ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

ஊடகங்கள் சொல்வதை கேட்க வேண்டாம். ஆனால் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் சுயநல கிருமிகள் ஆனால் நாம் முதலில் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கிற எம் மக்களை காப்பாற்றுவோம் பின்னர் இந்த நச்சு கிருமிகளை அழிக்கலாம். உங்களுக்கு இன்னும் இந்த கிருமிகள் மேல் நம்பிக்கை உள்ளதா மக்களே. இந்திய திருநாட்டில் நெடுங்கலமாய் தமிழனம் ஏமாற்றப்பட்டு வருகிறது என்பது வெகு சிலரால் தான் உணர முடிகிறது. தந்தை பெரியார் சொன்னது போல நாம் எல்லாம் அடிமைகள் தான் ஆனால் இந்தியாவின் குடிமக்கள் என்ற போர்வையில். வேற எந்த மாநிலத்திலும் அந்த மாநிலத்தாரை தவிர எவரும் இந்த அளவு நிம்மதியாக இருக்க இயலாது. "வந்தவரை வாழ வைக்கும் தமிழ்நாடு" என சரியாய் தான் சொல்லி இருக்கிறார்கள்.

எல்லா இந்திய ஊடகங்களும் தமிழனை ஏமாற்றும் முயற்சியில் முழு வெற்றி அடைந்துள்ளனர் என்பது தான் உண்மை. ஆனால் நாம் நம் முதல்வரை குறை கூறுவுது ஏன் தெரியுமா. தமிழ் இன பிரதிநிதியாய் அவரை போற்றும் நம் மக்களக்கு அவரின் இந்த செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது. காங்கிரஸ் என்னும் நச்சு பாம்பு தான் நடந்த அனைத்துக்கும் காரணம் என தெரிந்தும் அவருடன் உறவாடுவதை எந்த தமிழனாலும் ஏற்று கொள்ள இயலாது . எந்த ஒரு போராட்டமும் முன்னே செல்ல ஒரு தலைவர் அவசியம் என்ன தான் சிலர் முதல்வரை ஏற்று கொள்ளா விட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு தலைவர் இப்படி செய்வது நமக்கு எப்படி மன அமைதியை தரும். நீங்களோ நானோ சென்று நடுவண் அரசிடம் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதீர் எங்கள் ஈழ ரத்த உறவுகளை காப்பாற்றுங்கள் என சொல்ல முடியுமா. நம் ஒவ்வொரு தமிழனாலும் போராட இயலாது என்று தானே நம் முதல்வரை அனுப்பினோம் ஆனால தன் குடும்பத்தின் அரசியல் எதிர் காலத்திர்க்காகவும் சுயநலம் பேணவும் நம் முதல்வர் இப்படி செய்யலாமா.

ஒரு கோணத்தில் எப்படி இருந்தாலும் மக்கள் சபையில் முதல்வர் செய்த நம்பிக்கை துரோகம் தான் முன்னில் நிற்கும். தமிழரின் பால் ஒற்றுமை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

உளமாற்று வித்தைகள் என சிலர் இவற்றை கூறினாலும் உண்மை கசக்க தானே செய்யும். எம் ரத்த உறவுகள் எம்மை காப்பற்றும் என எண்ணி இருந்த ஒவ்வொரு ஈழ மனமும் எவ்வளவு ஏமாற்றம் அடைந்து இருக்கும். தன்னிகரில்லா ஒரு தூய தலைவன் இந்த நெடிய சுதந்திர போராட்டத்தில் அவர் தம் வாழ்வு ஆதாரமாய் விளங்கிய ஒருவனும் உயிருடன் உள்ளனா இல்லையா என பதறும் அந்த உயிர்களுக்கு விடை சொல்ல போவது யார். நாளை நமக்கும் இந்த நிலை ஏற்படாதென என்ன நிச்சியம். இத்துணை விடயங்கள் நடந்து இருந்தும் இன்னும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசுக்கு தமிழ் மக்கள் நாம் என்ன உணர்த்த போகிறோம். ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை முறியடிக்க இந்திய, சீன அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி யார் குரல் கொடுக்க போகிறோம். நாமும் இந்திய பிரஜைகள் தானே பின்னர் ஏன் இந்த இந்திய அரசுக்கு நம் மேல கோபம். புரியவில்லை ராஜீவை கொன்றதாலா, ஒரு உயிருக்காக இத்துணை உயிர்கள் வேண்டுமா . ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்க அமைக்க பட்ட ஜெயின் கமிசன் கேட்ட பல கேள்விகள் இன்னும் புதிராகவே உள்ளன. அந்த விசயத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்க பட்டு இருக்கிறது. கேள்விகள் பல. நீங்களும் சிந்தனை செய்யுங்கள்.

உலகம் தமிழர்களை வஞ்சிக்கிறது தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
ஊடகங்கள் சொல்வதை கேட்க வேண்டாம். ஆனால் உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள். தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் சுயநல கிருமிகள் ஆனால் நாம் முதலில் ஈழத்தில் அழிந்து கொண்டு இருக்கிற எம் மக்களை காப்பாற்றுவோம் பின்னர் இந்த நச்சு கிருமிகளை அழிக்கலாம். உங்களுக்கு இன்னும் இந்த கிருமிகள் மேல் நம்பிக்கை உள்ளதா மக்களே. இந்திய திருநாட்டில் நெடுங்கலமாய் தமிழனம் ஏமாற்றப்பட்டு வருகிறது என்பது வெகு சிலரால் தான் உணர முடிகிறது. தந்தை பெரியார் சொன்னது போல நாம் எல்லாம் அடிமைகள் தான் ஆனால் இந்தியாவின் குடிமக்கள் என்ற போர்வையில். வேற எந்த மாநிலத்திலும் அந்த மாநிலத்தாரை தவிர எவரும் இந்த அளவு நிம்மதியாக இருக்க இயலாது. "வந்தவரை வாழ வைக்கும் தமிழ்நாடு" என சரியாய் தான் சொல்லி இருக்கிறார்கள்.

எல்லா இந்திய ஊடகங்களும் தமிழனை ஏமாற்றும் முயற்சியில் முழு வெற்றி அடைந்துள்ளனர் என்பது தான் உண்மை. ஆனால் நாம் நம் முதல்வரை குறை கூறுவுது ஏன் தெரியுமா. தமிழ் இன பிரதிநிதியாய் அவரை போற்றும் நம் மக்களக்கு அவரின் இந்த செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது. காங்கிரஸ் என்னும் நச்சு பாம்பு தான் நடந்த அனைத்துக்கும் காரணம் என தெரிந்தும் அவருடன் உறவாடுவதை எந்த தமிழனாலும் ஏற்று கொள்ள இயலாது . எந்த ஒரு போராட்டமும் முன்னே செல்ல ஒரு தலைவர் அவசியம் என்ன தான் சிலர் முதல்வரை ஏற்று கொள்ளா விட்டாலும் மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு தலைவர் இப்படி செய்வது நமக்கு எப்படி மன அமைதியை தரும். நீங்களோ நானோ சென்று நடுவண் அரசிடம் இலங்கைக்கு ஆயுத உதவி செய்யாதீர் எங்கள் ஈழ ரத்த உறவுகளை காப்பாற்றுங்கள் என சொல்ல முடியுமா. நம் ஒவ்வொரு தமிழனாலும் போராட இயலாது என்று தானே நம் முதல்வரை அனுப்பினோம் ஆனால தன் குடும்பத்தின் அரசியல் எதிர் காலத்திர்க்காகவும் சுயநலம் பேணவும் நம் முதல்வர் இப்படி செய்யலாமா.

ஒரு கோணத்தில் எப்படி இருந்தாலும் மக்கள் சபையில் முதல்வர் செய்த நம்பிக்கை துரோகம் தான் முன்னில் நிற்கும். தமிழரின் பால் ஒற்றுமை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

உளமாற்று வித்தைகள் என சிலர் இவற்றை கூறினாலும் உண்மை கசக்க தானே செய்யும். எம் ரத்த உறவுகள் எம்மை காப்பற்றும் என எண்ணி இருந்த ஒவ்வொரு ஈழ மனமும் எவ்வளவு ஏமாற்றம் அடைந்து இருக்கும். தன்னிகரில்லா ஒரு தூய தலைவன் இந்த நெடிய சுதந்திர போராட்டத்தில் அவர் தம் வாழ்வு ஆதாரமாய் விளங்கிய ஒருவனும் உயிருடன் உள்ளனா இல்லையா என பதறும் அந்த உயிர்களுக்கு விடை சொல்ல போவது யார். நாளை நமக்கும் இந்த நிலை ஏற்படாதென என்ன நிச்சியம். இத்துணை விடயங்கள் நடந்து இருந்தும் இன்னும் இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் இந்திய அரசுக்கு தமிழ் மக்கள் நாம் என்ன உணர்த்த போகிறோம். ஐ.நா சபையில் இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தை முறியடிக்க இந்திய, சீன அரசுகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி யார் குரல் கொடுக்க போகிறோம். நாமும் இந்திய பிரஜைகள் தானே பின்னர் ஏன் இந்த இந்திய அரசுக்கு நம் மேல கோபம். புரியவில்லை ராஜீவை கொன்றதாலா, ஒரு உயிருக்காக இத்துணை உயிர்கள் வேண்டுமா . ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்க அமைக்க பட்ட ஜெயின் கமிசன் கேட்ட பல கேள்விகள் இன்னும் புதிராகவே உள்ளன. அந்த விசயத்தில் மேற்கொண்டு என்ன நடவடிக்கைகள் எடுக்க பட்டு இருக்கிறது. கேள்விகள் பல. நீங்களும் சிந்தனை செய்யுங்கள்.

உலகம் தமிழர்களை வஞ்சிக்கிறது தமிழர் தரணியை ஆளும் தூரம் வெகு தொலைவில் இல்லை அன்று எம் இனம் பட்ட துயரங்களுக்கு இந்த உலகம் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.
தலைவர் பிரபாகரனை பற்றி பாராட்டுகளும் அவதூறுகளும் பரிமாறி கொள்ளபடுகின்றன /பகிர்ந்து கொள்ள படுகின்றன. இங்கு நமக்கு சில விடயங்கள் தெளிவாக புரிந்து கொள்ள பட வேண்டும். விடுதலை புலிகளும், தேசிய தலைவரும் ஈழதமிழ் மக்களால் அவர்களின் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள பட்டு இருகிறார்கள். விடுதலை புலிகளை விடுத்து தமிழ் ஈழம் என்பதை நாம் பிரித்து காண இயலாது. மக்கள் அவர்களை அங்கிகரிக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாய் இந்த ஈழ சுதந்திர போராட்ட வரலாற்றில் அவர்கள் தொலைந்து போய் இருப்பர். மேலும் ஈழ சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வலிமையும் உரிமையும் புலிகளுக்கு எம் மக்களால் அளிக்க பட்டு இருப்பது ஈழ வரலாறு அறிந்த எந்த மனிதர்களும் மறுக்க இயலாது. ஒரு வேளை ஈழ மக்கள் புலிகளை அவ்வாறு ஏற்காமல் இருந்திருந்தால் இந்த உலகும் இலங்கை அரசும் ஈழ போராட்டத்தின் வலிமையை உணராது இருந்திருபார் என்றே நினைக்க தோன்றுகிறது.

புலிகளின் ஆயுத போராட்டம் பற்றி விமர்சிப்பவர் ஈழ வரலாறு தெரியாதவர் என்பதே என் கூற்று. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் எம் தமிழ் மக்கள் எண்ணப்பட முடியாத இன்னலை அனுபவித்து வந்தனர். தந்தை செல்வாவின் தலைமையில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. வன்முறை இல்லா போராட்டத்தின் மூலம் விடுதலை அடைந்த நாடுகள் கூட ஒடுக்கும் வர்கத்தின் ஆயுதம் முன்பு பல உயிரை இழந்து இருக்கின்றன என்பதே உண்மை. பொதுவாக இப்படி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி சுதந்திரம் அடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் ஈழ போராட்டமும் இந்திய விடுதலை போராட்டமும் ஒப்பிட இயலாதது. இது எல்லோரும் அறிந்ததே. இந்திய விடுதலை போராட்டம் ஆங்கில ஆதிக்கம் அழிக்கப்பட முன்னெடுக்க பட்ட போராட்டம் ஆனால் ஈழ போராட்டம் எம் சொந்த மண்ணில் எமக்கு அடிப்படை உரிமைகள் மறுத்த எம்மை ஆளும் பாசிச சிங்கள இன அரசுக்கு எதிராக எடுக்க பட்டது. நாம் ஒன்றை புரிதல் மிகவும் முக்கியம். இந்த இரு போராட்டங்களும் அவை முன்னெடுக்க பட்ட காலங்கள், யார்க்கு எதிராக ஏன் முன்னெடுக்க பட்டன போன்ற விடயங்களில் மிகுந்த மாறுபாடு கொண்டவை. எனவே அவை இரண்டையும் ஒப்பிடுவது ஏற்க்கதக்க விடயம் இல்லை.

இலங்கையை ஆளும் பாசிச சிங்கள இன வெறி அரசை இனி அமைதியான போராட்டங்களின் மூலம் பணிய வைக்க இயலாது என்பதலாயே ஆயுத போராட்டம் எமது மக்கள் மூலமாக முன்னெடுக்க பட்டது. போராட்ட களங்களும், காலங்களும் மாறும் பொழுது போராட்டங்களின் பரிமாணங்களும் மாறுவது இயல்பு தான். இதில் டெலோ, ஈ.பி.எல்.ஆர. எப் ,இரோஸ்,ப்ளோட் என பல இயக்கங்கள் ஈடுபட்டு இருந்தாலும், புலிகளின் இயக்க நெறிமுறைகளும் அவர்களின் துணிவும் ஒழுக்க கோட்பாடுகளுமே அவர்களை மக்கள் தங்கள் உரிமைக்காய் போராடும் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள வைத்தது. புலிகள் மற்ற போராளிகளின் முன்னேறத்தை தடுத்தும் அவர்களை அழித்தும் தான் இந்த நிலைமைக்கு வந்தடைந்தனர் என்று பரவலான குற்றச்சாட்டுகள் உண்டு. எப்படி இருந்தாலும் புலிகள் தம் மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையை பெற்று இருந்தனர் என்பதே உண்மை.
இப்படி ஒரு ஒழுக்கம் மிகுந்த போராளி குழுவையும் அதனை தங்கள் வாழ்வுஉரிமைக்காக சார்ந்து இருக்கும் 35 லச்சம் ஈழ தமிழ் மக்களையும் ஏய்த்து பிழைக்கும் சிங்கள இன வெறி அரசும், அவரின் அடி வருடி நடக்கும் துரோகிகளும் ஒருகாலும் எம் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்பதும், தமிழரின் தாகம் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்பதும் வெகு விரைவில் நடக்க போகும் விடயங்கள்.
தலைவர் பிரபாகரனை பற்றி பாராட்டுகளும் அவதூறுகளும் பரிமாறி கொள்ளபடுகின்றன /பகிர்ந்து கொள்ள படுகின்றன. இங்கு நமக்கு சில விடயங்கள் தெளிவாக புரிந்து கொள்ள பட வேண்டும். விடுதலை புலிகளும், தேசிய தலைவரும் ஈழதமிழ் மக்களால் அவர்களின் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள பட்டு இருகிறார்கள். விடுதலை புலிகளை விடுத்து தமிழ் ஈழம் என்பதை நாம் பிரித்து காண இயலாது. மக்கள் அவர்களை அங்கிகரிக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாய் இந்த ஈழ சுதந்திர போராட்ட வரலாற்றில் அவர்கள் தொலைந்து போய் இருப்பர். மேலும் ஈழ சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் வலிமையும் உரிமையும் புலிகளுக்கு எம் மக்களால் அளிக்க பட்டு இருப்பது ஈழ வரலாறு அறிந்த எந்த மனிதர்களும் மறுக்க இயலாது. ஒரு வேளை ஈழ மக்கள் புலிகளை அவ்வாறு ஏற்காமல் இருந்திருந்தால் இந்த உலகும் இலங்கை அரசும் ஈழ போராட்டத்தின் வலிமையை உணராது இருந்திருபார் என்றே நினைக்க தோன்றுகிறது.

புலிகளின் ஆயுத போராட்டம் பற்றி விமர்சிப்பவர் ஈழ வரலாறு தெரியாதவர் என்பதே என் கூற்று. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் எம் தமிழ் மக்கள் எண்ணப்பட முடியாத இன்னலை அனுபவித்து வந்தனர். தந்தை செல்வாவின் தலைமையில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா. வன்முறை இல்லா போராட்டத்தின் மூலம் விடுதலை அடைந்த நாடுகள் கூட ஒடுக்கும் வர்கத்தின் ஆயுதம் முன்பு பல உயிரை இழந்து இருக்கின்றன என்பதே உண்மை. பொதுவாக இப்படி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி சுதந்திரம் அடைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் ஈழ போராட்டமும் இந்திய விடுதலை போராட்டமும் ஒப்பிட இயலாதது. இது எல்லோரும் அறிந்ததே. இந்திய விடுதலை போராட்டம் ஆங்கில ஆதிக்கம் அழிக்கப்பட முன்னெடுக்க பட்ட போராட்டம் ஆனால் ஈழ போராட்டம் எம் சொந்த மண்ணில் எமக்கு அடிப்படை உரிமைகள் மறுத்த எம்மை ஆளும் பாசிச சிங்கள இன அரசுக்கு எதிராக எடுக்க பட்டது. நாம் ஒன்றை புரிதல் மிகவும் முக்கியம். இந்த இரு போராட்டங்களும் அவை முன்னெடுக்க பட்ட காலங்கள், யார்க்கு எதிராக ஏன் முன்னெடுக்க பட்டன போன்ற விடயங்களில் மிகுந்த மாறுபாடு கொண்டவை. எனவே அவை இரண்டையும் ஒப்பிடுவது ஏற்க்கதக்க விடயம் இல்லை.

இலங்கையை ஆளும் பாசிச சிங்கள இன வெறி அரசை இனி அமைதியான போராட்டங்களின் மூலம் பணிய வைக்க இயலாது என்பதலாயே ஆயுத போராட்டம் எமது மக்கள் மூலமாக முன்னெடுக்க பட்டது. போராட்ட களங்களும், காலங்களும் மாறும் பொழுது போராட்டங்களின் பரிமாணங்களும் மாறுவது இயல்பு தான். இதில் டெலோ, ஈ.பி.எல்.ஆர. எப் ,இரோஸ்,ப்ளோட் என பல இயக்கங்கள் ஈடுபட்டு இருந்தாலும், புலிகளின் இயக்க நெறிமுறைகளும் அவர்களின் துணிவும் ஒழுக்க கோட்பாடுகளுமே அவர்களை மக்கள் தங்கள் உரிமைக்காய் போராடும் பிரதிநிதிகளாய் ஏற்று கொள்ள வைத்தது. புலிகள் மற்ற போராளிகளின் முன்னேறத்தை தடுத்தும் அவர்களை அழித்தும் தான் இந்த நிலைமைக்கு வந்தடைந்தனர் என்று பரவலான குற்றச்சாட்டுகள் உண்டு. எப்படி இருந்தாலும் புலிகள் தம் மக்களின் ஒட்டு மொத்த நம்பிக்கையை பெற்று இருந்தனர் என்பதே உண்மை.
இப்படி ஒரு ஒழுக்கம் மிகுந்த போராளி குழுவையும் அதனை தங்கள் வாழ்வுஉரிமைக்காக சார்ந்து இருக்கும் 35 லச்சம் ஈழ தமிழ் மக்களையும் ஏய்த்து பிழைக்கும் சிங்கள இன வெறி அரசும், அவரின் அடி வருடி நடக்கும் துரோகிகளும் ஒருகாலும் எம் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்பதும், தமிழரின் தாகம் தமிழ் ஈழம் மலர்ந்தே தீரும் என்பதும் வெகு விரைவில் நடக்க போகும் விடயங்கள்.
ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி நிலுவை தொகை வழங்கப்படாததை கண்டித்து உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தினை நடத்தினர்.

ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென உள்ளாட்சி துறை உத்தரவிட்ட போதிலும் இதுவரை நகராட்சி ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், பல்வேறு கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும் உழவர்கரை நகராட்சி நிரந்தர ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து பட்டை நாமத்துடன்தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று அனைத்து ஊழியர்களும் ஒருநாள் விடுப்பு எடுத்து காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உழவர்கரை நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இதற்கு சங்க பொதுச் செயலாளர் பழனிவேலு தலைமை தாங்க, தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். போராட்டத்தினை வாழ்த்தி மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லட்சுமணசாமி மற்றும் நிர்வாகிகள் உரையாற்றினர். இதில் உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
உண்மையில் இந்திய அரசு நினைத்து இருந்தால் இந்த இனதொழிப்பு போரை தடுத்து இருக்கலாம்.ஆனால் இந்திய அரசு தனது வெளிஉறவு கொள்கைக்காகவும் பிரந்திய பாதுகாப்புக்காகவும் ஈழ மக்களின் உயிரை பணயமாக வைத்து விட்டது. குறைந்த பட்சம் இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் வழங்காமல் இருந்திருக்கலாம் அப்படி செய்து இருந்தால் பல மடங்கு அழிவு தடுக்க பட்டு இருக்கும்.
தமிழ் நாட்டில் உள்ள பல பேருக்கு ஈழத்தின் அடிப்படை உண்மைகள் தெரியாது போய் விட்டன. தமிழர் ஆகிய நாம் நம் எதிர்ப்பையும் வேண்டுகோளையும் சற்றே வலுவான முறையில் ஒரு மக்கள் போராட்டத்தின் மூலம் உணர்த்தி இருக்கலாம். ஈழம் பற்றிய செய்திகளும் அங்கு செய்ய படும் இன கொலைகளின் நிழற்படங்களும் நமக்கே கிடைக்கும் போது எந்த ஒரு மக்கள் அவை உறுப்பினரும் அல்லது சட்டசபை உறுப்பினரும் இந்த ஆதாரங்களோடு விவாத நேரத்தின் போது பேசி இருக்கலாம்.
ராஜீவ் கொலைக்கு பின் தமிழ் ஈழம் என்ற தேசிய உணர்வு கொண்டவர் அனைவரும் குற்றவாளிகள் என்ற நிலைக்கு தள்ள பட்டு விட்டனர். எந்த இந்தியனும் கொலை நிகழ்ந்த களம் அதன் காரணங்கள பற்றி ஆராயவில்லை.
ஒரு அரசு தனது ஆயுத பலத்தை முன்னெடுக்கும் போது ஒடுக்கப்பட்ட மக்கள் அதனை எத்துனை காலம் அஹிம்சா முறையில் எதிர்ப்பர் என்பதற்கு ஒரு வரைமுறை உண்டு. எப்படி மாற்றி சொன்னாலும் புலிகள் முன்னெடுத்த ஆயுத போரட்டமே இலங்கை அரசு மட்டுமின்றி நிகழ்கால உலகும் ஒரு முக்கிய பிரச்சினையாக ஈழ பிரச்சனயை எடுத்து கொள்ள காரணமானது. இதை இல்லை என்று மறுப்பவர் வரலாறு அறியாதவர் என்றே சொல்ல வேண்டும். நெல்சன் மண்டேலா அவர்களின் சொற்படி ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை ஒடுக்கும் சக்திக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது என்பது உலக நியதி அது தான் ஈழ போராட்ட களத்திற்கும் பொருத்தமானது. எனவே புலிகளை விடுத்து ஈழ பிரச்சினையினை நாம் பார்க்க இயலாது. மிக சிலரை விடுத்து பெருபான்மை தமிழ் மக்கள் புலிகளை தங்கள் ஏகபோக பிரதிநிதிகளாய் பார்த்தார்கள் என்பதே உண்மை. இந்திய, சீன அரசுகளின் ஆயுத உதவிகள் இல்லாமல் போய் இருந்தால் இலங்கை அரசு இந்த போரில் வென்று இருக்காது .
ஒரு பழமையான இனத்தின் விடுதலை போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் புலிகளை பயங்கரவாத அமைப்பு என்றும் அடையாளமிட்ட பெருமை இந்திய மக்களாகிய நம்மையே சேரும். ராஜீவ் என்ற ஒரு மாசுபட்ட மனிதனின் படுகொலைக்காக அந்த குற்றம் முழுமையாய் நிரூபிக்கப்படாமல் இருந்தும் நம் உறவுகளின் தமிழ் ஈழ கனவையும் அவரது அடிப்படை உரிமைகளையும் படுகுழியில் இட்டு புதைத்து கொன்ற பெருமையும் நம்மையே சாரும். ஈழ வரலாற்றின் ரத்த பக்கங்களின் பெரும் பகுதி இந்த இந்திய திருமக்களுக்காகவும் தமிழ் உணர்வு மிகுந்த தமிழ் மக்களுக்காகவும் கண்டிப்பாய் ஒதுக்கபட்டு இருக்கும். தமிழ் ஈழ எதிர்பாளர்களும் தமிழ் இன தலைவர் என மார் தட்டி நடக்கும் கயவரும் அந்த வரலாறு தெரிந்தும் இழைத்த தோரகங்கள் இந்த உலகுக்கும், தமிழ் ஈழம் தவறு என பேசி திரியும் நம் தற்போதைய தலைமுறை தமிழருக்கும் ஒரு தினம் கண்டிப்பாய் தெரிய வரும்.
எவ்வாறேனும் தமிழ் ஈழம் என்பது கண்டிப்பாய் உதித்தே தீரும். எம் மக்கள் எப்படி ஒடுக்க பட்டாலும் அது அமைந்தே தீரும் ஒரு வரலாற்று போராட்டத்தின் மூலமாய் எம் தலைவனின் உதவியோடு.

தமிழரின் கனவு தமிழீழம் மெய்படும்.

கருத்துகள் இல்லை: