வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25

சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் போயஸ் காடனுக்கு வந்தார். அவருடன் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, டாக்டர் அன்புமணி ராமதாஸ், வேலு, காடுவெட்டி குரு ஆகியோர் உடன் வந்தனர். டாக்டர் ராமதாசுக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதன் பின்பு ஜெயலலிதாவும், டாக்டர் ராமதாசும் தனியாக சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்.


அவசரத்துக்கு இந்த படம் தான் கிடைத்தது. கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுங்கள் ;-)

அவன் செத்துவிட்டான்...ரெண்டு எமதூதர்கள் வந்தாங்க.....கையோட அவனைக் கூட்டிக் கொண்டு போனாங்க...எப்போதுமே உலகத்தைவிட்டுக் கிளம்புற நேரம் முரண்டு பிடிக்கும் இறந்தவர்களைப் போலல்லாமல் அவன் சிரித்துக் கொண்டெ கிளம்பினான்....

எமதூதர்களுக்கு வித்தியாசமாகத் தெரிந்ததால் "என்னப்பா உனக்கு வருத்தமா இல்லையான்னு" கேட்டார்கள்....

அதுக்கு அவன் சொன்னான்"இல்லை..."என் உயிரின் மேலான அம்மாவைப் பார்க்கப் போகிறேன் அதனால் சந்தோஷமாகவே இருக்கிறேன்" என்றான்

அவனை சொர்க்கத்திற்குக் கூட்டிக் கொண்டு போனார்கள்...அங்கே தேடோ தேடென்று தேடினான்.அவன் அம்மாவைக் காணவில்லை.....அவன் கடவுளைக் கூப்பிட்டு "என் அம்மா எங்கே????" எனக் கேட்டான்.

அதற்கு கடவுள் "உங்க அம்மா நரகத்தில் இருக்கிறார்கள்"
என்றார்....................

அவனோ "ப்ளீஸ் என் அம்மா ரொம்ப நல்லவங்க...அவங்களையும் சொர்க்கத்திற்கு அனுப்புங்க..அப்படியில்லைன்னா என்னை நரகத்துக்கு அனுப்பிடுங்க."அப்படின்னு அழுதான்

அதற்குக் கடவுள் உங்க அம்மாவுக்கு சொர்க்கத்திற்கு வரத் தகுதியில்லை.....உனக்கு நரகத்துக்குப் போகிற தகுதியில்லை" அப்படீன்னு சொன்னார்...........

அவன் ரொம்பத் தொல்லை கொடுக்கவும்...கடவுள் சொன்னார்" சரி ஒரு தடவை உங்க அம்மாவுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கிறேன்....இந்த நூலேணியைப் போடுகிறேன்....உங்க அம்மா இதைப் பிடித்து மேலேறி சொர்க்கத்துக்கு வந்துவிடுவார்கள் " என்றார்.

கடவுள் நூலேணியை எடுத்து வீசினார்.....

"அட அம்மா"....அவனுக்கு சந்தோஷத்தில் அழுகையாய் வந்தது...
அவன் கத்தினான்.."பார்த்தும்மா....சீக்கிரமா வாம்மா"
அவன் அம்மாவும் சந்தோஷமாக அதைப் பிடித்து ஏறினாள்...அம்மாவுக்கும் சொர்க்கத்துக்கும் இரண்டடி தூரம்தான் இருந்தது........

அம்மா திரும்பிப் பார்த்தாள்....இன்னுமொரு பெண்மணியும் நூலேணியைப் பிடித்து ஏறிக் கொண்டிருந்தாள்....அம்மா இங்கிருந்தே கேட்டாள்......."நீங்க ஏன் இதில் ஏறி வர்றீங்க?"

அதுக்கு அவங்க "என் மகனும் அங்கே சொர்க்கத்துலேதான் இருக்கான்.....நானும் அங்கே வந்துடறேன்" என்றார்கள்..

அம்மா மெதுவாகத் திரும்பி "என் மகன் எனக்கு அனுப்பிய ஏணியில் நீங்க எப்பிடி வரலாம்?????" என்றவாறு அந்தப் பெண்மணியைக் காலால் எட்டி உதைத்துத் தள்ளி விட்டாள்.....

கடவுள் அவனைப் பார்த்துப் புன்னகைத்தார்........" உங்க அம்மா ஏன் நரகத்திலிருக்கிறார் என்று புரிகிறதா? எனபது போலிருந்தது....கடவுள் நூலேணியை உருவிக் கொண்டார்....

டிஸ்கி:1.சொந்தமா எழுதினதில்லீங்கோ......
டிஸ்கி:2எப்பவோ சின்ன வயசில எங்கேயோ கேட்ட கதைங்க....
பதினைந்தாம் மக்களவைக்கான எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க - காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும்,அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகிறது. பாரதீய ஜனதா கட்சி தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. தே.மு. தி.க.வும் தனித்துப் போட்டியிட இருப்பதால் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.


தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

அதில், தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு பற்றிய விவரம் 2 நாளில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் முதல்- அமைச்சர் கருணாநிதி தெரிவித்து இருந்தார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்படுவது உறுதியாகி விட்டதாக காங்கிரஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

வடசென்னை, காஞ்சீபுரம் (தனி), தர்மபுரி, ஆரணி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, திண்டுக்கல், மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி (தனி), கன்னியாகுமாரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்க பேசப்பட்டுள்ளது என்றும், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறினார்.

மீதம் உள்ள 24 தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி வீதம் ஒதுக்கி 21 தொகுதிகளில் போட்டியிட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.

திருவள்ளூர் (தனி), தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப் புரம் (தனி), சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் (தனி), தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய 21 தொகுதிகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

விடுதலைச்சிறுத்தை கட்சிக்கு சிதம்பரம் தொகுதியும், முஸ்லிம்லீக் கட்சிக்கு வேலூரும், மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்படுகிறது.

நன்றி: மாலைமலர்.
திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் உள்ள வங்கிகள் வழியாக கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகள், பழைய 5 ரூபாய், 10 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளும் சேகரிக்கப்பட்டன. இவை ரூ.170 கோடி அளவுக்குச் சேர்ந்தது. இந்தக் கிழிந்த நோட்டுகள் கட்டுக்கட்டாக சரக்குப்பெட்டகங்களில் ஏற்றப்பட்டு சரக்கு தொடர்வண்டிகள் மூலமாக சென்னை வந்தடைந்தன.

அதன்பின் அவை சுமையுந்துகளில் பாரிமுனையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே அவை முறையாகப் பதிவு செய்யப்பட்டபின், காவல்துறை பாதுகாப்புடன் தீயிட்டு எரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று விமானம் மூலம் சென்னை வந்தார் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல்காந்தி. அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் புதுவை வந்த அவரிடத்தில் நிருபர்கள் பேட்டி கண்டனர்:

வருண் காந்தியின் பேச்சு குறித்து ராகுல் கருத்து தெரிவித்த போது,

வருணுக்கு அவர் விரும்பியதைப் பேச உரிமை உண்டு என்றாலும் அடுத்தவர் மீது வெறுப்போ, கோபமோ கூடாது. அடுத்தவரை புண்படுத்தும் பேச்சு சரியல்ல. இது குறித்து பிரியங்கா விவரமாக கருத்து தெரிவித்துவிட்டார். நான் மேலும் பேச விரும்பவில்லை.

ஆனால் ஒன்று, வருணின் பேச்சு எனக்கு மிகவும் அதிர்ச்சியைத் தந்தது. பிரதமர் மன்மோகன் சி்ங் பாஜகவினர் கூறுவது போல பலவீமானவர் அல்ல. இந்த நாட்டுக்கு நிறைய நல்லது செய்த மனிதர். அவர் மிகச் சிறந்த மனிதாபிமானி. மிகச் சிறந்த ஜென்டில்மேன். அப்படிப்பட்ட நபர்களைப் பார்ப்பதே அரிது. அவரது நடவடிக்கைகளே அவரது தரத்துக்கு எடுத்துக்காட்டு.

அதே நேரத்தில் பெரியவர்கள் குறித்து நான் தீர்ப்பு சொல்ல விரும்பவில்லை. நான் ரொம்ப சிறியவன் என்றார்


More than a Blog Aggregator

by தெ. சுந்தரமகாலிங்கம்
"சட்டையை விடுப்பா! இது நல்லால்ல!"

அந்த முரடனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

"நீ மட்டும் கடனைத் தராம ஏமாத்திக்கிட்டே வர்றது நல்லாயிருக்கா?"

"கடனைத் திருப்பித் தர்றேன்னு சொல்றேனில்ல."

"எவ்வளவு நாளாச் சொல்லிக்கிட்டிருக்க!"

கடைவீதியில் கூட்டம் கூடிவிட்டது.

நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இடையில் புகுந்தார்.

"தம்பீ! பொஞ்சம் பொறுப்பா."

எவ்வளவு நாளா இந்தக் கெழவன் ஏமாத்திக்கிட்டே வர்றான்னு உங்களுக்கு தெரியாதுங்க."

"சரி, அவருதான் தர்றேன்னு சொல்றாரில்ல கொஞ்சம் டைம் கொடுத்துப் பாரு,"

"எத்தனை வாட்டிங்க தர்றது? நீங்களே கேட்டுச் சொல்லுங்க!"

நடுவராக வந்தவர் முதியவரிடம் "ஐயா, கொஞ்சம் கூடுதல் நாளானாலும் பரவாயில்ல. சொல்ற நாள்ல கரெக்டாக் குடுத்திரணும்" என்றார்.

"நீங்க சொல்லிட்டீங்கள்ல. கட்டாயம் கொடுத்துர்றேன்"

"எப்ப கொடுப்பீங்க?"

"தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில கோஷ்டிப் பூசல் தீர்ந்த மறுநாளே கொடுத்திர்றேன்! போதுமா?"

மயங்கி விழுந்தார் நடுவர்!

கருத்துகள் இல்லை: