வெள்ளி, 27 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-25


தேவையானப்பொருட்கள்:

பப்பாளிப்பழம் (சிறு துண்டுகளாக வெட்டியது) - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
நெய - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் அரிசி மாவைப் போட்டு இலேசாக வறுத்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.

பாலைக் காய்ச்சி ஆறவிடவும். ஆறிய பாலில் வறுத்தெடுத்த அரிசி மாவைச் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். (அரிசி மாவு அல்வாவைக் கெட்டிப் படுத்த உதவும்).

மிக்ஸியில் பப்பாளிப் பழத்துண்டுகளைப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த விழுதை ஒரு அடி கனமான வாணலியில் போட்டு 7 அல்லது 10 நிமிடங்கள் வரை கை விடாமல் கிளறவும்.

பின்னர் அதில் சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். தித்திப்பு போதுமா எனறுப் பார்த்து, தேவையானால் மேலும் சிறிது சர்க்கரைச் சேர்க்கவும்.

சர்க்கரையும் பப்பாளி விழுதும் நன்றாகச் சேரும் வரை கிளறிக் கொண்டிருக்கவும்.

பின்னர் அதில் பாலை விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரைக் கிளறவும்.

அதன் பின் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை விட்டுக் கிளறவும்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து, அவ்வப்பொழுது சிறிது நெய்யை விட்டு, அல்வா சுருண்டு வரும் வரை கிளறி விடவும்.


கடைசியில், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்புச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

கீழே இறக்கி, ஒரு நெய் தடவியக் கிண்ணத்திலோ, தட்டிலோ மாற்றி வைக்கவும்.
,பலபேரு பல பேருக்கு பகிரங்க மடல், எழுதுறாங்க அதனாலே நான் ஒரு சேஞ்சுக்கு பகிரங்க பாடல் எழுதலாம்னு முயற்சி செஞ்சேன். சொந்தமா எழுத நமக்கு எங்கு நேரம்? ( மூளைன்னு எழுதற இடத்துலே எப்படி நேரம்னு போட்டு சமாளிச்சேன் பார்த்தீங்களா? இது தான் நேரங்குறது.)

அண்ணன் கேபிள் அவர்களுக்கு இந்த பாடல்களை சமர்பிக்கிறேன்...

இது ஒரு புகழ் பெற்ற பாடல்.

அண்ணே... அண்ணே... கேபிள் அண்ணே...
நம்ம பக்கம் நல்ல பக்கம்
இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே...
அதை சொன்னா............ வெட்ககேடு
அதை சொல்லாட்டி....... மானகேடு


உங்க உங்க இஷ்டம் போலே
பல "widget" சேர்துட்டீங்க.
ஒன்னரை செகண்டில் லோ......டாறதை
முக்கா மணி ஆக்கிபுட்டீங்க.


அண்ணே... அண்ணே... கேபிள் அண்ணே...
நம்ம பக்கம் நல்ல பக்கம்
இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே
அதை சொன்னா ............ வெட்ககேடு
அதை சொல்லாட்டி ....... மானகேடு

பதிவு பக்க மூலையிலே சோடி ஒன்னு சேர்ந்திருச்சு..

அண்ணே... அண்ணே... கேபிள் அண்ணே...
நம்ம பக்கம் நல்ல பக்கம்
இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே


இதன் முழு வடிவம் தெரியாததால் பாதியிலேயே நிற்கிறது. அண்ணன் கேபிள் மீது ஆழ்ந்த அன்பு (காண்டு?!?! ) உள்ளவர்கள் முழுப்பாடலையும் கொடுத்து உதவினீர்கள் என்றால் நல்லா இருக்கும்.
அடுத்து அண்ணன் கேபிளை பாராட்டி ஒரு பாடல் ( சத்தியமா. பாராட்டிதாங்க...)

பதிவுக்கு பெயர்தான் கேபிள்
அந்த பதிவினில் எங்கே கேபிள்
உன் பிரிவினில் தேடுதே கேபிள்
உன் உறவிற்கு தானே கேபிள்


நீ போட்ட பதிவை நான் படித்து கண்டேன் கேபிள்.
நீ காட்டும் அன்பால் நான் நீக்கி கொண்டேன் கேபிள்.
நீ சொன்ன மொக்கை படம் பார்த்து துடித்தேன் கேபிள்.
நீ வந்த பின்னே நான் இழந்து நின்றேன் கேபிள்.


எல்லோரும் வாழ்வில் தேடிடும் கனெக்சன் கேபிள்.
மக்கள் உயிரோடு கலந்து வாழ்ந்திடும் கனெக்சன் கேபிள்.
எது வந்த போதும் மறவாத கனெக்சன் கேபிள்.
எனை இன்று வாட்டும் தனிமையில் இல்லையே கேபிள்

வில்லு படம் பார்த்த சிலகாலம் போதும் கேபிள்
மண்ணோடு மறையும் நாள்வரை பாறேன் கேபிள்
கோலிவுட்டு வடிக்கும் நீர் என்று மாறும் கேபிள்
பொன் ஏடு எழுதும் உன் படம் வாழ்த்தும் கேபிள்.



* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
உள்ளத்தை அள்ளித் தா படத்திலே கவுண்டமணி சொன்ன மாதிரி நான் இங்கே என்னிட்டே இல்லாத மூளையெல்லாம் தேடி செலவழிச்சு எழுதி இருக்கேன். பணம் தான் தரமாட்டீங்க அட்லீஸ்ட் பின்னூட்டமாவது போட்டுட்டு போங்க கண்ணுங்களா.....
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஒரு சிறிய நிலப்பரப்புக்கு உள்ளே விடுதலைப் புலிகளை முடக்கி வைத்துள்ளோம் என சிங்கள தேசம் மார்தட்டி வந்த நிலையில் மார்ச் மாத ஆரம்பம் முதல் கள முனையில் நடைபெற்று வரும் சம்பவங்கள், களமுனை விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக மாறி வருவது போன்ற உணர்வைத் தோற்றுவித்துள்ளது.

முதலாம் திகதி முதல் முல்லைத் தீவு மாவட்டத்தில் முன்னரங்கக் களமுனைகளில் நடைபெற்றுவரும் மோதல்களுக்கு அப்பால் இராணுவத்தினர் எதிர்பார்த்திராத இடங்களில் பல ஊடுருவல் தாக்குதல்களும் கரும்புலித் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் மகுடம் வைத்தாற் போன்று 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேராவில் பகுதியில் நடைபெற்ற ஊடறுப்புச் சமரில் ஆறு ஆட்டிலறித் தளங்கள் அழிக்கப் பட்டுள்ளன. இந்தத் தளங்கள் அழிக்கப்பட முன்னதாக அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அந்த ஆட்டிலெறிகளைக் கொண்டே இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியிருப்பதும் 3 கரும்புலிகள் தவிர ஏனையோர் தப்பிச் சென்றிருப்பதாகவும் படைத் தரப்பிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் தேராவில் தற்போது கடும் மோதல் நடப்பதாக இராணுவத்தினரால் வர்ணிக்கப்படும் புதுக்குடியிருப்பு நகரில் இருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

தாம் கைப்பற்றிய பகுதிகள் என இராணுவம் நினைத்துக் கொண்டிருக்கும் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருக்கும் செய்தியே இராணுவத்தினர் மத்தியில் பீதியைக் கிளப்பப் போதுமானது. இது தவிர அவர்கள் இராணுவத்தினர் மத்தியில் பீதியைக் கிளப்பப் போதுமானது. இது தவிர அவர்கள் இராணுவ உயரதிகாரிகளை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடாத்தி விட்டுத் தப்பிச் செல்வதும் இராணுவத்தினரின் மனவுறுதியை நிச்சயம் குலைத்தே விட்டிருக்கும். வருடக் கணக்கு, மாதம் கணக்கு, வாரக் கணக்கு, நாட் கணக்கு, மணிக் கணக்கு எனக் காலக்கெடு விதித்த வாய்கள் தற்போது மௌனித்துப் போய் உள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது.

போதாதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்தப் பிரதேசமான றுகுணுப் பிரதேசத்திலே காலி அக்குரஸ்ஸவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பிரதேச மட்ட அரசியல்வாதிகள் சிலர் கொல்லப் பட்டிருக்கின்றனர். அமைச்சர் மஹிந்த விஜேசேகர கடும் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். நீண்ட காலத்துக்குப் பின்னர் நடைபெற்ற இத்தகைய தாக்குதல் புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்து விட்டது எனக் கூறிப் பெருமைப் பட்டோருக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்ப காலம் முதலாக இராணுவ விற்பன்னர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்து வருகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் அவ்வாறு தான் இருக்கப் போகின்றார்கள் என்பதையே அண்மைக்காலச் சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.

விடுதலைப் புலிகளைப் பற்றிய மதிப்பீடுகள் எவருக்காவது தவறிப் போகலாம். ஆனால் அவர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் வைத்துள்ள மதிப்பீடு என்றுமே மாறப் போவதில்லை. ஏனெனில், மக்களே புலிகள் புலிகளே மக்கள்.
தேமுதிக கூட்டணி பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. ஆனால் நிறைந்த அமாவாசையான நாளை கன்னியாகுமரியில் இருந்து 2ம் கட்ட பிரச்சாரத்தை விஜயகாந்த் ஆரம்பிக்க போகிறார். அப்போது, அவர் தனது கட்சியின் சார்பில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளார். அதில் விருதுநகர் தொகுதிக்கு மாஃபா பாண்டியராஜன், வேலூர் தொகுதிக்கு சுதீஷ் உள்பட 4 பேர் பெயரை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைப் பார்த்து கூட்டணிக்கு வருபவர்கள் விரைவாக பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார். நேர்காணலுக்கு வருபவர்கள் எல்லாம் தனித்து போட்டி என்றால் வேண்டவே வேண்டாம் என்று சொல்கிறார்களாம். சிலரிடம் பெரிய கட்சிகளுக்கு இணையாக செலவு செய்ய முடியுமா என்று கேட்பதோடு, அந்த தொகையில் ஒரு பகுதியை கட்சி அலுவலகத்தில் டெப்பாசிட் செய்ய சொல்கிறார். இதுவும் வேட்பாளர்கள் தலை தெறிக்க ஓடுவதற்கு காராம் என்று கட்சி வட்டாரங்கள் சொல்கின்றன.
தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் வலுவான வாக்கு பின்னணியைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனிடையே பரபரப்பை மட்டுமே கொண்டு இயங்கும் சில மீடியாக்கள், மனிதநேய மக்கள் கட்சி திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடும் என்பதுபோல செய்திகளை வெளியிட்டு வருகின்றன. திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்பது போலும் செய்திகளை வெளியிடுகின்றன.


More than a Blog Aggregator

by Thamizhmaangani
காரில், தினமும் காலையில் அம்மாவை அவர் வேலை இடத்தில் விடுவேன். அதற்கு அப்பரம் தான் கல்லூரிக்கு செல்வேன். நேற்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது, ஒரு கார் எந்த ஒரு indicatorரையும் போடாமல் திடீரென்று என் கார் சென்று கொண்டிருந்த laneக்குள் நுழைந்தது. ஒரு நொடி கவனமாக இல்லை என்றால், இரு வண்டியும் சுக்குநூறாகி இருக்கும்.

வந்த கோபத்தில், 20 வினாடிகள் தொடர்ந்து 'horn' அடித்தேன். ஒரே சத்தம்! பக்கத்து தடத்தில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டுனர்கள் எல்லாம் பயந்துவிட்டனர். பக்கத்தில் அமர்ந்திருந்த என் அம்மா, "பொறுமையா போ. ஹார்ன் அடிக்காதே."

நான்: நான் பொறுமையா போனுமா? முன்னாடி போறானே அவன்கிட்ட போய் சொல்லுங்க.

அம்மா: சரி விடு.... ஏதோ பழமொழி சொல்வாங்களே...என்ன அது...ஆஆ...நாய் குரைச்சா திருப்பி குரைக்ககூடாது....

நான்: நாய் குரைச்சா பரவாயில்ல? கடிச்சா? நம்மள கடிக்க வந்தா....?

அம்மாவிடமிருந்து பதில் இல்லை.

நான்: சொல்லுங்கம்மா....கடிக்க வந்தா என்ன பண்ணுவீங்க?

அம்மா: கம்ப எடுத்துகிட்டு போய் அடிக்க போவேன்.

நான்: ஹாஹா...அப்ப மட்டும் பொறுமை தேவையில்லையா?

அம்மா என்னை பார்த்து முறைத்தார். "இந்த புள்ளக்கிட்ட பேசி வெல்ல முடியாது!" என்பதே அவரின் முறைப்புக்கு அர்த்தம் :) ஹிஹிஹி....

கருத்துகள் இல்லை: