செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30


ஆந்திரா தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு


நடிகை ரோஜாவின் போலி ஆபாச படம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பாகியதுடன் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் பரப்பப்பட்டதால் ஆந்திர தேர்தல் பிரசாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவியாகவும் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரிகிரி சட்டசபை தொகுதியில் கட்சியின் சார்பில் வேட்பாளராகவும் நிறுத்தப்பட்டுள்ள நடிகை ரோஜா, தெலுங்கு தேசம் கட்சிக்காக மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் அவரது புகழுக்கு கேடு விளைவிக்கும் நோக்குடன் அவர் நடித்ததைப் போன்றதோர் ஆபாச படம் கடந்த வாரம் குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயவாடா, விஜயநகரம், அமலாபுரம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி.களில் ஒளிபரப்பப்பட்டது.

5 நிமிடம் மட்டும் ஓடும் இந்த ஆபாபடத்தை தற்போது, அவரது எதிரிகள் சிலர் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமும் பரப்பி வருகின்றனர்.

இந்த படத்தில் நடிகை ரோஜா பூட்டிய அறைக்குள் பல ஆண்களுடன் தகாத உறவு கொள்வது போலவும், நீச்சல் குளத்தில் நீந்திக் குளிப்பது போலவும் காட்சிகள் அமைந்துள்ளன. இந்த படத்தை முதலில் பார்ப்பவர்களுக்கு அது நடிகை ரோஜா என்றே நினைக்கத் தோன்றும்.

எனினும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஒரு படத்தில் நடிகை ரோஜாவின் முகத்தை கச்சிதமாக பொருத்தி அவரே நடித்துள்ள தைப் போன்று இப்போலி ஆபாசப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கூறுகையில், இவ்வாபாச படம் மார்பிங் முறையில் போலியாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை முன்பு எங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவர், அதை போலி என்று கண்டுபிடித்தார்.

தற்போது அதே படத்தை கேபிள் டி.வி.யில் வெளியிட்டும், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பியும் எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்.

இந்த ஆபாச பட விவகாரம் குறித்து நடிகை ரோஜாவிடம் கேட்டபோது, இது மாதிரியான சதித்திட்டங்கள் மூலம் எனது அரசியல் வாழ்க்கையை யாராலும் முடித்து விடமுடியாது. விரைவில் தேர்தல் கமிஷனிடம் இது பற்றி புகார் செய்வேன் என்று கூறினார்.

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை அலரிமாளிகையில் இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு, அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை சீர்குலைப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்வைத்த காலை எக்காரணத்திற்காகவும் பின்வைக்க மாட்டேன்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உலகமே எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டு மக்கள் எனக்கு பின்னால் நிற்கின்றனர். மக்களின் ஆணையின் பிரகாரம் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.
தலாய்லாமா பற்றிய தகவல்களும் சேமிப்பு

இணையத்தளம் மூலம் 103 நாடுகளில் உளவு பார்த்து முக்கிய ஆவணங்களை சீன நிறுவனம் கபளிகரம் செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
சீன நிறுவனம் ஒன்று இன்டர்நெட் மூலம் இந்தியா உள்ளிட்ட 103 நாடுகளின் முக்கிய அலுவலகங்களில் உள்ள கம்ப் யூட்டர் மூலம், இன்டர்நெட் வழியாக முக்கிய விஷயங்களைக் கிரகித்து, உளவு பார்த்து வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு வல்லுனர்கள் இந்த சதி வேலையை அம்பலப்படுத்தியுள்ளனர். திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா பற்றிய தகவல்களை ஆராயும் போது அவரது கம்ப்யூட்டரிலிருந்து தகவ ல்கள் கண்காணிக்கப்படுவதையும் இந்த வல்லுனர்கள் கண்டுபிடித்தனர்.

பின்னர் மற்ற விவரங்களை ஆராயும் போது இந்த சதிவேலை 103 நாடுகளில் நடந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டு ள்ளது.

சீன நாட்டு கம்ப்யூட்டர்களில் இந்த உளவு பார்க்கும் வசதி செய்யப்பட்டு, அந்த கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படும் அலுவலகங்களில் இருந்து தேவையான தகவல்கள் சுருட்டப்பட்டுள்ளன.

103 நாடுகளில் உள்ள 1,295 கம்ப்யூட் டர்களில் உளவு பார்க்கும் வேலை நடந் துள்ளது பெரிய அளவில் நடந்துள்ள இந்த உளவு குறித்து அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களும் விசாரிக்கத் துவங்கியுள் ளன.

முழு விவரங்களும் சேகரிக்கப்பட்ட பின், இதில் சீன அரசுக்கு நேரடி தொடர்பு உள்ளதா இல்லை? என்பது தெரிய வரும் என இந்த உளவு சதியை வெளிப்படுத்திய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


டாலர்கள் ஊட்டிப் பாகிஸ்தான் வளர்த்து வரும் தீவிரவாதத்திற்கு மேலும் சில அப்பாவிகள் பலி. ஏறக்குறைய 27 காவல்துறையினர் இறந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன். 6 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டுள்ளனர். 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சரியான எண்ணிக்கை இதுவரை தெரியாது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் குறி வைக்கப்பட்ட சில நாட்களுக்குள், அதே லாகூரில் மீண்டும் தீவிரவாதிகளின் திட்டமிட்ட சதிச்செயல்.

அங்குள்ள இளைஞர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கிறதா? தெரியாது. பல்வகை ஆயுதம் மட்டும் கிடைக்கிறது. இந்தத் தாக்குதலிலும் பல வகைப்பட்ட ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. ஈடுபட்டவர்களில் பெரும்பாலும் இளவயதினரே! இதுவரை எந்த இயக்கமும் "பொறுப்பேற்கவில்லை".

இளவயதினரை, நல்ல விஷயங்களில் ஈடுபடுத்தும் அறிவு ஏன் இல்லை? எத்தகைய மகத்தான சக்தி, முரட்டு முட்டாள்களின் கையில்! சுயவிமர்சனமும், சுயபரிசோதனையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது பாகிஸ்தான். அதற்குள் பாகிஸ்தான் மந்திரி ஒருவர், இது மும்பைத் தாக்குதலைப் போன்றது என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

ஏதேனும் ஒருவகையில் இந்தியாவைத் தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்திவிட நடத்தும் மலிவு நாடகம். பாகிஸ்தானோடு திரைமறைவு வர்த்தகம் செய்யும் நாடுகள் உணரட்டும். மறைமுக உறவு கொண்டுள்ள நாடுகள், மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது. இந்தியா மென்பொருளிலிருந்து உணவுப்பொருள் வரை ஏற்றுமதி செய்கிறது. பாகிஸ்தான், தீவிரவாதிகளை!

உலகிற்கு ஏதேனும் தெரிவிக்க விழைந்தால், நேர்வழியில் தெரிவிக்கவும். தீவிரவாதத்தால் அல்ல. பிற நாடுகள் அடைந்த, அடைந்துகொண்டிருக்கும் வளர்ச்சி, அறிவால் பெற்றது. இளைய சமுதாயம் உழைத்ததால் விளைந்தது. இன்னும் இந்தியாவைப் புறவழிகளில் எப்படித் தாக்கலாம் என்பதில் புத்தியைச் செலுத்தாமல், உழைப்பில் திருப்பினால் பாகிஸ்தான் மேற்கொண்டு வாழலாம். இல்லையென்றால், உலக வரைபடம் சில திருத்தங்களுக்கு உள்ளாகும். அதைப் பார்க்கப் பாகிஸ்தான் இருக்காது!
கம்ப்யூட்டர்களை நாளையதினம் வைரஸ் தாக்கும் என்று உலகம் முழுவதும் பீதி நிலவுகிறது. இதற்காக, `கான்பிக்கர் சி' என்ற இன்டர்நெட் வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது, கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் நடத்துவதற்கென்றே உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஆகும்.

இதில், ஏப்ரல் 1-ந் தேதி கம்ப்யூட்டர்களை தாக்கும் வகையில் `கட்டளை' பிறப்பிக்கப்பட்டு, பொருத்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எனவே, நாளை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் வைரஸால் தாக்கப்படலாம் அல்லது இன்டர்நெட்களில் தேவையற்ற இ-மெயில்கள் வந்து குவியலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும்......

பங்குச் சந்தை : ஒரே நாளில் 480 புள்ளிகள் வீழ்ச்சி

தமிழ் ஈழம் மலர்ந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி : கருணாநிதி

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

கல்லாறு சதீஷுக்கு டாக்டர் பட்டம்

[Monday March 30 2009 07:54:24 PM GMT] [விசாலி]


சுவிஷ் தமிழ் எழுத்தாளர் கல்லாறு சதீஷுக்கு சர்வதேச திறந்த பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.


புலம் பெயர் தமிழ் படைப்பாளியான கல்லாறு சதீஷ், தனது தரம் மிக்க படைப்புகளின் மூலம் புகழ் பெற்றவர்.

கல்லாறு சதீஷின் படைப்புகள் எடுத்துக்கொண்ட புதிய கருக்களினால், உலகத் தமிழ் மக்கள் மத்தியில் மதிப்புப் பெற்றார்.

பனிப் பாறைகளும் சுடுகின்றன, சொர்கங்களும் தண்டிக்கின்றன,தமிழர் புலம்பெயரியலை தத்துரூபமாகப் பதிவு செய்துள்ளன.



கல்லாறு சதீஷுக்கு தமிழகத்தில் இலக்கிய விருது வழங்கப் பட்டது.

சுவிஷ் கலாசார அமைச்சகத்தினூடக இரண்டு முறை பணப் பரிசு பெற்றார்.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்,இவர் எழுத்துக்களைப் பாராட்டி தங்க மோதிரம் பரிசளித்துக் கெளரவித்தார்.

கல்லாறு சதீஷின் எழுத்துக்கள் சுவிஷ் வாசகர்கள் மத்தியிலும் சென்றது.

இதனால் இவரின் பல கதைகள் மொழி பெயர்க்கப்பட்டன.



சுவிஷில் தமிழர்களின் 20வது ஆண்டில் கல்லாறு சதீஷின் எழுத்துக்கள் தமிழர் சாதனை என பேர்ன் நகரில், சுவிஷ் மக்களால் விழா எடுத்துப் பாராட்டப்பட்டது.

சுவிஷ் எழுத்தாளர் சம்மேளனம் கல்லாறு சதீஷை தங்களது அங்கத்தவராக அங்கீகரித்தது.

சுவிஷ் பல்கலைக் கழகம் கல்லாறு சதீஷின் எழுத்துக்களைப் பாடமாக ஏற்றுக்கொண்டுள்ளது, இப் பாடத்திட்டத்தில் கல்லாறு சதீஷின் வாழ்க்கைக் குறிப்பும் இடம் பெற்றுள்ளது.

சுவிஷ் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள தமிழ்த் திருமணம் எனும் திரைப்படத்தின் பாடலாசிரியராகவும், தமிழ் நிபுணராகவும் கல்லாறு சதீஷ் பணியாற்றியுள்ளார். இத் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கல்லாறு சதீஷ், எழுத்தாளராக, மேடைப்பேச்சாளராக, பேட்டியாளராக, சமூக சேவகராக மக்கள் மத்தியில் புகழ் பெற்றவர்.

கல்லாறு சதீஷ் இலாப மையம் என்னும் மக்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனராகவும் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

மிகத் தகுதி மிக்க கல்லாறு சதீஷுக்கு மார்சல் ஆர்ட்டிற்கான சர்வதேச பல்கலைக் பல்கலைக் கழகமும்,

கொம்பிலிமென்ரார் மெடிசனுக்கான சர்வதேச திறந்த பல்கலைக் கழகமும்
கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளது.

டாக்டர் பட்டம் குறித்துக் கல்லாறு சதீஷைக் கேட்டபோது" டாக்டர் பட்டம் மகிழ்சியைக் கொடுத்தாலும்,தினம் தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகிக் கொண்டிருக்கையில், இந்த மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்குரியதாகவில்லை, இருப்பினும் துயரப்படும் மக்களின் விடியலுக்காக டாக்டர் பட்டம் பயன் படும் என்று கருதுகிறேன்" என்றார்.
-நன்றி லங்காசிறி சுவிஸ் செய்திகள் .
இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பகுதி களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்துவதற்கு கடத்தல் ஆட்கள் முயன்று வருவதாக காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பகுதி களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்துவதற்கு கடத்தல் ஆட்கள் முயன்று வருவதாக காவல்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் இடைத்தங்கல் முகாமில் ஞாயிற்றுக்கிழமை வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த முகாமில் 467 குடும்பங்கள் உள்ளன. மொத்தத்தில் 1,550 பேர் வசிக்கின்றனர். முகாமில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் இடைத்தங்கல் முகாமில் ஞாயிற்றுக்கிழமை வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த முகாமில் 467 குடும்பங்கள் உள்ளன. மொத்தத்தில் 1,550 பேர் வசிக்கின்றனர். முகாமில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைதோறும் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்படும்.
30.03.2009. இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர்  சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார். நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார். அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான [...]

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

30.03.2009. இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர்  சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார். நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார். அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான [...]
சொல்லதான் நினைக்கின்றேன்....

ஏம்பா பங்குச் சந்தைனு சொல்லுராங்களே! அதப்பத்தி கொஞ்சம் சொல்லேம்பா? என் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி... ம்ம்ம்ம்ம்..... என்னது பங்குச் சந்தையா? என்னபா என்ன நினைக்குற நான் என்ன காரைக்குடி அண்ணாமலை செட்டியாரா? இல்லை ஹர்ஷத் மேத்தாவா? என்னைப்போய் கேட்கிறியே..... இல்லைபா நீ இணையத்தில் ஏதோதோ படிக்குர அதுதான் கேட்டேனு சொன்னதும் கொஞ்சம் தலைநிமிர்த்தி நமக்கு தெரிஞ்சத சொல்ல...

எனக்கு அதப்பத்தி அனுபவம் இல்லபா, கொஞ்ச நாளுக்கு முன் ஆணந்த விகடனுல படிச்ச கதை ஒன்னு..... ஒருவன் ஒரு கிராமத்திற்கு சென்று அங்கிருந்தவரிடம் இங்கு குரங்குகள் இருக்குனு கேள்விப்பட்டேன் எனக்கு நான்கு குரங்குகள் வேனும் ஒரு குரங்குக்கு 50 ரூபாய் தருகின்றேன் பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அவர்களின் ஒருவன் ஒரு குரங்குக்கு 50 ரூபாயா? நான் பிடித்து தருகின்றேன் என்று பிடித்து தந்தான். இவர் சொன்னது போல நான்கு குரங்குகளுக்கு 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் கொடுத்தார். பின் அங்கேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அந்த குரங்குகளை அதில் வைத்து பூட்டிவிட்டு ஒரு காவல் காரனையும் வைத்துவிட்டு அங்குள்ளவர்களிடம் அடுத்தமுறை இன்னும் அதிக குரங்குகள் தேவை 75 ரூபாயானாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். 75ரூபாய் என்றதும் அந்த ஊரில் உள்ள அனைவரும் எல்லா குரங்குகளையும் பிடித்து வைத்திருந்தனர். அடுத்தமுறை வந்த வியாபாரி ரொம்ப மகிழ்ச்சியாக எல்லா குரங்குகளையும் ரூபாய் 75 வீதம் வாங்கி கொண்டார். அதேபோல் எல்லா குரங்குகளையும் அந்த வீட்டில் பூட்டினார். மீண்டும் அவ்வூர் மக்களிடம் அடுத்தமுறை இன்னும் நிறைய குரங்குகள் தேவை ரூபாய் 200 இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் செல்லும் முன் குரங்குகளை பார்த்து கொண்டிருக்கும் காவலாளிடம் யாராவது குரங்கு கேட்டால் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு விற்றுவிடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்தமுறை வியாபாரி 200 ரூபாய் தருவதாக சொன்னதும் எல்லா இடங்களிலும் குரங்குகளை தேடி அலைந்தனர், ஏற்கனவே எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால் கடைசியாக குரங்கு விற்கும் காவலாளிடம் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு வாங்கி சென்றனர் வியாபாரிடம் 200 ரூபாய்க்கு விற்பதற்காக....... சொன்னதுபோல வியாபாரியும் வந்தான்; எல்லொரும் தம்மிடம் உள்ள குரங்கை விற்பதற்காக தயாராக இருந்தனர். குரங்கு வாங்குபவன் அவர்களிடம் வந்து இந்தமுறை குரங்குகள் தேவைப்படவில்லை அடுத்த முறை வாங்கிக்கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு காவலாளிடம் குரங்கு விற்ற காசை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்....

என்னபா புரியுதா? என்று கேட்டேன் நண்பரிடம். ம்ம் நீ சொல்லுரதிலிருந்து பார்த்தா குரங்கு வியாபாரம்தான் பங்குசந்தை, குரங்குதான் பங்கு. மதிப்பே இல்லாத குரங்கை மதிப்புள்ளதாக ஆக்கி செய்யும் வியாபாரம்தான் பங்குசந்தையா என்றான்? நான் அப்படி சொல்லவில்லை பங்கு என்பது ஒரு மாய தோற்றம் அதை கைதேர்ந்தவர்கள் செய்யும் விளையாட்டில் இப்படியும் ஆகலாம். சிறிதே உபயோகம் உள்ள தங்கதிற்கு மதிப்புக் கொடுக்கப் படுவதும், அவற்றின் விலை கோபுரத்தில் இருப்பதும் எதை காட்டுகின்றது; ஒரு குரங்கு விளையாட்டுப் போல தோன்றவில்லையா? பங்கு வர்த்தகம் புரியாதவர்களுக்கு ஒரு சூதாட்டம் அதை முறைப்படி கற்றுக்கொண்டால் லாபத்தில் விளையாடலாம். கொஞ்சம் தெரிந்ததுமே எல்லாம் தெரிந்துக்கொண்டேன் என்று இருமாப்பு இல்லாமல் புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றுதான் எனக்குப் படுதுபா என்றேன். .......
நீ சொல்லரதும் சரிதாம்பா...... ஆமாம் சுவிஸ் வங்கில இந்தியாவிலிருந்து மட்டும் 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணமா டிபாசிட் செஞ்சு இருக்காங்கலாமே, நம்ம அரசாங்கம் இதை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவருமா?

இங்க பாரு இப்படி எல்லாம் வம்புல மாட்டிவிடக்கூடாது.. இதெல்லாம் நடக்குறக் காரியமா? அப்படி ஒரு கொடுப்பினை எல்லாம் இந்தியாவிற்கு இல்ல, இல்லவே இல்லை...... அவரும் தலை ஆட்டிகொண்டே சென்றுவிட்டார், நானும் எஸ்கேப்
 
அய்யப்ப மாதவனின் நிசி அகவல் விமர்சனக்கூட்டத்திற்குப் போயிருந்தபோது,அங்கு சந்தித்துக்கொண்ட படைப்பாளிகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டதைப் பார்த்தபோது,"இதென்ன? கொஞ்சம் அதிகப்படியா இருக்குதே! அப்படியே மேலை நாட்டுக் கலாச்சாரத்தை இதுலயும் கடைபிடிக்கறாங்களே?" அப்படின்னு நினைச்சேன்.ஆனா,இப்பதான் புரியுது,அதிலுள்ள அர்த்தம்.(இது மாதிரி நான் புரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது). யாத்ராவை நான் இப்போது நேரில் சந்தித்தால் நானும் அப்படித்தான் ஆரத் தழுவுவேன்.இப்போதைக்கு மானசீகமாய்.

குரு சுந்தர்ஜி கூட இவரை அறிமுகப்படுத்தி எழுதியிருந்தபோது, 'நாமெல்லாம் இவர் கண்ணுக்கு ஏன் தெரிய மாட்டேங்கறோம்னு' சின்னப்புள்ளத்தனமா யோசித்துப் பொறாமைப் பட்டேன்.ஆனா, அதுதான் குரு. சரியான கண்டுபிடிப்பு.

வலையுலகம் பக்கம் இப்போதுதான் வந்திருக்கும் இவர் வருகைக்கு நாமெல்லாம் மகிழவேண்டும். களிப்பு ஏற்படுத்தும் படைப்புகளை எழுதுபவர்கள் ஒரு ரகம்.மெல்லிய உணர்வுகள், தக்கையாய் மனதை மிதக்கவைக்கும் ரசனையான படைப்புகளை எழுதுபவர்கள்.

வலியை, அதிர்வுகளை, நிலைகுலைவை ஏற்படுத்தும் படைப்பாளிகள் ஒரு ரகம்.வலிகள்தான் நிறைய படைப்பாளிகளுக்கான பொதுவான அம்சமாக, அவர்களை எழுதவைக்கும் காரணியாக அமைந்திருப்பதை நான் பலரிடத்தில் பார்த்திருக்கிறேன்.இதுவே, அவர்களின் காத்திரமான படைப்புகளுக்கு அடித்தளம்.யாத்ராவின் கவிதைகளும் வலி மிகுந்ததாய்,அதிர்வுகளை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. இது பொதுவான ஒரு பார்வைதான். ரசனையான மற்றும் பலவிதமான கவிதகளையும் இவர் எழுதியுள்ளார்.
நிறைய படித்திருக்கிறார். வாசிப்பில்மிகத் தேர்ச்சி பெற்றவராயிருக்கிறார். ஒரு படைப்பாளியாய் இருப்பதினும் பெரியது, தேர்ந்த ஒரு வாசகனாய் இருப்பது. இதன் அருமையும், ஏக்கமும் எனக்கு நன்றாகவே தெரியும்.

இயற்பெயர் செந்தில்வேல். என் பெயரிலும் வேல் இருக்கிறது என்றெல்லாம் ,இவரோடு ஒப்பிட்டுக்கொண்டு மகிழ்ந்துகொள்கிறேன்.

இவரை இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பச் சொன்ன புண்ணியவான்களில் நானுமொருவன்.இதை இவர் மிகவும் சிலாகிக்கிறார். ஆனால், உண்மையில் இப்படியொரு பெருமையை, மகிழ்ச்சியை யாத்ரா எனக்கு அளித்ததற்கு நான்தான் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.(இந்த இடத்தில் வடகரை வேலன் அண்ணாச்சியை நினைக்கிறேன். இவர், இதுபோல், எப்போதும் மகிழ்ச்சியில் இருப்பவர்)இவரின் படைப்பு வேகம், ஆற்றல் மிகவும் ஆச்சரியமளிக்கிறது.இத்தனையையும் இவர்,ஏற்கனவே எழுதியது இல்லையாம். இப்போதுதான் எழுதிக்கொண்டு வருகிறாராராம்.ஏற்கனவே எழுதியவற்றை கிழித்துப் போட்டுவிட்டாராம். எவ்வளவு பெரிய இழப்பு என்று மனம் துடிக்கிறது.

தொடர்ச்சியாக உயிரோசை, நவீன விருட்சம், மற்றும் சில வலைத்தளங்கள் அவர்களாகவே விரும்பிக் கேட்டுப் பிரசுரம் செய்வது என துவக்க நிலையிலேயே பிரமிப்பூட்டுகிறார். இவர் அடையக் காத்திருக்கும் வெற்றிகள், உச்சம் வெகு தொலைவிலில்லை. அனேகமாக, வருகிற புத்தகக் கண்காட்சியில், இவரின் தொகுப்பு கிடைக்கப் பெறலாம்.

இது என்னைப்பொறுத்தவரை முழுக்க முழுக்க ஒரு சுய நலமானப் பதிவு.இவருக்கு கிடைக்கும், கிடைக்கப்போகும் வெளிச்சத்தை என் பக்கம் திருப்பிக்கொள்ளும் சுய நலம்.(எனவே,யாத்ரா,இப்பதிவுக்காக நன்றியையோ, நெகிழ்ச்சியையோ தெரிவித்து என்னைக் குற்ற உணர்வில் ஆழ்த்திவிடவேண்டாம் என்று, அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.)

கவிஞனே, யாத்ரா! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதில் முந்திக்கொள்கிறேன்.


More than a Blog Aggregator

by வண்ணத்துபூச்சியார்








இது வரை விடுவிக்க முடியாத கணித புதிரை கண்டுபிடிக்க நான்கு கணித மேதைகளை ஒரிடத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. Condition: யாரும் மொபைல் போன் மட்டும் எடுத்து வரக்கூடாது.
அழைத்தவர் Fermat.


தங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லாத அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புனை பெயர்கள் Hilbert, Pascal, Galois and Oliva.


நிகழ போகும் அதி பயங்கரம் அறியாது நால்வரும் சொன்ன இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.


நகரித்திலிருந்து வெகு தூரம் கடந்த ஒரு ஏரியை ஒட்டிய காலியான பிரும்மாண்ட பங்களா.

அதில் ஒரு அழகான அறை. அனைவரும் காத்திருக்கின்றனர். Fermat வருகிறார். அனைவருக்கும் விருந்தும் அளிக்கிறார்.



Fermat ன் மொபைல் அடிக்கிறது. அவரது மகள் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்று சொல்லி போன் பாதியிலேயே கட்டாகி விட ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவதாக சொல்லி கிளம்புகிறார் Fermat.


அவர் சென்றதும் விபரீதம் ஆரம்பிக்கிறது.


அங்குள்ள PDA வில் கணக்கு புதிர் வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் அதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். விடையளிக்க தவறினாலும் தவறான விடையளித்தாலும் அறை நாலா பக்கத்திலிருந்தும் நகர ஆரம்பிக்கும்.


அவசரமாய் போன Fermat வருவதாய் காணோம்.


புதிர்கள் மட்டும் வந்து கொண்டே இருக்க நால்வரும் சிக்கி திணருகிறார்கள். விடையளிக்க முடியாவிட்டல் அறைக்குள்ளேயே மாட்டி கொண்டு இறக்க வேண்டியதுதான்.



இதையெல்லாம் செய்தது யாராக இருக்கும்..??????

ஏன் சென்றவர் வரவில்லை..??????

ஏன் புனைப்பெயர் அளிக்கப்பட்டது..??????

கண்டிஷன் போட்டதன் நோக்கமென்ன..???????

நால்வரும் தப்பித்தார்களா ..??????


கண்டிப்பாக திரைப்படத்தை பார்க்க வேண்டும். சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து.


இப்படத்தை எழுதி இயக்கியவர்கள் இரட்டையர்களான Luis Piedrahita & Rodrigo Sopena. அற்புதமான ஒளிபரப்பும் மிரட்டும் இசையும் கூடுதல் சிறப்பு.


காலம்: 90 நிமிடங்கள் மட்டுமே

வெளிவந்தது: 2007

மொழி: ஸ்பானிஷ்.



உடனடியாக படத்தை பார்க்க முடியாதவர்களுக்கு டிரைலர் இங்கே.



டிஸ்கி: மேலே உள்ள படங்களில் Fermat இல்லை. டிரைலரில் தான் இருக்கிறார்


More than a Blog Aggregator

by வண்ணத்துபூச்சியார்








இது வரை விடுவிக்க முடியாத கணித புதிரை கண்டுபிடிக்க நான்கு கணித மேதைகளை ஒரிடத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. Condition: யாரும் மொபைல் போன் மட்டும் எடுத்து வரக்கூடாது.
அழைத்தவர் Fermat.


தங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லாத அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புனை பெயர்கள் Hilbert, Pascal, Galois and Oliva.


நிகழ போகும் அதி பயங்கரம் அறியாது நால்வரும் சொன்ன இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.


நகரித்திலிருந்து வெகு தூரம் கடந்த ஒரு ஏரியை ஒட்டிய காலியான பிரும்மாண்ட பங்களா.

அதில் ஒரு அழகான அறை. அனைவரும் காத்திருக்கின்றனர். Fermat வருகிறார். அனைவருக்கும் விருந்தும் அளிக்கிறார்.



Fermat ன் மொபைல் அடிக்கிறது. அவரது மகள் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்று சொல்லி போன் பாதியிலேயே கட்டாகி விட ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவதாக சொல்லி கிளம்புகிறார் Fermat.


அவர் சென்றதும் விபரீதம் ஆரம்பிக்கிறது.


அங்குள்ள PDA வில் கணக்கு புதிர் வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் அதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். விடையளிக்க தவறினாலும் தவறான விடையளித்தாலும் அறை நாலா பக்கத்திலிருந்தும் நகர ஆரம்பிக்கும்.


அவசரமாய் போன Fermat வருவதாய் காணோம்.


புதிர்கள் மட்டும் வந்து கொண்டே இருக்க நால்வரும் சிக்கி திணருகிறார்கள். விடையளிக்க முடியாவிட்டல் அறைக்குள்ளேயே மாட்டி கொண்டு இறக்க வேண்டியதுதான்.



இதையெல்லாம் செய்தது யாராக இருக்கும்..??????

ஏன் சென்றவர் வரவில்லை..??????

ஏன் புனைப்பெயர் அளிக்கப்பட்டது..??????

கண்டிஷன் போட்டதன் நோக்கமென்ன..???????

நால்வரும் தப்பித்தார்களா ..??????


கண்டிப்பாக திரைப்படத்தை பார்க்க வேண்டும். சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து.


இப்படத்தை எழுதி இயக்கியவர்கள் இரட்டையர்களான Luis Piedrahita & Rodrigo Sopena. அற்புதமான ஒளிபரப்பும் மிரட்டும் இசையும் கூடுதல் சிறப்பு.


காலம்: 90 நிமிடங்கள் மட்டுமே

வெளிவந்தது: 2007

மொழி: ஸ்பானிஷ்.



உடனடியாக படத்தை பார்க்க முடியாதவர்களுக்கு டிரைலர் இங்கே.



டிஸ்கி: மேலே உள்ள படங்களில் Fermat இல்லை. டிரைலரில் தான் இருக்கிறார்


More than a Blog Aggregator

by வண்ணத்துபூச்சியார்








இது வரை விடுவிக்க முடியாத கணித புதிரை கண்டுபிடிக்க நான்கு கணித மேதைகளை ஒரிடத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. Condition: யாரும் மொபைல் போன் மட்டும் எடுத்து வரக்கூடாது.
அழைத்தவர் Fermat.


தங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லாத அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புனை பெயர்கள் Hilbert, Pascal, Galois and Oliva.


நிகழ போகும் அதி பயங்கரம் அறியாது நால்வரும் சொன்ன இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.


நகரித்திலிருந்து வெகு தூரம் கடந்த ஒரு ஏரியை ஒட்டிய காலியான பிரும்மாண்ட பங்களா.

அதில் ஒரு அழகான அறை. அனைவரும் காத்திருக்கின்றனர். Fermat வருகிறார். அனைவருக்கும் விருந்தும் அளிக்கிறார்.



Fermat ன் மொபைல் அடிக்கிறது. அவரது மகள் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்று சொல்லி போன் பாதியிலேயே கட்டாகி விட ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவதாக சொல்லி கிளம்புகிறார் Fermat.


அவர் சென்றதும் விபரீதம் ஆரம்பிக்கிறது.


அங்குள்ள PDA வில் கணக்கு புதிர் வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் அதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். விடையளிக்க தவறினாலும் தவறான விடையளித்தாலும் அறை நாலா பக்கத்திலிருந்தும் நகர ஆரம்பிக்கும்.


அவசரமாய் போன Fermat வருவதாய் காணோம்.


புதிர்கள் மட்டும் வந்து கொண்டே இருக்க நால்வரும் சிக்கி திணருகிறார்கள். விடையளிக்க முடியாவிட்டல் அறைக்குள்ளேயே மாட்டி கொண்டு இறக்க வேண்டியதுதான்.



இதையெல்லாம் செய்தது யாராக இருக்கும்..??????

ஏன் சென்றவர் வரவில்லை..??????

ஏன் புனைப்பெயர் அளிக்கப்பட்டது..??????

கண்டிஷன் போட்டதன் நோக்கமென்ன..???????

நால்வரும் தப்பித்தார்களா ..??????


கண்டிப்பாக திரைப்படத்தை பார்க்க வேண்டும். சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து.


இப்படத்தை எழுதி இயக்கியவர்கள் இரட்டையர்களான Luis Piedrahita & Rodrigo Sopena. அற்புதமான ஒளிபரப்பும் மிரட்டும் இசையும் கூடுதல் சிறப்பு.


காலம்: 90 நிமிடங்கள் மட்டுமே

வெளிவந்தது: 2007

மொழி: ஸ்பானிஷ்.



உடனடியாக படத்தை பார்க்க முடியாதவர்களுக்கு டிரைலர் இங்கே.



டிஸ்கி: மேலே உள்ள படங்களில் Fermat இல்லை. டிரைலரில் தான் இருக்கிறார்