திங்கள், 30 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-29

மக்களவைத் தேர்தலில் தி மு க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது தெரிந்ததே! சிதம்பரம் தொகுதியில் போட்டியிடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். ஆனால், எதிரணியான அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகளின் நட்புக் கட்சியான பாமக வுக்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விபரம் அறிந்து, போட்டியைத் தவிர்க்க, திருமாவளவன் இப்போது கடலூர் தொகுதியைக் கேட்பதாகத் தெரிகிறது.

அதுபோல, மற்றொரு தொகுதியாக விழுப்புரத்தையும் கேட்டுள்ளாராம்.
முதலாளித்துவ ஓட்டுக்கட்சிகளைப் போல சி.பி.எம் கட்சியும் ஊழலில் சிக்கிச் சீரழிந்து நிற்கிறது. கொள்கை சித்தாந்தம் அனைத்தையும் கை கழுவிவிட்டு, தனியார்மயம் தாராளமயத்துக்குக் காவடி தூக்கி, சிங்கூர் நந்திகிராமத்தில் போராடும் மக்களை மிருகத்தனமாக ஒடுக்கிய சி.பி.எம். கட்சி, இப்போது லாவலின் ஊழல் விவகாரத்தால் எஞ்சியிருந்த ஒட்டுக் கோவணத்தையும் இழந்து அம்மணமாகி நிற்கிறது.

சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைக்குழு உறுப்பினரும், கேரள மாநிலச் செயலாளருமான பினாரயி விஜயன் மீது, ரூ. 390 கோடி லாவலின் ஊழல் வழக்கில் மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ) குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், ஊழல் கறை படியாத கட்சி என்ற மாயபிம்பத்தையும் அது தகர்த்தெறிந்து விட்டது.

ஒவ்வொரு முறையும் சர்ச்சைக்குரிய வழக்குகள் வரும்போதெல்லாம், "மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்த வேணடும்'' என்று கூப்பாடு போட்டு வந்த சி.பி.எம். கட்சி, இப்போது "தனது அரசியல் எதிரிகளுக்கு எதிராக மைய அரசு பயன்படுத்தும் இன்னொரு ஆயுதம்தான் சி.பி.ஐ.'' என்று புதிய விளக்கம் கொடுக்கிறது. அக்கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் மீது ஊழல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதுதான், இந்தத் திடீர் ""பல்டி''க்குக் காரணம்.

"1996 முதல் 2001 வரை கேரளாவில் முதல்வர் ஈ.கே. நாயனார் தலைமையிலான இடது முன்னணி ஆட்சியில், பினாரயி விஜயன் மின்துறை அமைச்சராக இருந்தபோது, கனடா நாட்டைச் சேர்ந்த எஸ்.என்.சி. லாவலின் என்ற நிறுவனத்துடன் மூன்று நீர்மின் திட்டங்களுக்கான ஒப்பந்த...........முழுவதும் வாசிக்க இங்கே அழுத்தவும்
tamilcircle@tamilcircle.net http://www.tamilcircle.net/
ஒருத்தர் என்னுடைய பழைய பதிவைச் சுட்டார். அது யூத்ஃபுல் விகடன் வரை போயிருச்சு. நானாவது அதை ஆங்கிலத்திலுருந்து சுட்டேன். அவர் தமிழில் இருந்து சுட்டார்.

இருந்தாலும் விகடனார் ஒரிஜினலைவிட டூப்ளிகேட்டை மதித்துள்ளார். அந்தப் பதிவின் சுட்டி கீழே.

http://yespinki.com/2009/03/blog-post_23.html

அவரே அதைப் பற்றி தனிப் பதிவு எழுதியுள்ளார் :

கடந்த பதிவு "சிறந்த இலவச மென்பொருட்களும், வலைத்தளங்களும்.."
விகடனின் சிறந்த ப்ளாக் பிரிவில் தேர்ந்தெடுக்க பட்டமைக்கு என்னுடைய நன்றிகள் ! கூடவெ தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் என் நன்றி!!
http://youthful.vikatan.com/youth/bcorner.asp
என்ற விகடன் முகவரிஇல் குட் Blogs பிரிவில் காண்க ..

சுட்ட இடம் :
http://www.tamilnenjam.org/2008/12/2008.html

அவருக்கு நான் 5 பின்னூட்டங்கள் போட்ட பிறகுதான் அவர் ஒரு courtesyக்காக நன்றி : தமிழ்நெஞ்சம் அப்படின்னு போட்டார். அவருக்கு எனது நன்றி. ஆனால் நான் போட்ட 5 பின்னூட்டங்களையும் நீக்கிவிட்டார்.

பதிவுகளைச் சுடுபவர் கவனத்திற்கு:
இனிமேல் எனது பதிவுகளில் நீங்கள் சுட்ட பதிவுகளுக்கு எப்போதாவது விகடனின் ஒத்துழைப்பு இருந்தால் அதை மட்டும் எனக்குத் தெரிவியுங்கள் அது போதும்.

ஏனெனில் விகடனாருக்கு சுட்ட பதிவு எது? / ஒரிஜினல் பதிவு எது என்று வித்தியாசம் தெரியாது. அதற்காகத்தான்.

மற்றபடி நீங்கள் அனைவரும் எனது நண்பர்களே!

தாராளமாக உங்களுக்கு விருப்பமிருந்தால் பதிவுகளைச் சுடலாம்.
எனக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் இல்லை.

ஆனால் விகடனில் சுட்ட பதிவு அங்கீகரிக்கப்பட்டால் மட்டும் எனக்கு ஒரு கமெண்டு போடுங்கள். அது போதும்..

குறிப்பு :

http://www.tamiltech.info/magazine/archives/ria-technology/ இந்த பதிவை எழுத எனக்கு 40 முதல் 70 நிமிடங்கள் ஆனது. 12 இணையத் தளங்களை refer செய்தபிறகுதான் இதை எழுதினேன். ஆனால் இதையும் ஒருத்தர்

http://www.tamilveli.com/showurl.php?url=http://piriyatharsan.blogspot.com/2009/03/blog-post_28.html பதிவில் ரிப்பிட் அடித்திருக்கிறார்.

அவரது கடையிலும் (வலைப்பூ) விளம்பரங்கள் போடுகிறார்.

நான் எனது நேரத்தைச் செலவு செய்து ஒரு பதிவைப் போட்டு விளம்பரம் போடுகிறேன். 1000 ஹிட் விழுந்தால் அதில் ஒரு 8 க்ளிக் வரும். அது எனது internet connection க்கும் domain registration செஞ்ச செலவுக்கும் தான் வரும்.

இருந்தாலும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறேன்.

காப்பியடித்ததைப் பற்றி நான் குற்றம் சொல்லவேயில்லை. ஆனால் காப்பி அடித்த பிறகு அதற்குக் கிடைத்த அங்கீகாரத்தை மட்டும் முறைப்படி ஒரு கமெண்ட் பாஸ் பண்ணிட்டீங்கன்னா புண்ணியமாப் போகும்.

புரிதலுக்கு நன்றி,

தமிழ்நெஞ்சம்.

(வழக்கம் போல இதை மொக்கைப் பதிவாகவே கருதவும். சும்மா தமாசு.)

வட்டமிடும் வண்ணச் சிறகுகள்....

என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பர் ஒருவர், அவர் படித்த கதை ஒன்றை என்னோடு பகிந்துக்கொண்டார். அந்த ஊரில் ஒரு மகான் யோகாவில் தேர்ந்தவர், அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருப்பவர். பலர் அவரிடம் வந்து எனக்கு யோகா சொல்லிதாருங்கள் என்று கேட்டுப்பார்த்தனர். அதற்கெல்லாம் நேரமில்லை என்று ஒதுங்கிவிடுவார். அந்த ஊரில் ஒருவன் எப்படியாவது அவரிடம் யோகா கற்றுகொண்டு விடலாம் என்று தீவிரமானான். அவரிடம் சென்று சில நாட்கள் உங்களுடன் தங்கிக்கொள்ள அனுமதிக் கொடுங்கள் என்று கேட்டான். அவரும் சிறிது யோசனைக்கு பிறகு சரி என்று ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அந்த மகான் செய்யும் யோகாவை கற்றுகொண்டு விடலாம் என்பதுதான் அவன் திட்டம். அந்த மகான் விடியற்காலையில் எழுந்தார் காலை கடன்களை எல்லாம் இனிதே முடித்தார், பின் சிறிது நீராகாரம் அறிந்திவிட்டு தன்னுடைய வயல்வெளிக்கு வேலைக்கு சென்றார். வேலையை முடித்துவிட்டு மதியம் உணவிற்கு வீட்டுக்கு வந்தார்; நன்றாக சாப்பிட்டார் பின் சிறிது தூக்கத்திற்கு பின் மீண்டும் வேலைக்கு சென்றார்; மலையில் சிறிது தூரம் நடை பின் சாப்பாடு அதற்கு பின் நன்றாக தூங்கினார்; இதேபோல் மறுநாளும் தொடர்ந்தது. யோகா கற்றுகொள்ள வந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை, இவர் ஒன்றும் யோகா செய்யவில்லையே பின் எதற்காக ஊர்மக்கள் இவரை யோகாவில் சிறந்தவர் என்று கூறுகின்றனர். ஆழ்ந்த குழப்பத்திற்கு பின் அவரிடமே கேட்டான்.

அதற்கு அவர் சிறிது புன்முருவலுடன், யோகா என்பது பெரிய வித்தை ஒன்றுமில்லை. யோகா என்றால் பொருந்துதல் என்றே பொருள்; நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் மனதோடு பொருந்தி செய்தாலே நல்ல யோகா செய்தற்கு ஒப்பாகும். மனம்பொருந்தி எந்த காரியம் செய்தாலும் மனமும் செய்யும் காரியமும் வெற்றியடையும். நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் மனதோடு பொருத்தி அனுபவித்து செய்கின்றேன். சாப்பிடுவதானாலும் சரி; வேலை செய்வதனாலும் சரி மனம்பொருந்தி செய்வதால் நான் சுகமுடன் ஆரோக்கியமுடன் இருக்கின்றேன் என்றாராம்... (கதை பகிர்ந்த நண்பர் குப்புசாமிக்கு நன்றி).

யோகாப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழ் உள்ள சுட்டியை சுட்டவும்


கருத்துகள் இல்லை: