செவ்வாய், 31 மார்ச், 2009

tamil tamilveli.com politics cinema blog 2009-03-30

30.03.2009. இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர்  சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார். நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார். அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான [...]
சொல்லதான் நினைக்கின்றேன்....

ஏம்பா பங்குச் சந்தைனு சொல்லுராங்களே! அதப்பத்தி கொஞ்சம் சொல்லேம்பா? என் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்ட கேள்வி... ம்ம்ம்ம்ம்..... என்னது பங்குச் சந்தையா? என்னபா என்ன நினைக்குற நான் என்ன காரைக்குடி அண்ணாமலை செட்டியாரா? இல்லை ஹர்ஷத் மேத்தாவா? என்னைப்போய் கேட்கிறியே..... இல்லைபா நீ இணையத்தில் ஏதோதோ படிக்குர அதுதான் கேட்டேனு சொன்னதும் கொஞ்சம் தலைநிமிர்த்தி நமக்கு தெரிஞ்சத சொல்ல...

எனக்கு அதப்பத்தி அனுபவம் இல்லபா, கொஞ்ச நாளுக்கு முன் ஆணந்த விகடனுல படிச்ச கதை ஒன்னு..... ஒருவன் ஒரு கிராமத்திற்கு சென்று அங்கிருந்தவரிடம் இங்கு குரங்குகள் இருக்குனு கேள்விப்பட்டேன் எனக்கு நான்கு குரங்குகள் வேனும் ஒரு குரங்குக்கு 50 ரூபாய் தருகின்றேன் பிடித்து தரமுடியுமா? என்று கேட்டான். அவர்களின் ஒருவன் ஒரு குரங்குக்கு 50 ரூபாயா? நான் பிடித்து தருகின்றேன் என்று பிடித்து தந்தான். இவர் சொன்னது போல நான்கு குரங்குகளுக்கு 50 ரூபாய் வீதம் 200 ரூபாய் கொடுத்தார். பின் அங்கேயே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து அந்த குரங்குகளை அதில் வைத்து பூட்டிவிட்டு ஒரு காவல் காரனையும் வைத்துவிட்டு அங்குள்ளவர்களிடம் அடுத்தமுறை இன்னும் அதிக குரங்குகள் தேவை 75 ரூபாயானாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். 75ரூபாய் என்றதும் அந்த ஊரில் உள்ள அனைவரும் எல்லா குரங்குகளையும் பிடித்து வைத்திருந்தனர். அடுத்தமுறை வந்த வியாபாரி ரொம்ப மகிழ்ச்சியாக எல்லா குரங்குகளையும் ரூபாய் 75 வீதம் வாங்கி கொண்டார். அதேபோல் எல்லா குரங்குகளையும் அந்த வீட்டில் பூட்டினார். மீண்டும் அவ்வூர் மக்களிடம் அடுத்தமுறை இன்னும் நிறைய குரங்குகள் தேவை ரூபாய் 200 இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு சென்றார். அவர் செல்லும் முன் குரங்குகளை பார்த்து கொண்டிருக்கும் காவலாளிடம் யாராவது குரங்கு கேட்டால் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு விற்றுவிடு என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அந்த ஊரில் உள்ளவர்கள் அடுத்தமுறை வியாபாரி 200 ரூபாய் தருவதாக சொன்னதும் எல்லா இடங்களிலும் குரங்குகளை தேடி அலைந்தனர், ஏற்கனவே எல்லா குரங்குகளையும் பிடித்துவிட்டதால் கடைசியாக குரங்கு விற்கும் காவலாளிடம் ஒரு குரங்கு 100 ரூபாய்க்கு வாங்கி சென்றனர் வியாபாரிடம் 200 ரூபாய்க்கு விற்பதற்காக....... சொன்னதுபோல வியாபாரியும் வந்தான்; எல்லொரும் தம்மிடம் உள்ள குரங்கை விற்பதற்காக தயாராக இருந்தனர். குரங்கு வாங்குபவன் அவர்களிடம் வந்து இந்தமுறை குரங்குகள் தேவைப்படவில்லை அடுத்த முறை வாங்கிக்கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு காவலாளிடம் குரங்கு விற்ற காசை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்....

என்னபா புரியுதா? என்று கேட்டேன் நண்பரிடம். ம்ம் நீ சொல்லுரதிலிருந்து பார்த்தா குரங்கு வியாபாரம்தான் பங்குசந்தை, குரங்குதான் பங்கு. மதிப்பே இல்லாத குரங்கை மதிப்புள்ளதாக ஆக்கி செய்யும் வியாபாரம்தான் பங்குசந்தையா என்றான்? நான் அப்படி சொல்லவில்லை பங்கு என்பது ஒரு மாய தோற்றம் அதை கைதேர்ந்தவர்கள் செய்யும் விளையாட்டில் இப்படியும் ஆகலாம். சிறிதே உபயோகம் உள்ள தங்கதிற்கு மதிப்புக் கொடுக்கப் படுவதும், அவற்றின் விலை கோபுரத்தில் இருப்பதும் எதை காட்டுகின்றது; ஒரு குரங்கு விளையாட்டுப் போல தோன்றவில்லையா? பங்கு வர்த்தகம் புரியாதவர்களுக்கு ஒரு சூதாட்டம் அதை முறைப்படி கற்றுக்கொண்டால் லாபத்தில் விளையாடலாம். கொஞ்சம் தெரிந்ததுமே எல்லாம் தெரிந்துக்கொண்டேன் என்று இருமாப்பு இல்லாமல் புரிந்துக்கொண்டு செயல்பட வேண்டும் என்றுதான் எனக்குப் படுதுபா என்றேன். .......
நீ சொல்லரதும் சரிதாம்பா...... ஆமாம் சுவிஸ் வங்கில இந்தியாவிலிருந்து மட்டும் 72 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணமா டிபாசிட் செஞ்சு இருக்காங்கலாமே, நம்ம அரசாங்கம் இதை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவருமா?

இங்க பாரு இப்படி எல்லாம் வம்புல மாட்டிவிடக்கூடாது.. இதெல்லாம் நடக்குறக் காரியமா? அப்படி ஒரு கொடுப்பினை எல்லாம் இந்தியாவிற்கு இல்ல, இல்லவே இல்லை...... அவரும் தலை ஆட்டிகொண்டே சென்றுவிட்டார், நானும் எஸ்கேப்
 
அய்யப்ப மாதவனின் நிசி அகவல் விமர்சனக்கூட்டத்திற்குப் போயிருந்தபோது,அங்கு சந்தித்துக்கொண்ட படைப்பாளிகள் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக்கொண்டதைப் பார்த்தபோது,"இதென்ன? கொஞ்சம் அதிகப்படியா இருக்குதே! அப்படியே மேலை நாட்டுக் கலாச்சாரத்தை இதுலயும் கடைபிடிக்கறாங்களே?" அப்படின்னு நினைச்சேன்.ஆனா,இப்பதான் புரியுது,அதிலுள்ள அர்த்தம்.(இது மாதிரி நான் புரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய உள்ளது). யாத்ராவை நான் இப்போது நேரில் சந்தித்தால் நானும் அப்படித்தான் ஆரத் தழுவுவேன்.இப்போதைக்கு மானசீகமாய்.

குரு சுந்தர்ஜி கூட இவரை அறிமுகப்படுத்தி எழுதியிருந்தபோது, 'நாமெல்லாம் இவர் கண்ணுக்கு ஏன் தெரிய மாட்டேங்கறோம்னு' சின்னப்புள்ளத்தனமா யோசித்துப் பொறாமைப் பட்டேன்.ஆனா, அதுதான் குரு. சரியான கண்டுபிடிப்பு.

வலையுலகம் பக்கம் இப்போதுதான் வந்திருக்கும் இவர் வருகைக்கு நாமெல்லாம் மகிழவேண்டும். களிப்பு ஏற்படுத்தும் படைப்புகளை எழுதுபவர்கள் ஒரு ரகம்.மெல்லிய உணர்வுகள், தக்கையாய் மனதை மிதக்கவைக்கும் ரசனையான படைப்புகளை எழுதுபவர்கள்.

வலியை, அதிர்வுகளை, நிலைகுலைவை ஏற்படுத்தும் படைப்பாளிகள் ஒரு ரகம்.வலிகள்தான் நிறைய படைப்பாளிகளுக்கான பொதுவான அம்சமாக, அவர்களை எழுதவைக்கும் காரணியாக அமைந்திருப்பதை நான் பலரிடத்தில் பார்த்திருக்கிறேன்.இதுவே, அவர்களின் காத்திரமான படைப்புகளுக்கு அடித்தளம்.யாத்ராவின் கவிதைகளும் வலி மிகுந்ததாய்,அதிர்வுகளை ஏற்படுத்துவதாய் இருக்கிறது. இது பொதுவான ஒரு பார்வைதான். ரசனையான மற்றும் பலவிதமான கவிதகளையும் இவர் எழுதியுள்ளார்.
நிறைய படித்திருக்கிறார். வாசிப்பில்மிகத் தேர்ச்சி பெற்றவராயிருக்கிறார். ஒரு படைப்பாளியாய் இருப்பதினும் பெரியது, தேர்ந்த ஒரு வாசகனாய் இருப்பது. இதன் அருமையும், ஏக்கமும் எனக்கு நன்றாகவே தெரியும்.

இயற்பெயர் செந்தில்வேல். என் பெயரிலும் வேல் இருக்கிறது என்றெல்லாம் ,இவரோடு ஒப்பிட்டுக்கொண்டு மகிழ்ந்துகொள்கிறேன்.

இவரை இதழ்களுக்கு படைப்புகளை அனுப்பச் சொன்ன புண்ணியவான்களில் நானுமொருவன்.இதை இவர் மிகவும் சிலாகிக்கிறார். ஆனால், உண்மையில் இப்படியொரு பெருமையை, மகிழ்ச்சியை யாத்ரா எனக்கு அளித்ததற்கு நான்தான் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.(இந்த இடத்தில் வடகரை வேலன் அண்ணாச்சியை நினைக்கிறேன். இவர், இதுபோல், எப்போதும் மகிழ்ச்சியில் இருப்பவர்)இவரின் படைப்பு வேகம், ஆற்றல் மிகவும் ஆச்சரியமளிக்கிறது.இத்தனையையும் இவர்,ஏற்கனவே எழுதியது இல்லையாம். இப்போதுதான் எழுதிக்கொண்டு வருகிறாராராம்.ஏற்கனவே எழுதியவற்றை கிழித்துப் போட்டுவிட்டாராம். எவ்வளவு பெரிய இழப்பு என்று மனம் துடிக்கிறது.

தொடர்ச்சியாக உயிரோசை, நவீன விருட்சம், மற்றும் சில வலைத்தளங்கள் அவர்களாகவே விரும்பிக் கேட்டுப் பிரசுரம் செய்வது என துவக்க நிலையிலேயே பிரமிப்பூட்டுகிறார். இவர் அடையக் காத்திருக்கும் வெற்றிகள், உச்சம் வெகு தொலைவிலில்லை. அனேகமாக, வருகிற புத்தகக் கண்காட்சியில், இவரின் தொகுப்பு கிடைக்கப் பெறலாம்.

இது என்னைப்பொறுத்தவரை முழுக்க முழுக்க ஒரு சுய நலமானப் பதிவு.இவருக்கு கிடைக்கும், கிடைக்கப்போகும் வெளிச்சத்தை என் பக்கம் திருப்பிக்கொள்ளும் சுய நலம்.(எனவே,யாத்ரா,இப்பதிவுக்காக நன்றியையோ, நெகிழ்ச்சியையோ தெரிவித்து என்னைக் குற்ற உணர்வில் ஆழ்த்திவிடவேண்டாம் என்று, அன்போடும், உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்.)

கவிஞனே, யாத்ரா! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் சொல்லிக் கொள்வதில் முந்திக்கொள்கிறேன்.


More than a Blog Aggregator

by வண்ணத்துபூச்சியார்








இது வரை விடுவிக்க முடியாத கணித புதிரை கண்டுபிடிக்க நான்கு கணித மேதைகளை ஒரிடத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. Condition: யாரும் மொபைல் போன் மட்டும் எடுத்து வரக்கூடாது.
அழைத்தவர் Fermat.


தங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லாத அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புனை பெயர்கள் Hilbert, Pascal, Galois and Oliva.


நிகழ போகும் அதி பயங்கரம் அறியாது நால்வரும் சொன்ன இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.


நகரித்திலிருந்து வெகு தூரம் கடந்த ஒரு ஏரியை ஒட்டிய காலியான பிரும்மாண்ட பங்களா.

அதில் ஒரு அழகான அறை. அனைவரும் காத்திருக்கின்றனர். Fermat வருகிறார். அனைவருக்கும் விருந்தும் அளிக்கிறார்.



Fermat ன் மொபைல் அடிக்கிறது. அவரது மகள் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்று சொல்லி போன் பாதியிலேயே கட்டாகி விட ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவதாக சொல்லி கிளம்புகிறார் Fermat.


அவர் சென்றதும் விபரீதம் ஆரம்பிக்கிறது.


அங்குள்ள PDA வில் கணக்கு புதிர் வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் அதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். விடையளிக்க தவறினாலும் தவறான விடையளித்தாலும் அறை நாலா பக்கத்திலிருந்தும் நகர ஆரம்பிக்கும்.


அவசரமாய் போன Fermat வருவதாய் காணோம்.


புதிர்கள் மட்டும் வந்து கொண்டே இருக்க நால்வரும் சிக்கி திணருகிறார்கள். விடையளிக்க முடியாவிட்டல் அறைக்குள்ளேயே மாட்டி கொண்டு இறக்க வேண்டியதுதான்.



இதையெல்லாம் செய்தது யாராக இருக்கும்..??????

ஏன் சென்றவர் வரவில்லை..??????

ஏன் புனைப்பெயர் அளிக்கப்பட்டது..??????

கண்டிஷன் போட்டதன் நோக்கமென்ன..???????

நால்வரும் தப்பித்தார்களா ..??????


கண்டிப்பாக திரைப்படத்தை பார்க்க வேண்டும். சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து.


இப்படத்தை எழுதி இயக்கியவர்கள் இரட்டையர்களான Luis Piedrahita & Rodrigo Sopena. அற்புதமான ஒளிபரப்பும் மிரட்டும் இசையும் கூடுதல் சிறப்பு.


காலம்: 90 நிமிடங்கள் மட்டுமே

வெளிவந்தது: 2007

மொழி: ஸ்பானிஷ்.



உடனடியாக படத்தை பார்க்க முடியாதவர்களுக்கு டிரைலர் இங்கே.



டிஸ்கி: மேலே உள்ள படங்களில் Fermat இல்லை. டிரைலரில் தான் இருக்கிறார்


More than a Blog Aggregator

by வண்ணத்துபூச்சியார்








இது வரை விடுவிக்க முடியாத கணித புதிரை கண்டுபிடிக்க நான்கு கணித மேதைகளை ஒரிடத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. Condition: யாரும் மொபைல் போன் மட்டும் எடுத்து வரக்கூடாது.
அழைத்தவர் Fermat.


தங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லாத அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புனை பெயர்கள் Hilbert, Pascal, Galois and Oliva.


நிகழ போகும் அதி பயங்கரம் அறியாது நால்வரும் சொன்ன இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.


நகரித்திலிருந்து வெகு தூரம் கடந்த ஒரு ஏரியை ஒட்டிய காலியான பிரும்மாண்ட பங்களா.

அதில் ஒரு அழகான அறை. அனைவரும் காத்திருக்கின்றனர். Fermat வருகிறார். அனைவருக்கும் விருந்தும் அளிக்கிறார்.



Fermat ன் மொபைல் அடிக்கிறது. அவரது மகள் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்று சொல்லி போன் பாதியிலேயே கட்டாகி விட ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவதாக சொல்லி கிளம்புகிறார் Fermat.


அவர் சென்றதும் விபரீதம் ஆரம்பிக்கிறது.


அங்குள்ள PDA வில் கணக்கு புதிர் வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் அதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். விடையளிக்க தவறினாலும் தவறான விடையளித்தாலும் அறை நாலா பக்கத்திலிருந்தும் நகர ஆரம்பிக்கும்.


அவசரமாய் போன Fermat வருவதாய் காணோம்.


புதிர்கள் மட்டும் வந்து கொண்டே இருக்க நால்வரும் சிக்கி திணருகிறார்கள். விடையளிக்க முடியாவிட்டல் அறைக்குள்ளேயே மாட்டி கொண்டு இறக்க வேண்டியதுதான்.



இதையெல்லாம் செய்தது யாராக இருக்கும்..??????

ஏன் சென்றவர் வரவில்லை..??????

ஏன் புனைப்பெயர் அளிக்கப்பட்டது..??????

கண்டிஷன் போட்டதன் நோக்கமென்ன..???????

நால்வரும் தப்பித்தார்களா ..??????


கண்டிப்பாக திரைப்படத்தை பார்க்க வேண்டும். சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து.


இப்படத்தை எழுதி இயக்கியவர்கள் இரட்டையர்களான Luis Piedrahita & Rodrigo Sopena. அற்புதமான ஒளிபரப்பும் மிரட்டும் இசையும் கூடுதல் சிறப்பு.


காலம்: 90 நிமிடங்கள் மட்டுமே

வெளிவந்தது: 2007

மொழி: ஸ்பானிஷ்.



உடனடியாக படத்தை பார்க்க முடியாதவர்களுக்கு டிரைலர் இங்கே.



டிஸ்கி: மேலே உள்ள படங்களில் Fermat இல்லை. டிரைலரில் தான் இருக்கிறார்


More than a Blog Aggregator

by வண்ணத்துபூச்சியார்








இது வரை விடுவிக்க முடியாத கணித புதிரை கண்டுபிடிக்க நான்கு கணித மேதைகளை ஒரிடத்திற்கு வருமாறு அழைப்பு வருகிறது. Condition: யாரும் மொபைல் போன் மட்டும் எடுத்து வரக்கூடாது.
அழைத்தவர் Fermat.


தங்களுக்குள் முன்பின் அறிமுகமில்லாத அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள புனை பெயர்கள் Hilbert, Pascal, Galois and Oliva.


நிகழ போகும் அதி பயங்கரம் அறியாது நால்வரும் சொன்ன இடத்திற்கு வந்து சேருகிறார்கள்.


நகரித்திலிருந்து வெகு தூரம் கடந்த ஒரு ஏரியை ஒட்டிய காலியான பிரும்மாண்ட பங்களா.

அதில் ஒரு அழகான அறை. அனைவரும் காத்திருக்கின்றனர். Fermat வருகிறார். அனைவருக்கும் விருந்தும் அளிக்கிறார்.



Fermat ன் மொபைல் அடிக்கிறது. அவரது மகள் மருத்துவமனையில் சீரியஸாக இருப்பதாகவும் உடனே வர வேண்டும் என்று சொல்லி போன் பாதியிலேயே கட்டாகி விட ஒரு மணி நேரத்தில் திரும்பி விடுவதாக சொல்லி கிளம்புகிறார் Fermat.


அவர் சென்றதும் விபரீதம் ஆரம்பிக்கிறது.


அங்குள்ள PDA வில் கணக்கு புதிர் வருகிறது. ஒரு நிமிடத்திற்குள் அதற்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும். விடையளிக்க தவறினாலும் தவறான விடையளித்தாலும் அறை நாலா பக்கத்திலிருந்தும் நகர ஆரம்பிக்கும்.


அவசரமாய் போன Fermat வருவதாய் காணோம்.


புதிர்கள் மட்டும் வந்து கொண்டே இருக்க நால்வரும் சிக்கி திணருகிறார்கள். விடையளிக்க முடியாவிட்டல் அறைக்குள்ளேயே மாட்டி கொண்டு இறக்க வேண்டியதுதான்.



இதையெல்லாம் செய்தது யாராக இருக்கும்..??????

ஏன் சென்றவர் வரவில்லை..??????

ஏன் புனைப்பெயர் அளிக்கப்பட்டது..??????

கண்டிஷன் போட்டதன் நோக்கமென்ன..???????

நால்வரும் தப்பித்தார்களா ..??????


கண்டிப்பாக திரைப்படத்தை பார்க்க வேண்டும். சஸ்பென்ஸ் திரில்லர் விரும்பிகளுக்கு சரியான விருந்து.


இப்படத்தை எழுதி இயக்கியவர்கள் இரட்டையர்களான Luis Piedrahita & Rodrigo Sopena. அற்புதமான ஒளிபரப்பும் மிரட்டும் இசையும் கூடுதல் சிறப்பு.


காலம்: 90 நிமிடங்கள் மட்டுமே

வெளிவந்தது: 2007

மொழி: ஸ்பானிஷ்.



உடனடியாக படத்தை பார்க்க முடியாதவர்களுக்கு டிரைலர் இங்கே.



டிஸ்கி: மேலே உள்ள படங்களில் Fermat இல்லை. டிரைலரில் தான் இருக்கிறார்

கருத்துகள் இல்லை: