செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30



More than a Blog Aggregator

by அப்பாவி தமிழன்
தமிழ் வலை தளங்களில் கூகுளின் பொது விளம்பரங்களை நிறுத்துவது எப்படி

பதிவுலகத்தில் உள்ளவர்களுக்கு கூகிள் ஆட்சென்ஸ் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும்.பலரும் தங்கள் வலைத்தளங்களில் ஆட்சென்ஸை இணைத்துள்ளனர். ஆனால் தமிழ் வலைத்தளங்களில் உள்ள பெரும் பிரச்சனை என்னவென்றால் 99% தமிழ்தளங்களில் பொது விளம்பரங்களே தோன்றுகிறது. இதன் மூலம் நமக்கு ஒரு ரூபாய் கூட உபயோகமில்லை இதனைத்தவிர்ப்பது எப்படி?


1- முதலில் நீங்கள் அட்சென்சை எவ்வாறு இன்னைத்துள்ளீர்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.


2- நீங்கள் அட்சென்சை நேரடியாக உங்கள் bloger மூலம் ( blogspot->layout->add widget->adsense) பதிந்திருந்தீர்கள் என்றால் அது தவறான முறை அதனை நீக்கி விடவும்.Google adsensehas become a very popular tool for making money from your site by showing advertisements. But sometimes you see psa adds



3- இப்போது adsense தளத்திற்கு நேரடியாக நுளையுங்கள் .(நீங்கள் இதுவரை அட்சென்சில் சேரவில்லை என்றால் உங்கள் வலைத்தளத்தின் username மற்றும் password   உடன் இணைந்துகொள்ளுங்கள்.)


4- இங்கு சென்று adsense setup இற்கு சென்று adsense for content என்ற மெனுவை சொடுக்குங்கள். உங்களுக்கு தேவையான விளம்பரத்தின் அளவு மற்றும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். channel என்ற பகுதியில் உங்கள் வலைத்தளத்தின் முகவரியை இடுங்கள்.   Although most of the times the ads show immediately, at times it takes upto 48-72 hours for google to assess the content of newly created webpage 


5- ஏறக்குறைய முடிந்துவிட்டது இப்போது இருக்கும் பகுதியில் (படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்) அதில் Show public service ads  எனும் option நீக்கி Show non-Google ads from another URL  எனும் option தேர்வு செய்து அங்கே உங்கள் மற்ற வலைத்தளத்தின் முகவரியை இட்டு விடுங்கள். இல்லையெனில் ஏதாவது ஒரு படத்தை html code ஆக இணைத்து விடுங்கள். அவ்வளவு தான் இப்போது continue option தேர்வு செய்து அது தரும் ஆட்சென்ஸ் code உங்கள் வலைத்தளத்தில் இணைத்துவிடுங்கள் ஆரம்பத்தில் நீங்கள் இணைத்த படங்களே விளம்பரமாகத் தோன்றும். அனால் சில நாட்களிலேயே (உங்கள் ஹிட்சை பொறுத்து ) உங்கள் தளத்தில் google adsense விளம்பரம் தோன்ற ஆரம்பித்துவிடும். அட்சென்ஸ் தெரியாத ரகசியங்கள் எனும் நூலை எழிதி வருகிறேன் tamil.com தளம் இயங்க ஆரம்பித்தவுடன் இந்நூலை வெளியிடுகிறேன். இது பற்றி மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேட்கவும்.        better known as Public Service Ads on your pages. These ads are displayed because adsense has not been able to find suitable ads for your page.

நான் புதிய பதிவாளர்கள் ஆறு பேருக்கு பட்டம் பூச்சி விருது கொடுத்தேன்
அந்த பட்டம் பூச்சியை எப்படி வலைத்தளத்தில் பறக்க விடுறது என்று சில மினஞ்சல் வந்தது .. சரி இது அவர்களுக்கு மட்டும் இல்லாமல் இனி வரும் புதியவர்களுக்கும் உபயோகமாய் இருக்கும் என்று இந்த பதிவு ...

குறிப்பு
உங்களுக்கு பட்டம் பூச்சி விருது யாரச்சும் கொடுத்த பின்னரே பறக்க விடவும் :-)
உங்கள் தளத்தில் இந்த பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு, பட்டாம்பூச்சியை தொட்டால் விருது கொடுத்த நபர் பதிவுக்கு வருமாறு தொடர்பு கொடுத்துவிடுங்கள்.
நீங்கள் உங்களுக்கு பிடித்த மற்ற மூன்று ப்ளாகர்களுக்கு இந்த விருதை அளித்திடுங்கள்.

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? மணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதா? அல்லது சமீபத்தில்தான் திருமணம் நடந்ததா? எப்படியானாலும், எந்த நிலையிலும் மண வாழ்க்கை என்பது கருத்து வேறுபாடின்றி, மன மாச்சரியங்களின்றி நடைபெறாது. முன் காலங்களில் சண்டை சச்சரவுகளை குடும்பத்திலிருந்த பெரியவர்கள் அல்லது சமூகப் பெரியவர்கள் தலையீட்டால் சுமுகமாகத் தீர்த்துக் கொண்டனர். அல்லது தம்பதிகளே, தங்கள் நிம்மதியையும், முன்னேற்றத்தையும், குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொண்டு நாளடைவில் அவர்களே தீர்த்துக் கொண்டனர்.

ஆனால் இப்போது? புருஷன் "இம்" என்றவுடனே ஓடு போலீஸ் ஸ்டேஷனுக்கு, அல்லது வக்கீலிடம். போடு வரதட்சணை கொடுமை கேசு! இருக்கவே இருக்கிறது 498A!

"அவனையும் அவங்க அம்மாவையும் எப்படியாவது உள்ள தள்ளணும்" என்ற வெறியோடு, வேறெந்த விளைவைப் பற்றியும் கவலைப் படாமல் வெறி கொண்டலையும் பெண்கள் கையில் இந்த 498A ஆயுதத்தைக் கொடுத்து விட்டனர். அதை வைத்துக் கொண்டு பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், அவர்கள் அப்போது நினைத்துப் பாராத உண்மை என்னவென்றால், இதுபோன்ற கேசுகளால் அவர்களும் பாதிக்கப்பட்டு நீரழிந்து போகப் போகிறார்கள் எனதுதான்!

தங்களது perverse satisfaction and urge to inflict torment on the husband and in-laws மட்டும்தான் அவர்கள் கண் முன் நிற்கிறது. பிறகு வக்கீலும் போலீசாரும் தங்களை எவ்விதம் நடத்தப் போகிறார்கள், எவ்வளவு ஆண்டுகள் இப்படியே அலையப் போகிறார்கள் என்பதையெல்லாம் அந்தப் பெண்கள் சிந்திப்பதில்லை.

இதோ பாருங்கள் இந்தச் செய்தியை. குடும்பத்தில் ஏதோ தகராறு. எடுத்தாள் ஒரு காகிதத்தை, எழுதினாள் வரதட்சணை கேட்டானென்று. செய்தார்கள் கைது புருஷனை!

இது உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் சீக்கிறமே நிகழப்போகிறது.

ஜாக்கிறதை!!

----------------------------------------------------------------------

திருவள்ளூர், மார்ச். 29- 2009: திருவள்ளூர் பூங்கா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 33). ஆட்டோ டிரைவர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (34) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சொந்த ஆட்டோ வாங்குவதற்காக திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.51 ஆயிரம் பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பிறகு ஆட்டோ வாங்குவதற்கு பணம் போதவில்லை என்று கவிதா தன்னுடைய நகையை அடகு வைத்து ரூ.12 ஆயிரம் கொடுத்தார். இந்த நிலையில் ஆட்டோ வாங்குவதற்கு மேலும் பணம் தேவை என்று மனைவியிடம் பணம் கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.. இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கவிதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கவிதா திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

நடிகர் ஜெய்க்கு விதித்திருந்த தடையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. இதனால் பெரும் சிக்கலிலிருந்து மீண்டுள்ளார் ஜெய்.வாய்த்துடுக்குத்தனமாக பேசப் போய் பெரிய பேஜாரில் சிக்கிக் கொண்டார் ஜெய்.

தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அவர் சமீபத்தி்ல் அளித்த பேட்டியில், எனது இரு புதுப் படங்களும் கண்டிப்பாக ஓடாது என்று கூறி அப்படங்களின் தயாரிப்பாளர்களை அதிர வைத்தார் ஜெய்.

படம் வெளியாகும் முன்பே, அதன் ஹீரோவே இவ்வாறு பேசியதால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் விசாரணை நடத்தி ஜெய்க்கு ரெட் கார்டு போட்டு விட்டது.

இதையடுத்து ஜெய்யால் புதிய படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், கோவா படத்தில் ஜெய்யை ஹீரோவாக புக் செய்திருக்கும் இயக்குநர் வெங்கட் பிரபுவும், தயாரிப்பாளர் செளந்தர்யா ரஜினியும் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி ஜெய் மீதான தடையை நீக்குமாறும், இதனால் தங்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்படும் எனவும் விளக்கினர்.

ஜெய்யை வைத்து போட்டோ ஷூட் எடுத்து விட்டோம், புரோமஷனல் நடவடிக்கைகளையும் எடுத்து விட்டோம் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இந்தப் பின்னணியில் ஜெய்யும் தான் பேசியதற்காக தயாரிப்பாளர் சங்கத்திடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது.

இதையடுத்து ஜெய் மீதான தடையை தயாரிப்பாளர் சங்கம் நீக்கியுள்ளது. தற்போது நடித்து வரும் அர்ஜூனன் காதலி, அதே நேரம் அதே இடம், அவள் பேரு தமிழரசி, வாமணன் ஆகியவற்றை முதலில் நடித்து முடிக்குமாறும், பின்னர் கோவா படத்திற்குப் போகுமாறும் ஜெய்க்கு தயாரிப்பாளர் சங்கம் உத்தரவிட்டுள்ளதாம்.
எதற்கெடுத்தாலும ஹாலிவுட் தரத்தில் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் தமிழ் சினிமா வழக்கத்தை மாற்றியிருக்கிறது டிஜிட்டல் மேஜிக் எனும் கோலிவுட் நிறுவனம்.

ஹாலிவுட்டில் படமாக்கப்பட்ட ஒரு ஆங்கில படத்தின் எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு உள்பட முழுமையான தொழில்நுட்ப வேலைகளும், சென்னையில் உள்ள அருள்மூர்த்தியின் டிஜிட்டல் மேஜிக் ஸ்டூடியோவில் நடந்தது.

ஹாலிவுட் பட நிறுவனம் ஒன்று புதுமுகங்களை வைத்து, 'வேஸ்' என்ற படத்தை தயாரித்து வருகிறது.

நடுக்காட்டில் தனியாக இருக்கும் ஒரு பழைய பங்களாவில் ஒரு பெண்ணும், அவளுக்கு உதவியாக வேலைக்கார பெண்ணும் வசித்து வருகிறார்கள். குரூர புத்தி கொண்ட அந்த பெண், வேலைக்கார பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விடுகிறாள். வேலைக்கார பெண் ஆவியாகி, பழிவாங்குவதே கதை.

இந்தப் படத்தை ஹாலிவுட் டைரக்டர் காரி இயக்கி வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் நியூயார்க்கில் உள்ள ஒரு காட்டில் நடந்தது.

சென்னை டிஜிட்டல் மேஜிக் ஸ்டுடியோ:

இந்த படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன் பணிகள்' முழுவதும் சென்னையில் உள்ள டிஜிட்டல் மேஜிக் ஸ்டூடியோவில் நடந்தது.

படத்தின் டி.ஐ, பிலிம் ஸ்கேனிங், பிலிம் ரிக்கார்டிங், எடிட்டிங், பின்னணி இசை சேர்ப்பு மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் அனைத்தும்இந்த ஸ்டுடியோவிலேயோ நடந்தது.

அருள்மூர்த்தி தலைமையிலான திரைப்பட தொழில்நுட்ப வல்லுனர்கள் இந்த பணிகளை செய்து முடித்தார்கள். 'ஹாலிவுட்' படத்தின் 'போஸ்ட் புரொடக்ஷன்' வேலைகள் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெறுவது இதுவே முதல் முறை.

பகலில் படமாக்கப்பட்ட காட்சிகளை, இரவில் நடப்பது போல் மாற்றி அமைத்ததையும், அடர்ந்த காடு மற்றும் பேய் பிடித்த வீடு போன்ற சூழ்நிலைகளை படத்தில் உருவாக்கி காட்டியதையும் பார்த்து, ஹாலிவுட் பட குழுவினர் அருள்மூர்த்திக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.

ஏற்கெனவே ஹாலிவுட் நிறுவனத்துக்காக அனிமேஷன் பட வேலைகளை அருள் மூர்த்தி செய்து கொடுத்தார்.

அனிமேஷன், கிராபிக்ஸ் உள்ளிட்ட பல தொழில் நுட்பங்களை குறுகிய காலத்தில் கற்றுத் தரும் படிப்புகளையும் நடத்துகிறது இந்த டிஜிட்டல் மேஜிக் நிறுவனம்.

சுப்ரமணியபுரம் இயக்குநர் சசிக்குமார் முழு நேர நடிகராகிறார். சுப்ரமணியபுரம் படத்திற்குப் பின்னர் அவர் 'நாடோடிகள்' என்ற படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.நான்கு நெருங்கிய நண்பர்களின் கதை இது. கேரளாவைச் சேர்ந்த நிவேதிதா நாயகியாக நடிக்கிறார். சமுத்திரக்கனி இப்படத்தை இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் படத்தைத் தயாரிக்கிறார்.

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகரானவர் சமுத்திரக்கனி. சசிக்குமாருக்கு படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்தார். இப்போது சமுத்திரக்கனி, சசிக்குமாரை வைத்து இயக்கப் போகிறார்.எந்தவித இலக்கும் இல்லாமல் வாழும் நான்கு நண்பர்களின் வாழ்க்கை எதிர்பாராத ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து திசை மாறிப் போகிறது. வெவ்வேறு பாதையில் அவர்கள் அடி போடுகிறார்கள். அதையே படமாக உருவாக்குகிறார் சமுத்திரக் கனி.

இப்படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தது போல இல்லாமல் மாறுபட்ட பாத்திரத்தில் வருகிறாராம் சசிக்குமார்.
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு ஹீரோ ரெடியாகிறார்..

கருத்துகள் இல்லை: