செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

ணவு உண்ணும்போது, கறிவேப்பிலையை பார்த்தவுடன், ஏதோ கரப்பான்பூச்சியைப் பார்த்ததுபோல் நாம் தூக்கி எறிகிறோம். கறிவேப்பிலையின் நன்மைகளை அறியாததால்தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.
 
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.
 
மலச்சிக்கலைப் போக்குதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பேதியைக் கட்டுப்படுத்துதல், பித்தத்தை மாற்றி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைப் போக்குதல் போன்ற குணநலன்கள் கறிவேப்பிலைக்கு உண்டு.
 
தலைமுடி வளரவும், கண்களுக்கு ஒளிதரவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச் சத்துக்கள் உதவும்.
 
முகத்தில் அம்மை வடு இருப்பின், ஒரு பிடி கறிவேப்பிலை, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அம்மியில் வைத்து அரைத்து, முகத்தில் தடவுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு இரு வாரங்களுக்கு மேலாக செய்துவந்தால் தழும்புகள் அடியோடு மறைந்துவிடும்.
 
கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து, உப்பு சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட, பசி எடுக்காமல், வயிறு மந்தமாக இருப்பின் குணமாகும்.
 
"அவனுக்கு நீ கறிவேப்பிலை மாதிரிதான்; பார்த்து கவனமாக அவனிடம் இரு" என்று பலர் சொல்வதுண்டு. இனியும் யாராவது இப்படி சொல்வார்கள்?
 
- தமிழ் மருத்துவம் நூலிலிருந்து
ணவு உண்ணும்போது, கறிவேப்பிலையை பார்த்தவுடன், ஏதோ கரப்பான்பூச்சியைப் பார்த்ததுபோல் நாம் தூக்கி எறிகிறோம். கறிவேப்பிலையின் நன்மைகளை அறியாததால்தான் நாம் இவ்வாறு செய்கிறோம்.
 
கறிவேப்பிலையில் புரதம், இரும்புச்சது, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கார்போஹைட்ரேட், வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் உள்ளன. இந்த சத்துக்களால் கண் பார்வைக் கோளாறுகள், சோகை நோய்கள் குணமடைகின்றன.
 
மலச்சிக்கலைப் போக்குதல், ஜீரண சக்தியை அதிகரித்தல், பேதியைக் கட்டுப்படுத்துதல், பித்தத்தை மாற்றி வாந்தியைத் தடுத்து வயிற்று இரைச்சலைப் போக்குதல் போன்ற குணநலன்கள் கறிவேப்பிலைக்கு உண்டு.
 
தலைமுடி வளரவும், கண்களுக்கு ஒளிதரவும் கறிவேப்பிலையில் உள்ள ஊட்டச் சத்துக்கள் உதவும்.
 
முகத்தில் அம்மை வடு இருப்பின், ஒரு பிடி கறிவேப்பிலை, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு இவற்றை அம்மியில் வைத்து அரைத்து, முகத்தில் தடவுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து முகம் கழுவவும். இவ்வாறு இரு வாரங்களுக்கு மேலாக செய்துவந்தால் தழும்புகள் அடியோடு மறைந்துவிடும்.
 
கறிவேப்பிலையை வறுத்து மிளகு, சீரகம், சுக்கு இவற்றைப் பொடி செய்து, உப்பு சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட, பசி எடுக்காமல், வயிறு மந்தமாக இருப்பின் குணமாகும்.
 
"அவனுக்கு நீ கறிவேப்பிலை மாதிரிதான்; பார்த்து கவனமாக அவனிடம் இரு" என்று பலர் சொல்வதுண்டு. இனியும் யாராவது இப்படி சொல்வார்கள்?
 
- தமிழ் மருத்துவம் நூலிலிருந்து

காங்கிரஸ் சார்பில் தேர்தலில் பேட்டியிட நடிகர் கோவிந்தா மறுத்துவிட்டதால், வடக்கு அல்லது வட மேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட நடிகை நக்மாவுக்கே அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மராட்டிய மாநில முதல்-மந்திரி அசோக் சவான், மத்திய மும்பையில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் இத்தகவலைக் கூறினார்.

"வட மும்பை தொகுதி எம்.பி.யும், நடிகருமான கோவிந்தாவிடம் வரும் தேர்தலில் போட்டியிட விருப்பமா என கேட்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடப் போவதில்லை என்று கூறி விட்டார். இந்த தொகுதியில் நடிகை நக்மா போட்டியிட விரும்புகிறார். இதற்காக அவர் விண்ணப்பமும் செய்துள்ளார். அது பரிசீலனையில் உள்ளது,' என்றார்.

இதன் மூலம் இந்த இரு தொகுதிகளில் ஒன்றில் நடிகை நக்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது.

அப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டால் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம் நாயக்கை எதிர்த்து நடிகை நக்மா போட்டியிட வேண்டி வரும்.

காங்கிரஸ் சார்பில் தேர்தலில் பேட்டியிட நடிகர் கோவிந்தா மறுத்துவிட்டதால், வடக்கு அல்லது வட மேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட நடிகை நக்மாவுக்கே அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மராட்டிய மாநில முதல்-மந்திரி அசோக் சவான், மத்திய மும்பையில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் இத்தகவலைக் கூறினார்.

"வட மும்பை தொகுதி எம்.பி.யும், நடிகருமான கோவிந்தாவிடம் வரும் தேர்தலில் போட்டியிட விருப்பமா என கேட்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடப் போவதில்லை என்று கூறி விட்டார். இந்த தொகுதியில் நடிகை நக்மா போட்டியிட விரும்புகிறார். இதற்காக அவர் விண்ணப்பமும் செய்துள்ளார். அது பரிசீலனையில் உள்ளது,' என்றார்.

இதன் மூலம் இந்த இரு தொகுதிகளில் ஒன்றில் நடிகை நக்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என தெரிகிறது.

அப்படி வாய்ப்பு அளிக்கப்பட்டால் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ராம் நாயக்கை எதிர்த்து நடிகை நக்மா போட்டியிட வேண்டி வரும்.

ஆந்திர மாநில அரசியலில் தெலுங்கு தேசம் மகளிர் அணித் தலைவி ரோஜாவால் தினமும் ஒரு பரபரப்பு எழுந்த வண்ணம் உள்ளது. இந்த முறை நடிகை ரோஜாவின் ஆபாச படத்தை கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் எதிர்தரப்பினர்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரிகிரி சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி நடிகை ரோஜா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள நடிகை ரோஜாவின் புகழைக் கெடுக்கும் வகையில் ஆந்திராவில் அவருடைய ஆபாச படம் கடந்த வாரம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயவாடா, விஜயநகரம், அமலாபுரம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி.களில் இந்த படம் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதாம்.

5 நிமிடம் மட்டும் ஓடும் இந்த ஆபாச படத்தை தற்போது, விஷமிகள் சிலர் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமும் பரப்பி வருகிறார்களாம்.

இந்த படத்தில் பல ஆண்களுடன் ரோஜா செக்ஸ் வைத்துக் கொள்வது போலவும், நீச்சல் குளத்தில் நிர்வாணமாக நீந்திக் குளிப்பதுபோலவும் காட்சிகள் அமைந்துள்ளனவாம். ஆந்திர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன இந்த வீடியோ காட்சிகள்.

'அசல் அல்ல, மார்ப்பிங்!'

ஆனால் உண்மையில் இந்த வீடியோவில் இருப்பது ரோஜா அல்ல என்றும் அவரது உருவத்தையொத்த பெண்ணின் உடலில் ரோஜாவின் தலையை கச்சிதமாகப் பொருத்தி சில விஷமிகள் ஆபாசம் படம் தயாரித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

சந்திரகிரி தொகுதியில் ரோஜாவின் வெற்றி நிச்சயமாகிவிட்டதாலும், அவர் பிரச்சாரத்துக்குப் போகும் இடங்களில் கிடைக்கு மக்கள் ஆதரவைக் கண்டு பயந்தும் இப்படி கீழ்த்தரமான சதிகளில் சிலர் இறங்கியிருப்பதாக தெலுங்கு தேசம் கட்சியினர் கூறுகிறார்கள்.

இது பற்றி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கூறுகையில், "இந்த ஆபாச படம் மார்பிங் முறையில் போலியாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை முன்பு எங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவர், அதை போலி என்று கண்டுபிடித்துவிட்டார். தற்போது அதே படத்தை கேபிள் டி.வி.யில் வெளியிட்டும், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பியும் எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்கள்.

இந்த ஆபாச பட விவகாரம் குறித்து நடிகை ரோஜாவிடம் கேட்டபோது, இது மாதிரியான சதித் திட்டங்கள் மூலம் எனது அரசியல் வாழ்க்கையை யாராலும் முடித்து விடமுடியாது. விரைவில் தேர்தல் கமிஷனிடம் இது பற்றி புகார் செய்வேன் என்றார்.

ஆந்திர மாநில அரசியலில் தெலுங்கு தேசம் மகளிர் அணித் தலைவி ரோஜாவால் தினமும் ஒரு பரபரப்பு எழுந்த வண்ணம் உள்ளது. இந்த முறை நடிகை ரோஜாவின் ஆபாச படத்தை கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் எதிர்தரப்பினர்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திரிகிரி சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி நடிகை ரோஜா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ள நடிகை ரோஜாவின் புகழைக் கெடுக்கும் வகையில் ஆந்திராவில் அவருடைய ஆபாச படம் கடந்த வாரம் கேபிள் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜயவாடா, விஜயநகரம், அமலாபுரம், ஸ்ரீகாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி.களில் இந்த படம் திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டதாம்.

5 நிமிடம் மட்டும் ஓடும் இந்த ஆபாச படத்தை தற்போது, விஷமிகள் சிலர் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலமும் பரப்பி வருகிறார்களாம்.

இந்த படத்தில் பல ஆண்களுடன் ரோஜா செக்ஸ் வைத்துக் கொள்வது போலவும், நீச்சல் குளத்தில் நிர்வாணமாக நீந்திக் குளிப்பதுபோலவும் காட்சிகள் அமைந்துள்ளனவாம். ஆந்திர அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன இந்த வீடியோ காட்சிகள்.

'அசல் அல்ல, மார்ப்பிங்!'

ஆனால் உண்மையில் இந்த வீடியோவில் இருப்பது ரோஜா அல்ல என்றும் அவரது உருவத்தையொத்த பெண்ணின் உடலில் ரோஜாவின் தலையை கச்சிதமாகப் பொருத்தி சில விஷமிகள் ஆபாசம் படம் தயாரித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

சந்திரகிரி தொகுதியில் ரோஜாவின் வெற்றி நிச்சயமாகிவிட்டதாலும், அவர் பிரச்சாரத்துக்குப் போகும் இடங்களில் கிடைக்கு மக்கள் ஆதரவைக் கண்டு பயந்தும் இப்படி கீழ்த்தரமான சதிகளில் சிலர் இறங்கியிருப்பதாக தெலுங்கு தேசம் கட்சியினர் கூறுகிறார்கள்.

இது பற்றி தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் கூறுகையில், "இந்த ஆபாச படம் மார்பிங் முறையில் போலியாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை முன்பு எங்கள் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவர், அதை போலி என்று கண்டுபிடித்துவிட்டார். தற்போது அதே படத்தை கேபிள் டி.வி.யில் வெளியிட்டும், எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பியும் எதிர்க்கட்சியினர் மலிவான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்கள்.

இந்த ஆபாச பட விவகாரம் குறித்து நடிகை ரோஜாவிடம் கேட்டபோது, இது மாதிரியான சதித் திட்டங்கள் மூலம் எனது அரசியல் வாழ்க்கையை யாராலும் முடித்து விடமுடியாது. விரைவில் தேர்தல் கமிஷனிடம் இது பற்றி புகார் செய்வேன் என்றார்.

கருத்துகள் இல்லை: