வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-27

எப்போதும் ம‌யில்தோகை ந‌ட்பு த‌ரும் தோழி Aiz இடமிருந்து இப்போது ப‌ட்டாம்பூச்சி விருதும் கிடைத்துள்ள‌து.
அவ‌ளுக்கு ந‌ன்றியோடு சின்ன‌க் க‌விதையும் ......




ம‌ழை முடிந்த‌ மாலையிலே எங்கிருந்தோ தோன்றும்
ப‌ட்டாம்பூச்சியின் த‌ரும் சிலிர்ப்பைத் த‌ருவ‌து உன் ந‌ட்பு


தொட்டுண‌ர்கையில் ப‌ட்டாம்பூச்சியின் ப‌ட்டித‌ழ்க‌ள்
த‌ரும் மென்மை சுக‌ம் த‌ருவ‌து உன் ந‌ட்பு.

ஸ்ப‌ரிசிக்கும் விர‌லில் அறியாம‌லே ஒட்டிக் கொள்ளும்
ப‌ட்டாம்பூச்சியின் வ‌ண்ண‌ம்
த‌ரும் விய‌ப்பைத் த‌ருவ‌து உன் ந‌ட்பு


அந் ந‌ட்பு த‌ந்த‌ ப‌ட்டாம்பூச்சி விருதுக்கு ந‌ன்றிக‌ள் ப‌ல‌.

இந்த‌ விருதை யாருக்காவ‌து த‌ர‌ணுமே...ஹ்ம்ம்ம்ம்..
வ‌லையுல‌க‌த்துல‌ எல்லாரும் வாங்கிட்டாங்க‌ளே...அத‌னால‌ வெளியுல‌க‌த்திற்கு த‌ர‌லாமா?..ஹ்ம்ம்ம்ம்
ம்ம்..அபிஅப்பாவுக்கு த‌ந்துடலாம்...
கார‌ண‌ம்..?!!?!!??!??? அவ‌ர் போட‌ற‌ மொக்கைக்கா? அல்ல‌...
க்யூட்டான ந‌ட்ராஜ்க்கும் அபிக்கும்...என் ப‌ரிசாக‌ த‌ருகிறேன்.

ஸ்பெச‌லா வ‌லையுல‌கின‌ரின் வீட்டு குட்டிச் செல்ல‌ங்க‌ள் எல்லார்க்கும் விளையாட்டுத் தோழியாக‌ இந்த‌ ப‌ட்டாம்பூச்சியைப் ப‌ரிச‌ளிக்கிறேன்.அப்பா..அம்மா..அங்கிள், ஆண்ட்டிங்க‌ எல்லாம் க‌ரெக்டா குட்டீஸ்கிட்ட‌ சேத்துடுங்க‌

.
இலங்கை முல்லைத்தீவு பகுதியில் இருந்து தனுஷ் கோடிக்கு அகதியாக வந்த தமிழ் வாலிபர்கள் விடுதலைப்புலி இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்து வரும் இனப்போர்காரணமாக அங்குள்ளவர்கள் இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் பதுங்கு குழிகளிலும் அகதிகளாகவும் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் காலை இலங்கையில் இருந்து ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி காவல் நிலையத்தில் 2 தமிழ் வாலிபர்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.
அன்பழகன் : கலைஞரே ! தமிழ் ஈழம் மீட்க நாம என்ன செய்ய போறோம் பல பேரு ரொம்ப ஆவலா இருக்காங்க...

கலைஞர் : பக்கத்து ஸ்டேட்டு 'திருப்பதி'ய மீட்க முடியாத நம்பல.... 'ஈழம்' மீட்போம் நம்புற ஜனங்கள என்னனு சொல்லுறது...

****

அழகிரி : அப்பா... பேசாம ஸ்டாலின தமிழ் நாட்டு முதல் அமைச்சரா அறிவிச்சிடுங்க... நான் வேற மாநிலத்துக்கு முதல் அமைச்சராயிடுறேன்.

கலைஞர் : என்னால 'தமிழ் நாட்ட' மட்டும் தான் பங்கு போட்டு தர முடியும். இந்தியாவ 'நேரு குடும்பம்' பங்கு போட்டுக்கும்.

****

ஆற்காடு வீராசாமி : எங்கள் ஆட்சியில் தான் தமிழ் நாடு பிரகாசமாக ஒளி வீசி ஏறிந்தது....

அந்த சமயத்தில் மின் வெட்டு நடக்க...

ஆற்காடு வீராசாமி : என் பெயரை கெடுக்க எதிர் கட்சி செய்யும் செயல்.. இதற்கு அஞ்ச மாட்டேன்.

****

கலைஞர் : நம்ப 'கலைஞர்' ச்சனேல மக்கள் விரும்பி பார்க்குறாங்க...?

கலைஞர் டி.வி மேனேஜர் : நாம இலவசமா டி.வி கொடுத்தும் மக்கள் எல்லாரும் 'சன் டி.வி'ய தான் பார்க்குறாங்க... 'கலைஞர் டி.வி' யாரும் பாக்குறதில்ல...

****

நடிகை நமீத நடிக்கும் 'ஜகன் மோகினி' ஆடியோ கேஸட் வெளியீட்டு விழாவில்.... கலைஞர் பாராட்டு தெரிவிக்கிறார்...

கலைஞர் : படத்துக்கு படம் 'உடல் எடையோடு' நடிப்பும் ஏறிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு 'கலைமாமணி' விருது அளிக்க எங்கள் அரசு சிபாரிசு செய்யவிருக்கிறோம்.

ஜெயமாலினி நடித்த 'ஜகன் மோகினி' படத்தை பத்து தடவை மேல் பார்த்திருக்கிறேன். நமீதா நடிக்க விருக்கும் இந்த படத்தை இருபது முறை பார்ப்பேன் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு காட்டியிருப்பார்.... நான் சொல்வது நடிப்பை காட்டியிருப்பார். நீங்கள் வேறு ஏதாவது அர்த்ததில் பொருள் கொள்ள வேண்டாம்.

****

சட்டசபையில் கலைஞர்...

இதுவரைக்கும் மற்றவர்கள் எழுதிய புத்தகத்திற்கு அரசுடைமையாக்கிய எங்கள் அரசு... முதல் முறையாக நான் எழுதிய புத்தகங்களை அரசுடைமையாக்க விருக்கிறேன். அதற்கு மானியமாக.. இருபது கோடியை என் குடும்பத்திற்கு அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இதனால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அது உங்களுக்கே தெரியும்.
அன்பழகன் : கலைஞரே ! தமிழ் ஈழம் மீட்க நாம என்ன செய்ய போறோம் பல பேரு ரொம்ப ஆவலா இருக்காங்க...

கலைஞர் : பக்கத்து ஸ்டேட்டு 'திருப்பதி'ய மீட்க முடியாத நம்பல.... 'ஈழம்' மீட்போம் நம்புற ஜனங்கள என்னனு சொல்லுறது...

****

அழகிரி : அப்பா... பேசாம ஸ்டாலின தமிழ் நாட்டு முதல் அமைச்சரா அறிவிச்சிடுங்க... நான் வேற மாநிலத்துக்கு முதல் அமைச்சராயிடுறேன்.

கலைஞர் : என்னால 'தமிழ் நாட்ட' மட்டும் தான் பங்கு போட்டு தர முடியும். இந்தியாவ 'நேரு குடும்பம்' பங்கு போட்டுக்கும்.

****

ஆற்காடு வீராசாமி : எங்கள் ஆட்சியில் தான் தமிழ் நாடு பிரகாசமாக ஒளி வீசி ஏறிந்தது....

அந்த சமயத்தில் மின் வெட்டு நடக்க...

ஆற்காடு வீராசாமி : என் பெயரை கெடுக்க எதிர் கட்சி செய்யும் செயல்.. இதற்கு அஞ்ச மாட்டேன்.

****

கலைஞர் : நம்ப 'கலைஞர்' ச்சனேல மக்கள் விரும்பி பார்க்குறாங்க...?

கலைஞர் டி.வி மேனேஜர் : நாம இலவசமா டி.வி கொடுத்தும் மக்கள் எல்லாரும் 'சன் டி.வி'ய தான் பார்க்குறாங்க... 'கலைஞர் டி.வி' யாரும் பாக்குறதில்ல...

****

நடிகை நமீத நடிக்கும் 'ஜகன் மோகினி' ஆடியோ கேஸட் வெளியீட்டு விழாவில்.... கலைஞர் பாராட்டு தெரிவிக்கிறார்...

கலைஞர் : படத்துக்கு படம் 'உடல் எடையோடு' நடிப்பும் ஏறிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு 'கலைமாமணி' விருது அளிக்க எங்கள் அரசு சிபாரிசு செய்யவிருக்கிறோம்.

ஜெயமாலினி நடித்த 'ஜகன் மோகினி' படத்தை பத்து தடவை மேல் பார்த்திருக்கிறேன். நமீதா நடிக்க விருக்கும் இந்த படத்தை இருபது முறை பார்ப்பேன் என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு காட்டியிருப்பார்.... நான் சொல்வது நடிப்பை காட்டியிருப்பார். நீங்கள் வேறு ஏதாவது அர்த்ததில் பொருள் கொள்ள வேண்டாம்.

****

சட்டசபையில் கலைஞர்...

இதுவரைக்கும் மற்றவர்கள் எழுதிய புத்தகத்திற்கு அரசுடைமையாக்கிய எங்கள் அரசு... முதல் முறையாக நான் எழுதிய புத்தகங்களை அரசுடைமையாக்க விருக்கிறேன். அதற்கு மானியமாக.. இருபது கோடியை என் குடும்பத்திற்கு அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். இதனால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அது உங்களுக்கே தெரியும்.
பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்., அமெரிக்காவில் பணியாற்றும் அதன் ஊழியர்கள் எண்ணிக்கையில் 5,000 பேரை ஆட்குறைப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறது. அவர்கள் செய்து வந்த வேலைகளில் பெரும்பாலான வேலைகள் இந்தியாவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் ஆட்ளை குறைக்கும் ஐ.பி.எம்.,நிறுவனம், அதன் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருக்கும் அதன் அலுவலகங்களில் ஊழியர்கள் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டிருக்கிறது. 2006ம் வருஷத்தில், ஐ.பி.எம்., இன் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையான 4 லட்சத்தில், 65 சதவீதத்தினர் வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்தனர். அது இந்த வருடத்தில் 71 சதவீதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.பிராக்டர் அண்ட் கேம்பிள் போன்ற வாடிக்கையாளர்களுக்கு ஐ.பி.எம்., செய்து கொடுத்து வந்த கார்பரேட் டேட்டா சென்டர் மற்றும் ஹியூமன் ரிசோர்சஸ் வேலைகள் நடந்து வந்த துறைகளில் தான் இப்போது ஆள் குறைப்பு செய்யப்படுகிறது. சில வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த ஆர்டர் முடிந்து விட்டதால் ஆட்குறைப்பு செய்ய வேண்டியதிருக்கிறது என்று ஐ.பி.எம்., நிறுவனம், அதன் ஊழியர்களிடம் சொன்னாலும், பெரும்பாலான வேலைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு செல்வதால்தால் இங்கு ஆட்குறைப்பு செய்யப்படுகிறது என்கிறார்கள் அமெரிக்க ஊழியர்கள்.
நன்றி : தினமலர்

கருத்துகள் இல்லை: