புதன், 25 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-24



More than a Blog Aggregator

by இராகவன் நைஜிரியா
பதிவு போட்டு கிட்டதட்ட 15 நாளுக்கு மேலே ஓடி போச்சு...

எதாவாது பதிவு போடணும்..

என்னத்தப் பத்தி பதிவு போடுவது..

கவிதை போடலாம் என்றால்...

கவிதை என்றாலே
காத தூரம் ஓடுபவன்
கவிதைப் போடுவது
காக்கை கரைவதைப் பார்த்து
குயில்
கூவிற மாதிரி இருந்திச்சாம்
சொல்ற மாதிரி ஆகிடாதா..
...

இல்லாட்டி...

காகம் கரையும்
சிங்கம் கர்ஜிக்கும்
புலி உறுமும்
கழுதை கத்தும்
நாய் குரைக்கும்
....

இது மாதிரி கவிதை எல்லாம் எழுதினா.. ஆட்டோ, கார், லாரி, பஸ், பிளைட், கப்பல் எல்லாமே வரும்..

சரி கவிதை வேண்டாம்..

அரசியல்....

நமக்கு தெரியாத விசயத்தைப் பற்றி எதாவது எழுதப் போய், ஊருக்கு திரும்பவே முடியாதபடி ஆயிடுச்சுன்னா... வம்பே வேண்டாம்... இதுல ஒரு ஆபத்தும் இருக்குங்க.. நாம எசகுபிசகா எதாவது எழுதப் போய், நம்மள கார்கோ ப்ளைட்ல பொட்டில அடைச்சு அனுப்பிச்சுட்டாங்கன்னா.. அதுவும் வம்புதான்...

சரி சக பதிவர்கள் யாராவது காணாம போயிட்டாங்க.. அவங்களைப் பற்றி எதாவது எழுதலாம் அப்படின்னா.. நமக்கு தெரிஞ்சு 2 பேர் அப்படி காணாம போயிட்டாங்க, அவங்களைப் பற்றியும் எழுதியாச்சு...

பொது விசயம் எதாவாது எழுதலாம் அப்படின்னு பார்த்தா, நம்ம புத்திசாலித்தனம் உலக முழுக்க தெரிஞ்சு போச்சுன்னா, அது இன்னும் ரொம்ப கஷ்டம்..

நண்பர் ஆதிமூல கிருஷ்ணன் மாதிரி தங்ஸ் கிண்டலடிச்சு போடலாம் அப்படின்னா, இந்தியாவில் இருந்தாலும் பரவாயில்லை, நைஜிரியாவில் அப்புறம் சோத்துக்கு லாட்டரி அடிக்கணும்.. இதுவும் போயிடுச்சு..

நண்பர் பழமைபேசி மாதிரி, தமிழ், தமிழ் வார்த்தைகள் போடலாம் பார்த்தா, நம்ம பவுசு நமக்குத் தெரியும்.. வேண்டாம் விட்டு விடு...

ஒன்னுமே போடாம சும்மா உட்டுட்டா...
ஜிமெயில், பதிவில்.. அண்ணே என்னாச்சு அப்படின்னு ஒரு கேள்வி..

இங்க மனுஷன் பதிவு போடுவதற்கு மண்ட காய்ஞ்சு போய் கிடக்கான்னு தெரியாம..

சரி இனிமே எந்த வலைப்பூ பக்கமே வரக் கூடாது அப்படின்னு நினைச்சா, கார்த்தல காபி குடிகிறமோ இல்லையோ, கணினியில் மெயில் செக் பண்ணலாம் அப்படின்னு வந்த், www.gmail.com அப்படின்னு அடிப்பதற்கு பதிலா, www.raghavannigeria.blogspot.com அப்படின்னு அடிச்சு, யூசர் நேம், பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்து, டாஸ் போர்டில் இன்னிக்கு யார் என்ன எழுதியிருக்காங்க அப்படின்னு பார்க்கும் போதுதான், அய்யய்யோ நாம மெயில் செக் பண்ண இல்ல வந்தோம், இப்ப என்னடான்ன வலைப்பூவை படிக்கும் போது, நாம் இதுக்கு அடிமை ஆகிவிட்டோம் எனப் புரிகின்றது..

ரொம்ப நெருக்கம் அப்படின்னு, ஜிமெயிலில் ஒரு இரண்டு தடவை பேசினால், அவர் பதிவில் போய் கும்மி அடிச்சு, தங்ஸ் கிட்ட காலங்கர்த்தால, காபி சாப்பிடாம, குளிக்காம, சாமி கும்பிடாம இந்த கம்பூயட்டர கட்டிகிட்டு என்ன அழ வேண்டியிருக்கு பாட்டு வாங்கிகிட்டு...

புலியப் பார்த்து பூனை சூடு போட்டுகிடுச்சாம், அது மாதிரி இவ்வளவு பேர் எழுதறாங்களே, நாம எழுத முடியாதான்னு வலைப்பூ ஆரம்பிச்சு ..

இது உனக்கு தேவையா என்று என்னைப் பார்த்து நானே கேள்வி கேட்டுக் கொண்டு, புலம்ப ஆரம்பிச்சுட்டேன்...

எனதருமை சகோதர, சகோதரிகளே, நண்பர்களே, உடன் பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே,

என்ன செய்வது , எதாவது உதவி பண்ணுங்களேன்...


More than a Blog Aggregator

by கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI


வீதியோரம் வண்ணத்துப்பூக்கள்
நம்
விழியோரம் ஆனந்த
மகிழ்நீர்த்துளிகள்

பச்சைநிறப் பயிர்களில்
இச்சைக்கொள்ளும்
நம் விழிகள்
இது
உழவனின் வேர்வைத்துளிகள்

விவசாயமில்லாத நாடு
உயிரில்லா எழும்புக்கூடு
பயிர்களின் வளர்ச்சியே
உயிர்களின் உணர்ச்சி
உழவனின் நம்பிக்கைத்தான்
நாட்டின் அஸ்திவாரம்

அழும்குழந்தைக்கு
அமுதம் ஊட்டுவதைப்போல்
வாடும்பயிர்களுக்கு
பாசனம்மட்டுமல்ல
பாசத்தையும் ஊட்டும்
உழவர்கள்
உணவுபண்டங்களுக்காக
மண்ணை உழுது
பயிர் செய்யும் நாம்
மனதை உழுது
மனிதனாவது
எப்போது...?


More than a Blog Aggregator

by கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI


பாசவண்ணத்தில்
வாழ்க்கைகூட்டை
வடிவமைத்து
நேசஎண்ணத்தில் நெறிபடுத்தி
நேர்ந்தாரையும்
சார்ந்தோரையும்
சடதிச் செய்யமுடியுமா...?

பிச்சைப் பாத்திரம்ஏந்தும்
இச்சைமுத்து
பச்சைநிற வாகனத்தில்
வளம்பெற முடியுமா...?

கயல்விழியோடு
காதலில் முழ்கி
மனம்கலந்த மனங்கள்
காதலைமறக்க முடியுமா...?

பல்லாக்கு தூக்கும்
பணியாளன்
பவனிவரும் அரசனைப்போல்
அரசாளத்தான் முடியுமா...?

தேன்கூட்டைக் காக்கும்
தேனிக்களை
ஒருகல் விட்டால்போதும்
கலைந்துவிடுவது போல்
முடியாத முயற்சிகளை
முடித்துவிடும்
முறித்தும்விடும்
பணம்...!
24.03.2009. வன்னியில் யுத்த சூனிய வலயத்தில் சிக்கியுள்ள அப்பாவிச் சிவிலியன்கள் பாரிய மனிதப் பேரவலத்தை எதிர்நோக்கி வருவதாகவும் இந்த நிலைமை மேலும் பாரதூரமாகக் கூடும் எனவும் ஐக்கிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கார்டியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் நடைபெற்று வரும் வலயத்தில் சுமார் 150,000 சிவிலியன்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 35 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் அப்பாவிச் சிவிலியன்கள் சிக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. சிவிலியன்கள் பாதுகாப்பு வலயத்தில் தொடர்ந்தும் தங்கியிருந்தால் அரசாங்கத்தின் [...]
மகாத்மா காந்தி உபயோகித்த பொருட்களை எலம் விட்டு கொஞ்சம் நாட்களே ஆகி இருக்கும் நிலையில் இப்போது திப்பு சுல்தானின் மதிப்பு மிக்க பொருள் ஒன்று ஏலத்திற்கு வருகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தை அலங்கரித்த நவரத்தினங்கள் பதித்த, தங்கத்தால் ஆன, புலியின் தலையை போன்ற தோற்றத்தை கொண்ட அலங்காரப்பொருள் லண்டனில் ஏப்ரல் 2 ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இங்கிலாந்தில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இந்த பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து இப்போது ஏலத்திற்கு வருகிறது. இது அதற்கு முன் கடந்த 100 வருடங்களாக நார்த்தம்பர்லேண்ட் என்ற இடத்தில் இருக்கும் ஃபெதர்ஸ்டோன் கோட்டையில் இருந்திருக்கிறது. 1799ல் திப்பு சுல்தானை தோற்கடித்த ஆங்கிலேயர்கள், அவரின் சிம்மாசனத்தை பெயர்த்து அதிலிருந்த இந்த அலங்கார பொருளை எடுத்து சென்றதாக தெரிகிறது. திப்பு சுல்தானின் சிம்மாசனத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட இன்னொரு பெரிய அலங்கார பொருள் வின்ஸ்டர் கோட்டையிலும், இன்னொரு பகுதி போவிஸ் கோட்டையிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது ஏலம் விட இருக்கும் அலங்கார பொருள் 8.00,000 பிரிட்டிஷ் பவுண்ட்க்கு ( சுமார் 5,84,00,000 ரூபாய் ) ஏலம் போகும் என்று சொல்லப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிக முக்கியமான பொருளாக கருதப்படும் இந்த பொருள், ஏலம் விடப்பட்டு யாரிடம் செல்லப்போகிறது என்பதை இந்திய மற்றும் பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
நன்றி : தினமலர்

அஜீத்தின் அசல் படத்திலிருந்து விலகி விட்டார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

அசல் படத்தை முதலில் கெளதம் இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் படத்தின் கதையை இறுதி செய்யவே நெடு நாட்களாகும் போல இருந்ததால் தயாரிப்பாளர்கள் கெளதமை கழற்றி விட்டு விட்டனர்.

இதையடுத்து சரண் இப்படத்தின் இயக்குநராக புக் ஆனார். அஜீத்துக்கும், சரணுக்கும் சினிமா கெமிஸ்ட் சூப்பராக ஒர்க் அவுட் ஆகும் என்பதால் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகி விட்டார்.

டைமுக்கு ட்யூன்களை கொடுக்க முடியாமல் போனதால் படத்திலிருந்து அவர் விலகி விட்டாராம்.

இதுகுறித்து ஹாரிஸிடம் கேட்டபோது, ஆமாம், நான் அசல் படத்தில் இல்லை. இது எனது முடிவுதான். யாரும் என்னை நீக்கவில்லை.

படத்தின் கதையை இறுதி செய்ய தயாரிப்பாளர்கள் நீண்ட காலம் எடுத்துக் கொண்டனர். ஆனால் இப்போது நான் கே.எஸ்.ரவிக்குமாரின் ஆதவன், பாஸ்கரின் தெலுங்குப் படம் ஆகியவற்றில் பிசியாகி விட்டேன்.

இதனால் இப்போது இந்தப் படத்திற்கு என்னால் வர முடியவில்லை. அடுத்த படங்களில் சேரலாம் என அசல் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

ஹாரிஸ் விலகியதைத் தொடர்ந்து தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளாராம். தீனா, பில்லா, ஏகன் ஆகிய படங்களுக்கு ஏற்கனவே அஜீத்துக்காக சூப்பர் ட்யூன்களைப் போட்டுக் கொடுத்தவர் யுவன் என்பதால் இசை சிறப்பாகவே அமையும் என்ற நம்பிக்கையில் உள்ளது அசல் டீம்.

கருத்துகள் இல்லை: