செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30



More than a Blog Aggregator

by வெங்கிராஜா


பயணம் இனிதே தொடர பிரார்த்தித்து...
அலைபேசியில் எடுத்த புகைப்படம். (சூரியக் கதிர் MODE, செபியா டோனில் எடுத்தது).


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி

அபூர்வமானதுதான்
மழையும்
அவளின் தீண்டலும்

***********

மழைக்கால
காளான்கள்
அவளின் நினைவுகள்

*********

மழைக்காலம்
இதமாய் இருக்கிறது
அவளின் நினைவுகள்

*********

மழைக்கண்டு சலிப்பு
தாகம் தீர்க்கும்
தண்ணீர் பாட்டில்!

***********

மழையில் நனையும் குழந்தை
தடுக்க முடியவில்லை
ஒழுகும் குடிசை


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி


பனிவிழும் இரவு
நீளும் நிசப்தத்தை
தின்று தீர்க்கி்ன்றன
தகிக்கும் நினைவுகள்

கனத்த மெளனத்தை
கலைத்துப்போடும்
தெருநாய்கள்

உறக்கம் துறந்த
விழிகளில்
தொக்கிநிற்கும்
ஊடல் பொழுதுகள்!


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி
இது அய்க்கூ மாதிரி.(நல்லா கவனிங்க...இது அய்க்கூ மாதிரிதான். மாதிரி அய்க்கூ அல்ல...)

ஊர்மரியாதை யாருக்கு
சச்சரவில் சிறைவைப்பு
கோவிலுக்குள் சிலைகள்

***********

நள்ளிரவில்
வியர்வை குளியல்
மின்தடை

************

சாலையோரம்
நிழல்தரும்
அடிக்குமாடி

*********

காதல் தோல்வி
கெளரவம் கிடைத்தது
கவிஞன்

*********

அகராதிகள் பலபடித்தும்
அர்த்தம் புரியவில்லை
காதல்

**********


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி

அந்தி சரியச் சரிய
தென்படுகின்றன
புதிய முகங்கள்
**************

சூரியனாய் பிரகாசிக்கும்
பெண்ணின் சுதந்திரம்
மேற்குமுட்டும்வரை
**************

பழம்தின்று பசியாறிய
பறவையறியாது
எச்சத்தின் மதிப்பு
**************

எங்கோ தூரத்தில்
கேட்கிறது
ஒற்றைக் குயிலோசை


More than a Blog Aggregator

by குடந்தைஅன்புமணி
கலைஞர் : மூன்றாவது அணி மூன்றாவது கண் போன்றது.

ஜெயலலிதா : மூன்றாவது கண் என்பது சிவபெருமானின் நெற்றி்க்கண்ணை குறிக்கும். நெற்றிக்கண் மூடியிருக்கும் வரைதான் தவறு செய்வோருக்கு பாதுகாப்பு. நெற்றிக்கண்ணை திறந்துவிட்டால், எதிரேயுள்ளவர்கள் எரிந்து சாம்பலாகிப்போவார்கள்.

கலைஞர் : மூன்றாவது கண்ணை பெரியார் வழியில் வந்தவர்கள் யாரும் நம்பமாட்டார்கள்.

இல.கணேசன்: தி.மு.க.வுடனோ, அ.தி.மு.க.வுடனோ விஜய்காந்த் கூட்டணி வைத்தால் அவரது தனித்தன்மையை இழந்துவிடுவார்.தனித்து நின்றால் வாக்கு வங்கியை குறைந்துவிடும். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி என்றால் மட்டுமே இரண்டையும் காப்பாற்ற முடியும்.

நல்லக்கண்ணு: அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் 7 தொகுதிகளை கேட்டுள்ளோம்.

கருத்துகள் இல்லை: