பதிவுக்கு எதிராக தலைமை அலுவலரால் செய்யப்பட வேண்டும். மேலும் அந்த குறிப்புக்கு எதிராக வாக்காளரின் கையொப்பம் அல்லது பெருவிரல் ரேகை பெறப்பட வேண்டும். " - விதி 49-O.

    • இப்படி ஒரு சட்ட விதி இருப்பதை அரசு ஏன் மக்களுக்கு பிரசாரம் செய்யவில்லை?
      • இப்படி ஒரு சட்ட விதியை மேற்சொன்ன 'தேர்தல்கள் நடத்தும் விதிகளில்' சேர்த்ததன் மூலம் நமது நாடாளுமன்றம் அடைய நினைத்தது என்ன?

      • இவ்விதியால் யாருக்கு என்ன இலாபம்?

      விவரம் தெரிந்தவர்களை விவாதிக்க அழைப்பு விடுக்கிறேன்..

      உயிரழிவைத் தடுக்கத் தயவு செய்து இங்கே சென்று உங்கள் முறைப்பாட்டைப் பதிவு செய்யங்கள்.

      http://www.avaaz.org/en/stop_the_bloodbath?cl=231349070&v=3298
      உயிரழிவைத் தடுக்கத் தயவு செய்து இங்கே சென்று உங்கள் முறைப்பாட்டைப் பதிவு செய்யங்கள்.

      http://www.avaaz.org/en/stop_the_bloodbath?cl=231349070&v=3298
      வாக்களியுங்கள்
      தயவு செய்து இங்கே சென்று உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யங்கள்.


      http://internationaldesk.blogs.cnn.com/2009/05/11/monday-poll/



      http://www.metronews.ca/toronto
      வாக்களியுங்கள்
      தயவு செய்து இங்கே சென்று உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யங்கள்.


      http://internationaldesk.blogs.cnn.com/2009/05/11/monday-poll/



      http://www.metronews.ca/toronto

      கருத்துகள் இல்லை: