புதன், 25 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-24

முல்லைத்தீவில் புலிகள் ஒரு மிகச் சிறிய நிலப்பரப்பில் முடக்கப்பட்ட நிலையில், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட புலிகளின் தலைவர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்க ஸ்கென்டிநேவின் நாடொன்று விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை புலிகளின் தலைவர் மற்றும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி ஆகியோர் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் விமானப்படையின் யு.ஏ.பி. விமானத்தின் மூலம் எடுக்கப்பட்டுள்ள வீடியோ படங்கள் உறுதிப்படுத்தியிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஊடக புலிகள் 10வது தடவையாக விடுத்திருந்த போர் நிறுத்த யோசனை தாம் நிராகரித்துள்ளதாகவும் 20 சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆயுதங்களை கைவிட்டு சரணடைவதை தவிர புலிகளுக்கு வேறு மாற்று வழிகள் இல்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


More than a Blog Aggregator

by தமிழ் வெங்கட்

ராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம்.

கேட்கவே காமடியாக இருக்கிறதா?. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர்.

அதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம்.

இதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் தயாராகி விடும்.

காதல் என்பது இனிமேல் பஸ் பயணம் மாதிரிதான் இருக்கும். ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வது போன்ற நிலை வந்து விடும். அதற்கு இந்த மாத்திரை கை கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.

காதல் என்பது மனித மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான். இந்த மாற்றத்தைத் தூண்டுவிக்கும் வகையில் மாத்திரைகளை பயன்படுத்தினால் கண்டிப்பாக காதல் உணர்வு தோன்றும். அதேபோல அந்த உணர்வை மரத்துப் போக வைக்க இன்னொரு மாத்திரையும் சாத்தியம்தான் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

அமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில், சரியான கலவையில் உருவாக்கப்படும் இந்த வேதியியல் மாத்திரைகள் நிச்சயம் காதலில் விழவும், காதலிலிருந்து மீளவும் உதவும் என்கிறார்கள்.

அட்லாண்டாவில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி யங் கூறுகையில், மனித மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால்தான் காதல் உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை நேரடியாக டிவி மூலம் விளக்கும் காலம் வந்து விட்டது.

இதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் எலியைப் போன்ற தோற்றமுடைய பிரெய்ரி வோல்ஸ் விலங்குகளிடம் நாங்கள் சோதனை மேற்கொண்டுள்ளோம். அதில் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றமே காதல் உணர்வுகளுக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.

அந்த உணர்வுகளின் பின்னணி குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம். 

ஒரு பெண் பிரெய்ரி வோல் மீது ஹார்மோனை செலுத்தியபோது அது இன்னொரு ஆண் விலங்கின் துணையை நாடியதை நாங்கள் கண்டோம். 

பின்னர் அந்த ஹார்மோன் மூளைக்குப் போவதை தடுத்தபோது, ஆண் துணையின் உதவியை அது நாடவில்லை. மாறாக அது இருக்கும் பக்கம் கூட அது போகவில்லை.

மனித மூளையும் இதேபோலத்தான் செயல்படுகிறது. மூளையை தூண்டுவிக்கும் இந்த வகை ஹார்மோன்கள் உண்மையின் மனிதன் பழக்க வழக்கங்களையும் கூட கட்டுப்படுத்துகிறது, மாற்றுகிறது.

இந்த ஹார்மோன் அதீதமாக செயல்பட்டால் கண்ணோடு கண் பார்த்து அணுகும் தைரியம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். காதலில் இது முக்கியமாச்சே.. இதுதான் காதல் உணர்வாக நமக்கு தெரிகிறது என்கிறார் அவர்.

இப்படி மூளையை தூண்ட உதவும் இரு வகையான ரசாயன ஹார்மோன்களை (ஆக்சிடாக்சின் மற்றும் டோபமைன்) தற்போது மாத்திரை வடிவில் மாற்றி புழக்கத்தில் விட்டால், காதல் பழக்கத்திற்கு இது உதவக் கூடிய தோழனாக இருக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.

இனிமேல் பழக வேண்டும் என யாராவது ஆசைப்பட்டால் கையில் பேப்பரும், பேனாவுமாக உட்கார்ந்து, கடலையும், வானத்தையும் பார்த்து கவிதை பாட வேண்டாம்.

பையில் ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டால் போதும். எந்தப் பெண்ணைப் பிடிக்கிறதோ, டக்கென்று ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டால் போதும்...

ஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு.

ஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது.

இதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது. 

முத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்போதுதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.

எந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை.

ஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.

செக்ஸ் வாழ்க்கையில், இந்தியர்கள்தான் மிகவும் திருப்தியுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் உலக அளவில் பல துறைகளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல படுக்கை அறையிலும் அவர்களே 'கிங்' ஆக உள்ளனர் என்று கூறுகிறது அந்த ஆய்வு.

இந்தியாவில் 70 சதவீதம் பேருக்கு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ஆய்வை ஃபிஸர் பார்மச்சூட்டிகல் நிறுவனம் நடத்தியது. இந்தியா உள்பட மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.

இருப்பதிலேயே மிகவும் மோசமான செக்ஸ் வாழ்க்கை வாழ்பவர்கள் ஜப்பானியர்கள்தானாம். 10 சதவீதம் ஜப்பானியர்களுக்கே செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக உள்ளதாம் ('செக்ஸில்' வீக் ஆக இருந்தாலும் 'சென்செக்ஸில்' நம்மை விட ஜப்பானியர்கள் டாப் என்பதை மறக்கக் கூடாது).

மலேசியர்களைப் பொறுத்தமட்டில், 3 ஆண்களில் 2 பேருக்கும், நான்கு பெண்களில் 3 பேருக்கும் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையாம்.

திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை வாழ்வோரின் பட்டியலில் மலேசியர்களுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது.

இந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைவரான டாக்டர் ரோசி கிங் கூறுகையில், திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்த ஆசியா- பசிபிக் முடிவுகளின் சதவீதத்தை விட மலேசியாவின் சதவீதம் அதிகமாக உள்ளது.

மலேசியர்களில், ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 64 சதவீதம் பேரும் திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் முக்கியமானது 'எரக்ஷன்' குறித்த கேள்வி. அதை பல்வேறு அளவீடுகள் மூலம் நாங்கள் ஆராய்ந்தோம்.

ஆண் குறிகளின் அளவுகளை வைத்து அவற்றை நான்கு மட்டங்களாகப் (Level) பிரித்து அவற்றின் அடிப்படையில், செக்ஸ் திருப்தி குறித்து தீர்மானிக்கப்பட்டது.

இந்த அளவீடுகள் குறித்து ஆண்களிடம் விளக்கி அவர்களாகவே அதை பரிசோதித்து எங்களிடம் முடிவைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்களுக்கே தனிப்பட்ட வாழ்க்கையிலும் திருப்தி அதிகம் உள்ளதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது. 

மேலும் செக்ஸ் வாழ்க்கையில் திருப்திகரமான மன நிலையில் இருக்கும் ஆண்களும், பெண்களும் எதையும் பாசிட்டிவாக சிந்திக்கும் மனோ பக்குவத்தையும் பெற்றுள்ளனர் என்றார் ரோசி கிங்.





More than a Blog Aggregator

by தமிழ் வெங்கட்

தலைப்பைப் பார்த்தவுடன் டென்ஷன் வேண்டாம். சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு ஏற்றதாம். ஆய்வுகள் கூறுகின்றன இப்படி.

ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு பொருள் உண்டு. அந்த வகையில் ரொமான்ஸுக்கு ஏற்ற நிறம் சிவப்பு நிறமாம். பளிச்சென நமது பார்ட்னரைக் கவர ஏற்ற நிறம் சிவப்புதானாம்.

சிவப்பு ரோஜா, சிவப்பு உடைகள், சிவப்பு லிப்ஸ்டிக் என சிவப்பு மயமாக மாறினால் பார்ட்னர்களை வெகு எளிதில் ஈர்த்து விடலாமாம் பெண்கள்.

நியூயார்க்கின், ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்போது சிவப்பு நிற உடை உள்பட பல்வேறு நிறத்திலான உடைகளுடன் கூடிய பெண்களின் புகைப்படங்களை ஆண்களிடம் கொடுத்து அவர்களின் கருத்தை அறிந்தனர்.

பெரும்பாலானவர்களுக்கு சிவப்பு நிற உடையில் இருந்த பெண்களைத்தான் பிடித்திருந்ததாம்.

இதன் மூலம் மற்ற நிறங்களை விட சிவப்பு நிறம்தான் ஒருவரை அதிகம் ஈர்க்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

சிம்பன்சி குரங்குகளிடம் ஒரு குணம் இருக்கிறதாம். பெண் துணைகள் 'அந்த' நேரத்தில் கிராக்கி செய்தால், அவர்களைக் கவருவதற்காகவும், ஐஸ் வைத்து 'வேலையை' முடித்துக் கொள்வதற்காகவும், தங்களது 'பின்புறத்தை', சிவப்பு நிறத்திற்கு மாற்றிக் கொள்ளுமாம். இதைப் பார்த்து பெண் துணைகள் வெட்கி, நாணி, வழிக்கு வந்து விடுமாம்.

காதலுக்கு என்றில்லாமல் மனிதனின் இயல்பான ஈர்ப்பே சிவப்பின் பக்கம்தான் அதிகம் இருக்கிறதாம். மற்ற எதையும் விட ரொமான்ஸுக்குத்தான் சிவப்பு மிக மிக உபயோகமாக இருக்கிறதாம்.

அதனால்தான் 'அந்த' ஏரியாக்களுக்கு 'ரெட் லைட்' என்று பெயர் வந்திருக்குமோ...?

கருத்துகள் இல்லை: