வெள்ளி, 29 மே, 2009

2009-05-29

20,000 மக்களை சில நாளில் கொன்று குவித்த இலங்கை அரசாங்கத்துக்கு வக்காலத்து வாங்கி ஐக்கிய நாடுகள் சபையில் வாதிட்டு தன் மன சாட்சியை கழற்றி வைக்க முடிவெடுத்தது மிகவும் கண்டிக்க தக்க செயல். இத்தனை நாட்களாக பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்று மேல் நாட்டு அரசாங்கத்தையும், மேல் நாட்டு கம்பெனிகளையும் பற்றி ஆப்ரிக்க ஆசிய நாடுகளை உதாரணம் காட்டி பல காலம் பேசினோம். தற்போது அதைவிட மோசமான செயலை இந்தியா,சீனா போன்ற சோசியலிச நாடுகள் செய்து வருகிறது. மேலை நாடுகள் இவ்வாறு தவறு செய்யும் போதாவது அங்குள்ள மீடியா மற்றும் சிறு பிரிவினர் அந்த செய்தியை அந்நாடுகளில் உள்ள மக்களுக்கு கொண்டு செல்வர். ஆனால் இந்திய பெரும்பான்மை மீடியாக்கள் இந்த செய்தியை கையாண்ட விதம் அனைத்து இந்தியரையுமே தலை குனிய செய்கிறது.

இந்த மனித பேரவலத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கு பல கோடி பெருமான காண்டிராக்ட்கள் இலங்கையில் கிடைக்கலாம். அதனால் பல கோடி பெரும்பாலான பணம் ஆட்சியாலர்களுக்கும், கட்சிக்கும்,பின்னனியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கும் லஞ்சமாக கிடைக்கலாம்.



இதற்கு தனி மனித வன்மம்,ராஜ தந்திரம், பேராசை என எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். இனி தயவு செய்து காந்தி படத்துக்கு மட்டுமாவது அஞ்சலி செலுத்தாமல் இருக்கட்டும். காந்தியின் அற வழி கொள்கையை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து விட்டு அவர் படத்துக்கும் அவர் சமாதிக்கும் மட்டும் உலகை ஏமாற்ற அஞ்சலி செலுத்தாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

--

Report of 20,000 civilians killed is 'very credible'

Saturday, 30 May 2009 01:30 administrator
E-mail Print PDF

Twenty thousand civilians were killed in Sri Lanka's final push against Tamil Tiger rebels, claims a UN confidential report.



More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
Bing : A better way to search from Microsoft

The World Doesn't Need Another Search Engine.
The World Needs "Decision Engine" Bing!









Job Description: Corporation Bank NEEDS Specialist Officers.

Education: Any graduate

Experience: Experinced

Job Location: Across India

Click for More Information

சில நாட்களாகவே எனக்குள் ஒரு உறுத்தல் என்னன்னு கடைசில் சொல்றேன்.

நான் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து ஹைடெக் சிட்டிக்கு ஷேர் ஆட்டோவில்தான் செல்ல வேண்டும். பின்பக்கம் மூவரையும் ஓட்டுனருக்கு அருகில் இருவரையும் ஏற்றிக் கொன்டுதான் சென்றால்தான் அவர்களுக்கும் கட்டுப்படியாகும். பெண்கள் வந்தால் பின்னாடி அம்ர்ந்திருக்கும் ஆண்கள் முன்னால் அமர வேண்டும். அன்று நான் கையில் பெரிய பையுடன் வந்ததால் முன்னாடி அமர முடியாது என ஆட்டோக்காரரிடம் சொல்லிவிட்டுதான் ஏறினேன். என்னருகே ஒரு அழகிய பெண் வந்தமர்ந்தார். அவரைத் தொடர்ந்து இன்னொரு பெண் வர இவர் என்னருகில் நகர்ந்தார்.

முன்னாடி இருந்த கண்ணாடி வழியாக பின்னாடி இருந்த அந்தப் பெண்ணை பார்த்துக் கொன்டிருக்கும்போது அவர் என்னைப் பார்த்துவிட்டார். என்னாடி என்பதுபோல் கண்ணாடி வழியாகவே பின்னாடி இருந்தவரை நான் பார்க்க, முன்னாடி போங்கனு ஒரு குரல் கேட்டது. திரும்பினால் என் அலுவலகத்தில் வேலை செய்யும் மதுரைப் பெண் ஒருவர் என்னை முன்னால் என்று அமர சொன்னார். நான் என்னிடம் பை இருப்பதை சொல்லிப் போக முடியாதென்றென். ஓட்டுனரே அமைதியா இருக்கும் போது இவர் சத்தம் போட்டது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. எனக்கு பக்கத்தில் இருந்த பெண் அவருக்காகத்தான் பின்னால் அமர்வதாக நினைத்துக் கொண்டார் போலும். முன்னால் அமர்பவர்கள் என்ன காசு கம்மியாகவா கொடுக்கறாங்கனு கேட்டேன். அவர்கள் பெண்களாம். நான் விடுவேனா? அந்த வண்டியில் இருந்து இறங்கி வேற வண்டியில்தான் சென்றேன்.

இதேப் போல் ஒரு சம்பவம் நான் ட்ரெயினில் போகும்போதும் நடந்தது. சார்மினார் விரைவு வண்டியில் சைடு அப்பர், லோயர் இருந்த இடத்தில் நடுவே இன்னொரு படுக்கை சேர்த்து மூன்றாக்கி விட்டார்கள்.அதில் அப்பர் பெர்த் கிடைத்தவர்கள் பாடு திண்டாட்டம் தான்.அன்று பார்த்து என்னை சுற்றி எல்லோருமே பெண்கள்.(20 25 வயதுக்குள்). ஒரே குஜாலா லேப்டாப் திறந்து என் வலையை மேய்ந்தேன். "எக்ஸ்க்யூஸ் மீ" என ஒருப் பாட்டு சத்தம் கேட்டது. நிமிர்ந்தால் நயந்தாராவின் தங்கை நின்று கொண்டிருந்தார். அவர்கள் குழுவாக வந்திருப்பாதாகவும், அடுத்த கோச்சுக்கு செல்ல முடியுமா எனக் கேட்டார். எப்படி முடியும் என சொல்ல முடியும்? இந்த பரிசலோடு சேர்ந்து நானும் நல்ல்லவனாகி விட்டேன் போலும். சரி ஆனா எந்த பெர்த் என்றேன். அப்பர் பெர்த்தை காண்பித்தார்.செக்கிங் முடிந்தவுடனே போகிறேன் என்றேன்.

அவர் சென்று அவரது உடைமைகளை எடுத்து வந்துவிட்டார். எல்லாம் முடிந்து நான் அங்கேப் போனால் அது சைடு அப்பர். அவர் காட்டியது அதுவல்ல.கடுப்புடன் இவரை வந்துக் கேட்டால் ரெண்டுமே அப்பர்தானே என்றார். நாங்க பொண்ணுங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் செஞ்சிக்கோங்க என்றார். ஏறியதில் இருந்தே என்னைப் பார்த்து புகைந்துக் கொன்டிருந்த நடுத்தர வயது ஆசாமி ஒருவர் பஞ்சாயத்துக்கு வந்து "லேடீஸ் சார். அட்ஜஸ்ட் பண்ணுங்க என்றார். சரி, நீங்க போய் அதுல படுங்க என்றேன். நான் ஏதோ பெரிய தேசத்துரோகம் செய்வது போல் அனைவரும் பார்த்தார்கள். அதுவரை என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொன்டிருந்த அவரின் தோழிகளும் என்னை ஒரு மாதிரி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். வேறு வழியில்லாமல் விழித்துக் கொண்டே சென்னை வந்து சேர்ந்தேன்.

முதல்ல சொன்ன அந்த உறுத்தல் என்னன்னா, என் நெத்தியில என்ன இளிச்சவாயனு எழுதியிருக்கோ?

கருத்துகள் இல்லை: