ஞாயிறு, 31 மே, 2009

2009-05-31

வாக்களியுங்கள்
தயவு செய்து இங்கே சென்று உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யங்கள்.

Should Canada place SANCTIONS against Sri Lanka?

சிறீ லங்காவிற்கு எதிராக கனடா , தடைகளை விதிக்கவேண்டுமா?


http://www.citynews.ca/polls.aspx?pollid=5129
வாக்களியுங்கள்
தயவு செய்து இங்கே சென்று உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யங்கள்.

Should Canada place SANCTIONS against Sri Lanka?

சிறீ லங்காவிற்கு எதிராக கனடா , தடைகளை விதிக்கவேண்டுமா?


http://www.citynews.ca/polls.aspx?pollid=5129
அன்பு நண்பர்களே,
வணக்கம்.

இந்த பதிவு, வலை பதிவு வரலாற்றில் மிக முக்கிய பதிவு....

எனது முந்தய பதிவில் சொன்னதை (சூளுரைத்ததைப்) போல எங்கள் வழக்குரைஞர் போராட்டம் வெற்றி பெற்று விட்டது. அதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்..

வழக்குரைஞர்களை அடிக்கச் சொன்னது யார் என்பதற்கான உண்மை நேற்று உயர் நீதிமன்றத்தில் வெளி வந்து சம்பந்தப்பட்ட அடிதடி காவல் ஆணையர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.

என்னுடைய வக்கீல் புத்தியில் ஒரு சந்தேகம்....

உயர் நீதிமன்றத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்து வழக்குரைஞர்களை அடிக்கச் சொன்னது யார் என்று உச்ச நீதிமன்றம் ஆரம்பத்திலே கேள்வி கேட்டது... அப்போதே இந்த பதிலை தமிழக அரசு சொல்லி இருந்தால் எங்கள் போராட்டம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்... அதை இவ்வளவு நாட்கள் இழுத்து, நாங்கள் பேரணி என்று அறிவித்த பின்னர் அரசு சொல்லி இருப்பதற்கு என்ன காரணம்? இந்த நல்ல காரியத்தை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்ட அடுத்த நாளே சொல்லி இருந்தால், அது அரசுக்கும் பெருமையாக இருந்திருக்கும்... எங்கள் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்கும்...

அதுபோல் தில்லி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மும்பையில் இருந்து சென்னை வந்த மாண்பமை நீதியரசர் ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையை பிப்ரவரி 19 -அம் தேதி சம்பவத்தின் உள்ளபடியான கோணத்தில் இருந்து ஆராய்ந்து இக்கலவரத்திற்கு காரணம் இந்த இரண்டு காவல் ஆணையர்கள்தாம் என்று சொல்லி இருந்தாலும் பிரச்னை முடிந்து இருக்கும். அவர் ஏன் இப்படி ஒரு அறிக்கையை கொடுத்தார் என்பது ஒரு புரியாத புதிர். ஆனால் இப்படி சொல்வதை விட இவ்வாறு அறிக்கை கொடுக்க அவரைத் தூண்டியது எது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

நல்ல உடல் நிலையில் இருந்த மாண்பமை நீதியரசர் மகோபாத்யாயா திடீரென உடல் நலம் குன்றி படுக்கையில் படுத்தது.... பின் பேரணிக்கு முந்திய தினம் (அதாவது 18/03/2009) உடல் நலம் சரியாகி நீதிமன்றம் வந்து வழக்கை தானே முனைந்து (Suo moto) விசாரணைக்கு ஏற்று காவல் ஆணையர்களை பணி இடை நீக்கம் செய்ய ஆணை இட்டது.. எல்லாம் நாட்டு மக்களுக்கு நல்லது என்றுதான் சொல்ல வேண்டும்.. வேறு ஏதாவது சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடக்கூடும்.. நமக்கேன் பொல்லாப்பு..

ஆகா கூடிப் போராடினால் தான் வெற்றி உண்டு என்பதை இந்த உலகிற்கு இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

அடுத்து பாமர மக்களும் உயர் நீதிமன்ற படிக்கட்டு ஏறி தமிழில் வாதிடும் வாய்ப்பை பெற்று தந்துள்ளது இச்சம்பவம். ஆங்கில சொற்களே தங்களை இதுகாறும் மோதி வந்த உயர் நீதிமன்ற சுவர்களுக்கு அழகுத் தமிழின் தழுவல் சுகமாக இருந்ததாம்..

என்றும் அன்புடன்..

"சட்டப் பார்வை" பி. ஆர். ஜெ.

அன்பு நண்பர்களே,
வணக்கம்.

இந்த பதிவு, வலை பதிவு வரலாற்றில் மிக முக்கிய பதிவு....

எனது முந்தய பதிவில் சொன்னதை (சூளுரைத்ததைப்) போல எங்கள் வழக்குரைஞர் போராட்டம் வெற்றி பெற்று விட்டது. அதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்..

வழக்குரைஞர்களை அடிக்கச் சொன்னது யார் என்பதற்கான உண்மை நேற்று உயர் நீதிமன்றத்தில் வெளி வந்து சம்பந்தப்பட்ட அடிதடி காவல் ஆணையர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு விட்டனர்.

என்னுடைய வக்கீல் புத்தியில் ஒரு சந்தேகம்....

உயர் நீதிமன்றத்தில் அனுமதி இல்லாமல் நுழைந்து வழக்குரைஞர்களை அடிக்கச் சொன்னது யார் என்று உச்ச நீதிமன்றம் ஆரம்பத்திலே கேள்வி கேட்டது... அப்போதே இந்த பதிலை தமிழக அரசு சொல்லி இருந்தால் எங்கள் போராட்டம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்... அதை இவ்வளவு நாட்கள் இழுத்து, நாங்கள் பேரணி என்று அறிவித்த பின்னர் அரசு சொல்லி இருப்பதற்கு என்ன காரணம்? இந்த நல்ல காரியத்தை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்ட அடுத்த நாளே சொல்லி இருந்தால், அது அரசுக்கும் பெருமையாக இருந்திருக்கும்... எங்கள் போராட்டத்தையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்கும்...

அதுபோல் தில்லி உச்ச நீதிமன்ற உத்தரவுபடி மும்பையில் இருந்து சென்னை வந்த மாண்பமை நீதியரசர் ஸ்ரீ கிருஷ்ணா தனது அறிக்கையை பிப்ரவரி 19 -அம் தேதி சம்பவத்தின் உள்ளபடியான கோணத்தில் இருந்து ஆராய்ந்து இக்கலவரத்திற்கு காரணம் இந்த இரண்டு காவல் ஆணையர்கள்தாம் என்று சொல்லி இருந்தாலும் பிரச்னை முடிந்து இருக்கும். அவர் ஏன் இப்படி ஒரு அறிக்கையை கொடுத்தார் என்பது ஒரு புரியாத புதிர். ஆனால் இப்படி சொல்வதை விட இவ்வாறு அறிக்கை கொடுக்க அவரைத் தூண்டியது எது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

நல்ல உடல் நிலையில் இருந்த மாண்பமை நீதியரசர் மகோபாத்யாயா திடீரென உடல் நலம் குன்றி படுக்கையில் படுத்தது.... பின் பேரணிக்கு முந்திய தினம் (அதாவது 18/03/2009) உடல் நலம் சரியாகி நீதிமன்றம் வந்து வழக்கை தானே முனைந்து (Suo moto) விசாரணைக்கு ஏற்று காவல் ஆணையர்களை பணி இடை நீக்கம் செய்ய ஆணை இட்டது.. எல்லாம் நாட்டு மக்களுக்கு நல்லது என்றுதான் சொல்ல வேண்டும்.. வேறு ஏதாவது சொன்னால் அது நீதிமன்ற அவமதிப்பாகி விடக்கூடும்.. நமக்கேன் பொல்லாப்பு..

ஆகா கூடிப் போராடினால் தான் வெற்றி உண்டு என்பதை இந்த உலகிற்கு இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

அடுத்து பாமர மக்களும் உயர் நீதிமன்ற படிக்கட்டு ஏறி தமிழில் வாதிடும் வாய்ப்பை பெற்று தந்துள்ளது இச்சம்பவம். ஆங்கில சொற்களே தங்களை இதுகாறும் மோதி வந்த உயர் நீதிமன்ற சுவர்களுக்கு அழகுத் தமிழின் தழுவல் சுகமாக இருந்ததாம்..

என்றும் அன்புடன்..

"சட்டப் பார்வை" பி. ஆர். ஜெ.

அழுத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தீர்ப்பு இது...

உயர் நீதிமன்றத்தில் ஆயுத காவற்படை எப்படி வந்தது? வழக்குரைஞர்களின் மீது யார் தடியடி நடத்த சொன்னது? இதற்கு பதில் அளிக்க அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையுறுதியாவணத்தில் வரும் 16-ஆம் பத்தி பின் வருமாறு கூறுகிறது..

"16. I am informed that around 4.00 pm, the stone pelting continued and a few two wheelers and cars were damaged and many police personnel sustained injuries on their head and other vital parts. Head Constable 276 Krishnakumar sustained a grievous stone-hit injury on his testicles, became unconscious and fell down on the ground. The situation was turning grave and the life and security of the general public and the police personnel was in imminent threat. To protect the life and property of the police personnel, the public and others, the Additoinal Commissioner of Police (law & Order) who was the seniormost officer present in the spot, consulted other senior officers in the spot, viz., the Joint Commissioner of Police (North), the Joint Commissioner of Police (Central), the Deputy Commissioner of Police, Flower Bazaar, the Deputy Commissioner of Police, Pulianthope and the Deputy Commissioner of Police, Kilpauk and took the collective decision to declare the assembly as unlawful and to disperse it. Accordingly he directed the Deputy Commissioner of Police, Flower Bazaar who in turn took measures to disperse the unlawful assembly using minimum force."

இதில் வரும் சில முக்கிய வரிகளின் தமிழாக்கம் படி, "காவல் அதிகாரிகள், பொது மக்கள் மற்றும் பலரின் உயிரையும் உடமையையும் காப்பாற்ற சம்பவ இடத்தில இருந்த மிக மூத்த காவல் அதிகாரியான கூடுதல் காவல் ஆணையர் (ACP) (சட்டம் மற்றும் ஒழுங்கு), சம்பவ இடத்தில இருந்த இதர மூத்த காவல் அதிகாரிகளான காவல் இணை ஆணையர் (JCP) (வடக்கு), காவல் இணை ஆணையர் (மையம்), காவல் துணை ஆணையர், பூக்கடை மார்க்கெட், காவல் துணை ஆணையர் (DCP) - பூக்கடை மார்க்கெட், காவல் துணை ஆணையர் - புளியந்தோப்பு, காவல் துணை ஆணையர் - கீழ்ப்பாக்கம் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து, அங்கிருந்த கூட்டத்தை சட்ட விரோதமான கூட்டம் என்று விளம்பவும் அதை கலைக்கவும் கூட்டு முடிவு எடுத்தார். அதன்படி அவர் பிறப்பித்த ஏவுரைக்கு (direction) இணங்க, பூக்கடை மார்கட் காவல் துணை ஆணையர் அந்த சட்ட விரோதமான கூட்டத்தை குறைந்தபட்ச பலப் பிரயோகம் செய்து கலைக்க நடவடிக்கைள் எடுத்தார்."

இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் பின்வருமாறு தனது தீர்ப்பை பகருகிறது. "8. As we find that a prima facie case made out to initiate disciplinary proceeding against the concerned officers, to ensure the State Government to pass appropriate orders, we are of the view that i) Mr.A.K.Viswanathan, IPS, Addl. Commissioner of Police (Law & Order) and ii) Mr.M.Ramasubramani, IPS, formerly Joint Commissioner of Police (North) (Jurisdiction JCP), should be placed under suspension, as they were the persons who were in the helm of the affairs and under whose direct supervision the operation was carried on."

இத்தீர்ப்பில் ஒரு மிகப் பெரிய நெருடல் உள்ளது. அதாவது ஒரு அத்து மீறிய செயல் இங்கு நடந்துள்ளது என்பது தெளிவாக அரசு தரப்பில் மேற்சென்ற பத்தி 16-இன் வாயிலாக ஒத்தேற்க்கப்பட்டுள்ளது. அச்செயலுக்கான முடிவு கூட்டாக எடுக்கப்பட்டு உள்ளது (கவனிக்க : 'கூட்டாக') என்றும் கூறப்பட்டு உள்ளது. எப்போது ஒரு செயல் செய்ய கூட்டாக முடிவு செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறதோ அப்போதோ அவ்வாறு முடிவு செய்த அனைவரும் கூட்டாகவும், தனிதனியாகவும் பொறுப்பாவார்கள் என்பது சட்ட நிலைப்பாடு. அப்படி இருக்க (1) கூடுதல் காவல் ஆணையர் (ACP) (சட்டம் மற்றும் ஒழுங்கு) (திரு A.K. விசுவநாதன்), (2) காவல் இணை ஆணையர் (JCP) (வடக்கு) (திரு M. இராம சுப்பிரமணி) ஆகியோர் மட்டும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒரு சட்டத் தவறு. பத்தி 16-இல் சொல்லப்பட்ட அனைத்து காவல் அதிகாரிகளையும் உயர் நீதிமன்றம் பணி இடை நீக்கம் செய்ய அரசுக்கு ஆணை இட்டு இருக்க வேண்டும்.

அத்துடன், அரசு சார்பில் இந்த ஆணையுறுதியாவணத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்பவர் காவல் ஆணையர் (திரு இராதா கிருஷ்ணன்) ஆவர். சம்பவ தினத்தன்று அவரும் சம்பவ இடத்தில இருந்து உள்ளார். அதற்கு நிறைய ஆதாரம் உள்ளது. காவல் ஆணையர்கள் அனைவர்க்கும் உயர்ந்த நிலையில் இருக்கும் இவரையும் பணி இடை நீக்கம் செய்து இருக்க வேண்டும்.

ஒரு பக்கம் இத்தீர்ப்பை நாம் வரவேற்கிறோம். ஆனால் பிள்ளைகள் ஒரு மாதமாக அழுது கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு வாய் மட்டும் அமுது ஊட்டிய தாயாகத்தான் தற்போது நாம் உயர் நீதிமன்றத்தை காண்கின்றோம். எங்கள் பசிக்கு (மன வேதனைக்கு) இது போதாது...

அழுத பிள்ளைக்கு பால் கொடுக்கும் தீர்ப்பு இது...

உயர் நீதிமன்றத்தில் ஆயுத காவற்படை எப்படி வந்தது? வழக்குரைஞர்களின் மீது யார் தடியடி நடத்த சொன்னது? இதற்கு பதில் அளிக்க அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆணையுறுதியாவணத்தில் வரும் 16-ஆம் பத்தி பின் வருமாறு கூறுகிறது..

"16. I am informed that around 4.00 pm, the stone pelting continued and a few two wheelers and cars were damaged and many police personnel sustained injuries on their head and other vital parts. Head Constable 276 Krishnakumar sustained a grievous stone-hit injury on his testicles, became unconscious and fell down on the ground. The situation was turning grave and the life and security of the general public and the police personnel was in imminent threat. To protect the life and property of the police personnel, the public and others, the Additoinal Commissioner of Police (law & Order) who was the seniormost officer present in the spot, consulted other senior officers in the spot, viz., the Joint Commissioner of Police (North), the Joint Commissioner of Police (Central), the Deputy Commissioner of Police, Flower Bazaar, the Deputy Commissioner of Police, Pulianthope and the Deputy Commissioner of Police, Kilpauk and took the collective decision to declare the assembly as unlawful and to disperse it. Accordingly he directed the Deputy Commissioner of Police, Flower Bazaar who in turn took measures to disperse the unlawful assembly using minimum force."

இதில் வரும் சில முக்கிய வரிகளின் தமிழாக்கம் படி, "காவல் அதிகாரிகள், பொது மக்கள் மற்றும் பலரின் உயிரையும் உடமையையும் காப்பாற்ற சம்பவ இடத்தில இருந்த மிக மூத்த காவல் அதிகாரியான கூடுதல் காவல் ஆணையர் (ACP) (சட்டம் மற்றும் ஒழுங்கு), சம்பவ இடத்தில இருந்த இதர மூத்த காவல் அதிகாரிகளான காவல் இணை ஆணையர் (JCP) (வடக்கு), காவல் இணை ஆணையர் (மையம்), காவல் துணை ஆணையர், பூக்கடை மார்க்கெட், காவல் துணை ஆணையர் (DCP) - பூக்கடை மார்க்கெட், காவல் துணை ஆணையர் - புளியந்தோப்பு, காவல் துணை ஆணையர் - கீழ்ப்பாக்கம் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து, அங்கிருந்த கூட்டத்தை சட்ட விரோதமான கூட்டம் என்று விளம்பவும் அதை கலைக்கவும் கூட்டு முடிவு எடுத்தார். அதன்படி அவர் பிறப்பித்த ஏவுரைக்கு (direction) இணங்க, பூக்கடை மார்கட் காவல் துணை ஆணையர் அந்த சட்ட விரோதமான கூட்டத்தை குறைந்தபட்ச பலப் பிரயோகம் செய்து கலைக்க நடவடிக்கைள் எடுத்தார்."

இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் பின்வருமாறு தனது தீர்ப்பை பகருகிறது. "8. As we find that a prima facie case made out to initiate disciplinary proceeding against the concerned officers, to ensure the State Government to pass appropriate orders, we are of the view that i) Mr.A.K.Viswanathan, IPS, Addl. Commissioner of Police (Law & Order) and ii) Mr.M.Ramasubramani, IPS, formerly Joint Commissioner of Police (North) (Jurisdiction JCP), should be placed under suspension, as they were the persons who were in the helm of the affairs and under whose direct supervision the operation was carried on."

இத்தீர்ப்பில் ஒரு மிகப் பெரிய நெருடல் உள்ளது. அதாவது ஒரு அத்து மீறிய செயல் இங்கு நடந்துள்ளது என்பது தெளிவாக அரசு தரப்பில் மேற்சென்ற பத்தி 16-இன் வாயிலாக ஒத்தேற்க்கப்பட்டுள்ளது. அச்செயலுக்கான முடிவு கூட்டாக எடுக்கப்பட்டு உள்ளது (கவனிக்க : 'கூட்டாக') என்றும் கூறப்பட்டு உள்ளது. எப்போது ஒரு செயல் செய்ய கூட்டாக முடிவு செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறதோ அப்போதோ அவ்வாறு முடிவு செய்த அனைவரும் கூட்டாகவும், தனிதனியாகவும் பொறுப்பாவார்கள் என்பது சட்ட நிலைப்பாடு. அப்படி இருக்க (1) கூடுதல் காவல் ஆணையர் (ACP) (சட்டம் மற்றும் ஒழுங்கு) (திரு A.K. விசுவநாதன்), (2) காவல் இணை ஆணையர் (JCP) (வடக்கு) (திரு M. இராம சுப்பிரமணி) ஆகியோர் மட்டும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒரு சட்டத் தவறு. பத்தி 16-இல் சொல்லப்பட்ட அனைத்து காவல் அதிகாரிகளையும் உயர் நீதிமன்றம் பணி இடை நீக்கம் செய்ய அரசுக்கு ஆணை இட்டு இருக்க வேண்டும்.

அத்துடன், அரசு சார்பில் இந்த ஆணையுறுதியாவணத்தை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்பவர் காவல் ஆணையர் (திரு இராதா கிருஷ்ணன்) ஆவர். சம்பவ தினத்தன்று அவரும் சம்பவ இடத்தில இருந்து உள்ளார். அதற்கு நிறைய ஆதாரம் உள்ளது. காவல் ஆணையர்கள் அனைவர்க்கும் உயர்ந்த நிலையில் இருக்கும் இவரையும் பணி இடை நீக்கம் செய்து இருக்க வேண்டும்.

ஒரு பக்கம் இத்தீர்ப்பை நாம் வரவேற்கிறோம். ஆனால் பிள்ளைகள் ஒரு மாதமாக அழுது கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு வாய் மட்டும் அமுது ஊட்டிய தாயாகத்தான் தற்போது நாம் உயர் நீதிமன்றத்தை காண்கின்றோம். எங்கள் பசிக்கு (மன வேதனைக்கு) இது போதாது...

கருத்துகள் இல்லை: