வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25

மும்பாய் தீவிரவாத தாக்குதலுக்குப் பின் வழக்கம் போல இந்திய அரசு தனது பணிகளைச் செவ்வனே செய்யத் தொடங்கியிருக்கிறது. வழக்கம் போலவே அண்டை நாட்டின் மேல் பழி போட்டுவிட்டு, ஆற அமர புலன் விசாரித்து, நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்குள் மக்கள் இந்த நிகழ்ச்சியை மறந்து விடுவார்கள். அடுத்த தேர்தலில் ஏதாவது ஒரு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி மீண்டும் ஆட்சியில். வழக்கம் போல ஊழல், கறுப்புப் பணச் சேமிப்பு, சுவிஸ் பேங்க் அக்கவுண்ட், இத்யாதி, இத்யாதி.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் - இந்த தீவிரவாத தாக்குதல் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒரு மாதத்திற்கு முன்னரே அமெரிக்க உளவு அமைப்பு இது போன்ற கடல் வழியான ஒரு தாக்குதல் மும்பாயில் நடக்கக் கூடும் என்று இந்திய அதிகாரிகளை எச்சரித்திருக்கிறது. அதன் பின்னர் இந்திய அதிகாரிகளே இதுபோன்ற ஒரு செய்தியை ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள். மும்பாயின் பிரபல ஹோட்டல்களுக்கும் பாதுகாப்பு சிறிது நாள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதைத் தொடர்ந்து செயல்படுத்தாமல் விட்டுவிட்டதால் இறுதியில் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நாட்டு மக்களின் பாதுகாப்பை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் எந்த அளவு பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்ற மன நிலையில் இருக்கும் இவர்கள் தங்களைப் பாதுகாப்பதற்காக என்னென்னவோ தகிடுததங்கள் செய்கின்றார்களே ? கட்சி மற்றும் ஆட்சி பாகுபாடின்றி எல்லா அரசியல்வாதிகளுக்கும் மக்களின் வரிப்பணத்தில் ஸ்பெஷல் பாதுகாப்பு கொடுக்கின்றார்கள். ஜெயலலிதாவிலிருந்து, அத்வானி, ஜோஷி, என்று பட்டியல் நீள்கிறது. ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை. இதற்காகவே ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் செலவாகிறதாம்.

இந்தியாவின் விலைமதிப்பற்ற சொத்துக்களாக தங்களைத் தாங்களே கருதிக்கொள்ளும் இவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகச் செலவாகும் தொகையை மக்களின் பாதுகாப்பிற்காக செலவிடவேண்டும் என்று தாமாகவே முன்வர வேண்டும். தங்களுக்கு அரசினால் கொடுக்கப்படும் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள வேண்டும். அல்லது கொடுக்கப்படும் பாதுகாப்பிற்கான தொகையை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் பொதுவாகவே குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்று பல தியாகங்களையும் செய்து வளர்ப்பார்கள் என்பதுதான் உலக நியதி. ஆனால் இதற்கு விதிவிலக்காக பலர் இருக்கிறார்கள் என்பதை சமீபத்திலே நான் வாசித்த செய்திகள் நிரூபிக்கின்றன.

1.கோவை
விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை பத்திரிக்கைகள் பெரிதாக எழுதியதுபோல், தாமும் தமது மூளை வளர்ச்சி குறைவான ஆனால் நன்றாக நடமாடிக் கொண்டிருக்கின்ற மகனின் உறுப்புகளையும் தானம் செய்தால் புகழ் பெறுவோம் என்று ஒரு பெற்றோர் கருதினர். கலெக்டர் அலுவலகம் சென்று இதைச் சொன்னபின்னர் பலராலும் அறிவுறுத்தப்பட்டபின் தங்களது தவறை உணர்ந்து கொண்டார்கள் என்று தோன்றுகிறது. இவர்களுக்கு தாம் பெற்ற மகன் துறுதுறுவென ஓடியாடி இருக்கும் காலத்திலேயே உறுப்புத்தானம் செய்தால் இறந்து விடுவான் என்பது தோன்றவில்லையா ? அல்லது மூளை வளர்ச்சி இல்லாத மகனின் தொல்லை தீர்வதுடன் புகழும் கிடைக்கும் என்று நினைத்ததால் இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்களா ?

http://dinamalar.com/fpnnews.asp?News_id=2243&cls=row3

2.செயின்ட் ஜான், அரிசோனா (USA)
எட்டு வயது மகனுக்கு துப்பாக்கியால் சுட கற்றுக்கொடுத்தார் தந்தை. சிறுவனுக்கு எட்டும் இடத்தில் துப்பாக்கியை வைத்திருக்கிறார். விளைவு - பையன் தந்தையாரையும் இன்னொரு நபரையும் சுட்டுக் கொன்று விட்டான். "இளங்கன்று பயமறியாது" ( விவரமும் அறியாது ) என்பது அந்த அறிவில்லாத தந்தைக்குப் புரியவில்லை. இதில் இன்னொரு கொடுமை - அந்த ஊர்ப் போலீசார் எட்டு வயது சிறுவன் திட்டமிட்டு தன் தந்தையையும் இன்னொரு நபரையும் கொலைசெய்தான் என்று வழக்கு பதிவு செய்கிறார்களாம்.

http://news.bbc.co.uk/2/hi/americas/7721244.stm


மின்னஞ்சலில் வந்த செய்தி :

அன்புடையீர்,

நீங்கள் இங்கே காண்பது காண்பதற்கு மிகவும் அரிய ஒரு புகைப்படம். 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் ஹபிள் டெலஸ்கோப்பில் படம் பிடித்து "கடவுளின் கண்" என பெயரிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இதுவரை பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது. கண்களை ஒரு நிமிடம் மூடி, உங்கள் விருப்பத்தை மனத்தில் நினைத்து விட்டு இந்த படத்தைப் பாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். இந்த படத்தை நீங்கள் மட்டுமே வைத்திராமல், உடனே ஏழு பேருக்கு மின்னஞ்சல் செய்யவும்.

இப்படிக்கு,

#$@^&%*

விசாரித்த உண்மை :

இது ஹெலிக்ஸ் நெபுலாவின் புகைப்படம். நாசா வலைத்தளத்தில் 2003 -ல் வெளியிட்டிருக்கிறார்கள். இது பல ஃபோட்டோக்களில் இருந்து ஒன்றிக்கப்பட்டது. இதில் இருக்கும் நிறங்கள் அந்த நெபுலாவின் இயற்கையான நிறங்களல்ல. மேலும் 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது என்பது தவறு. எப்போதும் இதை காணமுடியும்.

NASA Picture of the Day

டிஸ்க்ளெய்மர் : இதை முன்பே நீங்கள் படித்திருந்தால், மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.
21-ம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகள் எங்கே வாழ்கிறார்கள் என்கிறீர்களா? இஸ்லாமிய பயங்கரவாதிகள் கொடுங்கோலாட்சி செய்துவரும் சோமாலியாவின் ஒரு பகுதியில்தான்.

13 வயதான ஒரு சிறுமியை மூன்றுபேர் கெடுத்துவிட்டார்கள். அவரது தந்தையாரும் குடும்பத்தாரும் அதைக்குறித்து ஷரியத் கோர்ட்டில் புகார் கொடுக்கச் சென்ற நேரத்தில், சிறுமிக்கு விபச்சாரி என்ற பட்டம் கட்டி சிறையில் வைத்தனர். பிறகு அவள் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்து விட்டனர்.

கிஸ்மயோ என்ற இடத்தில் நடந்த இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் இப்படி கூறுகிறார் :

ஏறத்தாழ 1000 பேர் அந்த இடத்தில் குழுமினர். இரண்டு மணி நேரம் கழித்து இஸ்லாமிய அதிகாரிகள் அப்பெண்ணை அங்கே கொண்டுவந்தனர். அப்பெண் அழுகையுடன் கேட்டாள் :

"என்ன வேண்டும் உங்களுக்கு ?"

"அல்லா எங்களுக்கு கூறியபடி நாங்கள் உனக்குச் செய்யப்போகிறோம்"

"ஐயோ நான் போகமாட்டேன். என்னை விட்டுவிடுங்கள். என்னை விட்டுவிடுங்கள்."

படுபாதகர்கள் அவளை ஆள் அளவு உள்ள ஒரு குழிக்குள் நிறுத்தி, கழுத்து வரை மண்ணால் மூடினர். பின்னர் 50 பேர் கற்களை அவள் தலையில் எறிந்து கொன்றனர்.

மனித நாகரிகம் எவ்வளவு வளர்ந்தாலும், மனித நேயம் பற்றி உலகெல்லாம் கூக்குரலிட்டாலும், காட்டுமிராண்டிகள் இடையிடையே முளைக்கத்தான் செய்கிறார்கள்.

http://news.bbc.co.uk/2/hi/africa/7708169.stm
தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டத் தொகுதிகளில் முக்கியமானது தஞ்சாவூர்.

ஆர்.வெங்கட்ராமன், எஸ்.டி.சோமசுந்தரம் உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிட்ட பெருமை உடைத்தது தஞ்சாவூர்.

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிரம்பிய தொகுதி இது. பாரம்பரியம் மிக்க தஞ்சைத் தரணியின் பெயரில் அமைந்த இந்தத் தொகுதியில், 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடந்து வருகிறது.

தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் முன்பு ஒரத்தநாடு, திருவோணம், தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், வலங்கைமான் (தனி) ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்பு தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, திருவையாறு ஆகிய சட்ட மன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளது.

புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த பட்டுக்கோட்டை, பேராவூரணி தஞ்சை தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது.அதே போன்று நாகை பாராளுமன்றத் தொகுதியில் இடம் பெற்றிருந்த மன்னார்குடி தற்போது தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் புதிதாக இடம் பிடித்துள்ளது.திருவோணம், பாபநாசம், வலங்கைமான் போன்ற தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

தஞ்சை பாராளுமன்றத் தொகுதியில் உள்ள அனைத்து சட்ட மன்றத் தொகுதிகளும் பொது தொகுதிகளே.தஞ்சாவூர் தொகுதியை காங்கிரஸும், திமுகவும் மாறி மாறி வென்றுள்ளன. காங்கிரஸ் 7 முறையும், திமுக 6 முறையும் வென்றுள்ளன. அதிமுகவுக்கு ஒரு முறை வெற்றி கிட்டியுள்ளது.

சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில்,

ஒரத்தநாடு தொகுதியில் அதிமுகவின் வைத்தியலிங்கமும், தஞ்சாவூரில் திமுகவின் உபையதுல்லாவும், திருவையாறில் திமுகவின் துரை சந்திரசேகரனும், பட்டுக்கோட்டையில் காங்கிரஸின் ரங்கராஜனும், பேராவூரணியில் அதிமுகவின் வீரகபிலனும், மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியமும் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த தேர்தல் நிலவரம்

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக) - 4,00,986.
தங்கமுத்து (அதிமுக) - 2,81,838.
வெற்றி வித்தியாசம் - 1,19,148 வாக்குகள்.

இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்

1951 - ஆர்.வெங்கட்ராமன் -காங்
.1957 - ஆர்.வெங்கட்ராமன் -காங்.
1962 - வைரவத்தேவர் -காங்.
1967 - கோபாலர் - திமுக
1971 - எஸ்.டி. சோமசுந்தரம் - திமுக
1977 - எஸ்.டி. சோமசுந்தரம் - அதிமுக
1980- சிங்காரவடிவேல் - காங்.
1984 - சிங்காரவடிவேல் - காங்.
1989 - சிங்காரவடிவேல் - காங்.
1991 - துளசி அய்யா வாண்டையார் - காங்.
1996 - பழனிமாணிக்கம் - திமுக
1998 - பழனிமாணிக்கம் - திமுக
1999 - பழனிமாணிக்கம் - திமுக
2004 - பழனிமாணிக்கம் - திமுக

முதல் தேர்தல்

நடந்த ஆண்டு - 1951.
வென்றவர் - ஆர்.வெங்கட்ராமன் (காங்.)

நன்றி ; தட்ஸ் தமிழ்

எனது கருத்து

தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்க் கழஞ்சியம் என்பார்கள். ஒரு காலத்தில் நாட்டிற்கே சோறு போட்ட மாவட்டமக்கள். இன்று சோற்றுக்கே கடையிலும் ரேசனிலும் தான் போய் நிற்க்க வேண்டியுள்ளது. ஏன் இந்த நிலை..?.

ஒன்று காவிரியில் தண்ணீர் வராதால் நீரின்றி பயிர் கருகிவிடும். இல்லை பருவ மழையால் வெள்ளம் வந்து பயிர் அழுகிவிடும். இது தான் நிலை..!. உடனே அரசாங்கம் கண்ணீர் விடும் விவசாயிக்கு கைக்குட்டை வாங்க பணம் கொடுக்கும். என்றாவது போலியான வாக்குறுதிகளை அல்லி வீசும் அரசியல்வாதிகள் நிரந்தர தீர்வுகான சிந்தித்ததுண்டா..?.

தொழிற்ச்சாலைகள் இல்லாத விவசாயம் ஒன்றையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் மக்களை மறந்ததேன்..?. மேலும் இம்மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளதால் தென்னை சம்பந்தமான தொழிற்சாலைகள் கொண்டுவந்து இம்மக்களுக்கு மாற்று வழியைக் காட்ட நினைக்காதது ஏன்..?.

இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள். தேர்தல் சமயத்தில் கையை உயர்த்தி ஓட்டுக் கேட்க்கும் அரசியல்(வியாதி )வாதிகளே.. மக்களின் வாழ்க்கைத் தரத்தை எப்போது உயர்த்தப் போகிறீர்கள்..?.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் மையபகுதியில் பரபரப்பான வியாபாரத்தளமான MID TOWN MAN HEATON ல் புதிய மதுபானவிடுதி ஒன்று திறக்க இருக்கிறார்கள். அதன் பெயர் APPLE MECCA. இது சவூதி அரேபியாவில் உள்ள உலக முஸ்லீம்களின் இறை இல்லமான கவ்பா (KAABA) வை போன்று வடிவமக்கப்பட்டுள்ளது.



இதில் இஸ்லாம் தடை செய்துள்ள மதுபானம் அருந்தும் (BAR) செயல்படப் பொவாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உலக முஸ்லீம்களின் மார்க்கமான இஸ்லாத்தை களங்கப்படுத்தும் அமெரிக்காவின் சதிசெயலுக்கு நியூயார்க்கில் உள்ள முஸ்லீம்கள் கடும் கண்டனம் தெரிவித்து இந்த மதுபான விடுதியை தடைசெய்ய போராடி வருகிறார்கள்.


அமெரிக்காவில் இஸ்லாத்தின் வேகமான வளர்ச்சியை பொருக்கமுடியாத புள்ளுருவிகள் "இஸ்லாம் தீவிரவாதம்" என்ற பரப்புறையை மேற்கொண்டார்கள். அதை பொருட்படுத்தாத அமெரிக்க பகுத்தறிவுவாதிகள்.
உன்மை மர்க்கமான இஸ்லாத்தை அதிகமதிகமாக தழுவினர். இதனால் இவ்வாறு கீழ்த்தரமான வேலையில் இறங்கிவிட்டார்கள்.

கருத்துகள் இல்லை: