ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31



More than a Blog Aggregator

by Tamilan
Blog எழுதுவதற்காகப் படங்கள் எடுக்க அனுமதியளிக்க வேண்டும் என்ற எனது கோரிக்கைக்குச் சந்தோஷமாகச் சம்மதித்த Fatherக்கு முதல் நன்றியும், வணக்கமும். வழிகாட்டிய ஊழியர்களுக்கும் நன்றி. திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள தேவாலயம். நகரத்தின் பரபரப்பான சாலையிலும் அமைதியைப் போதிக்கும் ஆலயம்.ஆலயத்தைப் பற்றிய புத்தகம் ஏதேனும் கிடைக்குமா எனத் தேடினேன். இன்றுவரை கிட்டவில்லை. இணையத்தில் தெரிந்தவகைகளில் தேடியும் தேவையான தகவல் கிடைக்கவில்லை. தகவல் எங்கிருந்து வந்தாலும் பதிவில் இணைக்கிறேன்.

முதல் ஐந்து வகுப்பு வரை மதுரையில் கிறித்துவப் பள்ளியில் பயின்றதால் தேவாலயங்களின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. பல சர்ச்சுகளுக்குச் சென்றிருக்கிறேன். அனைத்திலும் நான் கண்டது அமைதியை மட்டுமே. இறைவனின் சிலைக்கு நேராக ஒழுங்கான வரிசையில் அமைக்கப்பட்டுள்ள பெஞ்ச், அமைதியாகத் தங்கள் கவலைகளையோ, மகிழ்ச்சியையோ இறைவனோடு ஒருமுகமாகப் பகிர்ந்து கொள்ளும் மக்கள் இவை தேவாலயங்களின் பிரத்தியேக அடையாளங்கள். தேவாலயத்தை நிதானமாகப் படமெடுக்க ஒத்துழைத்த அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.




ஈழம் குறித்த சினிமாவை பாரதிராஜா இயக்குகிறார்


n1527581102_30330392_750589.jpg



ஈழப் போராட்டத்தின் முப்பாதாண்டுகால ஆயுதப் போராட்டத்தின் கசப்பான முடிவு பாரதிராஜாவை கடுமையாக பாதித்திருக்கிறது. அவர் விரைவில் ஈழ மக்களின் தமிழீழக் கோரிக்கை குறித்த தமிழ் சினிமா ஒன்றை இயக்கப் போகிறார்.
 
முப்பதாண்டுகால ஆயுதப் போரில் பிரபாகரனின் பங்கும், போராளிகளின் விடுதலை வேட்கையையும் எடுத்துச் சொல்லும் வகையில் அமையப் போகும் இந்தப் படத்தின் திரைக்கதை முடியும் தருவாயில் இருக்கிறது.
 முழுக்க முழுக்க புது முகங்களே நடிக்கும் இந்தப் படத்தில் புலிகளின் பகுதியையே மையமாக வைத்து கதையை நகர்த்தப் போகிறார்.
 
அத்தோடு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஈழ மக்களுக்கு செய்த துரோகத்தையும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்றொழிக்கப்பட இந்தியா எவ்வாறு காரணமாக இருந்தது என்பதனையும், சமகாலத்தில் தமிழ் மக்கள் சந்தித்த இனப் போராட்டத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதத்தில் இந்த திரைப்படம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.


http://www.tamilskynews.com/index.php?option=com_content&view=article&id=3584:2009-05-31-09-37-02&catid=39:2008-09-25-16-35-23&Itemid=56


http://i36.tinypic.com/2iht6qu.jpg

ஐ.நா. தமிழர்களைத் தோல்வியடைய வைத்துள்ளது – சுரேன் சுரேந்திரன்

    un-logo-300x2701.jpg

suren-surendiran-01சிறிலங்கா இராணுவத்தால் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த அறிக்கைகளின் பின்பும் ஐ.நா.வானது நடவடிக்கை எடுக்கப் பயப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியமும் மற்றவர்களும் உடனடியாகச் செயற்பட வேண்டும் என பிரித்தானியா கார்டியன் பத்திரிகையில் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வானது தனது பலவீனத்தையும், மனதாபிமானத்தைக் காப்பாற்ற முடியாமையையும், மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளது.

ஐ.நாவின் செயலின்மையால் ர்வான்டா, போஸ்னியா, காசா, மற்றும் டார்வர் போன்ற நாடுகளில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படடார்கள் இன்னும் பலர் இடம்பெயரப்பட்டார்கள் என சுரேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தும் பாடங்கள் ஐ.நாவால் படிக்கப்படவில்லை.  உலகத் தமிழ் மக்கள், அரசியல் ஆராய்வாரள்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் உதவி பணியகங்கள் சேர்ந்து பல எச்சரிக்கைகள் விடுத்திருந்தும் ஐ.நா. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைப் பாதிப்புள்ளாக்கியுள்ளது.

ஒரு போர்நிறுத்தத்தைக் கொண்டுவரவோ அல்லது பாதுகாப்பு வலயங்களுக்குச் சென்று மக்களின் அவலநிலைகளைப் பார்க்கவோ ஐ.நா ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் கார்டியனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கைகளின் விவரங்களும் மற்றும் மக்களின் மனிதாபிமான அவலத்தின் தகவல்களும் ஐ.நா.வுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளன என்று அண்மையில் வெளிவந்த நம்பக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.  இவ் உண்மைகளும் இன்னும் ஐ.நாவால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனரக ஆயுதங்களும் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் சிறிலங்கா இராணுவத்தால் பாதுகாப்பு வலயங்களில் இருந்த மக்கள் மீது பாவிக்கப்பட்டதற்கு ஆதாரங்களான செய்மதிப் படங்களும் ஐ.நாவிடம் இருந்துள்ளன.

ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கைகளும், செயலின்மையும், அவரின் கடமையை முழுதாக உதாசீனப்படுத்தியுள்ளதையே தமிழர்களுக்கு காட்டியுள்ளது.

ஒரு முறையான சுயாதீன விசாரணையே சிறிலங்காவின் இன அழிப்புத் தொடர்பான உண்மைகளையும் அதில் ஐ.நாவின் பங்கையும் வெளியே கொண்டுவரும் என்று  தமிழர்கள் நம்புகின்றார்கள்.

சட்ட வழிகள் ஊடாக சிறிலங்காவையும் மற்றும் ஐ.நா. அதிகாரிகளையும் விளங்குவதும், மற்றும் இடப்பெயர்ந்த தமிழர்களின் துன்பங்களை இல்லாமல் செய்வதும், இப்பொழுது, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, தென்.ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய மனிதாபிமான கோட்பாடுகளை நம்பும் நாடுகள் இணைந்து செயற்படுவதிலேயே உள்ளது, என கார்டியன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.





இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

301208_1.jpg



http://www.tamilwin.com/view.php?23EWvN200fjYG2eeCG5P3ba59Cw4ddY2f3cccvpM3d44WQF2a021LQ3e


ஐ.நா. தமிழர்களைத் தோல்வியடைய வைத்துள்ளது – சுரேன் சுரேந்திரன்

    un-logo-300x2701.jpg

suren-surendiran-01சிறிலங்கா இராணுவத்தால் 20,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்த அறிக்கைகளின் பின்பும் ஐ.நா.வானது நடவடிக்கை எடுக்கப் பயப்படும்போது, ஐரோப்பிய ஒன்றியமும் மற்றவர்களும் உடனடியாகச் செயற்பட வேண்டும் என பிரித்தானியா கார்டியன் பத்திரிகையில் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வானது தனது பலவீனத்தையும், மனதாபிமானத்தைக் காப்பாற்ற முடியாமையையும், மீண்டும் உலகுக்குக் காட்டியுள்ளது.

ஐ.நாவின் செயலின்மையால் ர்வான்டா, போஸ்னியா, காசா, மற்றும் டார்வர் போன்ற நாடுகளில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படடார்கள் இன்னும் பலர் இடம்பெயரப்பட்டார்கள் என சுரேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருந்தும் பாடங்கள் ஐ.நாவால் படிக்கப்படவில்லை.  உலகத் தமிழ் மக்கள், அரசியல் ஆராய்வாரள்கள், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் உதவி பணியகங்கள் சேர்ந்து பல எச்சரிக்கைகள் விடுத்திருந்தும் ஐ.நா. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைப் பாதிப்புள்ளாக்கியுள்ளது.

ஒரு போர்நிறுத்தத்தைக் கொண்டுவரவோ அல்லது பாதுகாப்பு வலயங்களுக்குச் சென்று மக்களின் அவலநிலைகளைப் பார்க்கவோ ஐ.நா ஒரு முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மேலும் கார்டியனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கைகளின் விவரங்களும் மற்றும் மக்களின் மனிதாபிமான அவலத்தின் தகவல்களும் ஐ.நா.வுக்கு ஏற்கனவே தெரிந்துள்ளன என்று அண்மையில் வெளிவந்த நம்பக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.  இவ் உண்மைகளும் இன்னும் ஐ.நாவால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனரக ஆயுதங்களும் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களும் சிறிலங்கா இராணுவத்தால் பாதுகாப்பு வலயங்களில் இருந்த மக்கள் மீது பாவிக்கப்பட்டதற்கு ஆதாரங்களான செய்மதிப் படங்களும் ஐ.நாவிடம் இருந்துள்ளன.

ஐ.நாவின் செயலாளர் நாயகத்தின் நடவடிக்கைகளும், செயலின்மையும், அவரின் கடமையை முழுதாக உதாசீனப்படுத்தியுள்ளதையே தமிழர்களுக்கு காட்டியுள்ளது.

ஒரு முறையான சுயாதீன விசாரணையே சிறிலங்காவின் இன அழிப்புத் தொடர்பான உண்மைகளையும் அதில் ஐ.நாவின் பங்கையும் வெளியே கொண்டுவரும் என்று  தமிழர்கள் நம்புகின்றார்கள்.

சட்ட வழிகள் ஊடாக சிறிலங்காவையும் மற்றும் ஐ.நா. அதிகாரிகளையும் விளங்குவதும், மற்றும் இடப்பெயர்ந்த தமிழர்களின் துன்பங்களை இல்லாமல் செய்வதும், இப்பொழுது, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, தென்.ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய மனிதாபிமான கோட்பாடுகளை நம்பும் நாடுகள் இணைந்து செயற்படுவதிலேயே உள்ளது, என கார்டியன் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.





இறந்த பெண் போராளியை இழிவு படுத்தியுள்ள சிறிலங்கா இராணுவம்: மனித உரிமை நிலவரம் தொடர்பில் விசாரிக்க ஐ.நா.விடம் கோரிக்கை

301208_1.jpg



http://www.tamilwin.com/view.php?23EWvN200fjYG2eeCG5P3ba59Cw4ddY2f3cccvpM3d44WQF2a021LQ3e


கருத்துகள் இல்லை: