வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

கோரிக்கையை ஏற்ற முதல்வர்! நான் எனது முந்தைய பதிவான "நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?" http://tamilcatholican.blogspot.com/2009/05/blog-post_23.htmlவில் முதல்வர், தனது மகனை முதல்வராக்க வேண்டுமென சொல்லியிருந்தேன். ஆனால் முதல்வராக்காவிட்டாலும் குறைந்தபட்சம் துணை முதல்வராகவாவது ஆக்கியுள்ளார். அதற்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். இன்னும் கொஞ்சம் நாட்களில் ஸ்டாலின் முதல்வரானாலும் ஆவார். இது

எங்களால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் : பாகிஸ்தான் ராணுவம் அதிரடி
 
இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்திவந்தது.  சமீபத்தில் போரில் விடுதலைப்புலிகளை  முற்றிலுமாக அழித்துவிட்டதாக இலங்கை ராணுவத்தினர் அறிவித்தனர்.


விடுதலைப்புலிகளூடனான போரில் இலங்கை தீவிர தாக்குதலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நாடுகள் ஆயுத மற்றும் ஆட்கள் உதவி செய்துவந்ததாக பேசப்பட்டது.

இந்நிலையில் ''நாங்கள் உதவியதால்தான் இலங்கை ராணுவத்தால் விடுதலைப்புலிகளை வெல்ல முடிந்தது என்று பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
மேலும்,  2008-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா பாகிஸ்தான் சென்று அந்த நாட்டு தளபதி பர்வீஸ் கயானியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கை போருக்கு பல்வேறு உதவிகளை அவர் கேட்டார்.


அதன்படி ஏராளமான உதவிகளை பாகிஸ்தான் ராணுவம் செய்தது. பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதிகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்தது.

இந்த உதவிக்கு பிறகு தான் இலங்கை ராணுவம் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததாகவும் அந்த ராணுவ அதிகாரி கூறியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் ஈழ தேசிய தலைவர் சிங்கள படையால் கொல்லப்பட்டு விட்டதாக உலகுக்கு அந்த அரசு தெரிவித்த பொய் இப்போது சாயம் வெளுக்க துவங்கியுள்ளது.முதலில் பல பொய்களை சொல்லிவந்த சிங்கள அரசு, பின்னர் மக்கள் அதை நம்பாததால் பிரபாகரன் உடல் என சொல்லப்படும் ஒரு பூத உடலை ராணுவ ஊடகம் மூலம் மற்றும் எச்ச பொறுக்கி இந்திய ஆங்கில ஊடகம் வழியாக அகில உலகுக்கு காண்பித்தனர். இவ்வளவு செய்த பிறகும் அதை நம்பாததால், தமிழ் இன துரோகி கருணா மூலம் இறந்தவர் தேசிய தலைமைப்பீடம் என கூற வைத்தனர்.எல்லா சிங்களவர்களும் பிரபா கொல்லப்பட்டு விட்டார் என நம்பி கொண்டு இருக்கும் போது, வெகு சிலர் மட்டும் அப்படி நடந்து இருக்க வாய்ப்பு மிக குறைவு என ஆணித்திருத்தமாக கதைத்து கொண்டு இருந்தனர்.அவர்களின் கூற்று உண்மை தான் என இலங்கை அரசே கண கச்சிதமாக தற்போது உணர்த்தி உள்ளது. நேற்று ஒரு தகவலை இலங்கை அரசு வெளியிட்டு இருந்தது. அதில் தேசிய தலைவரின் பெற்றோர்கள் வவுனியா (வதை) முகாமில் தஞ்சம் அடைந்து உள்ளதாகவும், மேலும் அவர்கள் போர் உக்கிரம் அடையும் முன்னரே இந்த பகுதிக்கு வந்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளது.இங்கு தான் அவர்களின் முட்டாள் தனத்தை உலகுக்கு வெளிப்படையாக காண்பித்து உள்ளனர்.இறந்ததாக சொல்லப்படும் தலைவரின் உடலை அடையாளம் காட்ட கருணா மற்றும் தயா இருவரையும் அழைத்து சென்று அவர்கள் இந்த உடல் சத்தியமாக பிரபா அவர்களின் பூத உடல் தான் என அன்பாக சொல்ல வைத்தனர்.ஆனால் தலமை பீடத்தை ஈன்று எடுத்த பெற்றொரே அவர்கள் முகாம்களில் இருக்கும்போது பிரபா என்று கூறப்படும் நபரின் உடலை ஏன் துரோகி கருணா கொண்டு அடையாளம் காண சொல்ல வேண்டும்? ஏனென்றால் அவர்களுக்கு தன் சிங்கமகன் பற்றி நன்றாக தெரியும். இலங்கை அரசால் புணயப்பட்ட அந்த மாய உடலை பற்றிய உண்மையை வெளியே சொல்லிவிடுவார்களோ என தயக்கம் அரசுக்கு இருந்தது.மேலும் உண்மையாகவே தேசிய தலைவரின் பெற்றோர்கள் அங்கு உள்ளனரா என்பது குறித்து சந்தேகம் வழுப்பேற்று உள்ளதுஆகவே, கடைசி கட்டத்தில் அங்கு நடந்த விடயங்கள் குறித்து உண்மை வெகு சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த சிலர் உலகின் முன் வெகு விரைவில் வருவர். உண்மையை ஓங்கி ஒலிக்க செய்து இலங்கை அரசின் முகத்தில் கரியை பூசுவர்.அதுவரை, இலங்கை புலனாய்வு சொல்லும் பல தகவல்களை மெய் என நம்பி எமாறவேண்டாம்.ஈழ தாகம் இனிதே நிறைவேறும். அந்த தருணம் மிக விரைவில் வருகின்றது. நம்பிக்கையுடன் காத்து இருப்போம்..


More than a Blog Aggregator

by சந்தனமுல்லை
ஜமதக்னி - தாஸ் கேபிடலை தமிழில் மொழி பெயர்த்தவர். ஹிக்கின்பாதம்ஸ்-ல் டிஸ்பிளே பகுதியில் பார்த்தேன் என்று பெருமையாகச் சொல்வார் பெரிம்மா, சென்னை சென்றுத் திரும்பும் தினங்களில்! என் ஆயாவின் சகோதரி லீலாவதியின் கணவர் - ஜம்தக்னி! இவரைப் பற்றிய சுவாரசியக் குறிப்பொன்று - ஆயாவின் தந்தை, விடுதலைப்போராட்டதில் கைதாகி ஜெயிலில் இருந்தபோது அதே ஜெயிலில் இருந்தவர் ஜம்தக்னி. ஜம்தக்னி பெரிய படிப்பாளி/ பட்டதாரி என்பதால் வேறு கிளாஸும், ஆயாவின் தந்தை C கிளாசிலும் இருந்திருக்கிறார்கள். உணவும் வேறு வேறு போல. C கிளாசில் இருப்பவர்களுக்கு சோளக்கஞ்சி/சோளக்களி. தாத்தாவிற்கு அது ஒவ்வாததினால், ஜமதக்னி தனது அரிசி உணவை தாத்தாவிற்குக் கொடுத்துவிட்டு, தாத்தாவின் உணவை எடுத்துக் கொள்வாராம். அப்போது லீலாவதி அம்மையார், 9 வயதிலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதை அறிந்து அவரை தனக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு தாத்தாவிடம் உறுதி வாங்கிக் கொண்டிருக்கிறார். விடுதலையான பின்பு அவ்வாறே திருமணமும் செய்துக் கொண்டிருக்கிறார்!!

அவரது நாட்டுடமையாக்கப் பட்ட எழுத்துகளைப் பற்றிய பதிவினை RV-யின் தளத்தில் பார்த்தேன். பதிந்து வைக்கத் தோன்றியது!

இந்தத் தியாகிகளுக்கு இருந்த வேட்கையும், விழிப்பும் அவர்களது அடுத்தத் தலைமுறைக்கு இருந்ததா என்றால் சந்தேகமே! எங்கே தோல்வியுறுகிறார்கள் இவர்கள்?தமது அறிவைக் கடத்துவதிலும், தொலைநோக்கு சிந்தனை இல்லாமையும், கல்வியறிவுக் குறித்த சிந்தனையற்றிருப்பதும்?!(சுயநலமாக இருக்கத் தவறியதன் விளைவு என்றும் கொள்ளலாம்!) பெரும்பாலான தியாகிகளின் குடும்பங்களில் இந்தநிலையைக் காணலாம். தூத்துகுடியில் சாலையோரத்தில் வசித்துவந்த கப்பலோட்டிய தமிழனின் வாரிசுகள் - அனைவருக்கும் தெரிந்த உதாரணம். வாழ்வாதாரங்களுக்காகவும், தகவமைத்துக் கொள்வதுமே பெரும் சவாலாக இருக்கிறது பல தியாகிகளின் வாரிசுகளுக்கு! சில தியாகிகளின் வாரிசுகள் நல்ல நிலையில் இருக்கலாம், ஆனால் சுதந்திர போராட்டத்திற்காக இருந்த அனைத்தையும் வாரிக் கொடுத்த பல வீரர்களின் வாரிசுகளின் நிலை இதுதான்!
இதற்க்கு முன்னர் ''என்னை கவர்ந்தவர்கள்'' பதிவிற்கு அழைத்த மதிப்பிற்குரிய திரு ,ராகவன் அண்ணன் அவர்கள் இப்போது என்னை திருடியவர் பதிவிற்கு அழைத்து உள்ளார்.அவருக்கு என் நன்றிகள்.....என்னை கவர்ந்தவர்கள் பதிவில் மாவீரன் நேதாஜி பற்றி எழுதி இருந்தேன் என்னை திருடியவர் என்றாலும் நேதாஜி பற்றித்தான் எழுத தோன்றுகிறது.ஆனால் ? இப்போது என்னை திருடியவராக நான் எழுத இருப்பது செஞ்சோற்று கடனுக்காக தன்

கருத்துகள் இல்லை: