புதன், 25 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-24


தாவரங்கள் தமக்கு நீர் போதவில்லை என எழுத்து மூல செய்தியொன்றின் மூலம் மனிதர்களைக் கோரினால் எப்படியிருக்கும்?
இந்த கற்பனைக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளனர் இஸ்ரேலிய விஞ்ஞானிகள்.
இந்த விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நவீன உணர் கருவியானது தாவரம் போதிய நீர் இன்றி வாடுவதை துல்லியமாக கணக்கிட்டு, அது தொடர்பான சமிக்ஞைகளை தாவரத்தை பராமரிப்பவரின் கையடக்க தொலைபேசிக்கோ அன்றி கணினிக்கோ எச்சரிக்கை ஒலியுடன் அனுப்பி வைக்கும்.

இந்த உணர்வு கருவிகள், தாவரங்களுக்கு தேவைக்கு அதிகமான நீர் வழங்கப்படுவதை தவிர்க்கவும் உதவுகின்றன.

மேற்படி உணர்கருவிகளை பயன்படுத்துவதால் பயிர்ச் செய்கைக்கான நீர்ப்பாசனத்தை பயனுறுதிப்பாடுள்ள வகையில் முகாமை செய்து, அதனூடாக 50 சதவீதத்துக்கும் அதிகமான நீரைச் சேமிக்க முடியும் என இந்த உணர் கருவியை உருவாக்கிய விஞ்ஞானிகளான கலாநிதி எரான் ராவெக் மற்றும் கலாநிதி அறி நட்லர் ஆகியோர் தெரிவித்தனர். அவர்கள் 7 வருட கால தீவிர ஆராய்ச்சியின் பின்னரே இந்த உணர் கருவிகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த உணர் கருவியானது "வோக்கி டோக்கி' உபகரண தொழில்நுட்ப அடிப்படையில் செயற்படுவதாகவும் தாவரத்தின் தண்டுக்குள் செலுத்தப்பட்ட உலோக நுண்கருவிகள் மூலம் இந்த உணர்கருவிகள் தாவரத்திற்குத் தேவையான நீரை மதிப்பிடுவதாகவும் மேற்படி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

250 அமெரிக்க டொலர் செலவில் 5,000 ஓர்கிட் தாவரங்களுக்கு இந்த உணர்கருவிகளை பொருத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

உலகிலேயே இரட்டைக் குழந்தைகளைப் பிரசவிக்கும் முதலாவது ஆண் என்ற பெருமையை ஸ்பெயினைச் சேர்ந்த ரூபென் நோ கொரோனாடோ பெறவுள்ளார்.
பெண்ணாக பிறந்து பால் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆணாக மாறியுள்ள ரூபென் (25 வயது), இரட்டை சிசுக்களை கருத்தரித்துள்ளதாகவும் எதிர்வரும் செப்டம்பர் மாத இறுதியில் குழந்தைகளைப் பிரசவிக்கவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பால் மாற்று சிகிச்சையின்போது தனது பெண் இனவிருத்தி உறுப்புகளை ரூபென் அகற்றாமை காரணமாகவே அவரால் கருத்தரிப்பது சாத்தியமானது எனக் கூறப்படுகிறது. முன்னைய காதல் தொடர்பொன்றின் மூலம் இரு குழந்தைகளுக்கு தாயான ரூபெனின் காதலிக்கு மேலும் குழந்தைகளைப் பெறுவது சாத்தியமில்லை என மருத்துவர்கள் கூறியதையடுத்தே, ரூபென் தானே கர்ப்பந் தரித்து குழந்தைகளைப் பிரசவிக்க திட்டமிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பால் மாற்று சிகிச்சைக்குட்பட்ட ஒருவர் கருத்தரிப்பது ஸ்பெயினில் இதுவே முதல் தடவையாகும். அதேசமயம் அத்தகைய ஒருவர் இரட்டைச் சிசுக்களை கருத்த?ப்பது உலகில் இதுவே முதல் தடவையாகும்.


Ruben Noe Coronado Jimenez (left) has become Spain's first pregnant
transsexual.



பால்மாற்று சிகிச்சையை மேற்கொண்ட அமெரிக்கரான தோமஸ் பீற்றி (35 வயது), கடந்த வருடம் ஜூன் மாதம் பெண் குழந்தையொன்றைப் பிரசவித்தார். அதே சமயம் அவர் விரைவில் தனது இரண்டாவது குழந்தையையும் பிரசவிக்கவுள்ளார்.
அந்த காலத்துப் படங்களில் சில சீன்கள் பார்க்கும் போது மக்கள் இவ்வளவு முட்டாள்களா என்று தோன்றுகிறது. 

டைரக்டர்கள் சில கேரக்டர்களுக்கு வகுத்த சாமுத்திரிகா லட்சணங்கள் கிழே:-


சீன் -1  -  பல நாட்டு கள்ள கடத்தல்காரர்கள் மீட்டிங். அதில் ஜப்பான் நாட்டு கடத்தல்காரர் பள பள "கியோட்டா" ட்ரெஸ் போட்டு கையில் விசிறி வைத்துக்கொண்டு.அது அவர்களின் பராம்பரிய உடை. (நமக்கு வேட்டி, சட்டை,மேல் துண்டு மாதிரி) கடத்தும் போது கூட பராம்பரியத்தை விட்டு கொடுக்க மாட்டார் போல். மிட்டிங் முடிந்ததும் "சீய்ய்ங்.. மிய்யிங்" என்று சொல்லி முதுகு குனிந்து நன்றி வேறு ஜப்பானியரின் பாணியில். 

நம் மக்களுக்கு இல்லாவிட்டால் ஜப்பான் என்று தெரியாது. கொடுமைடா..!


சீன் - 2  - துடுக்குப் பெண் -கிராமத்து துடுக்கு பெண் -கணுக்கால் வரை பாவாடை.ரெட்டை பின்னல். இடுப்பில் இரு கையும் வைத்து இருப்பார்.அடிக்கடி அழகு காட்டுவார்.சவுரி முடி பின் கால் வரை. துடுக்குத்தனமாக கரும்பு கடித்துக் கொண்டே பேசுவார். தெலுங்குப் பட துடுக்கு பெண் படு கவர்ச்சியாக இருப்பார். 

ஆனால் இப்போது இல்லை.


சீன் - 3  - விடியற்காலை -அடுத்த நாள் ஆகி விட்டது என்பதை மக்களுக்கு காட்ட, பூபாளம் ராகத்துடன் சூரியன் உதயமாகும்.பறவைகள் கத்தும்.இயற்கைக் காட்சி. அது போல சென்னை என்றால் செண்டரல் ஸ்டேஷன் /சென்னை கார்பரேஷன் பில்டிங் காட்டுவார்கள். 

ஆனால் இப்போது இல்லை..


சீன் - 4  - கண் பார்வையற்றவர்கள் - மேல் நோக்கிப் பார்த்து கண்ணைச் சிமிட்டிக் கொண்டே இருப்பார்கள்.


சீன் - 5  - அடகு கடை மார்வாடி(சேட்) - சிவப்பு நிறம்,தலையில் வெள்ளைக் குல்லா,ஜிப்பா,பஞ்சகச்சம்/குர்தா,வாயில் பான்,நெற்றியில் சிவப்பு தீற்றல்.எப்போதும் மர டெஸ்க முன் அமர்ந்து "நிம்பிள்கி, நம்பள் சொல்றான்,கடன் கொடுக்கிறான் இல்லே.." இது இன்றும் தொடர்கிறது. எங்கள் தெரு மார்வாடிகள் ஜின்ஸுக்கு வந்து விட்டார்கள்.


சீன் - 6  -  அக்கெளன்டெண்ட் /குமாஸ்தா - இவர் இடுப்பில் பஞ்சகச்சம், கருப்பு அல்பாக கோட்,தலையில் தொப்பி,நெற்றியில் வீபுதி. 99% சதவிகிதம் அய்யராக இருப்பார். trendy படமான "சிவப்பு ரோஜாக்கள்" படத்தில் கூட கவுண்ட மணி இப்படி வருவார்.கொடுமை. ஈஸ்டு இண்டியா கம்பெனி காலத்தில் இப்படி இருந்தார்கள்? 1982லிமா?


சீன் - 7  -  அசடு/வெகுளி/பைத்தியம் - நடுவகிடு எடுத்து முடி இரண்டு பக்கமும் விழுந்திருக்கும். புட்டி மூக்குக் கண்ணாடி மூக்குக் கிழே. வாயில் கட்டை விரல். சட்டைப் பட்டனை மாற்றி போட்டிருப்பார். வாயில் எச்சி ஒழுகும்.

சீன் - 8  - பணக்கார அம்மா -முக்கால் வாசி பண்டரிபாய்தான் இந்த ரோலில் வருவார்.24 மணி நேரமும் பட்டு புடவை.தோளில் ஒரு சால்வை.sling வைத்த மூக்குக் கண்ணாடி. விதவை அல்லது சுமங்கலி. எக்ஸ் வடிவத்தில் உள்ள ஒரு மர மனையில் ஏதாவது புராண புத்தகம் படித்துக் கொண்டிருப்பார். 



சிறுகதை படிக்க:-

தீர்த்த யாத்திரையும் கல்யாணிப் பாட்டியும் - சிறுகதை

http://raviaditya.blogspot.com/feeds/posts/default

 

உயரமான மரங்கள் நிறைய பார்த்து இருப்போம்!

நம்ம ஊரில் அரசமரம் ஆலமரம் பார்த்து உள்ளோம்.

அதைவிட்டா அடையாறு ஆலமரம் பார்த்து

இருக்கலாம்.

 

உலகின் உயரமான மரங்களில் இதெல்லாம்

வரவில்லை. 

 

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள

மரங்கள்தான் உலகின் உயரமான மரங்கள்!

 

செம்(ரெட்வுட் )மரங்கள் தான் உலகின் மிக

உயரமான மரங்கள்!  கலிபோர்னிய செம்மரங்கள்

(Sequoia sempervirens) 2200 ஆண்டுகள் கூட வாழும்.

 

மேலேயுள்ள மரம்  செம்மரம்தான்! மாண்ட்கோமெரி

காட்டில் கலிஃபோர்னியப் பகுதியில் உள்ளது ! இதன்

உயரம்

112 மீட்டர்-367.5அடி

விட்டம் 10 அடி!

 

மரத்தின் அடிவாரத்தில் இடதுபுறம் நிற்கும்

மனிதர்களின் அளவைப் பாருங்கள்!! மரத்தின் உயரம்

எவ்வளவு என்பது பிரமிப்பாக இல்லை!

 

கீழேயுள்ள படம் ஒரு அரிய பழைய படம்!

படம் எடுக்கப்பட்ட தேதி விபரம் இல்லை!

ஆயினும் அதம் வெட்டப்பட்ட பகுதியின் அகலம்

பாருங்களேன்! எவ்வளவு பெரியது!

வெட்டிய மரத்தில் எவ்வளவு பேர் உட்கார்ந்து போஸ்

கொடுக்கிறார்கள் பாருங்கள்!

இந்தப்படம் பார்க்க எளிமையாக உள்ளது!!

சாதாரண மரத்தையே வெட்டி ஆள் மேல் விழாமல்

கயிறு போட்டு எவ்வளவு சிரமப்படுகிறார்கள்?

ஆனால் இதனை எப்படி வெட்டி ஆள் மேல் சாயாமல்

பிடித்து!!!   உண்மையில் சாகசம்தான்!!


அடடா என்ன செலவு என்று வைத்திருக்கலாம்! காட்சிக்கு காட்சி கலர்ஃபுல்! கதையும் அப்படியிருந்தால் சந்தோஷம் கிட்டியிருக்கும். 'கும் கும்' என்று படம் முழுக்க கும்மாங்குத்து விட்டுக் கொண்டேயிருக்கிறார் இயக்குனர் ஜெயமுருகன். அதையும் மீறி அவ்வப்போது வந்து ஒத்தடம் கொடுக்கிறது நிக்கோலின் கவர்ச்சி!

மருத்துவக் கல்லூரிக்குள் நடக்கும் கெமிஸ்ட்ரிதான் கதை. ஜெய் ஆகாஷ¨க்கு நிக்கோல் மீது முதல் பார்வையிலேயே காதல். இசை பிரியர்களான இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த, மத்திய அமைச்சரான ஆசிஷ், இந்த காதலுக்கு ஆசிட் ஊற்றுகிறார். இவர்தான் நிக்கோலின் அப்பா. இத்தனைக்கும் விபத்துக்குள்ளான நிக்கோலை ஆகாஷின் அப்பா சரத்பாபுதான் காப்பாற்றுகிறார். 'என்ன வேணும்னாலும் கேளுங்க. தர்றேன்' என்கிற ஆசிஷ், பெண் கேட்டு வரும் சரத்பாபு குடும்பத்தை வாசலிலேயே விரட்டி அடிக்கிறார். அந்தஸ்தும், அதிகாரமும் காதலுக்கு குறுக்கே நிற்க, ஜோடிகள் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

ஒரு டிரெம்பட்டை வைத்துக் கொண்டு படம் முழுக்க ஊதிக் கொண்டே இருக்கிறார் ஆகாஷ் ஜெய். காலேஜ் கேம்பசுக்குள் அமர்ந்து நாலு கி.மீட்டருக்கு கேட்கிற மாதிரி விசில் அடித்துக் கொண்டே இருக்கிறார். காதலியை பார்க்கும் போதெல்லாம் கும் கும் என்கிறார். அதோடு சரி, வேணாம்னு ஒதுக்கிய மாமனாரை காலில் விழ வைக்கிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டாமோ?

ஒரு சீனில் கோல்டு மெடல் வாங்குகிறார் நிக்கோல். படிப்புக்காவாம்... அப்படியே கவர்ச்சிக்காக ஒரு மெடல் கொடுக்கலாம்! நின்றால் கவர்ச்சி. நிமிர்ந்தால் மிரட்சி. தெளிவாதான் போட்றாங்க ரூட்டை!

படத்தில் கருணாசும் இருக்கிறார். மத்திய அமைச்சருக்கு மெய்காப்பாளர்களாக வருகிற இருவரில் ஒருவர் சிட்டிபாபு. ஏனோ சீரியஸ் பாபுவாகிவிட்டார்.

அடடா என்ன அழகு என்ற ஒரே வரியை கொண்டு ஒரு பாடல் அமைத்திருக்கிறார்கள். அழகு! பாராட்ட வேண்டிய நபர் கிச்சாஸ். கண்களில் ஒத்திக் கொள்ள வைக்கும் ஒளிப்பதிவு. இன்னொருவர் தயாரிப்பாளர். கடலில் இறங்கிட்டோம். திமிங்கலமாக இருந்தாலும், தீனி போட்டுதானே ஆகணும் என்ற பாலிசிக்காரர் போலிருக்கிறது. அள்ளி அள்ளி இறைத்திருக்கிறார் பணத்தை.

திரைப்பட கல்லூரியில் பாடமாக இருக்க வேண்டிய படம். திரைக்கதை எவ்வளவு முக்கியம் என்பதை இதை பார்த்தாவது தெரிந்து கொள்வார்கள் அல்லவா?

பாலாவின் நாலாவது சூலாயுதயுதமும் பலி போட்டுவிட்டது அவரது கடைசி பட Director தயாரிப்பாளரை. (முதல் மூன்று சூலாயுதங்கள், சேது, நந்தா, பிதாமகன். அந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் இப்போது எங்கே?) பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று அவர் தடுமாறிக் கொண்டிருக்கிற நேரத்தில், கவலையே படாமல் 'பள பள' ஆபிசுக்கு ஷிப்ட் ஆகியிருக்கிறார் பாலா. தி.நகரில் அமைந்திருக்கிறது இந்த புது ஆபிஸ்.

ரஜினியின் மகள் சௌந்தர்யாவிடம் அட்வான்ஸ் வாங்கியிருக்கும் பாலா, அடுத்த கதையை வேக வேகமாக தயாரித்துக் கொண்டிருக்கிறாராம். இதில் யாரை ஹீரோவாக்குவது என்ற பெரும் டிஸ்கஷன் ஓடிக் கொண்டிருக்கிறது. தனுஷ், அல்லது ஜீவா என்று இப்போதைக்கு முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால், தனுஷோடு ஒப்பிட்டால் ஜீவாவின் கால்ஷீட் உடனே கிடைக்கும் என்பதால் லிஸ்டில் முதலிடத்தில் இருக்கிறார் ஜீவா. (தனுஷ் உடனே கிடைத்தாலும், ஆரம்பிச்சுடுவாரா பாலா? என்னவொரு நம்பிக்கை!)

ஒருகாலத்தில் பாலா அழைக்க மாட்டாரா என்று ஏக்கத்தோடு காத்திருந்த ஹீரோக்கள், ஆர்யாவின் 'ஐயோ பாவ' அனுபவங்களை நேரில் கேட்டிருப்பதால், அழைத்தாலும் போக அஞ்சுகிறார்களாம். ஒரு வருடத்திற்குள் படத்தை எடுத்து முடிச்சிருவாருன்னா, நான் தயார் என்கிறாராம் ஜீவா. உத்தரவாதம் கொடுக்கதான் ஒருவருக்கும் சக்தியில்லை!

கருத்துகள் இல்லை: