செவ்வாய், 24 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-23

தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்று நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பற்றி இரண்டொரு நாளில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.


More than a Blog Aggregator

by செல்வன்

ZULU (1964)

உலகின் தலைசிறந்த யுத்தப்படங்களை வரிசைப்படுத்தும்போது ஸூலு திரைப்படத்தை அந்த பட்டியலில் சேர்க்காமல் இருக்க முடியாது.

ஸூலு கத்திமேல் நடப்பது போல் எடுக்கப்பட்ட படம்.தென்னாப்பிரிக்காவை காலனி ஆதிக்கத்துகுட்படுத்திய பிரிட்டிஷார் அந்த மண்ணின் பழங்குடிகளான ஸூலுக்களுடன் நடத்திய வீரம் செறிந்த யுத்தமே ஸூலு படத்தின் கதை.இந்த யுத்தத்தில் செயற்கரிய சாதனை புரிந்த பிரிட்டிஷ் சிப்பாய்கள் 11 விக்டோரியா க்ராஸ் விருதுகளை வாங்கினர்..இருந்தாலும் அதை திரைப்படமாக்கையில் கத்திமேல் நடப்பது போன்று கவனமாக இருத்தல் அவசியம்...மைசூர் கோட்டையை தகர்த்து திப்புவை கொன்ற வரலாற்றை "கன்னடன்" என்ற பெயரில் பிரிட்டிஷார் படமாக எடுத்தால் அது எத்தனை அரசியல் சிக்கல்களை உருவாக்கும்?

இதேபோன்ற சிக்கல் 300 என்ற பெயரில் பாரசிகம்- கிரெக்கர் மோதலை திரைப்படமாக எடுத்தபோது உருவானது.ஆனால் ஸூலுவில் அந்த சிக்கல் வராமல் எடுத்துள்ளனர்.ஸூலுக்களை காட்டுமிராண்டிகளாக காட்டாமல் வீரர்களாக தான் காட்டியுள்ளனர்.படத்தின் இறுதிகாட்சியில் ஸூலுக்கள் தம்மை வீரத்துடன் எதிர்த்து நின்ற பிரிட்டிஷ் சிப்பாய்களின் வீரத்தை புகழ்ந்து ஒரு பாடல் பாடிவிட்டு போகின்றனர்..அந்த அளவுக்கு மனிதாபிமானம் கொண்டவர்களாக ஸூலுக்கள் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

கதை????நடால் மாகாணத்தில் 1879ல் ஸூலுக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது.ஒரு பிரிட்டிஷ் படை டிவிஷனை (சுமார் 100 சிப்பாய்கள்) சுமார் 4000 ஸூலுக்கள் சுற்றி வளைக்கின்றனர்.40க்கு 1 என்ற விகிதத்தில் என்ணிக்கை குறைந்த பிரிட்டிஷ் சிப்பாய்கள் தப்பி ஓட முடியாத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.காரணம் அந்த இடத்தில் சிகிச்சைபெற்று வரும் ஏராளமான நோயாளி சிப்பாய்கள்..

வேறுவழியின்றி போரிட முடிவெடுக்கும் பிரிட்டிஷ் சிப்பாய்கள் பிஸ்கட் பெட்டிகள், குதிரைவண்டிகள் என கைக்கு கிடைத்ததை வைத்து மதில் சுவர் எழுப்பி ஆஸ்பத்திரியை மறைக்கின்றனர்.அதன்பின் போருக்கு தயாராகின்றனர்.

அலை அலையாய் ஸூலுக்கள் அணிவகுத்து வருகின்றனர்.அந்த தாக்குதலை பிரிட்டிஷ் சிப்பாய்கள் எப்படி வீரத்துடன் முறியடிக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை.ஸூலு தளபதிகள் சிறந்த போர்தந்திரத்துடன் படைகளை நகர்த்துகின்றனர்.ஸூலுக்களும் துப்பாகிகளை வைத்திருக்கின்றனர்.ஆனால் பிரிட்டிஷாரின் ராணுவ தந்திரங்கள் அவர்களுக்கு வெற்றியை தேடித்தருகிறது. ஆயிரக்கணகான வீரர்களை இழந்த ஸூலுக்கள் இறுதியில் பின்வாங்குகின்றனர்.அந்த ஆஸ்பத்திரியை காத்தவர்களின் எஞ்சியவர்களில் 11 பேர் விக்டோரியா கிராஸ் விருதை வாங்குகின்ரனர்.

போர்த்தந்திர யுத்திகளை சிறப்பாக காட்டிய படம் ஸூலு.வரலாற்று ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம்.

இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் காங்கிரஸ் தொண்டர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் இது தொடர்பாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. சிவகாசி அருகே உள்ள காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 60). பெயிண்டராக பணியாற்றி வந்தார். இவர் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினர். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், பாபு, வெங்கடேசன் என்ற மகன்களும், சாந்தி, விஜய லட்சுமி என்றமகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.

கருத்துகள் இல்லை: