செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.அண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி,

இந்த தேர்தலில் எதிர்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்கும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடெறாது.

இந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்சனைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ய முற்படுவார்கள். அவற்றை முறியடிக்கும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தை திமுக ஏற்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்த எதிர்கட்சிகள் முயல்கிறார்கள்.

ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.





"அம்மா இவங்க வீட்டுக்குமெல்லாம் போய் தான் ஆகனுமா? இவங்களுக்கும் நமக்கும் ஆகாது தானே... அப்பரம் ஏன்?" சலித்து கொண்டு புறப்பட்டாள் நந்தினி. அதற்கு அவள் அம்மா,

" அந்த பொண்ணு நல்ல பொண்ணு. அதுக்கு குழந்தை பொறந்திருக்கு... போகலன்னா...தப்பா போயிடும். அவங்க அம்மா தான் கொஞ்ச அப்படி இப்படி இருப்பாங்க." என்று பதில் அளித்தார்.

குழந்தையை பார்ப்பதற்கு இருவரும் சென்றனர். ஏனோ நந்தினிக்கு இந்த குடும்பத்தை பார்த்தாலே வெறுப்பு. தூரத்து சொந்தக்காரர்கள் இவர்கள். இந்த வீட்டு பெரியவர், அதான் அந்த குழந்தையின் பாட்டிக்கு வாய் கொஞ்சம் அதிகம். புரம் பேசுவதில் நம்பர் ஒன் இவர் தான்.

குழந்தையின் அம்மா வாசலில் நின்று வரவேற்றாள், "வாங்க சித்தி, வா நந்தினி...எப்படி இருக்கீங்க?" என்று முகம் மலர சொன்னாள். வீட்டில் நடு ஹாலில் உட்கார்ந்து இருந்த பாட்டி நக்கலுடன், "வாடியம்மா... இப்ப தான் வீட்டுக்கு வழி தெரிஞ்சுதா?" என்றார்.

நந்தினிக்கு அவரின் நக்கல் பாணி பிடிக்கவில்லை. குழந்தை பிறந்து 4 நாள் தான் ஆகுது. என்னமோ 40 வருஷம் கழிச்சு வந்து பாக்குற மாதிரி பேசுறாங்க என்று மனதில் முணுமுணுத்து கொண்டாள். கடமைக்காக நந்தினி, பாட்டியிடம் ஒரு சிரிப்பு சிரித்தார்.

"இவ தான் உன் இரண்டாவது பொண்ணா?" பாட்டி நந்தினியின் அம்மாவிடம் கேட்டார். அவர் நந்தினியைப் பார்க்கும்போது எல்லாம் கேட்கும் அதே கேள்வி. குழந்தை இன்னொரு அறையில் உறங்கி கொண்டிருக்க, அதை தூக்கி கொண்டு வந்தார் அதன் அம்மா. அவர் நந்தினியின் அம்மாவின் கையில் வைத்தார் குழந்தையை.

பாட்டி உடனே, "ஆமா... என்னமோ இவ பொண் குழந்தைகளே பார்க்காத மாதிரி வந்து கொடுக்குறே?" என்று நந்தினியின் அம்மாவுக்கு மூன்று பெண்கள் இருப்பதை குத்தி காட்டியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன் இந்த பேச்சு? நந்தினியின் குடும்பத்தினர் இவர்களைவிட வசதி படைத்தவர்கள் என்ற பொறாமையோ? நந்தினிக்கு புரியவில்லை. அவர் சொன்ன வார்த்தைகள் நந்தினியின் கோபத்தை தூண்டியது.

நந்தினி உடனே, "உங்களுக்கு எத்தன ஆம்பள பசங்க?" தெரிந்து கொண்டே கேட்டாள்.

பாட்டி, "2 பசங்க."

நந்தினி தொடர்ந்தாள், "2 பசங்க இருந்தாலும்... நீங்க என்னத்த சாதிச்சீங்க? ஒன்னு குடிக்காரன்... இன்னொருத்தன் வீட்டு பக்கமே வரது இல்ல."

பாட்டிக்கு ஆத்திரம் போங்க நந்தினியின் அம்மாவிடம் "ஏய் உன் மவ என்ன இப்படி பேசுறா?"

நந்தினி யார் பேசுவதற்கும் இடம் கொடுக்காமல், "பசங்க இருந்தா தான் கொல்லி வைப்பாங்க... அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தீங்கன்னா... அதுக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன். இப்பலாம் செத்தா கொல்லி வைக்குறது இல்ல. ஹாஸ்பிட்டலில் ஒரு electric trayல வச்சு, ஒரு switch தான். எரிஞ்சு சாம்பலா போயிடும்... அந்த switch பசங்க தட்டுனாலும் சரி பொண்ணுங்க தட்டுனாலும் சரி, ஏரியும்." என்று சொல்லிமுடித்து வீட்டின் வெளியே வந்துவிட்டாள்.

இன்னும் ஒரு வினாடிகூட அந்த வீட்டில் அவள் இருக்க விரும்பவில்லை. உடனே அவளை பின் தொடர்ந்து ஓடி வந்தாள் அவள் அம்மா.

"என்னடி இப்படி பண்ணிட்டே. இனிமேல அவங்ககிட்ட எப்படி முகம் காட்டுறது?"

நந்தினி, "இப்படிப்பட்ட சொந்தக்காரங்கலாம் நமக்கு தேவையில்ல."

முற்றும்**
5 ஆண்டுக்கு ஒரு முறைதிருவிழா
தேர்தல் வடிவிலே எங்க நாட்டுக்கு...

இதயம் சுருங்கிய மனிதர்கள்
கதர் சட்டையில் வெள்ளையாய்!

தெருவெங்கும் உற்சாகம்
சுவர் எங்கும் அலங்கோலம்!

தப்பவில்லை என் வீட்டு சுவரும்
திரும்பி வந்து பார்க்கையில்!

அய்யா என்றhர்கள். அம்மா என்றhர்கள்
பற்பொடி விளம்பரமாய்!

அனல் பறந்த திருவிழா
பொசுங்கியப்படி நாங்கள்!

மயங்கிய மக்களிடம்...
சாமியாடி வேட்டை

முடிந்து போனது திருவிழா
ஆரம்பமானது அதிகார விழா!

ஈழத்தமிழனின் வாழ்க்கை இன்று மிகவும் கொடூரமான மூர்க்கத்தனமானஈவிரக்கமற்ற தாக்குதல்களால் இன்று அன்றாடம் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து கொண்டிருக்கின்றது.
அண்மையில் இணையத் தளமொன்றில் ஏறிகணைத் தாக்குதலால் இரண்டு கால்களையும் இழந்து வைத்திய சாலை வளாகத்திலேயே உயிரை விடுகின்ற இளைஞனை பார்த்தபோது சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கு பயந்துதான் இருக்கின்றது என்று எண்ணத்தோன்றுகின்றது.
(அந்த வீடியோ இங்கே
பலவீனமான இதயம் கொண்டவர்கள்
இதைப் பார்க்க வேண்டாம்)
http://www.tamilkathir.com/news/1279/75//d,video.aspx
அமெரிக்கா பிரிடடன் போன்ற நாடுகள் இலங்கைக்கு கண்டனங்களையும் அறிக்கைகளையும் விட்டுக்கொண்டிருக்கின்றன ஒழிய அந்த நாடுகளின் செயல் வடிவங்கள் ஒன்றும் முற்றுப்பெறவில்லை.
சீனாவும் ராஷ்யாவும் இலங்கைக்கு எதிராக ஐ.நா.பாதுகாப்பு சபையை கூட்டவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றன.ஈழத்தில் இடம் பெறுவது ஒரு இனப்பிரச்சினை அதை சீனா ஒரு மதப்பிரச்சினை வடிவிலேயே கையாழ்கின்றது.
சீனா புத்த மதத்தைக் கடைப்பிடிப்பதால் தனது மதத்தை கடைப்பிடிக்கும் இலங்கைக்கு அது ஆதரவு வளங்குகின்றது.இலஙகையில் தங்களது தளங்களை நிறுவவதற்கு இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன.அதை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி இலங்கை இந்தியாவிடம் இருந்தும் சீனாவிடம் இருந்தும் ஆயுதங்களை கொள்வனவு செய்கின்றது.
இந்தியாவோ ஒரு படி மேல் தனது இராணுவத்தை நான்காம் கட்ட ஈழப்போருக்கு (தமிழர்களை பூண்டோடு அழிக்கும் போருக்கு) அனுப்பிவைத்திருக்கின்றது.
வல்லரசாக முயலும் இந்தியா இலங்கையில் விடுதலைப் புலிகளை ஒழித்தால்தான் . தான் ஆசிய பிராந்தியத்தில் வல்லரசாக திகழமுடியும் . விடுதலைப் புலிகள் முப்படைகளையும் உடைய ஒரு வலுப்பெற்ற ஒரு அமைப்பாக இருப்பதால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று நினைத்துக்கொண்டு இலங்கைக்கு ஆதரவு என்ற பெயரில் தமிழனை அழிக்கும் இலங்கை அரசின் கொள்கைக்கு துணை போகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இப்போது தேர்தல் காலம் ஈழப்பிரச்சினை என்பது அவர்களது தேர்தல் கால கொள்கையாகவே வெளியிடப்படுகின்றது.
ஈழத்தமிழனின் பிரச்சினை என்ன தேர்தல் அறிக்கையா?முத்துக்குமார் தீக்குழிப்பு அதனைத் தொடர்ந்து எத்தனை தீக்குளிப்புக்கள் அத்தனைபேரின் உயிர்கள் ஈழத் தமிழனுக்காக.
கட்சி ரீதியான தீக்குழிப்புக்கள் இனி தேர்தல் கால பிரச்சாரத்தில் முதன்மை வகிக்கப்போகின்றது.ஏன் என்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பான்மைக் கட்சிகள் அனைத்திலும் இருந்து ஒருவர் இருவர் என்று தீக்குழித்துவிட்டார்கள்.
என்ன செய்தோம் என்பதை விட என்ன செய்கின்றோம் என்பதுதான் முக்கியம்.உலகத் தொலைக்காட்சிகளும் செய்தி நிறுவனங்களும் இன்று தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் வெளியிட்டு வருகின்றன.ஆனால் ஈழத்தமிழர்களாலாலேயே வாழ்கின்றது சன் ரி.வியும் கலைஞர் ரி.வியும் ஆனால் அன்றாடம் கொல்லப்படும் தமிழர்களைப் பற்றி என்ன செய்கின்றது இந்த ஊடக நிறுவனங்கள்.
வெளிநாட்டில் வாழ்கின்றவர்களின் பணத்தில் கலைஞரின் குடும்பம் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றது. மத்திய அரசுக்கு நாங்கள் ஈழப்பிரச்சினை பற்றி சொல்லிவருகின்றோம் என்கிறார் கலைஞர் ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை.
சோனியா கருணாநிதியின் சொல்லைக் கேட்கின்றாரா இல்லையா என்று தெரியவிலலை.ஈழத்தில் நடக்கும் போருக்கு இந்தியா இராணுமும் வந்து போரிடுகின்றது. இதுகூட கருணாநிதிக்கு தெரியவிலலையா?மத்திய அரசில் அமைச்சுப் பொறுப்புக்களை பெறுவதற்கு கருணாநிதி காலில் கூட விழுந்து வாங்குவார் போல் தெரிகின்றது.
ஈழத் தமிழனைக்காப்பாற்ற ஒபமாதான் இனி வரவேண்டும் இந்தியாவை நம்பிப் பிரயோசனம் இல்லை.கூட இருந்து குழி பறிக்கின்றது இந்தியா (சோனியா) காலங்கள் மாறும் அப்பொழுது என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது ஆவியாகத் திரியும் ஈழத்தமிழன் மீண்டும் மனிதப் பிறவி எடுப்பான்.


More than a Blog Aggregator

by Tamil Movie Posters

Please Click the photo to Enlarge Full view (High Quality Photos)Sneha Full Details
Sneha Full Details
அய்யா பத்திரம் விக்கிற கடை தானாங்க இது என்று விசாரித்தார் கிராமத்து பெரியவர்.

இல்லீங்க அதோ அந்த கடைதாங்க என்று கைக்காட்டினார் கடைக்காரர்.

பணம் கொடுங்கனுங்க கொடுக்க முடியல அதனால என் நிலத்த எழுதி கொடுங்கறங்க அதுக்குதானய்யா பத்திரம் வாங்க வந்தேன். அங்க கிடைக்குங்கல..

கட்டாயம் கிடைக்கும் போயி கேளுங்க..

கையெடுத்து கும்புட்டு அப்போ வர்றேங்கய்யா அவ்விடம் அகன்றார் பெரியவர்.

அந்த பெரியவருடைய எதார்த்த இயல்பு நன்றி தெரிவித்த குணம்என் மனதை அசைத்தது.

இருக்கும் இடத்தில் இல்லாதது, இல்லாத இடத்திலும் இருக்கும்.

கருத்துகள் இல்லை: