திங்கள், 30 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-29

சீனாவில் ஒரு குக்கிராமத்தில் ஒரு பாட்டி வசித்து வந்தாள். அவளிடம் இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்கள் இருந்தன. ஒரு நீளமான கம்பில் கயிற்றைக் கட்டி கயிறுடன் பாத்திரங்களை இணைத்து விடுவாள். வெகுதொலைவு நடந்து சென்று இந்த இரண்டு பாத்திரங்களிலும் நீரை நிரப்பி அவற்றைத் தோள்பட்டையில் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருவாள்.

அவளிடம் இருந்த இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்களும் வித்தியாசமானவை. ஒன்று எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம். மற்றொன்றில் ஒரு சிறிய ஓட்டை இருந்தது. முழுக்க முழுக்க நீரை நிரப்பினாலும் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் பாதி தண்ணீரானது வெளியில் கொட்டி வீணாகிவிடும்.

இருப்பினும் ஒவ்வொரு நாளும் பாட்டியானவள் நீர் நிரப்பும்போது இரண்டு பாத்திரத்துக்கும் சம அளவு நீரை நிரப்பியே தூக்கிச் செல்வாள். வீடுவரை சுமையைத் தூக்கிச் சென்று பார்த்தால் ஒன்றரைப் பாத்திரத்தில் மட்டுமே நீரைக் காண இயலும். பழுதில்லாத முதல் பாத்திரத்தில் அனைத்து நீரும் பத்திரமாக இருக்கும். ஆனால் உடைந்து போகி ஓட்டையுடன் இருக்கும் இரண்டாவது பானையில் பாதியளவு தண்ணீ மட்டுமே இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பந்தம் தொடர்ந்துகொண்டு இருந்தது.

ஒரு நாள் பாட்டியின் ஒன்பது வயது பேத்தி முறையிட்டாள் "பாட்டி. எனக்கு மிகவும் மன வருத்தமாக உள்ளது. ஒரு பாத்திரத்தை மட்டும் அந்த குயவன் முடமாகப் படைத்துவிட்டான். நீயும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டைப் பாத்திரத்தையும் பயன்படுத்துகிறாய். 100 சதவீதம் நீரை நிரப்பினாலும் வீடு வந்து சேர்வதற்குள் பாதி நீர் வீணாகி விடுகிறது. ஆனால் நல்ல பாத்திரத்தைப் பார். அதனால்தானே உனக்கு முழுக்க முழுக்க நன்மை. பேசாமல் ஓட்டைப் பாத்திரத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டு புதிய நல்ல உடைசல் இல்லாத பாத்திரமாக வாங்கிக்கொள். உனக்கும் நல்லது".

இப்படி சிறுமி சொன்னதைக் கேட்ட பாட்டி சொன்னாள் - "சிறுமியே ஒன்றைக் கவனித்தாயா? நான் நீரைச் சுமந்து வரும் பாதையின் இரு ஓரங்களையும் கவனித்ததுண்டா? நல்ல பாத்திரம் இருந்த பக்கமாக முட்செடிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஒட்டைப் பாத்திரத்தைக் கொண்டு வந்த பக்கமாகப் பார்த்தாயா? அந்தப் பாத்திரத்தின் நீர் சிந்திய பக்கமாக அழகழகான ரோஜா மலர்களைக் காண்கிறாயே. அவற்றை நீயும் சூடிக்கொண்டு அழகுடன் திரிகிறாயே. அந்த ரோஜாச் செடிகள் நல்ல நிலையில் வளர்ந்ததற்கும், அவை பூப்பூப்பதற்கு யார் காரணம் - அந்த ஓட்டைப் பாத்திரம் தானே. அதனுடைய நீர் சிந்தியதால்தானே அவை பூப்பூக்கின்றன"

நான் குயவனிட்ம் பாத்திரம் வாங்கும்போதே அது ஒட்டைப்பாத்திரம்தான் என நன்றாகத் தெரியும். தெரிந்துதான் வாங்கினேன். மலர்ச்செடிகளுக்கான விதைகளை ஒரு பக்கமாகத் தூவினேன். அவற்றில் நீரை ஊற்றுவதற்கு அந்த ஓட்டைப்பாத்திரத்தைப் பயன்படுத்தினேன். ஒவ்வொரு நாளும் நீரூற்றினேன். இப்போது அந்தச் செயலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.

நீதி : ஒவ்வொரு மனிதனும் தவறுடனே பிறக்கிறான். அவரவருக்கும் தனிப்பட்ட பிழைகள் இருக்கவே செய்கின்றன. அந்தத் தவறுகளே நமது வாழ்வைச் செம்மைப் படுத்தவும், சுவையூட்டவும் செய்கின்றன.தவறுகளைக் காரணம் காட்டிப் பிறரை ஒதுக்கிவிடக் கூடாது.

புதிய வலைப்பூ, வலைத்தளங்களுக்கு பெயர் சூட்டுவதற்காக, டொமைன் பெயர்களைப் பதிவதற்காக நிறைய தளங்கள் இருக்கின்றன.

அந்தத் தளங்களில் நாம் விரும்பும் இணையதள முகவரியை உள்ளீடு செய்தால், அதே முகவரியை வேறு யாரும் ஏற்கனவே வாங்கிவிட்டார்களா? / இல்லையா? என்ற தகவலை அடுத்த பக்கத்தில் தான் காண்பிக்கும். அதற்காகவே நெடு நேரம் காத்திருக்க வேண்டும்.

இந்த வகையான தளங்களில் அஜாக்ஸ் என்கிற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருந்தால் மட்டுமே நொடியினில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

அஜாக்ஸைக் கையாளும் டொமைன் பெயர் தேடுபொறிகளில் பத்தினை கீழே கொடுத்துள்ளேன்.


http://ajaxdomain.net/

.com, .net, .org, .us, .co, .uk, .info, .biz, .mobi, .tv, .name, .ag, .cn, .de, .hk, .jp என்கின்ற 16 விதமான எக்ஸ்டென்ஸ்களில் தேடுவதற்கு உதவுகிறது

http://domaintyper.com/

https://domize.com/

http://www.instantdomainfinder.com/

http://ajaxlookup.com/

http://ajaxwhois.com/

http://www.domainsbot.com/

http://ajaxdomainsearch.com/

http://domainerquicksearch.com/

http://bustaname.com/

http://www.instantdomainsearch.com/

கலைச்சொற்கள் :
வலைப்பூ - blog
வலைத்தளம் - web site
டொமைன் பெயர்களைப் பதிவது - domain name registration
உள்ளீடு - input
அஜாக்ஸ் - Ajax (Asynchronous JavaScript and XML)
முகவரி - web site address
டொமைன் பெயர் தேடுபொறிகள் - domain name search engine



More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்
ஒரு பஸ் ஓட்டுநர் பேருந்து நிலையத்தில் இருந்து தனது பேருந்தை இயக்க ஆரம்பித்தார். அவரது வழித்தடம் வழியாக பேருந்து சென்றுகொண்டிருந்தது. முதல் ஐந்து நிறுத்தங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆறாவது நிறுத்தத்தில் ஒரு பெரிய ஜாம்பவான் ஒருவன் பேருந்துக்குள்ளே நுழைந்தான். ஆரடி உயரமும் அகலமாக விரிந்த உடல்வாகையும், நீளமான கைகளையும் கொண்டவன் அவன்.

டிரைவரை எகத்தாளமாய் பார்த்து - "நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை", சொல்லிவிட்டு டிரைவரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்தான்.

அவனது தோற்றத்தைப் பார்த்த வண்டியின் ஓட்டுநருக்கோ இருப்புக் கொள்ளவில்லை. டிக்கெட் எடுக்காமல் ஓசியில் பயணம் செஞ்சாலும் பரவாயில்லைனு விட்டுவிட்டார். எந்த வாக்குவாதத்துக்கும் அவர் தயாராக இல்லை. காரணம் - பெரியசாமியின் தோற்றம்.

அடுத்த நாளும் அதே நிகழ்ச்சி நடந்தேறியது. "குத்துச்சண்டை வீரனைப்போன்ற தோற்றம் கொண்ட பெரியசாமி வண்டியில் ஏறி இருக்கையில் அமர்ந்த பிறகு - நான் பெரியசாமி. பணம் தரத்தேவையில்லை" என்றான். டிரைவருக்கும், நடத்துநருக்கும் மனதுக்குள் பெரிய குற்ற உணர்ச்சி.

தொடர்ந்து 15 நாட்களாக இதே நிகழ்ச்சி தொடர்ந்தது.

"இந்த பெரியசாமியின் கொட்டத்தை அடக்கவேண்டும்" என இருவரும் திட்டம் போட்டனர்.

ஒட்டுநருக்கும், நடத்துநருக்கும் இரவுகளில் உறக்கமே இல்லாமல் போனது. எல்லாம் பெரியசாமியின் நினைவுதான். பெரியசாமியின் தொந்தரவில் இருந்து தப்பிப்பது பற்றியே எண்ணிக்கொண்டு தூக்கத்தைத் தொலைத்தனர்.

"தொடர்ந்து 15 நாட்களாக பணமே கொடுக்காமல் - டிக்கெட் எடுக்காமல் - நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லைனு ஒருத்தன் போக்குக்காமிச்சுக்கிட்டு இருக்கான். அவனை ஒரு வழி பண்ணாமல் விடக்கூடாது", ஓட்டுநர்.

நடத்துநர் "அண்ணே! ஒரு ஐடியா. நாம ரெண்டு பேரும் ஜிம்முக்குப் போகி உடம்பத் தேத்தி, கராத்தே, ஜுடோ இதெல்லாம் கத்துக்குட்டு அவனைவிட பெரிய வீரர்களா ஆகிடுவோம். அப்புறம் அவனை உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம்" எனக் கூறினார்.

வெயில்காலம் முடிவடைவதற்குள் அவர்கள் இருவரும் சிறப்பு அனுமதி பெற்று ஜிம், கராத்தே, ஜுடோ எனப் பல பயிற்சிகளையும் பெற்று உடலைத் தேற்றி ஆஜானுபாகுவாக ஆயினர்.

அவர்களுக்குள் மகிழ்ச்சி கரை புரண்டது. "நாளைக்கு திங்கள் கிழமை. பெரியசாமியை உண்டு இல்லைன்னு ஆக்கிருவோம்" - முன் கூட்டியே திட்டமிட்டனர்.

திங்கள் அன்று வழக்கம் போல குத்துச்சண்டை வீரன் பெரியசாமி வந்தான். பேருந்தில் ஏறினான். வழமை போல குரல் கொடுத்தான் - "நான் பெரியசாமி! பணம் தரத்தேவையில்லை".

ஓட்டுநரும், நடத்துனரும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் எழுந்து வந்து பெரியசாமிக்கு எதிராகப் பயங்கரப் பார்வையுடன் "ஏன்? ஏன் பணம் கொடுக்க மாட்டாய்? என்ன தைரியம்" என முதல் முறையாக எதிர்த்துக் கேட்டனர்.

ஒரு ஆச்சரியமான முகபாவத்துடன் "எங்கிட்டே பஸ் பாஸ் இருக்கு. அதனால நான் பணம் தரத் தேவையில்லை" எனக் கூறி பஸ் பாஸை இருவரின் முன்னால் நீட்டினான்.

நீதி : பிரச்சினையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். பிறகுதான் தீர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். இல்லாத பிரச்சினையை இருப்பதாகக் கற்பனை செய்யக் கூடாது


இணைய உலவிச் சந்தையில் நெருப்பு நரி என செல்லமாக அழைக்கப்படும் Firefox அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வேகமாக இயங்குவதுடன் ஏராளமான நீட்சிகளை (addon) உடையதாகவும் இருப்பதால் இது உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏதேனும் கோப்புகளை இணையத்தின் ஊடாகத் தரவிறக்கம் / இணையிறக்கம் (download) செய்யும்போது மட்டும் பிற முடுக்கிகளின் (accelerator) அளவிற்கு இதன் வேகம் இருப்பதில்லை என்கிற குறை உண்டு.

தரவிறக்க வேகத்தை அதிகரிப்பதற்காகவே நெருப்புநரிக்காக ஒரு நீட்சி உள்ளது. இதை Firefox உடன் ஒருங்கிணைத்துவிட்டால் தரவிறக்க வேகம் 10 மடங்கு அதிகரிக்கிறது என வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த நீட்சியை நிறுவுவதற்கு முன்னர் உங்கள் நெருப்பு நரி உலவியை மேம்படுத்திக் (update) கொள்ளவும்.

உலவின் வெர்சன் (version) 3.0+ ஆக இருத்தல் நலம்.

சுட்டி : http://www.fireaddons.com/iamchosen/

உங்களுக்கு மின்னஞ்சல் (e-mail) வாயிலாக உங்கள் நண்பர் பல கோப்புகளை (files) அனுப்பியுள்ளார். அவற்றில் சந்தேகமும் கேட்கிறார் என வைத்துக்கொள்வோம்.

ஆனால் அவர் அனுப்பியிருக்கும் கோப்புகளில் பல உங்களுக்குத் தெரியாத எக்ஸ்டென்ஸ்களில் (extension) உள்ளன.

உதாரணமாக மைக்ரோசாப்ட் வேர்ட் (MS Word) கோப்புகள் - .doc எனவோ .docx என்றோ இருக்கும்.

படக் கோப்புகள் பெரும்பாலும் .jpg, jpeg, .gif, .png என்பனவாக இருக்கும். ஆனால் நண்பர் உங்களுக்கு அனுப்பிய கோப்பின் எக்ஸ்டென்ஸன் (File Extension) எல்லாம் உங்களுக்கும் பரிச்சயமில்லாதவை. மேலும் உங்கள் இயங்குதளமான(OS) விண்டோஸுக்கும் பரிச்சயமில்லாதவை.

இந்த நேரங்களில் அவர் அந்தக் கோப்புகளைத் திறந்து பார்க்கச் சொல்லியும், அதில் சந்தேகமும் கேட்டுள்ளார்.

ஒவ்வொரு கோப்புகளையும் அவற்றிற்குரிய சரியான மென்பொருட்களைக் கொண்டுதான் திறந்து பார்க்க இயலும். ஆனால் குறிப்பிட்ட கோப்புகளை இயக்கிப் பார்க்கவோ / திறந்து பார்க்கவோ ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருட்கள் (Software Applications) உள்ளன.

உதாரணமாக .mp3 வகை கோப்புகளைத் திறந்து பார்ப்பதற்கு VLC மீடியா ப்ளேயரில் இருந்து, நம் விண்டோசுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள மீடியா ப்ளேயர் (Media Player) வரை ஏராளமான மென்பொருட்களைப் பயன்படுத்தலாம்.

இப்படி நமக்கும், விண்டோஸுக்கும் நன்கு அறியப்பட்ட கோப்புகளை இரண்டு முறை மவுசால் சொடுக்கினால் (Double Click) அதற்குரிய மென்பொருள் பயன்பாட்டின் வாயிலாக அந்தந்த கோப்புகளைத் திறந்து பார்த்து இயக்கலாம்.

ஆனால் இனம் கண்டறியாத கோப்புகளை இரண்டு முறை சொடுக்கினால் என்ன ஆகும்?

கீழ்க்கண்ட காட்சியைத் தான் காண்போம். ஒரு பிழைச்செய்தியுடன் தனி உரையாடல் பெட்டி திரையில் தெரியும்.

இப்படிப்பட்ட தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்போது நமக்கு உதவுவதற்காகவே ஒரு இணையத்தளம் உள்ளது. அந்தத் தள முகவரி : http://www.openwith.org/

free programs to open any file extension

இந்தத் தளத்திலிருந்து அவர்கள் கொடுக்கும் ஒரு இலவசப் பயன்பாட்டை இணையிறக்கம் செய்து நிறுவ வேண்டும்.

பின் நண்பர் அனுப்பிய கோப்பின் மேல் மவுசை வைத்து வலது பட்டனை அழுத்தி "OpenWith.org - How do I Open This?" என்பதைச் சொடுக்கவேண்டும்.

இதன் பிறகு குறிப்பிட்ட கோப்பினைத் திறந்து பார்ப்பதற்காக எந்த வகையான மென்பொருள் பயன்படும் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும். பின் அந்த மென்பொருளை இணையிறக்கம் செய்து அதன் மூலம் நண்பரின் கோப்பினைத் திறந்து பார்த்து அவரது சந்தேகத்தைத் தீர்த்து வைக்கலாம்.



More than a Blog Aggregator

by தமிழ்நெஞ்சம்


கருத்துகள் இல்லை: