வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25

பாகம் 1.

லாக் அவுட் பண்ணாமல் வீட்டிற்கு சென்று , அங்கே நான் தங்கியிருந்த வீட்டில் உள்ள நண்பர்களிடம் என்னமோ நான் சரியா பண்ண்லைன்னு சொன்னேன். அவர்கள் யாருக்கும் கம்பியூட்டர் அவ்வளவு பரிச்சயமில்லை. அதில் ஒரு நண்பர் கவலையை விடுங்க போ பில்லராண்ட ஒரு பீர போட்டு அப்படியே ரோட்டுக்கடையில ஒரு தோசையை சாப்பிட்டு வருவோம்னார். அப்படியே செய்து தூங்கிப்போனேன்.

சில நாட்களில் நான் என்ன படிக்கிறேன் என்பது புரிய ஆரம்பித்தது, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தினமும் SSI சென்று கம்பியூட்டர் லேப் பயன்படுத்தினேன்.அங்கு எனக்கு சொல்லிக்கொடுத்த பிரகாஷ் என்ற ஒரு ஆசிரியர் நீங்க நல்லபடியாக வர வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னார்.ஒரு வழியாக நன்றாக கற்றுக்கொண்ட பின் வேலை தேடுவது எப்படி என்ற பிரச்சினை எழுந்தது. சரியான படி ஆலோசனை சொல்ல ஆளில்லை. நான் தங்கியிருந்த இடத்தில் யாரும் சாப்ட்வேர் துறையிலும் இல்லை அதுதான் நான் செய்த தவறு.

வேலை தேடிக்கொண்டிருந்தபோது திடீரென என் முதுகுவலி படுத்த ஆரம்பித்தது அதற்கு இயற்கை முறை சிகிச்சை பெறுவதற்காக அரும்பாக்கத்தில் உள்ள ஒரு இயற்கை மருத்துவமனையில் 15 நாள் தங்கியிருந்து சிகிச்சை பெற முடிவு செய்தேன்.

அந்த மருத்துவமனையில் முதுகுத்தண்டுவட பிரச்சினைக்கென்றே வடிவமைக்கப்பட்ட யோகாசனங்கள் உட்பட , நீராவிக்குளியல், இயற்கை உணவுகள் என மருத்துவம் நன்றாக சென்றது. அங்கே நான் தங்கியிருந்த பொது அறையில் நான்கு நபர் தங்கலாம். என்னுடன் தங்கியிருந்தது 5 பெண்களை பெற்ற 50 வயது மதிக்கதக்க தந்தை மற்றும் இரண்டு தாத்தாக்கள்.

அந்த தாத்தாக்களோடு பேச திவ்யா என்ற ஒரு அழகிய பெண் அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருப்பார். அந்தப்பெண்ணை நானும் யோகா செய்யும் அறையில் பார்த்திருக்கிறேன் ஆனால் பேசியதில்லை.இப்படியாக போய்க்கொண்டிருக்கையில் அந்த 5 பெண்களை பெற்ற தந்தை என்னிடம் சொன்னார், திவ்யாவுக்கு உங்களை பிடித்திருக்கிறது, உங்களை பார்க்கத்தான் வருகிறாள் என்றார்.

நான் அப்படியெல்லாம் இருக்காதேன்றேன், அவர் நான் 5 பெண்களை பெற்றவன் அவர்களின் மனநிலை புரிந்தவன், நீங்கள் பேசுங்கள் அதைத்தான் அந்தப்பெண் எதிர்பார்க்கிறாள் என்றார். அந்தப்பெண் இஞ்சினியரிங் படித்துக்கொண்டிருக்கிறாள்/அல்லது படித்து முடித்தவள் என்பது அவர் எங்க ரூம் தாத்தாவிடம் பேசுவதில் இருந்து புரிந்தது.

நானும் அடிக்கடி பார்ப்பேன் அந்தப்பெண்ணும் அடிக்கடி பார்ப்பாள், யோகா செய்யும் போது அவள் என்னையே பார்த்ததை நானும் பலமுறை கவனித்திருக்கிறேன். ஆனாலும் ஒருநாளும் பேசும் துணிச்சல் மட்டும் வரவில்லை.

சிகிச்சை முடிந்து வெளியேறும் நாளில் மருத்துவமனை வரவேற்பறையில் நான் நண்பர்களுக்காக காத்திருந்தேன் அவளும் அங்கேயே என் முன்பாக உட்கார்ந்திருந்தாள் ஆனால் இருவரும் இப்போதும் பேசவில்லை ஒரு வழியாக நண்பர்கள் வந்தார்கள் என்னைக்கூட்டி சென்று விட்டார்கள் நான் கடைசி வரை பேசவில்லை.

சரி சாப்ட்வேர் இஞ்சினியர் ஆன கதைன்னு சொல்லிட்டு இப்படி என்னமோ கதை சொல்லிட்டிருக்கியேன்னு நீங்க பின்னூட்டமிடலாமின்னு யோசிக்கறது புரியுது, அப்துல் கலாம் சொல்லிருக்காருல்ல மாணவர்கள் இளைஞர்கள கனவு காணுங்கள் அதனால நானும் ஒரு கனவு கண்டேன்.

நினைவுகள் தொடரும்
ஆப்கானிஸ்தானில் அல்ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் தலிபான் தலைவர் முல்லா ஒமர் போன்றோர் சுமார் 20 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் சிக்குண்டிருப்பது உறுதியானால் அமெரிக்கா உள்ளிட்ட அதன் நேச நாட்டு படைகளின் நடவடிக்கை எப்படியானதாக இருக்குமென சர்வதேச சமூகத்திடம் கேள்வி எழுப்பியிருக்கும் இலங்கை அரசாங்கம் ஏனெனில் அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இன்று பிரபாகரன், பொட்டு அம்மான் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் சிக்குண்டு இருப்பதாகவும் சுட்டிக் காட்டுகிறது.
கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

""பாதுகாப்புப் படையினருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச அண்மையில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த நிலையில் சர்வதேச சமூகத்திடம் கேட்க எமக்கு கேள்வியொன்று இருக்கிறது. அதாவது விடுதலைப் புலிகள் இன்று சுமார் 20 கிலோமீற்றர் பரப்பிற்குள் சிக்குண்டிருக்கின்றனர். பிரபாகரன், பொட்டு அம்மான் போன்ற புலிகள் முக்கிய தலைவர்களும் இந்தப் பரப்பிற்குள் தான் இருக்கின்றனர்.

500,700 மீற்றர் தூரத்தில் அவர்களின் (புலிகளின்) நடமாட்டங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. எனவே, அல்ஹைடாவுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கப் படையினருக்கு பின்லேடன் 20 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் சிக்குண்டிருப்பது நிச்சயமாக தெரிந்திருந்தால் அந்த படையினர் எப்படி செயற்படுவார்கள்?

அதேபோல், ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருக்கும் கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட அமெரிக்க நேசநாட்டுப் படையினர் கந்தகாரில் ஒளிந்திருக்கும் தலிபான் இயக்கத் தலைவர் முல்லா ஒமர் உள்ளிட்ட அவ்வியக்கத்திற்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தலிபான் தலைவர் 20 சதுர கிலோமீற்றர் பரப்புக்குள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் படையினர் எப்படிச் செயற்படுவார்கள் என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

இது முக்கிய பிரச்சினை. இலங்கைப் படையினர் பொதுமக்களுக்குப் பிரச்சினையின்றி பயங்கரவாதிகளை அழித்தொழிக்கவே முயற்சித்து வருகின்றனர். இது கஷ்டமான வேலை.

புலிகளால் பொதுமக்கள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அம்மக்களை பாதிப்பின்றி மீட்பதானது முட்களில் விழுந்த சேலையை எடுப்பது போன்ற கஷ்டமான பணியாகும்.

எவ்வாறாயினும் இலங்கைப் படையினர் ஒழுக்கத்துடனும், மனிதாபிமானத்துடனும் செயற்பட்டு வருவதை தெரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.


டிட்டோ குகன்

இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் குறை நிறைகளை அறிந்துகொள்வதற்கு முறைப்பாட்டு பெட்டிகளை அந்ததந்த நலன்புரி நிலையங்களில் வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங் அதிபர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
நோர்வே நாட்டின் அகதிகளுக்காக பேரவையின் நிதி உதவியில் தயார்க்கப்பட்டுள்ள இந்த முறைப்பாடு பெட்டிகள் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வாமான நோர்வே நாட்டின் அகதிகளுக்காக பேரவையினர் ஒப்படைத்துள்ளனர்.


இந் பெட்டிகள் வவுனியா பிரசேத செயலாளர் செட்டிக்குளம் பிரதேச செயலாளர் ஆகியோரின் ஊடாக அந்த அந்த நலன்புரி நிலையங்களில் வைக்கப்படும் என்று அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இருந்து வவுனியாவுக்கு வந்துள்ள பொதுமக்களில் 60 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களை உறவினர்கள் தங்களுடன் அழைத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


வவுனியா அரச செயலகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பெயர்ப்பட்டியலுக்கு அமைய 60 வயதுக்கு மேற்பட்டவர்களை, அவர்களின் உறவினர்கள் கிராம சேவையாளரிக் அனுமதியுடன் அரச அதிகாரிகளின் அனுமதியுடன் வெளியில் அழைத்து செல்ல முடியும் என்று தெரிவிக்கப்படுகின்றது.


வவுனியா அரச செயலகத்தில் வெளியடப்பட்டுள்ள தகவல்களின் படி 64 பேர் இவ்வாறு அழைத்து செல்வதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருப்பதாகவும், 18ஆம் திகதிவரை வந்தவர்களின் பெயர்களே அந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் வந்தவர்களின் பெயர் விபரங்கள் பின்னர் வெளியிடப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இன்றுவரைஇராணுவ கட்டுபாட்டு பகுதிக்கு 14596 குடும்பங்களைச் சேர்ந்த 44020 பேர் வந்திருப்பதாக வவுனியா அரச செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 15484 ஆண்களும் 16072 பெண்களும் அடங்குவதாகவும், தெரிவிக்கப்படுகிறது இவ்வாறு வந்திருக்கும் மக்கள் வவுனியாவில் 15 இடங்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றார்கள்.
இலங்கையில் தொடரும் மோதல்களால் நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடுகளில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டில் 24 வீதமாக அதிகரித்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
2008ஆம் ஆண்டு புகலிடம்கோரிய இலங்கையர்களின் எண்ணிக்கை 12 வீதத்தால் அதிகரித்திருப்பதுடன், 51 நாடுகளிலிருந்து 383,000 பேர் புகலிடம்கோரி கடந்த வருடம் விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை, ஈராக்கிலிருந்து மாத்திரம் 40,000 பேர் புகலிடம்கோரி விண்ணப்பித்திருப்பதாகக் கூறுகிறது.


சோமாலியா, ருசியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தும், மோதல்கள் அதிகரித்துச் செல்லும் இலங்கை மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்தும் பெருமளவான மக்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இலங்கையிலிருந்து 2008ஆம் ஆண்டு 9,678 பேர் புகலிடம் கோரியிருப்பதுடன், 2007ஆம் ஆண்டு 7,792 ஆகக் காணப்பட்ட இந்த எண்ணிக்கை தற்பொழுது மொத்தம் 17,470 ஆக அதிகரித்துள்ளது.


புலிகளிடம் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் கடந்த இரண்டு வருடத்தில் இலங்கை 12வது இடத்திலுள்ளது. கடந்த வருடத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 38 நாடுகளில் 13,903 பேர் புகலிடம் பெற்றனர்.


பெரும்பாலும் புகலிடம் கோருபவர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதற்கே கூடுதலாக விரும்புவதுடன், புலிகளிடம் கோரி விண்ணப்பிப்பவர்களில் 13 வீதமானவர்கள் அமெரிக்காவுக்கே செல்ல விரும்புகின்றனர்.


அமெரிக்காவுக்கு அடுத்ததாக கடனா, பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானிய ஆகிய நாடுகளுக்கே புகலிடம்கோரி மக்கள் செல்கின்றனர். 2007ஆம் ஆண்டு கூடுதலாகப் புகலிடம் வழக்கும் இரண்டாவது நாடாகவிருநத சுவீடன் தற்பொழுது புகலிடம் வழக்கும் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டுள்ளது. புகலிடம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் 17வது இடத்திலிருந்து நோர்வே 10வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
திருமலை தெஹிவத்த, வவனவில்லு பிரதேசத்தில் நேற்று இரவு 10.45 இற்கும் 11.00 மணிக்கும் இடையில் தமது நெல்வயல்களில் காவற்கடமையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் ஐவர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

கருத்துகள் இல்லை: