சனி, 30 மே, 2009

2009-05-30



இந்த நில உலகில் நம்பிக்கை மட்டுமே மனித வாழ்கையை அர்த்தபடுத்தவல்லதாக இருக்கிறது.கடுமையான சோதனைகளிலும் நிதானம் இழக்காமல் தங்களுடைய இலக்கினை நோக்கி நடந்து , அடைந்தவர்களையே உலகம் முன் மாதிரியாகவும் அவர்களுக்கு உரிய அங்கிகாரத்தையும் அளிக்கிறது.



அத்தகைய மனிதர்கள் வாழ்கையை,சாதனைகளை எண்ணும் போதும் ,படிக்கும் போதும் மனம் தளர்ச்சியிளிரிந்து மீண்டு புத்துணர்வை பெறுகிறது.நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வென்ற தருணங்கள் உண்டு.



சென்னை மாநகரத்தின் சேரி பகுதிகளில் இட்லி விற்று ,தன்னுடைய தாய்க்கு ஆதரவாகவும் அதே தருணத்தில் தனது இலக்கினை நோக்கி முன்னேறி சென்று படித்து பட்டம் பெற்று .... பன்னாட்டு நிறுவனங்கள் பல லட்சங்களை சம்பளமாக தர முன்வந்தும் அவற்றை மறுத்து ,தனது உழைப்பால்,திறத்தால் தானே ஒரு நிறுவனத்தை தொடக்கி வெகு குறுகிய காலத்தில் ஏழு கோடி ருபாய் வருமானம் செய்யும் நிறுவனமாக மாற்றி காட்டிய திரு. சரத்பாபு என்கின்ற இளைஞர் இன்றைய தினத்தில் நம்பிக்கையின் அடையாளம்.!!



எண்ணுவது போலே வாழ்க்கை என்பதற்கு பல மனிதர்கள் எடுத்துகாட்டாய் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.மனிதன் உடல் உறுப்புகளை இழந்தால் கூட நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருப்பானாயின் அளப்பரிய சாதனைகளை செய்ய இயலும் .!



ஒரு ரயில் பயணத்தில் இரண்டு பார்வையற்ற சின்னஞ்சிறுவர்கள் "வாழ்க்கை என்னும் ஓடம் வழங்கு கின்ற பாடம் ..." என்று குரலெடுத்து பாடி ...மனதை உருக்கி கடந்து சென்ற போது அவர்களுடைய நம்பிக்கை ஒளி பொருந்தியதாகவும் வாழ்கையை எதிர்கொள்ள அவர்கள் தயக்கம் அற்று இருப்பதும் ஒரு முறை எனக்கு விளங்கியது .ஆனால் கண்,செவி,வாக்கு,படிப்பு எல்லாம் இருந்தும் கோழைகளை போல் தோல்விக்கு அஞ்சி நடுங்கும் தன்னம்பிக்கையட்ட்ற மெத்த படித்தவர்கள் நம்மில் பல பேர் இந்த சமுகத்தில் வாழ்ந்துவருவதையும் நாம் காண்கின்றோம்


தகுந்த சீருடை இல்லாமல் பள்ளிக்கு பல மைல்கல் நடந்து சென்று.....


குறிப்பேடுகளும் ,பாட புத்தகங்களையும் வாங்க பணமற்று.......


சத்து உணவிற்கு நண்பகலில் வரிசையில் நின்று....


மின்சார மற்ற மண் குடிசையில் மண் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து ...


ஒவ்வொரு ஆண்டும் தேர்வு விடுமுறை நாட்களில் நகை கடைகளிலும்,துணிகடைகளிலும், வேலை செய்து...



தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறி ...மேற்படிப்பிற்கு யாரிடம் கை ஏந்துவது என்று தடுமாறி நின்றவர்கள் நம்மில் பல பேர்.


அத்தகைய உங்களில் ஒருவராக பலர் இன்று நம்பிக்கையின் ஊற்றாக விளங்குகிறார்கள்.


பல சோதனைகளுக்கு இடையே படித்து,பட்டம் பெற்று..எஞ்சினீயராகவும் ,டாக்டர்களாகவும் இந்த சமுகத்தில் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு அர்த்தம் கொடுக்கின்ற உங்களில் ஒருவர் பாராட்டப்பட மட்டுமில்ல பின்பற்ற படவேண்டியவரும் கூட !!

தன்னம்பிக்கையற்ற வாழ்க்கை சுருதி பிறழ்ந்த பாடலாக இந்த சமுகத்தில் அங்கேயும் இங்கேயும் இடைஇடையே கேட்டாலும்.இவற்றை எல்லாம் மீறி "வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் " என்ற பார்வையற்ற அனால் தன்னம்பிக்கை குறையாத அந்த சின்னஞ்சிருவர்களின் பாடல் நீங்காமல் ஒலித்தபடி உள்ளது .


இந்த நில உலகில் நம்பிக்கை மட்டுமே மனித வாழ்கையை அர்த்தபடுத்தவல்லதாக இருக்கிறது.கடுமையான சோதனைகளிலும் நிதானம் இழக்காமல் தங்களுடைய இலக்கினை நோக்கி நடந்து , அடைந்தவர்களையே உலகம் முன் மாதிரியாகவும் அவர்களுக்கு உரிய அங்கிகாரத்தையும் அளிக்கிறது.



அத்தகைய மனிதர்கள் வாழ்கையை,சாதனைகளை எண்ணும் போதும் ,படிக்கும் போதும் மனம் தளர்ச்சியிளிரிந்து மீண்டு புத்துணர்வை பெறுகிறது.நம்மில் பலருடைய வாழ்க்கையிலும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வென்ற தருணங்கள் உண்டு.



சென்னை மாநகரத்தின் சேரி பகுதிகளில் இட்லி விற்று ,தன்னுடைய தாய்க்கு ஆதரவாகவும் அதே தருணத்தில் தனது இலக்கினை நோக்கி முன்னேறி சென்று படித்து பட்டம் பெற்று .... பன்னாட்டு நிறுவனங்கள் பல லட்சங்களை சம்பளமாக தர முன்வந்தும் அவற்றை மறுத்து ,தனது உழைப்பால்,திறத்தால் தானே ஒரு நிறுவனத்தை தொடக்கி வெகு குறுகிய காலத்தில் ஏழு கோடி ருபாய் வருமானம் செய்யும் நிறுவனமாக மாற்றி காட்டிய திரு. சரத்பாபு என்கின்ற இளைஞர் இன்றைய தினத்தில் நம்பிக்கையின் அடையாளம்.!!



எண்ணுவது போலே வாழ்க்கை என்பதற்கு பல மனிதர்கள் எடுத்துகாட்டாய் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.மனிதன் உடல் உறுப்புகளை இழந்தால் கூட நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருப்பானாயின் அளப்பரிய சாதனைகளை செய்ய இயலும் .!



ஒரு ரயில் பயணத்தில் இரண்டு பார்வையற்ற சின்னஞ்சிறுவர்கள் "வாழ்க்கை என்னும் ஓடம் வழங்கு கின்ற பாடம் ..." என்று குரலெடுத்து பாடி ...மனதை உருக்கி கடந்து சென்ற போது அவர்களுடைய நம்பிக்கை ஒளி பொருந்தியதாகவும் வாழ்கையை எதிர்கொள்ள அவர்கள் தயக்கம் அற்று இருப்பதும் ஒரு முறை எனக்கு விளங்கியது .ஆனால் கண்,செவி,வாக்கு,படிப்பு எல்லாம் இருந்தும் கோழைகளை போல் தோல்விக்கு அஞ்சி நடுங்கும் தன்னம்பிக்கையட்ட்ற மெத்த படித்தவர்கள் நம்மில் பல பேர் இந்த சமுகத்தில் வாழ்ந்துவருவதையும் நாம் காண்கின்றோம்


தகுந்த சீருடை இல்லாமல் பள்ளிக்கு பல மைல்கல் நடந்து சென்று.....


குறிப்பேடுகளும் ,பாட புத்தகங்களையும் வாங்க பணமற்று.......


சத்து உணவிற்கு நண்பகலில் வரிசையில் நின்று....


மின்சார மற்ற மண் குடிசையில் மண் எண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து ...


ஒவ்வொரு ஆண்டும் தேர்வு விடுமுறை நாட்களில் நகை கடைகளிலும்,துணிகடைகளிலும், வேலை செய்து...



தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறி ...மேற்படிப்பிற்கு யாரிடம் கை ஏந்துவது என்று தடுமாறி நின்றவர்கள் நம்மில் பல பேர்.


அத்தகைய உங்களில் ஒருவராக பலர் இன்று நம்பிக்கையின் ஊற்றாக விளங்குகிறார்கள்.


பல சோதனைகளுக்கு இடையே படித்து,பட்டம் பெற்று..எஞ்சினீயராகவும் ,டாக்டர்களாகவும் இந்த சமுகத்தில் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு அர்த்தம் கொடுக்கின்ற உங்களில் ஒருவர் பாராட்டப்பட மட்டுமில்ல பின்பற்ற படவேண்டியவரும் கூட !!

தன்னம்பிக்கையற்ற வாழ்க்கை சுருதி பிறழ்ந்த பாடலாக இந்த சமுகத்தில் அங்கேயும் இங்கேயும் இடைஇடையே கேட்டாலும்.இவற்றை எல்லாம் மீறி "வாழ்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம் " என்ற பார்வையற்ற அனால் தன்னம்பிக்கை குறையாத அந்த சின்னஞ்சிருவர்களின் பாடல் நீங்காமல் ஒலித்தபடி உள்ளது .


More than a Blog Aggregator

by ராஜ்குமார் குவைத்

மனிதன் சிந்திக்க தெரிந்த ,பகுத்தறியும் அறிவுகொண்ட உயரிய படைப்பு. நாம் அறிந்த வரையில் மனிதனை காட்டிலும் உயரிய ஒரு உயிர் படைப்பு இந்த நில உலகிலும் பிரபஞ்சத்தில் வேறெங்கிலும் நாம் அறிந்ததில்லை.உலகினை படிப்படியாக தனது அறிவால் சிந்தித்து வடிவமைத்து மனித மூளை.



பல நூற்றாண்டுகளாக இந்த உலகில் பல அறிவியல் ,மனவியல் அற்புதங்களை மனிதன் தனது அறிவால் படைத்து வருகிறான் .பல லட்சகணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நிலவுக்கும்,செவ்வாய்க்கும் இந்த பூமியில் இருந்தபடி பல ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து காட்டிய மனித பராக்கிரமம் வியக்கக்கூடிய ஒன்று.


இருப்பினும் மனித அறிவுக்கும் ,திறனுக்கும் அப்பாற்பட்டு இந்த பூமியில் பல விடை தெரியாத கேள்விகள் மனிதனை சுற்றி வந்தவண்ணம் இருந்து கொண்டிருக்கிறது .மனித அறிவு அழுத்தமான விளக்கங்களை விடைகளாக விளக்க திறனற்றதாக இருக்கின்ற அந்த விடைதெரியாத கேள்விகளே மனிதனுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால் எனலாம்.!


மனித மூளையின் முதல் தோல்வியும் மனித அறிவையும் மீறி ஏதோ ஓர் சக்தி ஆட்டி வைக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது எனபதற்கு மனித வாழ்வின் மரணம்" விடை தெரியாத பல கேள்விகளில் முதல் கேள்வி எனலாம்.


மனிதனால் ஏன் மரணத்தை தடுக்க இயலுவதில்லை ? முதுமை,நோய் ,விபத்து என பல காரணிகளால் மனிதன் முடிவை நோக்கி செல்லும்போது அதனை முற்றிலுமாக தடுக்க இயலாமல் மனிதன் தனது சிந்தனை,அறிவு என எல்லா உயரிய தன்மைகளின் எல்லை கோட்டில் நிற்கின்றான்.


மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது மனித மூளையின் எல்லை முடிந்து அதற்குமேல் என்ன என்பது மனிதன் அறிதிராத ஒரு நிதர்சனம் எனலாம்.பல மருத்துவர்கள் எங்களால் முயன்றவரை நாங்கள் முயன்றாகிவிட்டது இனி இந்த உயிரை காப்பட்ட்ற வல்லவன் இறைவன் மட்டுமே என்று கூறும் போது மற்றொரு கேள்வி முளைக்கிறது...யார் அந்த இறைவன் ? அவன் எங்குள்ளான் ? இந்த கேள்விகளுக்கு விடை தேடி புறப்பட்டவர்களை இந்த உலகம் கொண்டாடி மகிழ்கிறது. எனினும் முற்றிலும் உறுதியான விடையை இந்த உலகம் இன்று வரை பெறவில்லை !!



பிரம்மனை uஇரகளை படைக்கும் கடவுளாக இந்து புராணங்கள் கூறுகின்றன நவின அறிவியலில் மனிதன் கண்ணாடி குழாய்களில் மனித உயிரினை படைக்க வல்ல பிரம்மனாக இருப்பதை நாம் காண்கிறோம்.


ஆனால் மரணம் என்று வரும் போது அந்த மனித பிரமனும் சவபெட்டிக்குள் ஆணியிட்டு அடைக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கபடுகிறான் .எங்கே சென்றது அவனுடைய பராகிரமம் ?


நாகரிகத்தில் முன்னோடி என்று பறை சாற்றி கொள்ளும் மனித இனத்தில் பலவித அலங்கோலங்களும்,அருவருப்புகளும் விடை இன்றி இன்னும் இருக்கிறது எனலாம் .பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த பின்னும் இன்னும் மனிதன் ஏன் ஆடு,மாடு,கோழி,பாம்பு,பல்லி,பன்னி,எலி,தவளை,குரங்கு,கடல் வாழ் , இன்னும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் கொன்று மனிதன் தனது வயிற்றுக்குள் தள்ளுவது எந்த வகை நாகரிகம் ??


பூமியின் ஒரு பகுதி வறுமையாலும்...மற்றொரு பகுதி செழிப்பாகவும் இருக்க காரணம் என்ன ?


வாழ்க்கையில் விதி என்றும் ..இறைவனின் விருப்பம் என்றும் மனிதனை ஏற்று கொள்ள செய்வது எது?


மரணத்தின் முன்னாள் மண்டியிட்டு நிற்க செய்வது எது ?


கனவு போல் கழிந்து செல்லும் செல்லும் வாழ்கை உண்மைதான?



இன்னும் பல கேள்விகள் மகா அறிவு பொருந்திய மனிதனால் விடை காண முடியாததாக உள்ளது விந்தை.ஏனெனில் மனிதன் பிற கோள்களில் தன்னை போல் ஏதேனும் இனம் இருக்கிறதா என விட தேடி செல்லும் தருணத்தில் இந்த எளிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் பல நூற்றாண்டுகளை கடத்தி வருவது ஏன் என விளங்கி கொள்ள இயலவில்லை



உங்களில் யாருக்கேனும் இதற்கான விடைகள் தெரிந்தால் பாவம் இந்த மனித பதர்களுக்கு உதவுங்களேன் !!







விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் நிலவினாலும் கடைசியில் இலங்கை அரசு அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்கிறது.


விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் நிலவினாலும் கடைசியில் இலங்கை அரசு அந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டிருக்கிறது.




More than a Blog Aggregator

by ராஜ்குமார் குவைத்

மனிதன் சிந்திக்க தெரிந்த ,பகுத்தறியும் அறிவுகொண்ட உயரிய படைப்பு. நாம் அறிந்த வரையில் மனிதனை காட்டிலும் உயரிய ஒரு உயிர் படைப்பு இந்த நில உலகிலும் பிரபஞ்சத்தில் வேறெங்கிலும் நாம் அறிந்ததில்லை.உலகினை படிப்படியாக தனது அறிவால் சிந்தித்து வடிவமைத்து மனித மூளை.



பல நூற்றாண்டுகளாக இந்த உலகில் பல அறிவியல் ,மனவியல் அற்புதங்களை மனிதன் தனது அறிவால் படைத்து வருகிறான் .பல லட்சகணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள நிலவுக்கும்,செவ்வாய்க்கும் இந்த பூமியில் இருந்தபடி பல ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து காட்டிய மனித பராக்கிரமம் வியக்கக்கூடிய ஒன்று.


இருப்பினும் மனித அறிவுக்கும் ,திறனுக்கும் அப்பாற்பட்டு இந்த பூமியில் பல விடை தெரியாத கேள்விகள் மனிதனை சுற்றி வந்தவண்ணம் இருந்து கொண்டிருக்கிறது .மனித அறிவு அழுத்தமான விளக்கங்களை விடைகளாக விளக்க திறனற்றதாக இருக்கின்ற அந்த விடைதெரியாத கேள்விகளே மனிதனுக்கு முன் வைக்கப்பட்டுள்ள சவால் எனலாம்.!


மனித மூளையின் முதல் தோல்வியும் மனித அறிவையும் மீறி ஏதோ ஓர் சக்தி ஆட்டி வைக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது எனபதற்கு மனித வாழ்வின் மரணம்" விடை தெரியாத பல கேள்விகளில் முதல் கேள்வி எனலாம்.


மனிதனால் ஏன் மரணத்தை தடுக்க இயலுவதில்லை ? முதுமை,நோய் ,விபத்து என பல காரணிகளால் மனிதன் முடிவை நோக்கி செல்லும்போது அதனை முற்றிலுமாக தடுக்க இயலாமல் மனிதன் தனது சிந்தனை,அறிவு என எல்லா உயரிய தன்மைகளின் எல்லை கோட்டில் நிற்கின்றான்.


மரணத்தின் விளிம்பில் இருக்கும் போது மனித மூளையின் எல்லை முடிந்து அதற்குமேல் என்ன என்பது மனிதன் அறிதிராத ஒரு நிதர்சனம் எனலாம்.பல மருத்துவர்கள் எங்களால் முயன்றவரை நாங்கள் முயன்றாகிவிட்டது இனி இந்த உயிரை காப்பட்ட்ற வல்லவன் இறைவன் மட்டுமே என்று கூறும் போது மற்றொரு கேள்வி முளைக்கிறது...யார் அந்த இறைவன் ? அவன் எங்குள்ளான் ? இந்த கேள்விகளுக்கு விடை தேடி புறப்பட்டவர்களை இந்த உலகம் கொண்டாடி மகிழ்கிறது. எனினும் முற்றிலும் உறுதியான விடையை இந்த உலகம் இன்று வரை பெறவில்லை !!



பிரம்மனை uஇரகளை படைக்கும் கடவுளாக இந்து புராணங்கள் கூறுகின்றன நவின அறிவியலில் மனிதன் கண்ணாடி குழாய்களில் மனித உயிரினை படைக்க வல்ல பிரம்மனாக இருப்பதை நாம் காண்கிறோம்.


ஆனால் மரணம் என்று வரும் போது அந்த மனித பிரமனும் சவபெட்டிக்குள் ஆணியிட்டு அடைக்கப்பட்டு மண்ணுக்குள் புதைக்கபடுகிறான் .எங்கே சென்றது அவனுடைய பராகிரமம் ?


நாகரிகத்தில் முன்னோடி என்று பறை சாற்றி கொள்ளும் மனித இனத்தில் பலவித அலங்கோலங்களும்,அருவருப்புகளும் விடை இன்றி இன்னும் இருக்கிறது எனலாம் .பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்த பின்னும் இன்னும் மனிதன் ஏன் ஆடு,மாடு,கோழி,பாம்பு,பல்லி,பன்னி,எலி,தவளை,குரங்கு,கடல் வாழ் , இன்னும் இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் கொன்று மனிதன் தனது வயிற்றுக்குள் தள்ளுவது எந்த வகை நாகரிகம் ??


பூமியின் ஒரு பகுதி வறுமையாலும்...மற்றொரு பகுதி செழிப்பாகவும் இருக்க காரணம் என்ன ?


வாழ்க்கையில் விதி என்றும் ..இறைவனின் விருப்பம் என்றும் மனிதனை ஏற்று கொள்ள செய்வது எது?


மரணத்தின் முன்னாள் மண்டியிட்டு நிற்க செய்வது எது ?


கனவு போல் கழிந்து செல்லும் செல்லும் வாழ்கை உண்மைதான?



இன்னும் பல கேள்விகள் மகா அறிவு பொருந்திய மனிதனால் விடை காண முடியாததாக உள்ளது விந்தை.ஏனெனில் மனிதன் பிற கோள்களில் தன்னை போல் ஏதேனும் இனம் இருக்கிறதா என விட தேடி செல்லும் தருணத்தில் இந்த எளிய கேள்விகளுக்கு விடை தெரியாமல் பல நூற்றாண்டுகளை கடத்தி வருவது ஏன் என விளங்கி கொள்ள இயலவில்லை



உங்களில் யாருக்கேனும் இதற்கான விடைகள் தெரிந்தால் பாவம் இந்த மனித பதர்களுக்கு உதவுங்களேன் !!







கருத்துகள் இல்லை: