ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

ஒரு காலத்தில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு தோதாகவே இருந்து வந்தது. டி.என்.செஷன் தலைமை தேர்தல் ஆணையராக வந்த பிறகு நிலைமை மாறியது. அவர் அரசியல் சட்ட அந்தஸ்த்துக்கு உட்பட்டு நடுநிலைமையுடன் பணிபுரிந்துவந்தார். இவரின் தலைமைக்குப்பிறகுதான் தேர்தல்கமிஷனின் மீதான மக்களின் புரிதல் நம்பிக்கை அளித்தது. ஆனால் தற்பொழுது கோபால்சாமிக்கும், நவீஞ்சவ்ளாவுக்கும் இடையில் ஏற்ப்பட்ட பிரச்சனைகள் மாண்புமிகு குடியரசுத்தலைவரிடம் முறையிடும் அளவுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் தள்ளப்பட்டார். நவீன்சாவ்ளாவை நீக்க தம்மால் முடியாது என்று அவருக்கு நன்றாக தெரியும். இப்பிரச்சனையை குடியரசுத்தலைவரிடம் கொண்டு சென்றதின் மூலம் இந்திய மக்கள் அனைவரும் தெரிந்துகொண்டனர். மேலும் நவீன்சாவ்லா ஷா கமிஷனால் அரசு பதவி எதையும் வகிக்க தகுதி இல்லாதவர் என்று கடுமையாக குற்றஞ்சாட்டப்பட்டவர். கோபால்சாமி ஒரு நேர்மையான அதிகாரி. நவீன்சாவ்லா காங்கரெஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர். கோபால்சாமி இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பிய உடன் மத்திய அமைச்சர் கோபால் சாமீ சொல்வது போல் நவீனை நீக்க முடியாது என்று அறிக்கை விடுகிறார். நவீந்தன் அடுத்த தலைமை தேர்தல் ஆணையர் என்றும், கோபால்சாமி பாரதிய ஜனதா கட்சிக்கு நெருக்கமானவர் எனவும் அறிக்கையில் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தனது முடிவை தெரிவுப்பதற்கு முன்னரே இப்படி அறிக்கை விடுத்ததன் மூலம் குடியரசுத்தலைவரும் இப்படிதான் தங்கள் முடிவும் இர்ருக்க வேண்டும் என்பதுபோல் இருந்தது. இந்நாட்டில் நேர்மைக்கு கிடைக்கும் பரிசை பார்த்தீர்களா? நவீனை தலைமை தேர்தல் ஆணையராக கொண்டுதான் வரும் மக்களவை தேர்தலை நாம் சந்திக்க வேண்டும்.இனி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி சொல்வதுபோல்தான் செயல்படும். இதைத்தானே ஆளும் கட்சியும் எதிர்பார்த்தது. இத் தேர்தல் ந"வீண்" தேர்தல். நேர்மைக்கு அரோகரா.
சுனா.சாமி அழுகிய முட்டை அபிசேகம் நடந்த உடனேயே தானாடா விட்டாலும் தன் குடுமி ஆடும் என நிருபித்த பி.ஜே.பி இல.கணேசன்
சுனா.சாமி அழுகிய முட்டை அபிசேகம் நடந்த உடனேயே தானாடா விட்டாலும் தன் குடுமி ஆடும் என நிருபித்த பி.ஜே.பி இல.கணேசன்
நண்பர்களே எனது முயற்ச்சிஇனால் கருணாலயம் அறக்கட்டளை என்ற புதிய அமைப்பை உருவாக்கி உள்ளேன். இதன் மூலம் பல நல்ல நற்காரியங்களை செய்ய உத்தேசித்து உள்ளேன். எல்லாம் உங்களைப்போன்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களின் உதவியோடுதான்.

ஈழப்பிரச்சனை:தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பழனி கிளை கூட்டம் அடிவாரம் அருள்ஜோதி வீதியில் உள்ள எம்.என்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் என்.ஹரி ஹரமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் என்.நாராயணன் விடுத்துள்ள கோரிக்கை நகல் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றபபட்டது.

தீர்மானத்தில், மத்திய அரசு இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு உறதியான முறையில் வலியுறுத்தும் வகையில் இந்தியாவின் அதிருப்தியினையும், கண்டனத்தினையும்தெரிவித்து நிலைமைகளை உணர்த்திட வேண்டும்.

மனித நேயமற்ற முறையில் அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, வீடு, வாசல், உடைமைகளை இழந்து அகதிகள் ஆவதும், நம் தமிழ் சகோதரிகளின் கவுரவமும்,மானமும் பாதிக்கப்படாமல் இருந்திடவும், உடனடி அனைத்து நடவடிக்கை களையும் எடுத்திட வேண்டும்.

அப்பாவி தமிழர்களுக்கு உணவு பொருட்களும், மருந்துகளும் ஏனைய தேவையான பொருட்களும் உடனடி அனுப்பி வைக்கப்பட வேண்டும். இரண்டு பக்கத்திலிருந்தும் போர் நிறுத்தம் நிறுத்தம் செயல்பட உடனே மத்திய அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நாம் தேச பக்தர்கள், நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்த சிந்தனை யினையும் சொல்லினையும், செயலினையும் ஆதரிக்க மாட்டோம்.
அதே சமயம் இலங்கை தமிழர் பிரச்சினை என்றாலே தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை மனதில் வைத்துக் கொண்டு மட்டுமே கையாளுவது முறையாகாது.

நமது தமிழ் சகோதர, சகோதரிகள் அல்லல் படுவதை, அகதிகளாகப்படுவதினை இனியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்கின்ற நமது நிலைபாட்டினை தெள்ளத் தெளிவாக்கிடுவோம்.

இலங்கை தமிழர் நலனுக்காக நமது நாட்டின் இறையாண்மையினை பாதிக்காத வகையில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் நடவடிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் தமிழக மெங்கும் பிராமணர் சங்கம் ஆதரவு தரும்.

இந்த எழவத்தான் பி.ஜே.பி, காங்கிரசு, மனுதர்ம கம்யூனிஸ்டு, தி.மு.க, மற்றும் ம.பொ.சியின் வாரிசுகள் அனைவரும் சொல்லிகிட்டு இருக்கிறானுக. அப்ப நாம புரிஞ்சிக்க வேண்டியது என்ன?

ஈழப்பிரச்சனை:தமிழ்நாடு பிராமணர் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் பழனி கிளை கூட்டம் அடிவாரம் அருள்ஜோதி வீதியில் உள்ள எம்.என்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் என்.ஹரி ஹரமுத்து தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் என்.நாராயணன் விடுத்துள்ள கோரிக்கை நகல் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறை வேற்றபபட்டது.

தீர்மானத்தில், மத்திய அரசு இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை காத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு உறதியான முறையில் வலியுறுத்தும் வகையில் இந்தியாவின் அதிருப்தியினையும், கண்டனத்தினையும்தெரிவித்து நிலைமைகளை உணர்த்திட வேண்டும்.

மனித நேயமற்ற முறையில் அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவது, வீடு, வாசல், உடைமைகளை இழந்து அகதிகள் ஆவதும், நம் தமிழ் சகோதரிகளின் கவுரவமும்,மானமும் பாதிக்கப்படாமல் இருந்திடவும், உடனடி அனைத்து நடவடிக்கை களையும் எடுத்திட வேண்டும்.

அப்பாவி தமிழர்களுக்கு உணவு பொருட்களும், மருந்துகளும் ஏனைய தேவையான பொருட்களும் உடனடி அனுப்பி வைக்கப்பட வேண்டும். இரண்டு பக்கத்திலிருந்தும் போர் நிறுத்தம் நிறுத்தம் செயல்பட உடனே மத்திய அரசு முனைப்புடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

நாம் தேச பக்தர்கள், நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்த சிந்தனை யினையும் சொல்லினையும், செயலினையும் ஆதரிக்க மாட்டோம்.
அதே சமயம் இலங்கை தமிழர் பிரச்சினை என்றாலே தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை மனதில் வைத்துக் கொண்டு மட்டுமே கையாளுவது முறையாகாது.

நமது தமிழ் சகோதர, சகோதரிகள் அல்லல் படுவதை, அகதிகளாகப்படுவதினை இனியும் சகித்துக்கொள்ள மாட்டோம் என்கின்ற நமது நிலைபாட்டினை தெள்ளத் தெளிவாக்கிடுவோம்.

இலங்கை தமிழர் நலனுக்காக நமது நாட்டின் இறையாண்மையினை பாதிக்காத வகையில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளும் நடவடிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் தமிழக மெங்கும் பிராமணர் சங்கம் ஆதரவு தரும்.

இந்த எழவத்தான் பி.ஜே.பி, காங்கிரசு, மனுதர்ம கம்யூனிஸ்டு, தி.மு.க, மற்றும் ம.பொ.சியின் வாரிசுகள் அனைவரும் சொல்லிகிட்டு இருக்கிறானுக. அப்ப நாம புரிஞ்சிக்க வேண்டியது என்ன?

கருத்துகள் இல்லை: