வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

நம்பிக்கைகள் அறுபட்டு நீ
இருப்பாயின்னும் என்ற நினைப்பும்
விடுபட்டுப் போன ஒரு
அந்திப் பொழுதில் அழைத்தாய்....

"அக்கோய் சுகமோ" ?
நினைக்காத பொழுதொன்றின்
நினைவுகளில் வந்து நிரம்பினாய்....






"எப்படியிருக்கிறாய்" ?
எப்போதும் போலான கேள்வியில்
அப்போதும் சிரித்தாய்....
"அக்கா இருக்கிறேன்"
அதிஸ்டமோ இல்லை ஆயுள் நீளமோ ?
அறியேன் என்றாய்....

ஐந்து நிமிடமோ
அதற்கும் சில நொடியோ
" அக்கா போகிறேன்"
தொடர்பறுத்து விடைபெற்றாய்....
கடைசிச் சிரிப்பும் கலகலத்த பேச்சும்
கனவிலும் மாறாமல் நீ....

வீரச்செய்திகளுக்குள் நீயும்
வித்தாய்ப் போனாயோ ?
காலம் அள்ளி வரும்
களச் செய்திகளில்
காவியமாய் ஆனாயோ ?
இல்லைக் கல்லறையும் இல்லாமல்
காற்றோடு கலந்தாயோ....?

"எப்போதாவது சந்திப்போமென்ற
நம்பிக்கை போய்விட்டது
ஒருதரம் கதைக்க வேணும்"
இலக்கம் தாவென்றவனே...!
ஏனடா எங்கள் விதி
இப்படியாய்....?

விடுபட்டுப்போன நம்பிக்கைகள்
உனக்காய் துளிர்விடுகிறது.
சுயநலத்தோடு பிரார்த்திக்கிறேன்.
சாகாமல் நீ என்னைச்
சந்திக்க வேண்டும்.

06.05.09
மருத்துவர் தாக்கப் படுவதால் ஏற்படும் விளைவுகள்:-
1.மருத்துவருக்கு பயம் அதிகரிக்கும். நோயாளியை இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தப்படும் நவீன கருவிகள் கிடைக்கும் இடத்துக்கு அனுப்புவார். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும்.
2.நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடைவெளி அதிகரிக்கும். இது என்றுமே நல்லதல்ல.
3.பாதுகாப்பு தேவைப்படும் இடத்திற்கு மருத்துவர் இடம் பெயர்வார். அப்போது சிறு நகரங்கள், கிராமங்களில் மருத்துவ செவை குறைவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
4.மருத்துவமனையில் உள்ள விலையுயர்ந்த உபகரணங்கள் உடைபடும்போது (தனயார்துறையானாலும்) அது நாட்டிற்கு பொருளாதார நாசம்தான்.
5.பாதுகாப்பு காரணங்கள் அதிகரிக்கும்போது ஒரு எந்திரதனமான சூழ்ல் ஏற்படும். கருவிகளும் பரிசோதனையும் அதிகரிக்கும்போது செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
6.பாதுகாப்பற்ற சூழல் எந்த வேலையையும் அதன் தரத்தினை மிக மோசமாக்கி விடும்.
7.அடுத்தவர் மேல் அதிகாரம் செய்யும் மனநிலையில் இருப்பவர்கள் செய்யும் இது போன்ற செயல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு பெரிய இழப்பாக அமைகிறது.
8.பெரும்பாலும் குடிபோதையிலேயே இருப்பவர்களும், உள்ளூர் ராஜா என்ற நினைப்பில் இருப்பவர்களுமே இது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடுகிறார்கள். கண்டிப்பாக சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று. உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் நடப்பது என்பது அரிதாகவே இருக்கிறது.
9.இது போன்ற சூழ்நிலைகளீல் பெறுவாரியான மக்கள் மருத்துவருக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். ஆனால் சமூக விரோதிகளுக்கு பயந்துகொண்டு நிகழ்ச்சி நடக்கும்போது வேடிக்கை பார்ப்பார்கள். (பின்னர் வந்து வருத்தம் தெரிவிப்பார்கள்). அந்த மக்கள் அனைவரின் ஆதரவும் தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு சமூக விரோதிகளின் ஆட்டம் அதிகரிக்கும். மருத்துவருக்கும் அனைவரிடமும் ஒரு அருவருப்பு உண்டாகும்.
10.மொத்தத்தில் மருத்துவர் அடுத்தநாள் நோயாளியைப் பார்க்கும்போது பயந்துகொண்டு சீக்கிரம் நோயாளியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற என்னத்தில் பார்க்கும் நிலையே ஏற்படும்.
பெருமாள் முருகனின் "கூள மாதாரி",இமயத்தின் "கோவேறு கழுதைகள்",பாமாவின் "கருக்கு' வரிசையில் தமிழில் மற்றும் ஒரு சிறந்த தலித் நாவல் "தகப்பன் கொடி".இந்நாவலுக்கு அழகிய பெரியவன் எழுதியுள்ள முன்னுரை தலைமுறை தலைமுறையாய் மாற்றங்கள் ஏதும் காணாது ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்களின் வாழ்க்கையை அழுத்தமாய் பதிவுசெய்கின்றது.நமது முந்தைய தலைமுறை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமும் ஆசையும் இயல்பானது.பாட்டன் காலத்து கதைகள் கேட்பதற்கு ஏதோ வேறு உலகில் நிகழ்தனவாய் தோன்றும்,கால மாற்றங்கள் வாழ்க்கை முறைகளில் ஏற்படுத்தி உள்ள வித்தியாசத்தை எண்ணி வியந்திடாமல் இருக்க முடியாது.



அழகிய பெரியவனின் இந்த நாவல் மூன்று தலைமுறை பற்றியது.அம்மாசி அவனின் தந்தை மற்றும் அவனின் மகன்கள் என ஒவ்வொரு தலைமுறையிலும் நிகழும் மாற்றங்கள் மிகை இன்றி நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.பண்ணை கூலிகளாய் இருக்கும் அம்மாசி,அபரஞ்சி தம்பதியர்கள் பண்ணையாரிடம் தங்களின் நிலத்தை இழந்து அபரஞ்சியின் ஊருக்கு பிழைக்க செல்கின்றனர்.நிலத்தில் அல்லும் பகலும் உழைத்து பழகிய அம்மாசிக்கு அவ்வூரும்,அங்கு செய்ய நேரும் தோல் தொழிற்சாலை வேலையும் புதிதாய் இருக்க..புதிய புதிய நட்புகள்,அரசியல் பேசும் தொழிலாளர்கள்,வண்ண திரைப்படங்கள் காட்டும் கொட்டகைகளும் என நகர சூழல் மெதுவாய் அவனுக்கு பழகிவிடுகின்றது.

அம்மாசியை முன்னிறுத்தி சுழலும் கதை அவனுக்கு பிரியமான தெருக் கூத்தை விஸ்தாரமாய் அலசுகின்றது.அர்ஜுனன் கூத்தில் அம்மாசி அர்ஜுனனை வேடம் தரித்து இராப்பொழுதொன்றில் கூத்து கட்டும் காட்சிகளின் விவரிப்பு எதையோ நாம் இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை மீண்டும் நினைவூட்டுவதாய் உள்ளது.தோல்பாவை கூத்து,தெருகூத்து,ஒயிலாட்டம்,கரகம் என மெல்ல அழிந்து வரும் கலைகள் பல.அடுத்த தலைமுறைக்கு படம் காட்டி விளக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.மேலும் துப்பாக்கி கொண்டு தூரத்து மலையில் கட்டி இருக்கும் ஆட்டை சுடும் கிராமங்களுக்கு இடையே நடக்கும் விளையாட்டு குறித்த செய்தி புதிதாய் இருந்தது.

நாவலில் சோகம் படர தொடங்குவது அபரஞ்சியின் மரணத்திற்கு பிறகு..தனது இரு மகன்களும் படித்து உருப்பட நினைத்த அம்மாசியின் எண்ணம் நிறைவேறாது அவன் கனவிலும் நினைத்திடா பாதைகளில் அவர்கள் தம் வாழ்வை அமைத்து கொள்கின்றனர். இக்கதையில் தலைமுறை இடைவெளியை அழகாய் சொன்னதோடு அந்தந்த தலைமுறையின் மாற்றங்களை இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை பெற்றவர்களாய் இக்கதை மாந்தர்கள் உள்ளனர்.விளிம்பு நிலை குறித்த இலக்கியமாய் இருப்பினும் நெஞ்சை பிழியும் சோகம் எதுவும் இன்றி வெகு இயல்பாய்,அதன் போக்கில் கதையை சொல்லி இருக்கும் விதம் அருமை.

வெளியீடு - தமிழினி
விலை - 65 ரூபாய்


More than a Blog Aggregator

by த.ஜீவராஜ்

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவருமான . தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை காலம் ஆனார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.





More than a Blog Aggregator

by த.ஜீவராஜ்

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவருமான . தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை காலம் ஆனார்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.





More than a Blog Aggregator

by தம்பலகாமம்.க.வேலாயுதம்

மண்டையைப் போட்டுடைத்து
மனத்தினில் கருத்துச் சேர்த்து
விண்டிட நினைத்த நல்ல
இலக்கிய முயற்சி எல்லாம்
பண்டைய எனது வீட்டில்
பத்திரமாக வைத் தேன்
கண் தழைக் குளத்து வெள்ளம்
கவர்ந்தெங்கோ சென்ற தம்மா



கடலெனப் பெருகி வந்த
கந்தளாய் உடைப்பு வெள்ளம்
அடவிகள் மற்றும்
அனைத்தையும் கடந்து வந்து
உடமைகள் வீட்டுச் சாமான்
ஒவ்வொன்றாய்க் கவர்ந்ததோடு
பெட்டியில் எழுதி வைத்த
பிரதிகள் அனைத்தும் நாசம்



பூட்டிய அலுமாரிக்குள்
புகுந்த அப் பொல்லா வெள்ளம்
கட்டுரை கவிதை நல்ல
கதைகளைச் சிதைத்ததோடு
விட்டதா? அதனைச் சாய்த்து
வெளியிலே இழுத்தெறிந்து
நட்டங்கள் செய்த நாளை
நான் எண்ணிக் கலங்குகின்றேன்




வெள்ளத்தின் கொடுமை நீங்கி
வெறிச் சோடிக்கிடந்த ஊரில்
கள்ளர்கள் புகுந்து செய்த
கஷ்டங்கள் ஒன்றிரண்டா?
வள்ளலாய் வாழ்ந்த மக்கள்
வறுமையில் கிடந்துழல
அமைதியைக் குலைத்தார் அந்தோ!


08.02.1987 நன்றி சிந்தாமணி வாரஇதழ்



தம்பலகாமம்.க.வேலாயுதம்




{ படங்கள் இணையத்தில் இருந்து }

கருத்துகள் இல்லை: